disalbe Right click

Friday, March 13, 2020

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்
Cr.P.C. என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 1973, அத்தியாயம் 14ல் பிரிவு 190 முதல் பிரிவு 199 வரை  குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பற்றிய விளக்கங்கள்  சொல்லப்பட்டுள்ளது. 
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (1)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு முதல் வகுப்பு நடுவர் எவரும், 
  • எந்த சங்கதிகள் ஒருங்கே சேர்ந்தால் ஒரு குற்றம் ஆகுமோ, அவற்றை குறித்து ஒருவரிடம் இருந்து முறையீடு புகார்  பெறப்பட்டிருந்தால், அல்லது
  • அந்த  குற்றம் பற்றிய சங்கதிகள் குறித்து காவல்துறை அறிக்கை  பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று காவல்துறை அலுவலர் அல்லாத வேறு யாராவது ஒருவரிடம் இருந்து தகவல் பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அல்லது அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று நடுவருக்கே  தெரிய வந்திருந்தால், 
அந்த குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (2)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு, தலைமை நீதித்துறை நடுவர் அவர்களால் சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள இரண்டாம் வகுப்பு நடுவரும் மேற்கண்ட குற்றம் எதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
சாமானியர்கள் வழக்கு தொடுக்க....
மேற்கண்ட பிரிவின் கீழ் சாமானியர்கள் வழக்கு தொடுக்கலாம். அதற்குரிய மாதிரி விண்ணப்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






நீதிமன்ற முறையீடு மாதிரி படிவம் அளித்தமைக்கு திரு A Govindaraj Tirupur அவர்களுக்கு நன்றி.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2020

No comments:

Post a Comment