disalbe Right click

Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Tuesday, February 27, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

நாடெங்கும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) பற்றிய அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) தற்போது வெளியிட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய தகுதித் தேர்வு: 
2018ம் ஆண்டுக்குரிய இந்தத் தேர்வு ஜூலை 8ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மூன்று தாள்கள் கொண்ட தேர்வானது இந்த முறையிலிருந்து இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும் (மொத்தம் 1 மணி நேரம் மட்டும்) நடத்தப்படும். இதில் மொத்தம் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) 500 ரூபாய் கட்டணமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்..
வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு இதற்குமுன் அதிகபட்சமாக 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது..
விண்ணப்பிக்கும் நாள்
கல்லூரி ஆசிரியர் பணிக்கு  தேசிய தகுதித்  தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education)  வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 5 ம் தேதி கடைசி நாளாகும்.
Website : https://cbsenet.nic.in/
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.02.2018 

Friday, February 9, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து

கடந்த 2017ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக்குகளில் 1058 விரிவுரையாளர் பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, 16.09.2017ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. 2017- நவம்பர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
எழுந்த குற்றச்சாட்டு 
இந்த முடிவுகளில் விடைத்தாளில் இருப்பதைவிட சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்தினர். தேர்வு முடிவுகளை வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 8 பேரை அவர்கள் கைதும் செய்தனர்.
196 தேர்வர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் வழங்கி, முறைகேடாக மதிப்பெண் பட்டியல் தயார் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற விரிவுரையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்வு எப்போது?
மறு தேர்விற்கான விளம்பரம் 2018 மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்
ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
புதிதாக அந்தத் தேர்வை எழுத நினைக்கும் விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.201

Monday, January 22, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

தேசிய தகுதித் தேர்வு 2018
உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ம் தேதியில் நடத்தப்படும் என்று, யு.ஜி.சி., அறிவித்துள்ளது
உதவி பேராசிரியர் பணியில் சேர
முதுநிலை படிப்பு முடித்தோர், தேசிய அளவில் உள்ள கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறைதான், இந்த நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்தி வருகிறது.  நாடு முழுவதும், 2018ல் ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்துள்ளது. 
தேர்வு விதிகள்
இரண்டு தாள்கள் எழுத வேண்டும் ஒவ்வொரு தாளுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற இருக்கின்றன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறும்.
தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்ரவரி1ம் தேதி, https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் மார்ச், 6-ம் தேதி முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பில் மேலும் சலுகை
இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறுவதற்கு, நெட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் இதுவரை பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.01.2018 

Friday, January 5, 2018

பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள்


 மீண்டும் எழுத கல்வித்துறையால் சிறப்பு அனுமதி 
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டயத்தேர்வு
தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பாக, வருகின்ற 2018 ஏப்ரல் மற்றும் அக்டோபர்  மாதத்தில்,      பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, பட்டயத் தேர்வு நடைபெற உள்ளது.
கருணை அடிப்படையில் அனுமதி
இந்தத் தேர்வின்போது, ’.ஆர்., - என்.ஆர்., - ஆர்.ஆர்., - ஆர்.எஸ்., - சி, டி, ஜி, ஜெ., மற்றும் கேஆகிய பாடத்திட்டங்களில் நிலுவை வைத்துள்ள, முன்னாள் மாணவர்கள், சிறப்பு கருணை அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கு, தொழில்நுட்பக் கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
2011-ம் ஆண்டுக்கு முன், மூன்று ஆண்டுகள் முழு நேர படிப்பிலும், 2010-ம் ஆண்டுக்குப் பின், நான்காண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?
தேர்வு எழுத விரும்புகின்ற மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், 500 ரூபாய் தேர்வுக் கட்டணமாகவும், 30 ரூபாய் மதிப்பெண் கட்டணமாகவும், 25 ரூபாய் பதிவுக் கட்டணமாகவும், தாங்கள் ஏற்கனவே படித்த பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வரிடம் செலுத்தி,தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தட்கல் முறை
அபராதம் ஏதுமின்றி கட்டணம் செலுத்த, 07.02.2018 கடைசி நாள் ஆகும். 5௦௦ ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த, 14.02.2018 கடைசி நாள் ஆகும். தட்கல் முறையில், 500 ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த 09.03.2018 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01.2018