disalbe Right click

Sunday, June 7, 2015

லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில்


லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் பணியை தொடர்ந்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 
********************************************************************************************


முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது உங்களின் லாப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் இருக்கின்றதா. லாப்டாப் சார்ஜரும் கையில் இல்லையா, உடனே மனம் தளராமல் மீதம் இருக்கும் நேரத்தில் முடிந்த வரை மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க முடியும். இது போன்ற சம்பவங்களில் சிறிது நேரத்திற்கு லாப்டாப் பேட்டரியை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பேட்டரி சேவர் மோடு:
 பேட்டரி தீரும் நிலையில் லாப்டாப் பேட்டரி சேவர் மோடு ஆன் செய்தால் சிறிது நேரத்திற்கு பேட்டரி தாங்கும்.


டிவைசஸ்:
முடிந்த வரை வை-பை, ப்ளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும்.

செட்டிங்ஸ்:
வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் லாப்டாப் கீபோர்டு பேக்லைட்டிங்'ஐ ஆஃப் செய்யலாம்.  


ஆப்ஸ்:
 ஹார்டுவேர் மட்டுமின்றி அப்ளிகேஷன்களும் பேட்டரியை பயன்படுத்தும், இதனால் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்கலாம்.


சிம்ப்லிஃபை:
லாப்டாப்பில் பேட்டரி குறைவாக இருக்கும் போது மல்டி டாஸ்கிங் செய்வது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு செய்வது பேட்டரியை எளிதில் தீர்த்து விடும்.




பேட்டரி: 
 நீண்ட நாள் பேட்டரியை பயன்படுத்த அவைகளை சீராக பராமரிக்க வேண்டும். எப்பவும் பேட்டரியை சார்ஜரில் வைக்க கூடாது. லாப்டாப் பேட்டரிகளை சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ட்யூன்: 
சீரான இடைவெளியில் லாப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மொன்பொருள்களை அழித்து விடுவது நல்லது. மேலும் வெப் ப்ரவுஸர் கேச்சி மற்றும் பழைய ஃபைல்களையும் அழிக்க வேண்டும்.
ஹார்டுவேர் :
கம்ப்யூட்டரில் சாலிட் ஸ்டேட் டிரைவ் பயன்படுத்தலாம். இவை ப்ளாஷ் மெமரி ஆப்ஷனை பயன்படுத்துவதால் அதிக சக்தியை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.

பேட்டரி பேக்கப் :
மிகவும் எளிமையான விஷயம் என்னவென்றால் கையில் எப்பவும் கூடுதல் பேட்டரியை வைத்து கொள்ளலாம்.

Thanks to : (Meganathan) TAMIL GIZBOT - 07.06.2015








Saturday, June 6, 2015

பி.எஃப் கணக்கு - பொது கணக்கு எண்



பி.எஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொது கனக்கு எண்

 பிஎஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொதுக் கணக்கு எண் (யுஏஎன்) பல்வேறு துறைகள் அல்லது நிறுவனங்கள் ஒரு தனி நபருக்கு வழங்கும் வெவ்வேறு குறியீட்டு எண்களை இணைக்கும் ஒரு பொதுவான எண்ணாக விளங்கும். புரியலியா? 

அதாவது ஒருவர் வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறினாலும் அவரது பி எப் கணக்கு எண் மட்டும் மாறும் ஆனால் இந்தப் பொதுக் கணக்கு எண் மட்டும் புதிய மற்றும் பழைய நிறுவனங்களின் விவரங்களைத் தொடர்புப் படுத்தும். 

இந்த யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண்ணின் குறிக்கோள், ஒரே உறுப்பினருக்கு வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் எண்கள் ஒரு பொதுவான எண்ணின் கீழ் தொடர்புப் படுத்தப்படுவது தான். ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே இந்த யுஏஎன் எண் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் புதிய நிறுவனத்தில் இணையும் போது இந்த எண்ணைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய நிறுவனம் புதிதாகத் தரப்படும் உறுப்பினர் எண்ணை குறித்துக்கொள்ள முடியும்.

1) யுஏஎன் நம்பரைப் பெறுவது எப்படி? 
இது நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தினரால் தரப்படும். அது அவர்களிடம் தயாராக இருக்கும். அதை நீங்கள் இதுவரை பெறவில்லைஎன்றால், உங்கள் ஹெச் ஆர் அல்லது மனிதவளத் துறையை அணுகுங்கள்.

