disalbe Right click

Monday, September 12, 2016

மொட்டைக்கடிதம்


மொட்டைக்கடிதம் - என்ன செய்ய வேண்டும்?

மொட்டை கடிதத்தால் இடமாற்றம், பள்ளிக்கல்வி துறை உத்தரவு ரத்து!

சென்னை: போலி கடிதத்தின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் இருவரை, இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில், கணேசன் மற்றும் ராஜன், அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். இவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் வந்தது.

மனு தாக்கல் : 

அதில், பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலில் சிலரை சேர்ப்பதற்கு பணம் கேட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இருவரையும் இடமாற்றம் செய்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர்; மனுக்களை, நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் டி.ஆனந்தி, 'லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதம், மனுதாரர்களுக்கு தரப்படவில்லை' என்றார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர், 'லஞ்ச ஒழிப்பு துறை பெற்ற கடிதம் போலியானது' என்றார்.

 நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: 

எந்த விசாரணையும் நடத்தாமல், போலி கடிதத்தின் அடிப்படையில் இயந்திரத்தனமாக இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 

இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு முன், அந்த கடிதம் உண்மையானது தானா என, அதிகாரிகள் விசாரணை செய்திருக்க வேண்டும்; 

மனுதாரர்களுக்கு கடித நகல்களை அளித்திருக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் தான், இந்த இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன; 

நிர்வாக தேவைக்காக, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

விசாரணை

எனவே, இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்கள், விடுமுறையில் இருந்த நாட்களை, பணியில் இருந்ததாக கருத வேண்டும். கடிதத்தை அனுப்பியது யார், பின்னணி என்ன என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 10.09.2016



No comments:

Post a Comment