disalbe Right click

Saturday, January 14, 2017

வழக்கின் ஆவணங்களை கேட்பவருக்கு வழங்கவேண்டும்



வழக்கின் ஆவணங்களை  கேட்பவருக்கு வழங்கவேண்டும்
குற்ற வழக்கில் தொடர்பில்லாத நபருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், அமைச்சர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நடந்த வழக்கில், அந்த ஏழு போரையும் தலைமை நீதித்துறை நடுவர் விடுதலை செய்தார். 

அந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டுமென்று சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் மனு தாக்கல் செய்தார். 

அவ்வாறு ஆவன நகல்களை வழங்க முடியாது என்று சேலம் தலைமை நீதித்துறை நடுவர் வழக்கறிஞரின் அந்த மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு என் ( Crl.O.P.No) 18533/2007 (27.02.2008) மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் (27.02.2008) அன்று வழங்கிய தீர்ப்பின் விவரம் பின் வருமாறு : 

“ வழக்கில் தொடர்பில்லாதவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை அளிக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற விதி சேலம் நீதிமன்றத்திற்கு பொருந்தாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம் குறித்து நீதிமன்றங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

வழக்கு தொடர்பான விவரங்களை அதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள உரிமை உண்டு. 

ஆகையால், மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்களை சேலம் தலைமை நீதித்துறை நடுவர் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment