disalbe Right click

Friday, April 10, 2015

மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க - கடன்


மாற்றுத்திறனாளிகள் - தொழில் தொடங்க கடன் பெற ...?
தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் 
(NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவத்ற்கு, ”தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்” பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.  
2) விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் மாற்றுத்திறனாளிகள் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்கவும், விவசாயப் பணிகளுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது .
3) மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை  மற்றும் அவர்களின்  பெற்றோர் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.
நிபந்தனைகள்: 

1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 
     குறைந்தது 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும்  அவரது ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான அனுபவமும் அவர் பெற்றிருக்கவேண்டும்.
வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 

50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 
5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.
திருப்பிச்செலுத்தும் காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).
கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது
எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 தமிழக முகவரி:
 தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 
233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, 
சென்னை-600001. 
போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய முகவரி: 

முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், 
மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், 
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, 
கே.கே.நகர், 
சென்னை-600 078. 
போன்: 044-24719948, 044-24719949

மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற


மாற்றுத் திறனாளிகள்-அரசு சலுகை பெற.....? 
**************************************************************
1) கல்வி உதவித் தொகை:
**************************************
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்
9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்
இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்
முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்

2) வங்கிக் கடன் உதவி
***********************************

வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
குடும்ப அட்டை நகல்

எப்போது விண்ணப்பிப்பது?
ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை
குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் 
 மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்

அளிக்கப்படும் பணம் எவ்வளவு? 
ரொக்கத் தொகை 25,000. 
டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி (ரூ.25,000) தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.
பேசும் திறனற்ற மற்றும் காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை
வருமானச் சான்று
வயதுச் சான்று
திருமணப் பத்திரிகை மற்றும் சான்று
குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை

மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை குறைந்தது 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
****************************************************************************************
பார்வையற்றோர், அவர் குடியிருக்கும் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் தனது இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம் அல்லது  கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
மூன்று புகைப்படங்கள்
கல்விநிலையம், தொழிற்கல்வி நிலையம் அல்லது பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

மார்ச் மாதம் முதல்விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.

6)தேசிய அடையாள அட்டை
*******************************************

தேசிய அடையாள அட்டை பெறுவது முக்கியமானது. இதனைப்  பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் மாற்றுத் திறனாளி   எனச் சான்று பெற்று அளிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய முழு விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி
***********************************

சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க,  கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.
அ) மூன்று சக்கர வண்டி
ஆ) சக்கர நாற்காலி
இ) காதொலிக் கருவி
ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்
உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி
ஊ) காலிப்பர்
எ) கைதாங்கி ஊன்றுகோல்
ஏ) செயற்கைக் கால்
ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பம்
சிறப்பு மருத்துவச் சான்று
வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.
மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...

***********************************************************

பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில்  தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள், அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பேருந்தில்  பயணம் செய்யலாம். 

உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். இதனைப் புதுப்பிக்கத் தேவையில்லை. இது நிரந்தரமானது.

இந்திய ரயில்வேயில் முழுமையான பார்வையற்றவர்களும், காது கேளாத, வாய் பேச இயலாதவர்களும் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்துடன் தனியாகப் பயணம் செய்யலாம். முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளில் 50 சதவிகிதம் கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதற்கு முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய, குறிப்பிட்ட படிவத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்று அதன் நகலைக் கொடுத்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 35 வயதுக்குப் பின்னர் பெறப்படும் சான்றிதழானது நிரந்தரமானது. அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டாம். ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம்.

இரண்டு கால்களும் செயலிழந்து, கைகள் நல்ல முறையில் இயங்கும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அதே அலுவலகத்தில் கிடைக்கும்.

கல்லூரியில் பயிலும் கை, கால் ஊனமுற்ற மாணவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கைகள் நன்கு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு செய்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் என்று அனைத்து கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

அனைத்து மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரை அனைத்துப் பணிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இதில் பார்வையற்றோர், காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் தலா ஒரு சதவிகிதத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோமீட்டர் வரை இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம்.

என்ன மாதிரி ஊனம் உள்ளதோ, அந்தப் பிரிவு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட 3 நபர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான  விண்ணப்பப் படிவம் அவர் பயிலும் கல்விக் கூடத்திலேயேகிடைக்கும். வேறு ஏதும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் சான்றளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற


வாக்காளர் அடையாள அட்டை பெற....

**************************************************************

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம் - படிவம் எண்:6
****************************************************
*******

ஜனவரி 01, 2015 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச்  சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று 
மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம். 

1.முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது
 பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். 
வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், 
குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின்
 ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு 
இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் 
விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா 
செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக 
இணைக்க வேண்டும்.

2.பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் 
அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன
ஏற்றுக் கொள்ளப்படும்.

3.அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, 
அரசு ஐ.டி. கார்டு ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

4.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால்,
 எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் 
தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய 
இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

படிவம்- 6 உடன், 2 வண்ணப் புகைப்படம் இணைக்கவேண்டும்.

பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும்.

 (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி அல்லது  கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)

விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது  அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் அல்லது  உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது  தொலைபேசி அல்லது  மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் - படிவம் எண்:7
****************************************************
*********

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8
************************************************************

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில்  அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எடுத்துக்காட்டாக  பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதற்கு நீங்கள் அடையாளச் சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.

இடமாற்றத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8A
************************************************************

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது/ அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது/ தொலைபேசி அல்லது மின்சாரம் அல்லது/ எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
***************************************************

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை கீழ்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )

நகராட்சி எல்லைக்குள் நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில்  கீழ்கண்ட அலுவலரிடம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆட்சியரின் அலுவலகம்
வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
வட்டாட்சியர் அலுவலகம்(துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
என்ற இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் 
மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும்.
 உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். 
அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் 
வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save 
என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி
வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் 
கொடுக்க வேண்டும்.

இத்தளத்திலும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். 
 உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக்
 கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து 
இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 
தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து 
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் 
அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்னவென்று நீங்கள்
 http://elections.tn.gov.in/apptrack/  என்ற இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்பு 
எண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை  வைத்திருப்பவர்கள்     
இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.


உச்சநீதிமன்றம் - வழக்குகளின் நிலை அறிய


உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 
வழக்குகளின் நிலையை அறிவது எப்படி?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை, வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கீழ் நீதிமன்ற (Lower court) நீதிபதிகள் ஆகியோர் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றின் மூலம், வழக்குகள் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

• வழக்கு எண் வாரியாக (Case Number wise)
• தலைப்பு வாரியாக (வாதி/பிரதி
வாதியின் பெயர்) (Title wise (Petitioner or Respondent’s Name))
• வழக்கறிஞரின் பெயர் வாரியாக (Advocate’s Name wise)
• உயர்நீதிமன்ற வழக்கு எண் வாரியாக (High Court Number wise)
• நாட்குறிப்பு எண் வாரியாக (Diary Number wise etc.)


1. வழக்கின் நிலையை CASE STATUS PORTAL OF SUPREME COURT OF INDIA (http://www.courtnic.nic.in/courtnicsc.asp)) என்ற இணைய முகவரியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
2. வழக்கின் நிலையை பின்வரும் வழியின் மூலம் நீங்கள் அறியலாம்.
• மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் இடது பக்கத்தில் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து வழக்கின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) வழக்கின் வகையைத் தேர்வு செய்ய 
வேண்டும்..
• வழக்கின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்..

தலைப்பு (வாதி/பிரதிவாதியின் பெயர்) வாரியாக. 
(Title (Petitioner or Respondent’s Name) wise)

• வாதி அல்லது பிரதிவாதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்
• தெரியாது (Don’t Know) 
• மனுதாரர் (Petitioner) அல்லது 
• பிரதிவாதி (Respondent)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க 
வேண்டும்..

