disalbe Right click

Showing posts with label நீதிமன்றம். Show all posts
Showing posts with label நீதிமன்றம். Show all posts

Wednesday, October 26, 2016

பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே


பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே - ஐகோர்ட்
என்ன செய்ய வேண்டும்?

விதி மீறிய பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், பட்டாசு விபத்துகளுக்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடையில் கடந்த அக். 20ல் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தனர். 

இந்த மனுவுடன், கும்பகோணம் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 2013ல் நடந்த விபத்தில் உயிரிழந்த 10 சிறுவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்த மனுக்களும் சேர்த்து நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

திருச்சி கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், விருதுநகர் எஸ்பி ராஜராஜன், தஞ்சாவூர் டிஆர்ஓ சந்திரசேகரன், மத்திய அரசின் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ், இணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். 

நீதிபதிகள்: 

திருச்சியில் பட்டாசு கடை விதிமீறல் குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். உங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை மேற் ெகாள்ளப்பட்டது. 

உதவி கமிஷனர்:

97 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. சில கடைகள் விதிமீறல் உள்ளது.

நீதிபதிகள்: 

எந்த அடிப்படையில் விதிமீறல் என்கிறீர்கள்? 

உதவி கமிஷனர்: 

கடைகளுக்கு இடையே 3 மீட்டர் தூரமும், மருத்துவமனை, கோயில் போன்ற பகுதிகளில் 50 மீ தூரமும் இருக்க வேண்டும். சில இடங்களில் அதுபோல் இல்லை.

நீதிபதிகள்

வெடிபொருள் விதியை பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? 

உதவி கமிஷனர்: 

தனிப்படைகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கான அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நீதிபதிகள்

கரூரில் ஆய்வு செய்யப்பட்டதா? 

சிறப்பு தாசில்தார்: 

41 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில கடைகளில் விதிமீறல் உள்ளது. 

நீதிபதிகள்:

 மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த போட்டோவில் மேல்பகுதியில் வங்கியும், கீழ் பகுதியில் பட்டாசு கடைகளும் உள்ளன. வங்கி பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பகுதி. அங்கு எப்படி அனுமதித்தீர்கள்? 

சிறப்பு தாசில்தார்: 

விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகள்:

 கும்பகோணம் சம்பவம் 2013ல் நடந்துள்ளது. ஏன் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. 

இன்ஸ்பெக்டர்: 

இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள்

நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த பிறகு அவசர, அவசரமாக தாக்கல் செய்து, எண் பெற்றுள்ளீர்கள். மாஜிஸ்திரேட் படித்து பார்த்தாரா என தெரியவில்லை. அதே நேரம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

சிறப்பு தாசில்தார்: 

3 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி செய்யப்பட்டது.

 நீதிபதிகள்

நீங்கள் கூறுவது நிதியுதவி, நீதிமன்றம் கேட்பது இழப்பீடு. சிவகாசியில் கடந்த 2010 முதல் தற்போது வரை இறப்பு நிகழ்ந்த விபத்துகள் எத்தனை நடந்துள்ளது. 

எஸ்பி

58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16 வழக்கின் விசாரணை

சிபிஐ விசாரணையா?

நீதிபதிகள் அளித்த உத்தரவில், சிவகாசி விபத்து வழக்கை எஸ்பி மேற்பார்வையில் சிவகாசி டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்தனர்.

நன்றி : தினகரன் – 27.10.2016

Sunday, September 11, 2016

அரசு வழக்கறிஞர்


அரசு வழக்கறிஞர் - என்ன செய்ய வேண்டும்?

சட்டம் தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அரசு வழக்கறிஞர் என்பவர் ஏன் நியமிக்கப்பட வேண்டும்? அதன் அவசியம் என்ன?

எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் அந்த குற்ற சம்பவம் சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும் தன்மை கொண்டது.

 குற்றம் செய்த ஒருவன் தன்னுடைய செல்வாக்கினால் வழக்கில் சிக்காமல் வெளியே வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

தவிர, பாதிக்கப்பட்டவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக, பின்புலம் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனக்கென்று வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வழக்கு நடத்தும் போது அவர் மிரட்டப்படலாம். அதையடுத்து அந்த வழக்கு இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

இந்த நிலை வராமல் இருப்பதற்காகவே குற்றங்களை முற்றிலுமாக களையும் நோக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பாக அரசே வழக்கை நடத்தி வருகிறது.

