disalbe Right click

Showing posts with label அரசு திட்டங்கள். Show all posts
Showing posts with label அரசு திட்டங்கள். Show all posts

Sunday, February 17, 2019

அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் சேருவது எப்படி?
புதுடில்லி:'அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள, 3.13 லட்சம் பொது சேவை மையங்களில் சந்தா தொகையை செலுத்தலாம்' என, அறிவிக்க பட்டு உள்ளது.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களது, 60வது வயது முதல், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
மத்திய தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள, 'சி.எஸ்.சி., - கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம் மூலம், இதற்கான பணிகள் நடக்கும்இந்த நிறுவனம், 18 - 40 வயதுக்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்யத் துவங்கி உள்ளது.மாதம்,15 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள, 10 கோடி தொழிலாளர் களை, ஐந்தாண்டு களில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம், நாடு முழுவதும், 3.13 லட்சம் பொது சேவை மையங்களை நடத்தி வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களை அணுகி, தங்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஜன்தன் கணக்கு, 'பாஸ்புக்' ஆகியவற்றை காண்பித்து, தங்கள் பெயர்களை பதிவுசெய்யலாம்.
தொழிலாளர்கள், ஓய்வூதிய திட்டத்துக்கான முதல் மாத சந்தா தொகையை, ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு, ரசீது அளிக்கப்படும். 18 வயதில், இந்த திட்டத்தில் சேரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாத சந்தாவாக, 55 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை, அவர்களின் கணக்கில், மத்திய அரசு செலுத்தும்
தொழிலாளரின் வயது அதிகரிக்கையில், சந்தா தொகையும் உயரும்..தெரு வியாபாரிகள், சுமை துாக்குவோர், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைப்போர், குப்பை சேகரிப்போர், ரிக்ஷா ஓட்டிகள் ஆகியோர், இந்த திட்டத்தால் பயன்பெறுவர்.
சலவை தொழிலாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருக் கும், இந்த திட்டம் பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.
*******************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2019


Friday, August 24, 2018

விபத்து நிவாரணத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு விபத்து நிவாரண திட்டங்கள் 
விபத்து நிவாரணத் திட்டம்-1
இந்த விபத்து நிவாரணத் திட்டம் ஒன்றின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
தமிழ்நாடு அரசாணை 471, நிதித்துறை, (மு..பொ.நி.நி) நாள் 23.5.1989)-ல்
கீழே குறிப்பிடப்பட்ட 44 வகை தொழிலாளர்களின் ஏழை வாரிசுதாரர்கள்.
சலவைத் தொழிலாளி
 காலணித் தொழிலாளி
 தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்.
 விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்
 கருமார், சுத்தியல் கருமார்
 பொன் வேலை செய்வோர் வெள்ளி வேலை செய்வோர்.
 கூடை முடைவோர்.
 கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிடத் தொழிலாளி
 ஓடு தொழிலாளாகள்
 செங்கல் அடுக்குவோர்
 கிணறு தோண்டுவோர்
 கிணறு கட்டுவோர்கள்
 வேளாண்மைத் தொழிலாளர்கள் சிறுவிவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் 
       (2.5 ஏக்கருக்கு குறைவாக நில முள்ளவர்கள்)
 பதனீர் இறக்குவோர்
 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள்
 பூச்சி மருத்து தெளிப்பவர்கள்
 பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்.
 மீனவர்கள் (கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக அல்லாதவர்).
 கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்.
 டிரக் ஓட்டுபவர்கள்.
 ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள்
 தனியார் கார், வாடகைக்கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்.
(வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.)
 முடி திருத்துபவர்.
 கை வண்டி இழுப்போர்.
 மிதி வண்டி ஓட்டுநர்
 தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்.
 மண்பாண்டம் மற்றும் மண் பொம்மைகள் செய்யும் குயவர்,குல்லாளர் மற்றும் வேளார்.
 வீடுகளில் பணிபுரிவோர்.
 பாம்பு பிடிக்கும் தொழில் ஈடுபடுவோர்.
 சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்.
 தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்
 லாரிகளில் பாரம்/ ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள்
 ஏழைத் தையல் தொழிலாளர்கள்.
 வெள்ளை அடிப்போர் வண்ணம் பூசுவோர் மற்றும் மின்வினைஞர்கள்.
 கிராமிய நடனக் கலைஞர்கள்
 சமையல் தொழில் செய்பவர்கள்.
 மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
 தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்கள்.
 பந்தல் மேடை, மண்டபம், மாநாடு திருமணப் பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள்
 மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம் கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருள்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் 
(கூட்டுறவுச் சங்கத்து உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டும்).
 தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள்.
 பிளம்பர்.
 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
 ஓவியர்கள்.
மேற்குறிப்பிட்ட 44 வகை தொழில்களில் ஏதாவது ஒன்று செய்பவராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட 44 தொழில்களில் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருந்து தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது சாதாரணமாக இறப்பு நேரிட்டாலோ நிவாரணம் பெற தகுதியுடையவராவார்.
விண்ணப்பப் படிவம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல் தகவல் அறிக்கைஇறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும். (மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்)
விபத்து நிவாரணத் திட்டம்-2
இந்த விபத்து நிவாரணத் திட்டம் இரண்டின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
 கட்டிடத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள்
விண்ணப்பப் படிவம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல்   தகவல்  அறிக்கை.   பிரேதப் பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும்
(மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்.)
http://ta.vikaspedia.in  இணையதளத்திலிருந்து
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.08.2018