disalbe Right click

Wednesday, September 19, 2018

‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி

 இந்தியா போஸ்ட் பேமென்ட்வங்கி
நமக்கு அளிக்கும் சாதகங்கள்
வங்கிச்சேவையை பரவலாக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி, புதிய வகை வங்கியான, ‘பேமென்ட்ஸ்வங்கிகளுக்கு அனுமதியை அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் அனுமதி பெற்ற இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி இம்மாத துவக்கத்தில் இருந்து, நம் நாடு முழுவதும் தன் செயல்பாடுகளை துவங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கி சேமிப்பு கணக்கு சேவை, பரிவர்த்தனை வசதிகளை பெறுவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் பொதுமக்கள் பெறலாம்.
மூன்று வகையான கணக்குகள்
மூன்று வகையான சேமிப்பு கணக்கு சேவையை இந்தியா பேமென்ட் போஸ்ட் வங்கி நமக்கு அளிக்கிறது. மற்ற வங்கிகளில் உள்ளது போல வழக்கமான சேமிப்பு கணக்கு மூலம், எந்தவித கட்டணமும் செலுத்தாமல், இதில் பணத்தை எடுக்கலாம். இதற்கான மையங்களில் அல்லது வீடு தேடிய சேவைக்கு விண்ணப்பித்து, இந்த வகை கணக்கை நாம் துவக்கலாம். ‘ஜீரோ பேலன்ஸ்கணக்கு என்பதால் குறைந்த பட்ச தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், காலாண்டு சேமிப்பு கணக்கு அறிக்கை இலவசமாக அளிக்கப்படும்.
இரண்டாவதாக, டிஜிட்டல் சேமிப்பு கணக்கை, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயலி மூலம் நாம் துவக்கலாம். நமது பான் கார்டு மற்றும் ஆதார் எண் விபரங்களை அளித்து, எளிதாக இந்த சேமிப்பை கணக்கை இங்கு துவக்கலாம். இருந்தாலும், ஒராண்டுக்குள், Know Your Customer நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகே, இது வழக்கமான கணக்காக எடுத்துக் கொள்ளப்படும். ‘பேஸிக் அக்கவுன்ட்எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு சேவையும் இங்கு வழங்கப்படுகிறது. வழக்கமான சேமிப்பு கணக்கு அம்சங்கள் கொண்டிருந்தாலும், மாதம் நான்கு முறை மட்டுமே, பணம் எடுக்க முடியும்.
இந்திய அஞ்சலகத்துறை சேமிப்பு கணக்குடன், பேமென்ட் வங்கி கணக்கு சேவையை இணைத்துக்கொள்ளும் வசதியும் இங்கு உண்டு. இதன்படி இணைக்கப்பட்டால், பேமென்ட் வங்கியிலுள்ள நமது கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால், எஞ்சிய தொகை அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். இந்த வங்கியிலுள்ள எல்லாவகை சேமிப்பு கணக்குகளுமே, 4 சதவீத வட்டியை நமக்கு அளிக்கின்றன.
காலாண்டு அடிப்படையில்தான் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. அஞ்சலகத்தில் கூட சேமிப்பு கணக்கு துவக்க குறைந்தபட்ச டிபாசிட்டாக, 20 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், பேமென்ட் வங்கியில் இதற்கான அவசியமே இல்லை. மேலும், பேமண்ட் வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அஞ்சலக சேமிப்பு கணக்கில்கூட குறைந்தபட்சம், 50 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
பணம் எடுக்கும் வசதி
இந்தியா பேமென்ட் வங்கியில் டெபிட் கார்டுக்கு பதில், QR., கோடு வசதி கொண்ட கார்டு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது மைக்ரோ, .டி.எம்., மூலம் இந்த கார்டு முதலாவதாக சரி பார்க்கப்பட்டு, அஞ்சலக ஊழியர் அல்லது வர்த்தக பிரதிநிதியால் பணம் நமக்கு அளிக்கப்படும். வீடு தேடி வரும் வங்கிச்சேவையில்
பயோமெட்ரிக்முறையால் இரண்டாவது முறையாக சரிபார்த்தல் மேற்கொள்ளப்படும். ஆனால், இதற்கென்று கட்டணம் உண்டு. QR கோடு கார்டு மூலமாக, பில் செலுத்துவது, பணம் அனுப்புவது மற்றும் ரொக்கமில்லா ஷாப்பிங் போன்ற சேவைகளையும் நாம்பெற்றுக் கொள்ளலாம்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 19.09.2018 

No comments:

Post a Comment