disalbe Right click

Tuesday, June 20, 2017

போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்ய உத்தரவு - எப்போது?

 போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்ய உத்தரவு - எப்போது?
காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் தாங்கள் அன்றாடம் செய்த பணிகள் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பேட்டில் தினசரி நேரம் குறிப்பிடப்பட்டு எழுதிவர வேண்டும் என்பது சட்டமாகும். இந்த குறிப்பேட்டை “போலீஸ் கேஸ் டைரி” என்று சொல்வார்கள். இதனை பார்க்கின்ற அதிகாரம் அல்லது இதிலுள்ள குறிப்புகளை கேட்கின்ற அதிகாரம் நீதிமன்றத்தைத் தவிர யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. சில வழக்குகளில் காவல்துறையினர் செய்த தில்லுமுல்லுகளை இந்த டைரியைப் பார்த்தால் இலகுவாக கண்டுபிடிக்கலாம். அதுபோன்ற ஒரு வழக்கை கீழே காண்போம், வாருங்கள். 
*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 
முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்?- கேஸ் டைரியை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞர் எம்.பி.வைரக் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர் பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத் திடம் சில கேள்விகளை கேட் டேன். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் அதிகாரிகள் அமைதியாக இருந்து வருகின்ற னர். எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட் டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ‘‘இதுதொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதியே அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என தெரிவித்தார்.
அந்த எப்ஐஆர் நகல் மனுதாரர் தரப்புக்கு வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ‘‘இந்த எப்ஐஆரில் குற்றம்சாட்டப் பட்டவர்கள், அடையாளம் தெரியாதவர்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது. அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் 34 பக்க ஆவணங்களை போலீஸில் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அந்த புகார் அடிப்படையில்தான் அபிராமபுரம் போலீஸார் 583/17 என்ற குற்ற எண்ணில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். அப்படியிருக்கும்போது எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை. அந்த வழக்கு எதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடவில்லை. இந்த எப்ஐஆரில் டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர் இடம்பெறாதது ஏன்’’ என வாதிட்டார்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி வாதிடும் போது, ‘‘இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘எப்ஐஆரில் குற்றம்சாட்டப்பட்ட வர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, எப்ஐஆரின் கேஸ் டைரியையும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத் தின் 34 பக்க ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 20.06.2017

No comments:

Post a Comment