disalbe Right click

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, February 17, 2018

வேட்பாளர்களுக்கு சிக்கல்

வேட்பாளர்கள் தங்களுக்குரிய வருமானத்திற்கு ஆதாரம் காட்ட வேண்டும்
தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
இனி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய சொத்து கணக்கை தாக்கல் செய்வதுடன், அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக    தீர்ப்பு அளித்துள்ளது.
பொதுநல வழக்கு
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு ஒன்று தேர்தல்களில் போட்டியிடுபவர்கள், தங்களுடைய சொத்து கணக்குடன், அதற்கான வருவாய் ஆதாரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த இரு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தற்போது லோக்சபாஎம்.பி.,யாக உள்ள 
நான்கு பேரின் சொத்து மதிப்பு, 12 மடங்கு உயர்ந்து உள்ளது. 'அதே நேரத்தில், 22 பேரின் சொத்து மதிப்புஐந்து மடங்கு உயர்ந்து உள்ளதுஎனகுறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போதுமத்திய நேரடி வரி வருவாய் வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், 'ஏழு லோக்சபாஎம்.பி.,க்கள் மற்றும், 98 எம்.எல்..,க்கள் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்குகளில்தவறான தகவல்கள் உள்ளது தங்களுக்குத் தெரிய வந்துள்ளதுஎன்று கூறியுள்ளது. 
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய மற்றும் குடும்பத்தாரின் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறைகளில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இனிமேல், இந்த சொத்துக்கான வருவாய் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018 

Wednesday, June 7, 2017

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று, எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.
No automatic alt text available.
No. State/UT         MLAs    Population   Vote value  Total vote value 
1 Andhra Pradesh     175     43,502,708    248        43,400 
2 Arunachal Pradesh   60        467,511      8          480 
3 Assam             126     14,625,152    116        14,616 
4 Bihar              243     42,126,236    173        42,039 
5 Chattisgarh          90     11,637,494    129        11,610 
6 Delhi               70      4,065,698     58         4,060 
7 Goa                40       795,120     20           800 
8 Gujarat            182     26,697,475    147        26,754 
9 Haryana            90     10,036,808    112        10,080 
10 Himachal Pradesh  68      3,460,434     51         3,468 
11 Jammu & Kashmir  87      6,300,000     72         6,264 
12 Jharkhand         81     14,227,133    176        14,256 
13 Karnataka        224    29,299,014     131        29,344 
14 Kerala           140    21,347,375     152        21,280 
15 Madhya Pradesh  230    30,016,625     131        30,130 
16 Maharashtra      288    50,412,235     175        50,400 
17 Manipur           60     1,072,753      18         1,080 
18 Meghalaya         60     1,011,699      17         1,020 
19 Mizoram           40      332,390       8           320 
20 Nagaland          60      516,499       9           540 
21 Odisha           147    21,944,615     149        21,903 
22 Puducherry        30      471,707       16          480 
23 Punjab           117    3,551,060      116        13,572 
24 Rajasthan        200   25,765,806      129        25,800 
25 Sikkim            32     209,843        7           224 
26 Tamil Nadu      234   41,199,168      176         41,184 
27 Telangana       119   43,502,708      148         17,612 
28 Tripura           60    1,556,342       26          1,560 
29 Uttar Pradesh    403   83,849,905      208         83,824 
30 Uttarakhand      70     4,491,239       64          4,480 
31 West Bengal     294   44,312,011      151         44,394  
            Total 4,120  549,302,055                 549,474 

Parliament     Seats   Vote Value  Total vote value 
Lok Sabha     543       708         3,84,444 
Rajya Sabha   233       708         1,64,964 
       Total   776      1416         5,49,408 

Combined            Total voters    Total vote 
value MLA (elected)     4,120         5,49,474 
MP        (elected)      776         5,49,408 
                 Total 4,896        10,98,882 
எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். 
ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். 
இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.
Veera Kumar
நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  - 07.06.2017 


Saturday, March 25, 2017

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?

