குற்றவாளிகளின் ஜாதகம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் முதல் முறையாக, கோபியில் கைதான, ஏ.டி.எம்., கார்டு மோசடி மன்னனின் ஜாதகம், குற்றப் பின்னணி வலைப்பின்னல் திட்டத்தில், பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்., மோசடி :
ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் குருசாமி, 70; ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இவரை ஏமாற்றி, 20 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளையராஜா, 42, என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் விசாரித்ததில், மேலும் பலரது வங்கி கணக்குகளிலும் பணம் திருடியது தெரியவந்தது. அவனிடம், 23 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின், இளையராஜாவின் அங்க அடையாளம், கை ரேகை, தோற்றம், உருவம், நண்பர்கள், உறவினர்கள், அவனுடன் தொடர்புள்ளவர்கள் என, அவனது ஜாதகம் அனைத்தையும் சேகரித்து, சி.சி.டி.என்.எஸ்., என்ற குற்றம் மற்றும் குற்றப் பின்னணி கண்டறியும் வலைப்பின்னல் திட்டத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
2013ல் அமல் :
இதனால், அவன் தேசிய அளவில், எங்கு கைவரிசை காட்டியிருந்தாலும், வழக்கில் சிக்கியிருந்தாலும் தெரிந்துவிடும். சி.சி.டி.என்.எஸ்., திட்டம், ஈரோடு மாவட்டத்தில், 2013 செப்., 19ல் அமலானது.
தற்போது, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும், இளையராஜா ஜாதகம் தான் முதலாவதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : தி்னமலர் நாளிதழ் - 09.09.2016
No comments:
Post a Comment