disalbe Right click

Saturday, January 14, 2017

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க 


ஒரு சொத்தானது விற்பனையாளரிடம் இருந்து நாம் வாங்குவதற்குக் கிரையப்  பத்திரம் மூலம்  மாற்றம் செய்யப்படுகிறது. 

இதற்கு கிரையப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணத்தை அப்பத்திரம் பதிவு செய்யும்போது பதிவு அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டும். 

நமது தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டு மதிப்பின் மேல், 1ஓ ரூபாய்க்கு 7ரூ முத்திரைத் தாள் மற்றும் 1ரூ பதிவுக் கட்டணம் ஆக மொத்தம் 8% கட்டணத்தை நாம் கிரையப் பத்திரத்துக்குச் செலுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் கிரையப் பத்திரத்தில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் மற்றும் அடையாள அட்டை எண்,  பத்திரப் பதிவு துறையின் மூலம் இணைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு வெறும் பெயர்கள், கையெழுத்துக்கள் அல்லது கைரேகைகள் மட்டுமே இருக்கும்.

தற்போது சில மாநிலங்களில் சாட்சிகளின் புகைப்படமும் கிரையப் பத்திரத்தில் ஒட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

இன்னும் சில மாநிலங்களில் உதாரணமாக  மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிரையப் பத்திரம் பதிவுசெய்யும் முன்பு இணையதளத்தில் அந்தக் கிரையப் பத்திரத்துக்கான முழு விவரங்களையும் கண்டிப்பாக முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். 

அதாவது விற்பனையாளர் பற்றிய விபரம், வாங்குபவர் பற்றிய விபரம்,  சொத்து பற்றிய விபரம், கிரையப் தொகை, முத்திரை வரி செலுத்தும் விவரம், சாட்சிகள் பற்றிய விபரம் போன்ற விவரங்களை கிரையப் பத்திரம் பதியும் முன் அதற்குண்டான இணைய தளத்தில் முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்.இதனால் மோசடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது

கிரையப் பத்திரத்தில் என்னென்ன  கவனிக்க வேண்டும்?

➽  முத்திரைத் தாள் மூலமாகவோ, வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூல்மாகவோ முத்திரை வரி முறையாக செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
# சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
பெயர்கள் பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

➽ விற்பனையாளரின் வாங்குபவரின் கையோப்பங்கள் மற்றும் புகைப்படங்கள், இருவரது அடையாள அட்டை எண்கள் இடம் பெற வேண்டும். 

➽ எந்த ஒரு நிபந்தனையும்   கிரையப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கக் கூடாது.

➽  ஒரு வேளை  பிற்காலத்தில்  விற்பனையாளாரின் சொத்து உரிமையில் ஏதாவது பிரச்சினை எழுந்தால் தகுந்த நஷ்ட ஈட்டினை சொத்தினை வாங்குபவர்களுக்கு அந்த சொத்தினை விற்பவர்களால்  வழங்கப்படும் என்று கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்து விவரங்கள், அளவுகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

➽ற்பனையாளருக்கு அச்சொத்து வந்த முறையினை  கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

➽ ஒரு வேளை பவர் பத்திரம் மூலம் கிரையப் பத்திரம் பதிவுசெய்தால், முகவருக்குக் கிரையம் செய்யும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 மேலும் சொத்தின் உரிமையாளர் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 அதே போல்  சொத்தின் உரிமையாளர்   உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உரிமையாளர் உயிருடன் இல்லை என்றால், பவர் பத்திரம் செல்லாததாகி விடும்.

கிரையப் பத்திரம்-அசல் தன்மையை சரிபார்க்கும் முறை

நீங்கள் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் நகல் ஆவணம் விண்ணப்பித்துப் பெற வேண்டும். 

அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளரின் ஆவணத்துடன்  ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

இதன்மூலம் நீங்கள் வாங்கப்போகும் சொத்து பத்திரமானது (விற்பளையாளரின் கிரையப் பத்திரம்) அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

வில்லங்கச் சான்றிதழ் எடுத்து பார்க்க வேண்டும்.

நகல் ஆவணம்  1) நகல் ஆவணம், 2) கையால் எழுதப்பட்ட (Manual) நகல் ஆவணம் என்று இரண்டு வகைப்படும்.

 சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீங்கள் பெற்ற நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் ஒத்திருக்க வேண்டும்.

கையால் எழுதப்பட்ட நகல் ஆவணத்தை சொத்து விற்பனையாளரின் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும்போது விற்பனையாளரின் பெயர் வாங்குபவரின் பெயர், கிரையத் தொகை, சொத்து விபரம் ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும். 

மேலும் பத்திரத்தாளின் எண், பத்திர மதிப்பு, பத்திரத் தாள் முத்திரை, பத்திரத் தாள் விற்பனையாளர் முத்திரை, பத்திர எண், தொகுதி எண் மற்றும் பக்கம் எண் போன்ற விவரங்கள் அசல் பத்திரம் மற்றும் கையால் எழுதப்பட்ட நகல் ஆவணம் ஒப்பிடும்போது சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment