disalbe Right click

Saturday, February 10, 2018

நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவு

பிறந்த தேதியை விண்ணப்பத்தில் தவறாக குறிப்பிட்ட பெண் 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவிலுள்ள தாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த பெண் அமுதினி என்பவர் 'குரூப் - 2' பணியிடங்களுக்காக நடந்த, ஆரம்பகட்ட தேர்வு மற்றும் எழுத்து தேர்வில், வெற்றி பெற்றார்; இருந்த போதிலும் அவருக்கு நேர்முக தேர்வுக்கு, அழைப்பு கடிதம் வரவில்லை. காரணம் என்னவென்று ஆராந்தபோது, 'தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்திருக்கவில்லை' என, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
மனுத் தாக்கல்
இதனால், தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில், அமுதினி மனு தாக்கல் செய்தார்.  மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன், அவர்கள் ஆஜரானார். அவர், அமுதினி தனது ''விண்ணப்பத்தில், பிறந்த தேதியாக, 06.12.1993     என்று குறிப்பிடுவதற்கு பதிலாக , 06.02.1993 என்று தவறுதலாக, குறிப்பிட்டு விட்டார்; அமுதினி ''வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; அமுதினிக்கு எதிராக, துறை நடவடிக்கை, தண்டனை எதுவும் இல்லை; இது தவறுதலாக நடந்து விட்ட செயல்தான். ஆதாயம் பெறும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை! என்று அவர் வாதாடினார். 
அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன் அவர்கள், ''தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், அமுதினியின் விண்ணப்பத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அது நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்   விண்ணப்பத்தை, சரியாக நிரப்பவில்லை; எனவே, நிராகரித்ததை குறை கூற முடியாது,'' என்று வாதாடினார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, டி.ராஜா அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அமுதினி தனது பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்தலைமை வனப் பாதுகாவலர் அளித்த சான்றிதழில், 'அமுதினிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை; எந்த தண்டனையும் இல்லை; அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க, ஆட்சேபனை எதுவும் இல்லை' என, கூறப்பட்டு உள்ளது
இதுபோன்ற வழக்கு ஒன்றை ஏற்கனவே விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம்,  விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளதுஆதாயம், சலுகை பெறும் நோக்கம் இல்லை என்பதால்அமுதினியின் விண்ணப்பத்தை, தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும். நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அமுதினியை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.02.2018 

No comments:

Post a Comment