disalbe Right click

Sunday, October 16, 2016

சிகிச்சையில் அலட்சியம்


சிகிச்சையில் அலட்சியம் - என்ன செய்ய வேண்டும்?

புதுடில்லி : கவனக்குறைவான சிகிச்சையால், மூளை சேதம் ஏற்பட்டு நோயாளி உயிரிழக்கக் காரணமான, சென்னையை சேர்ந்த, தனியார் மருத்துவமனை, 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரும்படி, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

மூளையில் சேதம் :
சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, டாக்டர் எஸ்.ஜே.எஸ்.பால் என்பவருக்கு, செலுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவு சரிவர கண்காணிக்கப்படவில்லை என தெரிகிறது. 

ஆக்சிஜன் பற்றாக்குறையால், அவர் மூளையில் சேதம் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தது. இதுதொடர்பாக, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில், டாக்டர் பாலின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

10 லட்சம் இழப்பீடு :
வழக்கை விசாரித்த நீதிபதி, வி.கே.ஜெயின் அளித்த தீர்ப்பு விபரம்: மருத்துவமனையில் உயிரிழந்த டாக்டர் பாலுக்கு, ஆக்சிஜன் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும், 'ஆக்சிமீட்டர்' தொடர்ச்சியாக பொருத்தப்பட்டிருந்ததை நிரூபிக்கும் ஆதாரத்தை மருத்துவமனை சமர்ப்பிக்கவில்லை. 

மருத்துவமனை அளித்த சிகிச்சையில், கவனக்குறைவு இருந்ததாக தெரிகிறது. 

சிகிச்சையின்போது இறந்த டாக்டர் பாலின் குடும்பத்தினருக்கு, இழப்பீடாக, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு, 25 ஆயிரம் ரூபாயும், மருத்துவமனை வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 17.10.2016

No comments:

Post a Comment