disalbe Right click

Friday, December 29, 2017

பதியாமல் விட்ட பிறப்புச் சான்றிதழ்

நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை
பிறப்பு மற்றும் இறப்புகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்அஜாக்கிரதையாக சிலர் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற காலகட்டத்தில்தான் அவர்களுக்கு அந்த ஞாபகமே வரும். ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அதனை பெற வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதனால், பொதுமக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அதிக வேலைப்பளுவும்  இருந்து வந்தது.
அதனை நீக்கும்விதமாக பிறப்பு மற்றும் இறப்புகளை ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவு செய்யாமல் விட்டவர்கள் இனி தங்கள் பகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களை அணுகி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்குண்டான   உத்தரவைப்   பெறுவதற்கு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017 

No comments:

Post a Comment