disalbe Right click

Tuesday, June 5, 2018

அவசர உதவிக்கு KAVALAN Dial 100

அவசர உதவிக்கு KAVALAN Dial 100 
         பொதுமக்கள் அவசர காலத்தில் காவல்துறையை தொடர்புகொள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற செயலிகளை தமிழக முதல்வர் இன்று (05.06.2018) தொடங்கிவைத்தார்.
கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால், பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. பொதுமக்களின் பயத்தைப் போக்கும் வகையில், அவசர காலத்தில் காவல்துறையை எளிதாகத் தொடர்புகொள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற ஆப் கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் அவசரமாக உதவி தேவைப்படுகின்ற காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியை நாம் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள இயலும். அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும், அவர்கள் அப்போது இருக்கின்ற இடமும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியும். மேலும், அவர்கள் அந்த ஆப்பில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் அல்லது நண்பர்களின் செல்போன் எண்ணுக்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் உடனடியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! என நம்பலாம்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.06.2018 

No comments:

Post a Comment