disalbe Right click

Wednesday, September 14, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய  புகாரினை ( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

இதுபோன்ற சூழ்நிலையில் குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ், நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும்.  இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.

சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. நேரடியாக இதற்காக தங்களை அணுகக்கூடாது என்று உயர்நீதி மன்றமும் அறிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது. 

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றமானது   உத்தரவிடலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள்   பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு  உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.

*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment