disalbe Right click

Showing posts with label தண்டணை. Show all posts
Showing posts with label தண்டணை. Show all posts

Friday, March 17, 2017

வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை

பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி: மேலாளருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை,:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், ஒரு கோடி 98 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, மேலாளர் உட்பட ஆறு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிளை மேலாளராக ராதாகிருஷ்ணன், உதவியாளராக ராஜகோபாலன் பணிபுரிந்தனர். 

இவர்களது நண்பர்கள் புதுக்கோட்டை விஸ்வநாதன், விருதுநகர் சிவாரங்கசாமி, சிவகாசி ராஜ்கபூர், திருநெல்வேலி ஷேக்அமீர். 

இவர்களின் வங்கி கணக்குகளை, அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு மாற்றினர்.இக்கணக்குகளுக்கு மும்பை வங்கிகளில் இருந்து காசோலைகள் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்தனர். 

காசோலைகளை நான்கு பேரின் கணக்குகள் மூலம் மாற்றி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கணேசன் விசாரித்தார். 

ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், ஷேக் அமீர், ராஜ்கபூர், சிவாரங்கசாமிக்கு தலா ஏழு ஆண்டு, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


Thursday, February 2, 2017

கோர்ட் உத்தரவை மதிக்காத கலெக்டருக்கு சிறை

Image may contain: text

மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாருக்கு 6 வாரம் சிறை: மேலூர் கோர்ட் உத்தரவு

மேலூர்: கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

உத்தரவு:

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2017