Image may contain: text

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?
தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி. மற்றவர்களுக்கு தோல்வி கட்டாயம். ஆனாலும் அந்த தோல்வி கவுரவமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.
அந்த கவுரவத்தின் அடையாளமாக சொல்வது டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்வது. அதுவும் எல்லோருக்கும் வாய்க்காது அதிகபட்சமாக 6 பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு மேல் போட்டியிட்டவர்களுக்கு கட்டாயம் டெபாசிட் காலி.
என்ன இந்த டெபாசிட் காலி?
தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் வேட்பு மனுவுடன் வைப்புத் தொகையும்(டெபாசிட்) செலுத்துவார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
தோற்பவர்களுக்கும் இந்த வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.
அப்படி வைப்புத் தொகையை திருப்பி பெற வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது ஒரு தொகுதியில் 6000 வாக்குகள் பதிவாகி இருந்தால் 1000 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் ஒவ்வொருவருக்கும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
அப்படியில்லாமல் 1000க்கும் குறைவான வாக்குகள் பெறுபவர்களுக்கு வைப்புத் தொகையை திருப்பித்தர மாட்டார்கள். அப்படி வைப்புத் தொகையாக செலுத்திய பணத்தை திருப்பி பெற முடியாத தோல்வியைத்தான் 'டெபாசிட் காலி' என்கின்றனர்.
பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு டெபாசிட் காலி சங்கடம் அதிகம் ஏற்படுவதில்லை. சிறுகட்சிகள், சுயேட்சைகள்தான் இந்த நஷ்டத்தில் சிக்குவார்கள்.
சில நேரங்களில் அரிதாக பெரிய கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும் கூட இந்த 'டெபாசிட் காலி' அலையில் அடித்து செல்வதுண்டு.
நாடாளு(பாராளு)மன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.25,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.10,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட தொகையில் பாதியை கட்டினால் போதுமானது.
(2011ம் ஆண்டு கணக்கின்படி) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தேர்தல் செலவின உச்சவரம்பு விவரங்கள்:
ஊராட்சி வார்டு உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 200,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 100.
செலவின உச்சவரம்பு ரூ. 3,750.
ஊராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 15,000.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 37,500.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு ரூ. 75,000.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 250,
செலவின உச்சவரம்பு ரூ. 11,250.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் தலைவர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500,
செலவின உச்சவரம்பு ரூ. 56,250.
நகராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 22,500,
சிறப்பு நிலை, தேர்வு நிலை 56,250.
நகராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 1,000,
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 1,12,500,
தேர்வு நிலை, சிறப்பு நிலை ரூ. 2,25,000.
செலவு செய்வது எப்படி?தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படும் தேர்தல் செலவினங்களை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் தனி கணக்கு துவங்கி பராமரிக்க வேண்டும்.
செலவு கணக்கு 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

Thursday, February 23, 2017

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு

இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
மதுரை: 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல், தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில், ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மறு பரிசீலனை : உள்ளாட்சித் தேர்தல் நடத்த, 2016ல் அறிவிப்பு வெளியானபோது, மதுரை மாநகராட்சி வார்டு, 41ல் போட்டியிட, என் மனைவி முத்துசுமதி - இந்திய கம்யூ., மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த இந்திராணியும் மனு தாக்கல் செய்தார்.

அவர், 2011 உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மனு பரிசீலனையின்போது, அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

ஆட்சேபனை மனுவை ஏற்ற அவர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஒப்புகைச் சான்றும் வழங்கவில்லை.

போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் செலவு கணக்குகளை விதிகளின்படி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், தகுதியிழப்பு செய்யப்படுவர்.

ஓட்டு போட தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடும்போது, போட்டியிட தகுதி மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை வெளியிட வேண்டியது, மாநில தேர்தல் கமிஷனின் கடமையாகும்.

இதை அரசியலமைப்புச் சட்டப்படி மேற்கொள்ள வேண்டும். ஒருவர் மனு தாக்கல் செய்யும்போது, அவருக்கு எதிராக யார் ஆட்சேபனை தெரிவித்தனரோ, அவர்களே குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகிறார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் வேட்பாளர் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சான்று வழங்காதது, தேர்தல் முடிந்த பின், சட்டப்படி நிவாரணம் தேடுவதற்கு தடையாக இருக்கும்.

