disalbe Right click

Tuesday, August 9, 2016

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார்


ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளைண்ட் செய்ய 
என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளண்ட் செய்ய கீழே காணும் லின்க்கை கிளிக் செய்யுங்கள். 

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

அதில்,   உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.

4 MPஅளவிற்கு தங்களிடம் உள்ள (PDF,PNG,JPEG) புகார் சம்பந்தமான  ஆவணங்களை தங்கள் புகாருடன் இணைக்கலாம்.

உங்கள் புகாரின் (CSR/FIR) நிலையை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் புகார் குறித்து காவல்துறையினர் எடுத்த முடிவை தெரிந்து கொள்ளலாம்.

அதனை “பிரிண்ட்” எடுத்துக் கொள்ளலாம்.

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

மேற்கண்ட லின்க்கை கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இடது பக்கத்தில் உங்கள் பெயர், பாலினம், பிறந்தநாள், முகவரி, செல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி ஆகிய விபரங்களை நிரப்ப வேண்டும்.

வலது பக்கத்தில்  முதலில் குற்றம் பற்றிய தன்மைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தங்களது புகாருக்கு ஏற்ற ஒன்றை தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை அடுத்து குறிப்பிட வேண்டும்.

 எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதைப் பற்றி அடுத்து குறிப்பிட வேண்டும்.

உங்கள் புகாரைப் பற்றி அடுத்து உள்ள பாக்ஸில் சுருக்கமாக டைப் செய்ய வேண்டும்.

அதற்கு கீழே டாக்குமெண்ட் (ஆவண நகல்கள்) இணைக்கப்பட்டு உள்ளதா, இல்லையா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

அதற்கும் கீழே இருக்கும் சிறிய பாக்ஸில் அங்கு தெரிகின்ற செக்யூரிட்டி எண்ணை டைப் செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யவுடன் உங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். 

அந்த பதிவு எண் மூலம் தங்கள் புகாரின் நிலையை அறியலாம்.

No comments:

Post a Comment