disalbe Right click

Friday, December 29, 2017

10ம் வகுப்பு பொது தேர்வு

தனித்தேர்வர்கள் ’தக்கல்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குசிறப்பு அனுமதி திட்டத்தில்“ (தக்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு  கல்வித்துறையால்   வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்த (22.12.2017 முதல் 29.12.2017 வரை)  நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் அனைவரும் சிறப்பு அனுமதி திட்டத்தின்  (தக்கல்) கீழ் இணையதளம் மூலமாக வரும் 01.01.2018 தேதி முதல் 04.01.2018க்குல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வு சேவை மையங்கள்
ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் (Service Centers) அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு தனித்தேர்வர்கள் நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், இதனை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்
முக்கிய அறிவிப்பு
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாக மட்டுமே  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியானவர்கள் யார்?
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்து செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்கள் தற்போது கருத்தியல் தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் (தக்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து அல்லது மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான உரிய ஆதாரத்தைப் பெற்று கருத்தியல் தேர்வு விண்ணப்பத்துடன் அதனை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதவும் விண்ணப்பிக்கலாம்.
பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்தில் தேர்வெழுதவும் விண்ணப்பிக்கலாம்.
பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து, உரிய பயிற்சி வகுப்பிற்கு வருகை புரியாதவர்களும் அதற்கான ஆதாரத்தை சேவை மையத்தில் சமர்ப்பித்த பின்னர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம் எவ்வளவு?
தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125/- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50/- உட்பட மொத்தம் ரூ.675/- சேவை மையங்களில் (Service Centers) பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
என்னென்ன சமர்பிக்க வேண்டும்?
ஏற்கனவே பள்ளி இறுதித்தேர்வு (SSLC) தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
 தலைமை ஆசிரியரிடமிருந்துஅறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டற்கான பெறப்பட்ட அத்தாட்சி சான்று இணைத்தல் வேண்டும்.
 நேரடியாக முதன் முறையாக SSLC தேர்வு எழுதுபவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ் அல்லது அசல் ESLC சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வர்களும் இரண்டாவதாக குறிப்பிட்ட அத்தாட்சி சான்றினை இணைக்க வேண்டும்
தேர்வு மையங்கள்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் வசிக்கும் கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய  முகவரி  தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் (Hall Ticket)  குறிப்பிடப்படும்.
தேர்வு எழுத தனித்தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது என்றும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017 

No comments:

Post a Comment