 2) இணையத்தில் விவரங்களைப் பெறுவது எப்படி?
 உறுப்பினர்கள் இந்த யுஏஎன் தொடர்பான உறுப்பினர் இணையத் தளத்தை அணுக வேண்டும். அதாவது http://uanmembers.epfoservices.in என்ற இணையதளத்தில் பெறலாம். முதலில் ஒரு ஒருப்பினர் இங்குத் தரப்பட்டுள்ள ACTIVATE YOUR UAN என்ற தொடர்பை அழுத்தி தன்னுடைய கணக்கை செயல்பட வைக்க அல்லது ஆக்டிவேட் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் தங்களுடைய யுஏஎன் எண், உங்களுடைய அலைபேசி எண் மற்றும் உறுப்பினர் குறியீட்டு எண்ணை தயாராக வைத்துக்கொண்டு பின்னர் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்ய அந்த இணையதளத்தில் முயற்சிக்கலாம்.

3) யுஏஎன் கார்டை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியுமா? 
நிச்சயமாக. முதலில் நீங்கள் உங்கள் சரியான யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு லாகின் செய்யுங்கள். பின்னர் "Download" மெனுவில் "Download UAN Card" என்ற தொடர்பை அழுத்தவும். இந்தக் குறிப்பிட்ட தொடர்பு மூலமாக யுஏஎன் கார்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

 4) பழைய உறுப்பினர் எங்களுடன் இதனை இணைக்க வேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் பழைய உறுப்பினர் எண் மற்றும் விவரங்களை ஒரே கணக்கின் கீழ் கொண்டுவர முடிவதுடன் பழைய தகவல்களை உடனடியாகப் பெற இது உதவும்.

 5) ஒருவர் பணி மாற்றம் அடைந்தால் அவர் செய்யவேண்டியது என்ன? 
அடுத்தடுத்து நீங்கள் சேரும் நிறுவனங்களில் உங்கள் யு ஏ என் எண்ணை கொடுத்தால் போதும். 

6) பதிவிறக்கம் அல்லது பிரிண்ட் செய்யும் வழிகள் 
1. லாகின் செய்யவும் (உங்கள் யுஏஎன் எண்-தான் எப்போதும் உங்கள் யூசர் நேம் அல்லது உபயோகப் பெயர்)
2. டவுன்லோட் மெனுவில் "Download UAN card" என்ற தொடர்பை அழுத்துக.
3. அதன்பின் யுஏஎன் கார்டை திறக்கையில் டவுன்லோட் என்ற தொடர்பை அழுத்தவும். 

இப்ப எல்லாம் தெளிவாகியிருக்கும். ஒடனே போய் உங்களுடைய கணக்கை ஆக்டிவேட் செய்து கணக்கை பராமரிக்கும் வேலையை எளிதாக்குங்கள்.

நன்றி :  (பிரசன்னா) குட் ரிட்டன்ஸ், 06.06.2015

Friday, June 5, 2015

செல்போன்கள் வெடிக்காமல் இருக்க


செல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கால கட்டத்தில் அவைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாகவே இருக்கின்றது. சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. 

ஸ்மார்ட்போன்கள் ஏன் திடீரென வெடிக்கின்றன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் போன்:
புதிதாக மொபைல் வாங்கும் போது முடிந்த வரை பிரான்டெட் கருவியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெடித்தல்:
 சில சமயங்களில் வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களுக்கு மீண்டும் அழைக்கும் போது போன்கள் வெடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் போனினை சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்வதும் அவைகளை வெடிக்க செய்கின்றன. 

என்ன செய்யலாம்?
 முடிந்த வரை போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பேட்டரி பழுதாகி இருந்தால் அதனை உடனே மாற்றி விட வேண்டும்.

குறைந்த விலை: 
முடிந்த வரை விலை குறைவான போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் விலை குறைந்த போன்களில் சீன ஹார்டுவேர்களே பயன்படுத்தப்படுகின்றன, இவை பிரான்டெட் இல்லாத காரணத்தினால் அவை எப்பவும் ஆபத்தை விளைவிக்கும். 

இண்டர்நெட்:
 போன்களில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவதும் ஆபத்தில் முடியலாம்.

