மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்
புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தியவர்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய்
நோட்டு அறிவிப்பு வெளியான பின், மற்றவர்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி, அதற்கு சிறு தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பலர் மாற்றினர்.
வருமான வரித்துறைக்கு அதிகாரம்
'இவ்வாறு மற்றவர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என,வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.
கடந்த ஆண்டு, நவ., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பினாமி சட்டத்தின் கீழ், கடும் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
மேலும், சொத்தை பறிமுதல் செய்யவும், வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
87 பேருக்கு நோட்டீஸ்
இதற்கிடையில், செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, 2016, டிச., 30 உடன் முடிந்தது. அந்த காலத்தில், வங்கி கணக்குகளில் செய்யப்பட்ட, 'டிபாசிட்'கள் குறித்து வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
Advertisement
அந்த ஆய்வுகளின்
அடிப்படையில்,
பினாமி பெயரில், கறுப்புப் பணத்தை செலுத்தி ஏமாற்றியதாக, 87 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
'மேலும், 42 வழக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது.
'மேலும், 42 வழக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது.
நன்றி
: தினமலர் நாளிதழ் – 30.01.2017
No comments:
Post a Comment