disalbe Right click

Friday, March 22, 2019

கிரைய பத்திரம் பதியும் முன்

கிரைய பத்திரம் பதியும் முன் கவனிக்க வேண்டிய  விஷயங்கள்
ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி இன்னொருவரின் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு அல்லது டைப்பிங் செய்யப்பட்டு சார்பதிவகத்தில் இரண்டு   சாட்சிகள் முன்னிலையில் பதியப்படும்.
1. எழுதி கொடுப்பவரது பெயர் மற்றும் இன்சியலானது, அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என முதலில் பார்க்க வேண்டும். ஆதார் எண், செல்போன் எண் எழுத வேண்டும்.
2.எழுதி வங்குபவரது பெயர் மற்றும் இன்சியலானதுஅவரின் அடையாள அட்டை  மற்றும் ஏனைய ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா?  என்பதையும்  பார்க்க வேண்டும்ஆதார் எண், செல்போன் எண் மற்றும் பக்க எண்கள் எழுத வேண்டும்.
3. ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் (தாய்ப்பத்திரம்) உள்ள எழுதி கொடுப்பவரின்   முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரிகளாக இருந்தால் இரண்டு முகவரிகளையும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
4.  கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது என்பதை பார்க்க வேண்டும்.
⧭  அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி  (சுயசம்பாத்தியம்) இருக்கலாம்.
⧭ அவருடைய பெற்றோர்கள் அல்லது அவருடைய குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
 பிறர் எழுதிய உயில் , பிறர் செய்த தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
 பொது ஏலம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
⧭ பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம்
இதனை கிரயம் எழுதி கொடுப்பவர் ஆவண எண், நாள் & பதிவு அலுவலக விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று தெளிவாக பத்திரத்தில் காட்டி இருக்க வேண்டும்.
5. கிரயம் எழுதி கொடுப்பவர் தனக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்பதையும்   பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் ஆவண எண், நாள் & பதிவு அலுவலக  விவரத்துடன்    தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பு.
6. கிரயத் தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகையை எழுதுங்கள்
7. அக்ரிமெண்ட் போடும்போது எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?, அதில்  எவ்வளவு பணம்   ரொக்கமாக கொடுக்கப்படுகிறது அதில் எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது?, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது?, என்பதை வங்கியின் பெயர் மற்றும் ஊர், காசோலை எண், செலுத்தப்பட்ட அக்கவுண்ட்  எண் மற்றும் பெயர்,  அந்த வங்கியின் பெயர் மற்றும் ஊர்  ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
8.. எழுதி கொடுப்பவர்கிரயம் எழுதி வாங்குபவருக்கு பத்திரத்தில்  
⧪. தானம், ⧪.  அடமானம், ⧪.  முன் கிரயம்,⧪.  முன் அக்ரிமெண்ட்⧪.  உயில்,   ⧪. செட்டில்மெண்ட்,  ⧪.  கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி⧪.  ரெவின்யூ அட்டாச்மெண்ட், ⧪.  வாரிசு பின் தொடர்ச்சி⧪.  மைனர் வியாஜ்ஜியங்கள்⧪. 11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்⧪. சொத்து ஜப்தி⧪. சொத்து ஜாமீன்,   ⧪.  14.பைசலுக்காக   சர்க்கார் கடன்கள்⧪.  வங்கி கடன்கள்⧪. தனியார் கடன்கள்⧪. சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை⧪. சிவில், கிரிமினல் வழக்குகள்⧪. சர்க்கார் நில ஆர்ஜிதம்⧪. நிலகட்டுப்பாடு⧪. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்⧪. நில உச்ச வரம்பு கட்டுப்பாடு⧪. பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை, ⧪.   இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை! ⧪. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று⧪. சொத்து   சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன்
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும். (ஆனால், மேற்கண்ட விபரங்களை யாரும் எழுதுவதே இல்லை. இந்த சொத்தில் எந்தவிதமான வில்லங்கமும் இல்லை. அப்படி ஏதாவது வில்லங்கம் வந்தால், அதனை எனது சொந்தச் செலவில் தீர்த்து வைப்பேன்! என்று மட்டும் எழுதி விற்பவரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள்)
9. தபசில் சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். ஆகியவற்றை தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
10. இடம் அல்லது கட்டிடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் இருத்தல் நல்லது. மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு அது உதவியாக இருக்கும் .
11.. வாங்குகின்ற கிரைய சொத்தை சுற்றி இருக்கின்ற நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
12. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் (விற்பவர்) கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் (விற்பவர்) தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
13. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதி கொடுப்பவர் (விற்பவர்) கையொப்பம் இட்டு இருக்கிறார்களா   என்று பார்க்க வேண்டும்.
14. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ?, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுக்கப்பட்டுள்ளதா?, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா? அவர்களது உரிமம் எண் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.03.2019 

No comments:

Post a Comment