 Cr.P.C. 1973, பிரிவு 24-இன் கீழ் அரசு குற்றத்துறை வழக்கறிஞரும், பிரிவு 25-இன் கீழ் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களும் நியமிக்கப் படுகின்றனர்.

வழக்கமாக, ஒவ்வோர் அமர்வு நீதிமன்றத்தில் நடகும் வழக்கு விசாரணையில் “அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ( Public Prosecutor) ஏற்று நடத்த வேண்டும் என்று பிரிவு 225 உரைக்கிறது. 

அதே போல், மாஜிஸ்டிரேட் முன் நடத்தப்படும் வழக்குகளை Assitant Public Prosecutors என்று சொல்லப்படும் அரசு குற்றத்துறை உதவி வழக்கறிஞர்களால் நடத்தப்படுகின்றன.

இவர்கள் வழக்கு எந்த நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளதோ அந்த நீதிமன்றத்தின் முன் தோன்றி, எழுத்து மூலம் எவ்வித அதிகாரமும் இன்றி, வாதாடலாம் என்று பிரிவு 301(1) கூறுகிறது.

உண்மையிலேயே, அரசு சார்பாக வழக்கை ஏற்று நடத்தும் பொறுப்பும், கடமையும் வாய்ந்த இவர்கள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் முன் அனுமதி பெற்றுத் தான் வழக்கை நடத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று பிரிவு 302(1) அதிகாரம் அளிக்கிறது.

தன்னை நியமித்த அதிகார அமைப்பு உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக செயல்படக்கூடிய கம்பீரமான இந்த பதவியில் உள்ள அரசுத்துறை வழக்கறிஞர்கள் காவல்துறை கொடுக்கும் சாட்சியம் மற்றும் ஆவணங்களை (ஒரு வேளை அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்தாலும் கூட) நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளி தானா என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், அரசு குற்றத்துறை வழக்கறிஞர் என்பவர் அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டுமேயன்றி காவல்துறையின் ஏஜண்ட் போல் செயல்படக்கூடாது. 

அவர் நீதியை நிலை நாட்ட உதவும் நீதி தேவதையின் பிரதிநிதியாக மட்டுமே இருக்க வேண்டும்!

சில நேர்வுகளில், அரசு குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜராக வேண்டிய அவசியம் கூட நேரலாம் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது பின் வரும் வழக்கு.

Suneel Kumar Pal Vs. Phota Sheikh [(1984) S.C.C. (Cri.) 18]

By, சரவண அர்விந்த், Founder, LAW FOUNDATION

Wednesday, December 23, 2015

பசுமை தீர்ப்பாயம்


பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? 
அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.

இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது. 

National Green Tribunal
Faridkot House, 
Copernicus Marg, 
New Delhi-110 001
Phone : 011-23043501
Fax : 011-23077931
Email : rg.ngt@nic.in

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை   சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.
இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.
இதன் தென்மண்டல அலுவலகம் சென்னை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது.
முகவரி:
தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டலம்,
No.:950/1, 
முதலாவது, இரண்டாவது மற்றும் மூ்ன்றாவது தளங்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலை
அரும்பாக்கம்,
சென்னை=600 106.
*************************************************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி


Saturday, July 11, 2015

சீராய்வு மனு என்றால் என்ன?

சீராய்வு மனு என்றால் என்ன?


சீராய்வு மனு உத்தரவு நகல் கிடைத்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.05.2018       

கேவியட் மனு தாக்கல்


கேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை
**************************************************************
மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரையில்  (Caveat Petition) கேவியட் மனு படிவம் ஒரே மாதியானதாகவே இருக்கும்.

நபர் ஒருவருக்கு எதிராக, மற்றொரு நபர்  மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலோ
 ( District Munisif Court),  மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலோ
 ( District Munisif Cum Magistrate Court), சார்பு நீதிமன்றத்திலோ (Sub Court) , மாவட்ட நீதிமன்றத்திலோ (District Court), உயர்நீதிமன்றத்திலோ (High Court),  தடையாணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளை (Injection Order) யை அவசரத்தன்மையுடன் (Emergent Petition) அறிவிப்புக் கொடுக்காமல் பெற்றிடுவத்ற்கு வாய்ப்புண்டு என்று கருதிடும் சூழ்நிலையில் நபர் ஒருவர் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம்.

மேல்முறையீட்டுக் காலங்களிலும்  கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான படிவமும் இதே மாதிரியானதாகும்.