வழக்கறிஞர் பெயர் வாரியாக (Advocate’s Name wise) 

• வழக்கறிஞரின் பெயரைப்பதிவு செய்யவேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க
வேண்டும்..

உயர்நீதிமன்ற எண் வாரியாக (High Court Number wise)

• உங்கள் மாநிலத்தை கீழிறங்குப்பெட்டியில் இருந்து 
 (drop down box) தேர்ந்தெடுக்க வேண்டும்..
• கீழ் நீதிமன்ற எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• தீர்ப்பு தேதியைக் கீழிறங்குப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும்..

நாட்குறிப்பு வாரியாக (Diary Number wise)

• நாள் குறிப்பு எண்ணைப் பதிவு செய்ய 
வேண்டும்..
• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு - நகல்கள் பெற


உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்  நகல்கள் பெற என்ன செய்ய வேண்டும்?


இணையத்தில் தீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) என்பது  பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. இந்த தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) ( http://judis.nic.in/supremecourt/chejudis.asp) என்ற இணையதள முகவரியில் நாம் காணலாம். உச்சநீதிமன்றத்தீர்ப்புகளை பின்வரும் முறையில் நாம் விண்ணப்பித்துக்  காணலாம்.

• வாதி/பிரதிவாதி வாரியாக

• நீதிபதி பெயர் வாரியாக

• வழக்கு எண் வாரியாக


• தீர்ப்புத் தேதி வாரியாக.

• அரசியலமைப்புக் குழு வாரியாக


• அகரவரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக


• தீர்ப்பு வாரியாக (Held wise)

• பொருள்/சொற்றொடர் வாரியாக (Text/phrase wise)

• சட்ட வாரியாக (Act wise) 


 போன்றன.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துப்பட்டியல்களும் இணையதளத்தின் இடது பக்கவாட்டில் இருக்கும். நமக்கு தேவைப்படும் தீர்ப்பினைக் குறித்து அறிய உரிய பட்டியலை கீழ்க்காணும் முறையில் கிளிக் செய்து கொள்ள  வேண்டும்.

வாதி/பிரதிவாதி வாரியாக (Petitioner/Respondent wise)

• வாதி அல்லது பிரதிவாதி பெயரைப்பதிவு செய்யவும்
• கீழிறங்குப் பெட்டி (drop drown box) யில் இருந்து ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்யவும். அதாவது, 'தெரியாது' அல்லது வாதி அல்லது பிரதிவாதி.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்.
• கடைசியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிபதி வாரியாக (Judge name wise)

• நீதிபதியின்  பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

வழக்கு எண் வாரியாக (Case number wise) 

• கீழிறங்குப்பெட்டி (drop drown box) யிலிருந்து வழக்கின் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
• வழக்கின் எண்ணை பதிவு செய்ய 
வேண்டும்.
• கீழிறங்குப்பெட்டியிலிருந்தது வருடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
• இறுதியாக, (drop drown box) ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

தீர்ப்பு வழங்கிய நாள் வாரியாக (Date of judgment wise)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். 
அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

அரசியலமைப்புக் குழு வாரியாக (Constitutional bench wise)

• கீழிறங்குப்பெட்டியில் (drop drown box) இருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை)  இரண்டு தேதிகளையும் From – To) தேர்ந்தெடுக்க வேண்டும்
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.

அகர வரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக 
(Alphabetical case indexing wise)

• வாதி அல்லது பிரதி வாதியின் பெயரைப் பதிவு செய்ய 
வேண்டும். உதாரணமாக (Amar)
• கீழிறங்குப் பெட்டியில் (drop drown box) இருந்து  (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் தேர்வு செய்யவேண்டும். 
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.

தீர்ப்பு வாரியாகவும். பொருள்/சொற்றொடர் வாரியாகவும் சட்டம் வாரியாகவும், தற்குறிப்பு வாரியாகவும் தீர்ப்பு நகல்களை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.