நீங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை, ஐ.ஆர்.சி.டி.சி., உதவியுடன், இனி, 'ஆன் லைனில்' முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Indian Railway Catering and Tourism Corporation
ரயில்களில் பயண முன்பதிவு, ரயில்களில் உணவுப் பொருள் விற்பனை ஆகியவற்றை,
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டு உள்ளது.
ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் முதலில் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை அதன்மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை இருந்த நடைமுறை
திருமண நிகழ்ச்சிகள், ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான இன்ப சுற்றுலா ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை மட்டும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. இருந்தாலும், இந்த சேவையை நாம் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட
ரயில் நிலைய அதிகாரியை சந்தித்து, அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சரியான காரணத்தையும் தெரிவித்து, அதற்கான முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இனிமேல் இலகுவான நடைமுறை
இனிமேல் 'தனி ரயில் அல்லது தனி பெட்டியை முன்பதிவு செய்ய இனி, ரயில்வே அதிகாரிகளை நேரடியாக அணுக தேவையில்லை. இந்த சேவையை, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனமே அளிக்கிறது இந்நிறுவனத்திடம் தேவையான தகவல்களை வழங்கி, ரயில், பெட்டியை அல்லது ரயிலை, ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இணையதள முகவரி : https://www.irctc.co.in/
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018