முன் எச்சரிக்கை:
 போன்களை உங்களது உடலில் இருந்து சற்று தள்ளி வைத்து பயன்படுத்தலாம். முடிந்த வரை ஸ்பீக்கர் அல்லது ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

ஈரம் நீக்குவதற்கு:
 போனில் தண்ணீரில் விழுந்தால் உடனடியாக அதனினை தனித்தனியாக பிரித்து காய வைக்க வேண்டும். அதிகபட்சம் 12 - 24 மணி நேரத்திற்கு போனினை நன்கு காய வைத்து அதன் பின் ஆன் செய்ய முயற்சிக்கலாம்.

பயன்பாடு:
 போனினை சிலர் முகங்களோடு நெருக்கமாக வைத்து பயன்படுத்துவர், இவ்வாறு செய்வது வாய் புற்று நோய் மற்றும் தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.

நன்றி : Meganathan, Tamil GIZBOT 05.06.2015










Thursday, June 4, 2015

காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு


காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?

சென்னை: வங்கிகள் மேலும் மேலும் இந்த புதிய தொடர்பில்லா டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை நாடத் தொடங்கியுள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியும் இத்தகைய கார்டுகளை வெளியிட்டுள்ளன. 

இவற்றில் ஸ்வைப் மெஷினில் தொடர்பு ஏற்படுத்தத் தேவையில்லாத முத்திரை இந்த கார்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பது மிகவும் எளிது என்பதுடன், நீங்கள் உங்கள் பின் நம்பரை உபயோகப்படுத்த வேண்டியதில்லை.

 இது போன்ற கார்டுகள் என்எஃப்சி, அதாவது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) எனப்படும் விரைவான பரிமாற்றத்திற்கு உதவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது? 
**************************************
இந்த கார்டுகளில் உள்ள தொடர்பில்லா முத்திரை அலைவரிசைகளின் மூலம் ஸ்வைப் மெஷின் அருகில் எடுத்து செல்லும்போது அதிலுள்ள பச்சை விளக்கு எறிந்து பரிவர்த்தனை முடிவுற்றதைத் தெரிவிக்கும். இவற்றை சாதாரண விசா டெபிட் கார்டுகளைப் போல அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் பின் நம்பரை உபயோகித்துச் செய்யவும் முடியும்.

 இந்த புதிய வசதி உடைய கடைகள் அல்லது விற்பனைக் கூடங்களில் இந்த வகைக் கார்டுகளை பயன்படுத்தலாம். வங்கிகள் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும். இது போன்ற பரிவர்த்தனைகளையும் அதன் வரம்புகளையும் அங்கீகரிக்கும் உரிமை அவற்றை வழங்கும் வங்கிகளைச் சார்ந்திருக்கும். 

ஒரு நாளைக்கு, வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு இது போன்ற சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகள் எத்தனை செய்ய இயலும் என்பதை வங்கிகளே தீர்மானிக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் வாடிக்கையாளர்கள் இந்த பின் உபயோகம் இல்லாத பரிவர்த்தனைகள் என்பது இதுபோன்ற வசதியுள்ள வர்த்தக் கூடங்களில் ரூபாய் 2000 வரை உச்ச வரம்பு கொண்டவை.

 கார்டு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றி புகார் அளிக்க இணையத்தின் மூலமோ, தொலைபேசியிலோ அல்லது எஸ் எம் எஸ் அல்லது ஐவிஆர்எஸ் மூலமோ உடனடியாக தெரிவித்துவிட வேண்டும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் - 05.06.2015

Wednesday, June 3, 2015

வாட்ஸஅப் பற்றி


வாட்ஸஅப் பற்றி தெரிந்து கொள்வோமா?

     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் விளங்குகின்றது. வாட்ஸ்ஆப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம். தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல் அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா. இவை தெரிந்திருந்தாலும் வாட்ஸ்ஆப் குறித்து உங்களுக்கு தெரியாததும் இருக்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. 

 ப்ரொபைல் போட்டோ:
 உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் - ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட்:
 ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ்: 
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு:
 வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொபைல் நம்பர்
 உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா?

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்:
 வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்: 
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்:
 வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது.

போன் நம்பர்: 
வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும். 

