disalbe Right click

Friday, January 20, 2017

போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை


போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தவருக்கு தேர்வு எழுத 7 ஆண்டுகள் தடை : டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) பதவிக்கான (2014-2015) நேரடி நியமனம் தேர்வுக்கு, விண்ணப்பத்தாரர் என்.பிரேம் என்பவர் எழுத்து தேர்வு முடிவுகள் குறித்த பதிவுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்துள்ளார். 

அதனை தேர்வாணையத்திற்கு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுக்கு தேர்வாணையம் நடத்த போகும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளில்  கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தி்னகரன் நாளிதழ் - 21.01.2017

No comments:

Post a Comment