disalbe Right click

Tuesday, January 2, 2018

குக்கர் பராமரிப்பு

கவிழ்த்துப் போட்டு குக்கரை தேய்க்கக் கூடாது. அப்படி செய்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும்.
குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால், அதனை எடுத்து      ஒருநாள்   பிரிஜ்ஜில்  வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும்.
குக்கரின் அடியில்  எலுமிச்சைத் தோலால் தேய்த்துவிட்டு பிறகு காலி மாத்திரை அட்டைகளால் தேய்த்தால் பழுப்பு நிறம் போய்விடும், மிகவும் பளிச்சென்று ஆகிவிடும்.
பிரஷர் குக்கரில் உள்ளகாஸ்கெட்டை சமையல் முடிந்ததும், தொட்டி நீரில் போட்டுவிடுங்கள். பின்பு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகியுங்கள்.  நீண்ட நாட்கள் உழைக்கும்.
புதிய காஸ்கெட் வாங்கிய உடன், பழைய காஸ்கெட்டை குப்பையில் போட்டு விடுங்கள். இல்லையென்றால் நமக்கே தெரியாமல் அதையே மறுபடி மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
கழுவிய பிறகு குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஸ்குருவிற்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப்பிடிக்காமல் இருக்கும்.
குக்கரின் வெயிட்டை (குண்டை)  ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், அதனுள் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா? என்று பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
குக்கர் மூடி வழியாக சில சமயங்களில் பொங்கி வருவது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. பருப்பு வேக வைக்கும்போது பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது மட்டும் அதனுடன் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
குக்கரில் காய்கறி வேக வைக்கும் போது அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
புளித்த மோரை குக்கரைச் சுற்றியுள்ள கறையின் மீது  ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறைகள் நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.
சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் குக்கர் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018 

No comments:

Post a Comment