disalbe Right click

Monday, July 24, 2017

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!
தமிழகத்தில்பத்திரப்பதிவு முறையில் அதிரடி மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படிஎந்த ஊர் நிலத்தையும்எந்த ஊரின் சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். இதனால்சொத்து பதிவுக்காக பொது மக்கள் அங்கும்இங்குமாக அலைய வேண்டியதில்லைகெடுபிடிகளும் இனி இருக்காது. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும்ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால்இது சாத்தியமாகிறது.
தமிழகத்தில்சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுஎந்தெந்த கிராமங்களில் உள்ளோர்சொத்து பரிமாற்றங்களைஎங்கு பதிவு செய்யவேண்டும் எனதெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதன்படிஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இந்திய பதிவு சட்டம் - 1908ல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியின் படிசென்னைமும்பை,கோல்கட்டாடில்லி ஆகியநான்கு பெருநகரங்களிலும்தலா ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்தில்எந்த ஊர் நிலத்தையும்எங்கும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன் படிதமிழகத்தில்வட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள, 'இணை சார் - பதிவாளர்அலுவலகத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்எந்த ஊரிலும் உள்ள எந்த சொத்தையும்இங்கு பதிவு செய்யலாம்.
ஆனால்சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு களை துல்லியமாக சரி பார்ப்பதில் ஏற்பட்ட சிக் கல் மற்றும் அதிகாரிகள் துணையுடன்பத்திரப் பதிவில் நடந்ததாக கூறப்பட்ட முறைகேடுகளால்அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிஇந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
இந்திய பதிவுச்சட்டம் - 1908ல்தமிழக அரசு, 1997 மார்ச், 29ல் மேற்கொண்ட திருத்தத்தின் படிசொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார் - பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமேபத்திரப் பதிவு செய்ய முடியும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனால்சொத்து உள்ள பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமேபத்திரத்தை பதிவு செய்ய முடியும்.
வெளியூர் பத்திரங்களை பதிய முடியாத நிலை ஏற்பட்டதால்சொத்து விற்பனையில்சம்பந்தப்பட்டோர்அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது கட்டாயமானது. பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையில்,இந்த நடைமுறையை மாற்ற பதிவுத்துறை முடிவெடுத்துள்ளது.
இது குறித்துபதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவு பணிகளை, 'டிஜிட்டல்மயமாக்கும் பணிகள்இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதன்படி, 578 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் உள்ள அனைத்து ஆவணங்களும்பதிவேடுகளும், 'ஆன்லைன்முறைக்கு மாற்றப்படுகின்றன.
சரி பார்க்கலாம்
தற்போதுஎந்த அலுவலகத்தின் பதிவேடுகளையும்எந்த பகுதியில் இருந்தும் சரி பார்க்க முடியும். இதனால்எந்த ஊர் இடத்தையும்எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும்பதிவு செய்வது சாத்தியம். எனவேஇந்த மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாகஆன்லைன் வசதி உள்ள, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில்இத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாகஅனைத்து அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு முறையில் செய்யப்பட உள்ள அதிரடி மாற்றத்தால்பொதுமக்களின் அலைச்சல்அதிகாரிகளின் கெடுபிடிகள் களையப்படும். அந்தந்த ஊர்களில்இருந்த இடங்களில் இருந்தே,பத்திர பதிவு செய்யலாம்.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 23.07.2017

No comments:

Post a Comment