disalbe Right click

Wednesday, March 8, 2017

உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு


உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை நீதிமன்ற வில்லைகளாக (ஸ்டாம்ப்) மனுதாரர் தரப்பில் மனுவுடன் ஒட்ட வேண்டும்.

நீதிப்பேராணை (ரிட்) மனுவிற்கு 200 ரூபாய், 

ரிட் பல்வகை மனுவுக்கு 10, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்கு 10, 

அனைத்து பல்வகை வழக்குகளுக்கு 10, 

வக்காலத்துக்கு 10, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 50, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 50 முதல் 200 ரூபாய் 

மதிப்புள்ள நீதிமன்ற வில்லைகளை மனுவுடன் ஒட்ட வேண்டும். 

தமிழ்நாடு நீதிமன்ற கட்டணச் சட்டப்படி, தற்போது 

ரிட் மனுவிற்கு 1000 ரூபாய், 

ரிட் பல்வகை மனு 20, 

மறு ஆய்வு மனு 500, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்களுக்கு 20, 

அனைத்து பல்வகை மனுக்களுக்கு 20, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 2000, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 200 மற்றும் 500 

என உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் -08.03.2017

No comments:

Post a Comment