disalbe Right click

Showing posts with label போக்குவரத்து. Show all posts
Showing posts with label போக்குவரத்து. Show all posts

Tuesday, December 19, 2017

டிரைவிங் லைசென்சை சஸ்பெண்ட் செய்ய

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதுசிக்னலை மதிக்காதது உட்பட்ட 6 குற்றங்களுக்கு மட்டுமே 
டிரைவிங் லைசென்சை சஸ்பெண்ட் செய்யலாம் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களின்  டிரைவிங் லைசென்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரால் அனுப்பப்படுகின்றனஇந்த நடவடிக்கைகளுக்கு  சுப்ரீம் கோர்ட் தற்போது தடை விதித்துள்ளது
 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள்
⧭ அதிவேகமாக  வாகனம்  ஓட்டுபவர்கள்
⧭ அதிக எடையுடன் வாகனம்  ஓட்டுபவர்கள்
 அலைபேசியில்  பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் 
⧭ சரக்கு வாகனத்தில்  ஆட்களை ஏற்றி செல்வோர்
⧭ சிக்னலை மதிக்காதவர்கள் 
என்று 6 விதிமீறல்களுக்கு மட்டுமே லைசென்சை சஸ்பெண்ட் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது
********************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Thursday, June 22, 2017

6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!

6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!
சென்னை : சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலான 6 முக்கிய சாலை விதிகளை மீறினால் நிச்சயம் 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 6 முக்கிய சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டள்ளது.
இதன்படி அதிவேகமாக வாகனம் ஒட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது/சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதே போன்று செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நடவடிக்கையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தல் அடிப்படையில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் போக்குவரத்து ஆணையர் மூலமாக RTO அலுவலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூன் 6 ம் தேதி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி போக்குவரத்து செயலர் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தான் ஜூன் 20 அறிவிப்பில் வாகன ஒட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் லைசன்ஸ் இருக்க வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தார்கள்.
இதற்கு முன்பு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக விபத்துக்கு மட்டுமே லைசன்ஸ் ரத்து என்ற விதி இருந்தது. இதே போன்று ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல் முறை ஒரு கட்டணம், அடுத்தடுத்த முறை அதிக கட்டணம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது.
By: Gajalakshmi
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் – 22.06.2017

Thursday, September 8, 2016

வாகன ஆவண நகல்களை


வாகன ஆவண நகல்களை கையில் வைத்திருக்கத் தேவையில்லை
என்ன செய்ய வேண்டும்?

வாகனங்களுக்கான ஆவணங்களை எந்நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதனால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரில் செல்வோர் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றாலும், மறந்துவிட்டு சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 


இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களை பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் கவர் போட்டு எடுத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத நிலைகளில் மழையிலும், வாட்டர் சர்வீஸ் செய்யும்போது நனைந்து அவை சேதமடைந்துவிடுகின்றன.

வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதான். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அசத்தலான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. 

டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகத்திற்கான மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும்.  இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது. 

மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன. 

அதாவது, இது ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை. 

மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். 

இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம். 

உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும். 

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியையும் அளிக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

 Thanks to Mr. Saravana Rajan Updated: Wednesday, September 7, 2016, 

டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட்

Saturday, August 13, 2016

டிராபிக் போலீஸ் அதிகாரங்கள்


டிராபிக் போலீஸ் அதிகாரங்கள் - என்ன செய்ய வேண்டும்?

சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை தினசரி பார்க்க முடியும்.

 சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறு வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

லஞ்சம், அலைகழிப்புக்கு பயந்துதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். 

இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம்.

வாகன தணிக்கை

சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. அவ்வாறு, உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக நிறுத்த சொல்லும்பட்சத்தில், வண்டியின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். தப்பித்துச் செல்ல முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிகோலும்.

காவலருக்கான அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர் உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் கொண்டவர்கள். 

ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அதேநேரத்தில், விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்கவும், அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க முடியும்.

கைது அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.

ஸ்பாட் ஃபைன்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அபாரதம் கட்டிய பிறகு திரும்ப பெற முடியும். 

அதேபோன்று, நிர்ணயித்ததைவிட அதிக அபராதம் விதித்தாலும், கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.

டிரைவிங் லைசென்ஸ்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வழி உள்ளது. அதேநேரத்தில், அதற்குண்டான உரிய செல்லான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல இயலாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை கேட்டு பெறுவது அவசியம்.

காரை எடுத்துச் சென்றால்...

காரில் யாரேனும் அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அதேநேரத்தில், போலீசாரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கிவிடுவது அவசியம்.

பெண்களுக்கு...

மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.

அபராதம் 

அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான செல்லான் புத்தகம் அல்லது மின்னணு எந்திரம் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது.

இதுதான் விதி...

சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். மோட்டார் வாகனச் சட்டம் 130-ன் படி சீருடையுடன் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களை காட்டுவது அவசியம், ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.

இதுவும் செய்ய முடியாது...

இன்று பல போலீசார் வண்டியை நிறுத்தியவுடன் வாகனத்தில் உள்ள சாவியை முதலில் பிடுங்கிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. அதேபோன்று, காரின் கதவுகளை கட்டாயமாக திறந்து உங்களை வெளியேற்றுவதும் தவறு.

கைது செய்தால்...

விதி மீறலுக்காக கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். 

எனவே, விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்த விதிகளை மனதில் வைத்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும்.

இதெல்லாம் விடுங்க...

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். 

அதேநேரத்தில், 
வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.

Written By: Saravana Rajan 
நன்றி : டிரைவ் ஸ்பார்க் - 12.08.2016