தகுதியிழப்பு : கடந்த, 2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு, செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

யாரேனும் ஆட்சேபனை மனு அளித்தால், அதை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதலை, கையேட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர், 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,772 பேர் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

நீதிபதிகள், '2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

மாநில தேர்தல் கமிஷனின் செயலர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 8க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.02.2017

Monday, January 2, 2017

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க தடை


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க 
கட்சிகளுக்கு தடை: 


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை: 
முக்கியத்துவம் வாய்ந்த ‘இந்துத்துவா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்பது சட்டவிரோத செயல். அரசியல்வாதிகள் யாரும் அதுபோல் வாக்கு கேட்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது, பாஜக வைச் சேர்ந்த மனோகர் ஜோஷி, இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி என்.பி.பாட்டீல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

‘இந்துத்துவா வழக்கு’ என்று பெயர் பெற்ற இவ்வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, ‘‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கை முறை. அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் வேட்பாளரை பாதிக்காது’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய வேறு சில மனுக் களும் சேர்க்கப்பட்டன. குறிப்பாக மும்பை சான்டாகுரூஸ் சட்டப் பேரவை தொகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், அபிராம் சிங்கின் தேர்தல் வெற்றியை ஒதுக்கிவிட்டது. இதை எதிர்த்து அவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் இந்துத்துவா வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின்போது, ஒரு மதத்தின் தலைவர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும்படி தன்னுடைய ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-ன்படி சட்டவிரோத செயலா? என்ற முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 27-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகிய 4 பேர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது, முறையற்ற செயல். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றியது. இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்ட்கள் என அனைவரையும் குறிக்கும்.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும்போது மதச்சார்பின் மையையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

எனவே, தேர்தல் சட்ட விதிகளின்படி சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எனவே, ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது

இவ்வாறு 4 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

எனினும், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‘அவரது மதம்’ என்பது வேட்பாளரின் மதத்தை மட்டும்தான் குறிப்பிடுகிறது என்று கருத்து தெரிவித்தனர். எனினும், பெரும்பான்மை அடிப்படையில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தில் தீர்ப்பை நேற்று வெளியிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, விரும்பும் மதத்தை பின்பற்றவும், அதைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தேர்தலுக்காக அந்த மதத்தை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.01.2017

Thursday, September 29, 2016

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்


ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - என்ன செய்ய வேண்டும்?

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணத்தில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பமின்றி, சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப். 26 தொடங்கி அக். 3 வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை நடைபெறுகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், உறுதிமொழி ஆவணம் மற்றும் ரூ. 20-க்கான பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் (சான்று உறுதி அலுவலர்) சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

உறுதிமொழி ஆவணத்தில் பகுதி ‘அ’வில் வேட்பாளரின் விவரம், நிரந்தரக் கணக்கு எண் (பான்), வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, தண்டனை ஏதும் பெற்றுள்ளாரா?, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்துகள் விவரம், தொழில், கல்வித் தகுதிகள் என 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 

அடுத்து பகுதி ‘ஆ’ வில், பகுதி ‘அ’ வில் குறிப்பிடப்பட்ட 1 முதல் 10 வரையிலான விவரங்களின் சுருக்கம் இடம் பெற்றுள்ளது.

கடைசியாக பக்கம் 10-ல் வேட்பாளரும், சான்றுறுதி அலுவலரும் கையொப்பமிட வேண்டும்.

இந்த தேர்தலில், புதிய நடைமுறையாக நோட்டரி பப்ளிக் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதி மட்டுமல்லாது, உறுதிமொழி ஆணையரும் (வழக்கறிஞர்களில் உறுதிமொழி ஆணையராக பதிவு செய்துள்ளவர்கள்) சான்றளிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் உறுதிமொழி ஆவணத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் வேட்பாளர்கள் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. மனுக்கள் திரும்பப் பெறுவது போன்ற செயல்களில் வேட்பாளரோ அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரோ எளிதில் அடையாளம் காண முடியும். 

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனு வாபஸ் பெறும் நடைமுறைகளில் பிரச்சினையின்றி திடமான முடிவுகளை எடுக்க முடியும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்கும்போது, நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதியிடம் சான்று பெறத் தேவையில்லை. 

ரூ.20-க்கான பத்திரத்தில் வேட்பாளரே சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என்ற நடைமுறையையும் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடு பவர்கள் சான்றொப்பம் பெற பணம் செலவு செய்யத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.09.2016

Monday, September 26, 2016

எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா!


எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா! - என்ன செய்ய வேண்டும்?

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்ததார ராக இருக்கக்கூடாது, கண்டுபிடிக் கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படு வதாக தேர்தல் ஆணையம் எச்ச ரித்துள்ளது.

