disalbe Right click

Tuesday, December 18, 2018

மனித உரிமைகள் நீதிமன்றங்களில் வழக்குகள்

மனித உரிமைகள் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வது எப்படி?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் - நிஜமா? மாயத்தோற்றமா?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள்
தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள் மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் என தமிழகத்தில் அறிவிப்பு செய்யபட்டுள்ளது.
புகார்
மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தேசிய ஆணையத்தில், சம்பவம் நடைபெற்ற இடம் உள்ள மாநில ஆணையத்தில் அல்லது மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.
மனித உரிமை பாதுகாப்பு சட்டம்
வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் குறித்த உரிமைகளே மனித உரிமை எனப்படும் என்று மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(d) தெரிவிக்கிறது. இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை அமைப்புகளில் புகார் கொடுக்க கூடாது.
தேசிய,மாநில ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரை மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல கிடப்பில் உள்ளன. பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக விடப்படுகிறது.
ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.
தேசிய,மாநில ஆணையங்கள் வெகு தொலைவில் இருப்பவை. மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அருகே இருப்பவை.
புகார் தாக்கல் முறை 
மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாக அல்லது வழக்கறிஞர் மூலம் தனி புகாராக (private Complaint) தயாரிக்க வேண்டும்.
இப்புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி குற்றவியல் விசாரணை முறை சட்டம், பிரிவு 200-ன்படி குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள (jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.
புகாரை பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றமானது, முதலில் அதனை குற்றவியல் விசாரணை முறை சட்டம், பிரிவு 202-ன்படி விசாரணை செய்து, புகாரில் அடிப்படை உள்ளது என முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகார் நகலை வழங்கி கேள்வி கேட்டு பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.
மாயத்தோற்றமா?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் தமிழகத்தில் கடந்த 1996-ல் அமைக்கப்பட்டது.
கடந்த 1996 முதல் 2010 வரை தமிழகத்தில் இருந்து தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் மொத்த எண்ணிக்கை -130233
இதே பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -21349
இதே பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை - 108717
இதே பத்து ஆண்டுகளில் தமிழக மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167
பரிந்துரை அதிகாரம் மட்டுமே கொண்ட ஆணையங்களை நாடிய மக்கள் -99.9%
தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை நாடிய மக்கள் - 0.1%.
இதற்கு காரணம் என்ன?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வின்மை, நடைமுறை பிரச்சினைகள்.
தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் சிறப்பு புலனாய்வு குழுக்கள் உள்ளன. இதைப்போல பிரிவு 37 -ன்படி உள்ளபடி மாவட்ட அளவில் மனித உரிமைக்கான சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இதைப்போல பிரிவு 31-ன்படி உள்ளபடி அரசு குற்றஞ்சாட்டுனர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும்
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கான தக்க விதிமுறைகளும் வழி காட்டுதல்களும உடனே வகுக்கப்பட வேண்டும்
பொது மக்களிடையே மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.
அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:
இச் செய்தியை மற்றவர்களும் அறிந்து கொள்ள அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டுப் பதிவு இது

எனது நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு நன்றி!

No comments:

Post a Comment