கேவியட் மனுவை அவசரத்தன்மையுடனோ அல்லது சாதாரண நிலையிலோ தாக்கல் செய்யலாம். 

அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவை, அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டுடன் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். சாதாரணமாக தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவுக்கு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

கேவியட் மனுவை அவசரத்தன்மை மனுவுடன் கொடுத்தால் மனு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அன்றைய தினமே எண் கொடுத்து விடுவார்கள்.
  
கேவியட் மனுவை சாதாரணமாக தாக்கல் செய்தால், அடுத்தடுத்த நாட்களில்தான் எண் கொடுப்பார்கள்.

கேவியட் மனுசாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அந்த மனுவில் எண் கொடுப்பதற்கு முன்னர், நபர்கள் எவரும் தமது வழக்கை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்து தடையாணை அல்லது உறுத்துக் கட்டளையைப் பெற்றிட முடியும்.

கேவியட் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அசல் மனுவில் மனுதாரரிடம் கையொப்பத்தைப் பெறுதல் வேண்டும். நகலின் மனுதாரரின் மையொப்பத்தைப் பெறுதல் கூடாது. நகலில் உண்மை நகல் அல்லது T.C (True Copy) என்று குறிப்பிட்டு மனுதாரரின் வழக்கறிஞர் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானதாகும். ஆனல், அசல் கேவியட் மனுவில் மனுதாரரும், வழக்கறிஞரும் கையொப்பம் இடுதல் வேண்டும். கேவியட் மனுவில் ரூ.10/-க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டப்படுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகல் ஒன்றை எதிர் மனுதாரருக்கு மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டை இணைப்புடன் அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு அஞ்சல் உறை மற்றும் ஒப்புகை அட்டையின் பெறுநர் முகவரியில் எதிர்மனுதாரரின் முகவரியையும், அனுப்புனர் முகவரியில் மனுதாரரின் வழக்கறிஞரின் முகவரியையும் குறிப்பிடுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்பி வைத்த பின்பே கேவியட் அசல் மனுவை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது,  அதில்
1.  கேவியட் அசல் மனு (Caveat Original Petition)
2. எதிர்மனுதாரருக்குப் பதிவுத்தபாலில் கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் 
     சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt)
3. வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
4. அவசரத்தன்மை மனு (Emergent Petition) 
5. அபிடவிட் (Affidavit)
ஆகியவற்றைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) நீதிபதியிடம் கொடுத்தல் வேண்டும்.

 கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது,  அதில்
1. கேவியட் அசல் மனு  (Caveat Original Petition)
2.வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat)
3. எதிர் மனுதாரருக்கு கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச்  சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு  (Postal Receipt)
ஆகியவற்றை தலைமை எழுத்தர் (Head Clerk) அல்லது செரஸ்தாரிடம் (Sheristadar ) கொடுத்தால் போதுமானதாகும்.

மனுக்கள், அபிடவிட், வழக்குரைக்கும் ஆவணம் ஆகியவற்றின் மேலுரையில் வழக்கறிஞர் பெயர், ஊர், நீதிமன்றம், மனு விபரம் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.

அஞ்சல் பற்றுச் சீட்டை தனியே ஒரு வெள்ளைத்தாளில் இணைத்து, அந்த வெள்ளைத்தாளில் மேல்குறிப்பை (Docket) எழுதுதல் வேண்டும்.

கேவியட் அசல் மனுவில் ரூ.10/-க்கும், வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் வழக்கறிஞர் நல நிதி முத்திரை வில்லையுடன் ரூ.5க்கும், அவசரத்தன்மை மனுவில் ரூ.2/-க்கும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்டுதல் வேண்டும். அபிடவிட்டில்  நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை  ஒட்ட வேண்டிய அவசியமில்லை. 

கேவியட் மனுவில் வாத-பிரதிவாதங்கள் கேட்கப்பட மாட்டாது. அதனால், அதில் எதிர்மனுதாரர் கட்சியாடுகின்ற வகையில் எதிர்வுரையோ, பதிலறிவிப்போ செய்ய வேண்டியதில்லை.

ஒருமுறை தாக்கல் செய்யப்படுகின்ற கேவியட் மனு மூன்று மாதங்கள் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதிதாகத்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு இரண்டாவது முறையாக அல்லது அடுத்தடுத்து எத்தனை முறை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படும் அதே நடைமுறையையே பின்பற்றுதல் வேண்டும்.

நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,