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட் சிப் பதவிகளுக்கு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நேற்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினரும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர் தலில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, மோதல்கள், சர்ச்சைகள் ஏற்படு வதை தடுக்க வேட்பாளர் தகுதி மற்றும் தகுதியின்மை, வாக்காளர் களை அணுகும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், நன்ன டத்தை விதிகள், சட்டத்திருத்தங்கள் அடங்கிய 14 அத்தியாயங்கள் அடங் கிய வழிகாட்டுதல் கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதில் குறிப்பிடப் பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

$ குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்துக்கு மேல் தண் டனை பெற்றிருப்பின் தண் டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளி லிருந்து ஆறு ஆண்டு காலத் துக்கும் தேர்தலில் போட்டியிடு வதற்கு தகுதி அற்றவராக கருதப்படுவார்கள்.

$ தேர்தல் குற்றச்செயல்களுக் காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதி யற்றவராக கருதப்படுவர்.

$ தேர்தலில் போட்டியிடுபவர் மன நலம் குன்றியவராக இருக்கக் கூடாது.

$ 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண் டனை பெற்றவராக இருத்தல் கூடாது.

$ பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சிகளில் கவுன்சிலராக போட்டியிடுகிறவர்கள், அந்த உள்ளாட்சியுடன் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூல மாகவோ எந்த ஒரு வேலைக் கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்த தாராக இருக்கக் கூடாது. கண்டுபிடித்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவர்.

$ அரசுப் பணியாளராகவோ, அலு வலராகவோ இருக்கக் கூடாது.

$ உள்ளாட்சிகளுக்கு சேர வேண்டிய தொகைகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.

$ சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட தகுதியின்மை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

$ கடந்த கால உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கினை உரிய காலத் தில் தாக்கல் செய்ய தவறிய மைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வராக இருப்பின், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தகுதியற்றவராகக் கருதப் படுவர்.

$ வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, அச்சுறுத்தல் களோ கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் பணியை செய்ய வேண்டும்.

$ போட்டி வேட்பாளர் களை போட்டியிட விடாமல் செய் வதை தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்ய வைக்கவோ முறையற்ற வழிகளை கையா ளக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி மனித தாக்குதல் கூடாது

$ மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக் கூடாது.

$ சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக் கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக் கூடாது.

$ தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எவருக்கும் நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடாது.

$ வாக்காளர்களுக்கு உணவு வழங்குதல் மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல் கூடாது. வேட்பாளர் பெயரை முன்மொழிபவரது பெயர், போட்டியிடும் உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

$ வேட்புமனு படிவங்கள் தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும். அச்சிட்டப் படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.09.2016

Wednesday, September 21, 2016

உள்ளாட்சித்தேர்தல் - வேட்பாளர் - விதிமுறைகள்


உள்ளாட்சித்தேர்தல் - வேட்பாளர் - விதிமுறைகள் - 
என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போதைய தேர்தலைப் பொறுத்த வரை, மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், 12 மாநகராட்சி மேயர்கள், 148 நகராட்சிகளின் தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்களை வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களே தேர்வு செய்ய முடியும். நேரடி தேர்தல் முறை கிடையாது. 

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் மட்டுமே நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

 பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். 

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசு அலுவலராகவோ, பணியாளராகவோ இருந்தால் போட்டியிட அனுமதியில்லை. 

மத்திய அல்லது மாநில அரசில் பதவி வகித்து, லஞ்சம் அல்லது அரசுக்குத் துரோகம் இழைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்பட்ட நாள் அல்லது சிறையில் இருந்து வெளியில் வந்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

வேட்பாளர் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. 

போட்டியிட விரும்பும் ஊராட்சி மற்றும் எந்த ஊராட்சியிலும் வேலைக்கான, பொருள் வழங்கு வதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. 

முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய எந்த நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது. 

தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது என தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

 மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும்.

 இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப் படும். 

வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியை சார்ந்தவராகவோ, சுயேச்சையாகவோ இருந்தால், தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டவற்றில் 3 சின்னங்களை விருப்பத்துக்கேற்ப வரிசைப்படுத்தி கேட்கலாம்.

நன்றி : தி இந்து நாளிதழ் = 08.09.2016