Written by: Meganathan Published: Thursday, June 4, 2015, 
நன்றி : TAMIL GIZBOT








Monday, May 25, 2015

கிரடிட் கார்டு வாங்கும் முன்


கிரடிட் கார்டு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
கிரெடிட் கார்டு வாங்கும்முன்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
கிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு!
புதிதாக ஒரு கிரெடிட் கார்டு கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதற்கு பலருக்கும் மனம் வருவதே இல்லை. அதிலும் அந்த கிரெடிட் கார்டு இலவசமாக, அதாவது சேர்ப்புக் கட்டணமோ அல்லது ஆண்டு பராமரிப்புக் கட்டணமோ இல்லாமல் கிடைக்கும்போது பலரும் வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இப்படி சேரும் பல கிரெடிட் கார்டுகளினால் நமக்கு பிரச்னைகளே உருவாகும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சில கார்டுகளுக்கான மாதாந்திர கட்டணத்தைக் கட்டாமலே போவதற்கு வாய்ப்புண்டு. இப்படிக் கட்டாமல் விடப்படும் கடன் தொகைக்கு நீங்கள் மிக அதிகமான வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மதிப்பெண் குறையும். எனவே, கார்டு வாங்குவதற்குமுன் புது கிரெடிட் கார்டு தேவையா என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
புதிய கார்டில் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்க நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், பழைய கார்டில் உள்ள நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். இப்படி டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் வசதிக்கு கூடுதலாகக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். சில வங்கிகள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்வதற்கு 30-90 நாட்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் 1.5% - 2.5% வரை வட்டி வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். எனவே, புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்முன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு வட்டி கிடையாதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆண்டுக் கட்டணம் இல்லை என்னும் உத்தரவாதம்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்போது ஆண்டுக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்குரிய ஆண்டுக் கட்டணத்தை சில வங்கிகள் வசூலித்துவிடும். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆண்டுக் கட்டணம் இல்லை என்று கூறும். ஆனால், அந்த வசதி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆயுள் முழுக்க எந்த கட்டணமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறுதான். எனவே, கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை உன்னிப்பாகப் படியுங்கள். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரையில்தான் அல்லது குறிப்பிட்ட தொகை அளவுக்கு கார்டினை உபயோகப்படுத்து பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணங்கள் இல்லாமல் இருக்கும். புதிய கார்டு ஒன்றை வாங்குவதற்குமுன் இந்த ஆண்டு கட்டண விவகாரத்தை முழுமையாக அறிந்துகொள்வது நல்லது.
நிதி சார்ந்த கட்டணங்கள்!
கடன் தொகை முழுவதையும் செலுத்த முடியாத நேரங்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது வழக்கம். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டி போட்டு வசூலிக்கும். இந்த வட்டி விகிதமானது மாதத்துக்கு 2-3 சதவிகிதமும், அதுவே வருடத்துக்கு 24-36 சதவிகிதமாகவும் இருக்கும். சில வங்கிகள் பில் செய்யப்பட்ட மொத்த தொகைக்கும் கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எந்த நிறுவனத்தில் குறைவாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகமிக அவசியமாகும்.
வட்டி இல்லாத காலகட்டம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை 45-55 நாட்களாக வைத்திருக்கும். இந்தக் காலத்தில் செலுத்தப்படாத தொகைக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது. கிரேஸ் பிரீயட் என்பது பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் தேதி முடிவடைந்தபிறகும் 15-25 நாட்களுக்கு இருக்கும். பில்லிங் காலகட்டம் ஆரம்பிக்கும் தேதிக்கு அருகாமையில் செய்யப்படும் செலவுகளுக்கு அதிக நாட்கள் கிரெடிட் இருக்கும். அதுவே பில்லிங் முடியும் தருவாய்க்கான தேதிக்கு அருகில் இருக்கும்போது கிரெடிட் காலம் குறைவாக இருக்கும். எனவே, புதிய கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது வட்டி இல்லாத காலகட்டம் அதிகமாக உள்ள கார்டை தேர்வு செய்வது நல்லது.
கோ பிராண்டட் கார்டு!
ஒரே பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் (Co-branded) அங்கீகரிக்கப் பட்டதாக இருப்பது நல்லது. இதன் மூலம் அதிகம் சுற்றுலா செல்பவர்கள், ஷாப்பிங் செய்கிறவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். தவிர, ரிவார்ட் பாயின்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றைக் கொண்டு இனிமேல் செய்யவிருக்கும் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
கான்டக்ட்லெஸ் கார்டு!
வழக்கமாக ஸ்வைப் செய்யும் கார்டுகளைவிட கான்டக்ட்லெஸ் கார்டுகளை (Contactless) தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த கார்டினை பயன்படுத்த ஸ்வைப் மெஷினில் தேய்க்க தேவையில்லை. இந்த கார்டினை டர்மினலுக்கு அருகே கொண்டு வந்தாலே போதும், கார்டில் உள்ள சிப் மற்றும் ஆர்எஃப் ஆன்டனா மூலம் கார்டின் தகவல்கள் பெறப்பட்டு பணம் எடுக்கப்படும். இந்த கார்டினை பயன்படுத்தும் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும். அதாவது, உங்களின் கார்டை மூன்றாவது நபரிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஷாப்பிங் செய்யும்போது கார்டு உங்களின் கையிலேயே இருக்கும்.
டெபிட் கார்டுடன் சேர்ந்த கிரெடிட் கார்டு!
இதுவும் ஒருவகையான கிரெடிட் கார்டுதான். அதாவது, உங்களின் டெபிட் கார்டில் ஓவர்டிராஃப்ட் எடுத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய கார்டு ஆகும். இந்த கார்டு உங்களின் சேமிப்பு கணக்குடன் சேர்க்கப்பட்டிருக்கும்.
உங்களுடைய கிரெடிட் லிமிட் எவ்வளவு என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்கும். இதனால் தேவை இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்காது.
ஆட் ஆன் கார்டு!
கிரெடிட் கார்டு வாங்கும்போது சில நிறுவனங்கள் ஆட் ஆன் கார்டை (Add-on Card) கணவன்/மனைவிக்கு இலவசமாக வழங்கும்.
சில நேரங்களில் ஆட் ஆன் கார்டு கேட்காமலேயே அனுப்பப்பட்டு விடும். ஆட் ஆன் கார்டில் வாங்கப்படும் கடன், முதல் கார்டு வாங்குபவரின் பெயரில் பதிவாகும். இதில் உள்ள ஒரே கூடுதல் வசதி அதிக கிரெடிட் லிமிட். எனவே, கிரெடிட் கார்டு வாங்கும்போதே ஆட் ஆன் கார்டு வேண்டுமா என்பதை முடிவு செய்வது நல்லது.
சிறப்பாகச் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்!
அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் வாடிக்கையா ளர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக சேவை மையம் வைத்துள்ளது. ஆனால், எல்லா வாடிக்கையாளர் மையமும் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில்லை.
எனவே, கார்டு வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் சேவை மையம் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
வாடிக்கையாளர் சேவை மையம் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான நேரத்தில் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்லும் நிறுவனத்தில் கார்டை வாங்கினாலே பாதிப் பிரச்னை தீரும்.
தொகுப்பு: இரா.ரூபாவதி.
நன்றி : விகடன் செய்திகள் - 24.05.2015

