disalbe Right click

Tuesday, January 17, 2017

ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்


ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி,":'சுப்ரீம் கோர்ட் என்பது வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல; எங்கள் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், பள்ளிகளில் சுகாதாரமற்ற முறையில், மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுநல வழக்கு தொடர்ந்தது.

வேடிக்கையாக நினைக்கின்றன

இதை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதில் மனு தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்கள், பதில் மனு தாக்கல் செய்ய வில்லை.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர்தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மாநில அரசுகள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வேடிக்கையாக நினைக்கின்றன; இது, வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல. எங்கள் உத்தரவை, உரிய முறையில் பின்பற்ற வேண்டியது, மாநில அரசுகளின் கடமை.நாங்கள் கோரியபடி, இந்த வழக்கில், உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்; தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.01.2017

No comments:

Post a Comment