disalbe Right click

Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts
Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts

Monday, September 16, 2019

ஒருவரின் இறப்பு பற்றிய விபரத்தை RTI மூலம் பெற முடியுமா?

ஒருவரின் இறப்பு பற்றிய விபரத்தை RTI மூலம் பெற முடியுமா?
இறப்பு குறித்து விவரம் அளிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு
பண்ருட்டி, செப். 13: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இறப்பு குறித்து முழு விவரம் தெரிவிக்க வேண்டும் என பண்ருட்டி நகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பண்ருட்டி தாலுக்கா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பண்ருட்டி ராமசாமி தெருவைச் சேர்ந்த சம்சுதீனின் மகன் இறந்த சலிம் இப்ராகிம் எங்கு, எப்படி இறந்தார், தகவல் கொடுத்தது யார்? என்ன காரணத்தால் இறந்தார் என தகவல் அதிகாரியான பண்ருட்டி நகராட்சி மேலாளருக்கும், ஆணையருக்கும் மனு செய்ததில், இறப்பின் காரணம் தனி நபருக்கு தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆரோக்கியசாமி மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையர் தி.சீனுவாசன், தகவல் பெறும் உரிமை சட்டம் 22-ன் படி சம்பந்தப்பட்ட இறப்பு சான்றிதழ் பதிவு சட்டம், செயல்படுத்தும் தன்மையுடையது என்பதால் மனுதாரருக்கு உரிய தகவலை ஆணை கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்துக்குள் மனுதாரருக்கு கேட்ட தகவல்களை கொடுக்க வேண்டும் என பண்ருட்டி நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ஆணையிட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் - 20.09.2012

Wednesday, December 26, 2018

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்கப்படுகின்ற மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.  ஆனால், இப்போதுள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் யாருமே வரையறுக்கப்பட்ட  30 நாட்களுக்குள் தகவல் வழங்குவதே இல்லை. அப்படியே வழங்கினாலும், அது முழுமையானதாக இருப்பதில்லை. 
வீண் அலைச்சல், மன உளைச்சல், செலவு
முதல் மேல்முறையீடு செய்து பலனில்லாமல்,  தகவல் ஆணையத்தில்  இரண்டாம் மேல்முறையீடு செய்து வருடக்கணக்கில் காத்திருந்து, தகவல் ஆணையர் அவர்களின் உத்தரவுக்குப்பிறகே தகவல்களை பெற முடிகிறது. இதனால், மனுதாரருக்கு, தேவையான நேரத்தில் தகவல்கள் கிடைப்பதில்லை. அதனால், அதிகம் மன உளைச்சலுக்கு மனுதாரர் ஆளாக்கப்படுகிறார்.  விசாரனையில் கலந்து கொள்ள சென்னை செல்ல செலவும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு மனுதாரர் தள்ளப்படுகிறார்.  
யார் பொறுப்பு?
தேவையே இல்லாமல், மனுதாரருக்கு ஏற்படுத்தப்படுகின்ற வீண் அலைச்சல், மன உளைச்சல் மற்றும் செலவுகளுக்கு பொதுத் தகவல் அலுவலர் அவர்களே காரணம். அவர் மனுதாரர் கேட்ட தகவலை முதலிலேயே கொடுத்திருந்தால், மனுதாரர் ஏன் தகவல் ஆணையத்திற்கு செல்லப் போகிறார்?. அப்படி என்றால், அதற்கான செலவுத்தொகையை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று  தகவல் ஆணையம் உத்தரவிடலாமா?
உத்தரவிடமுடியும்
உத்தரவிட முடியும். செலவுத்தொகையை மனுதாரருக்கு நஷ்ட ஈட்டுடன் மனுதாரருக்கு  கொடுக்க, பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட முடியும்.
வழக்கு
அது போன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு நகல் பெற  இணைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து படித்துப் பார்த்து பயனடையுங்கள்.

நன்றி : முகநூல் நண்பர்  திரு Basheer Acf அவர்கள்

Friday, October 5, 2018

காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை பெற முடியுமா?

காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை 
பெற முடியுமா?
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொது நாட்குறிப்பு (Station General Diary/Daily Diary) ஒன்று தினசரி எழுதி பராமரித்து வரவேண்டும். அதில் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவுசெய்து வரவேண்டும். இதனை காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
 ஒவ்வொரு நாளும் காலை பொதுநாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பிலுள்ள ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்.
 அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
  வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
 காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
  மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம், தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
  வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.
  பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
 ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
 பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
  வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும்.
  இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றியவிவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
  வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால், அவர்களை விசாரணை செய்த விபரம் /திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.
  வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லதுகழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
  அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுதவேண்டும்.
  பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பவேண்டும்.
  பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  பொது நாட்குறிப்பில் அடித்தல் மற்றும் திருத்தல் இருக்கக்கூடாது.
  அனைவருக்கும் புரியும்  வண்ணம் எழுதவேண்டும்.
  பக்க எண்கள் குறிப்பிட்டு எழுதவேண்டும்.
  உடனுக்குடன் எழுத வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 172
குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் பிரிவு - 172ல், கூறப்பட்டவாறு, புலனாய்வு செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நாட்குறிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது..
பொது நாட்குறிப்பைப் பெறுவதால் என்ன பயன்?
பொதுமக்கள் அளிக்கக்கூடிய நியாயமான புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும்கூட காவல்துறையினர் அதன்மீது வழக்குப் பதிவு செய்வதில்லை. (Mistake of Fact) பிழை வழக்கு என்று எழுதி அந்த புகாரை முடித்து வைத்து விடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையில் பராமரித்து வரப்படுகின்ற நாட்குறிப்பின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கின் (மனுதாரர் மட்டும்) கேட்டுப் பெறலாம். அதன் மூலம் காவல்துறையினர் புலன்விசாரணை செய்த விபரத்தை அறிந்து கொள்ளலாம். நமது வழக்கு நியாயமான முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்றால், அதற்கான ஆதாரங்களை அதில் இருந்தே திரட்டி, புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்து, நமது வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கலாம்.
இது சம்பந்தமாக தகவல் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றை மேற்கண்ட ப்ளாக்ஸ்பாட்டில் நான் கண்டேன். அதன் நகலைப் பெற கீழே காணும்லிங்க்கை கிளிக் செய்யவும்.

****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.10.201