Thursday, May 21, 2015

ஃபேஸ்புக் கேம் ரெகொஸ்ட்களை ஃபிளாக் செய்ய


ஃபேஸ்புக் கேம் ரெகொஸ்ட்களை ஃபிளாக் செய்ய என்ன செய்ய வேண்டும்?


பேஸ்புக் பயன்படுத்துறவங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம், ஒரு வகையை சேர்ந்தவங்க எங்க போனாலும் போட்டோ பிடிச்சு அதை பேஸ்புக்கில் அப்டேட் செய்யுறவங்க, இன்னும் சிலர் எப்போவாவது பேஸ்புக் வருவது வந்தாலும் கேம்ஸ் மட்டும் விளையாடி மற்றவர்களுக்கு கேம் ரிக்வஸ்ட்களை அனுப்புவது.  ஒரு சிலருக்கு கேம் விளையாட பிடிக்கும், ஒரு சிலருக்கு கேம் விளையாடுவது பிடிக்காது, இருந்தும் உங்க நண்ப்ரகள் தொடர்ந்து கேம் ரிக்வஸ்ட் கொடுக்கின்றார்களா? அப்ப அதை எப்படி ப்ளாக் செய்வது என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

பேஸ்புக்:
முதலில் பேஸ்புக் சைன் இன் செய்யுங்கள்




டவுன் பட்டன்:
இப்போ வலது பக்கம் இருக்கும் டவுன் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


செட்டிங்ஸ்:
டவுன் பட்டனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.


ப்ளாக்கிங் செட்டிங்ஸ்:
ஆப்ஷனின் இடது புறத்தில் ப்ளாக்கிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்


மேனேஜ் ப்ளாக்கிங்: 
ப்ளாக்கிங் க்ளிக் செய்தவுடன் மேனேஜ் ப்ளாக்கிங் என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும்




தேர்வு:
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனில் உங்களை கடுப்பாக்கும் அப்ளிகேஷன்கள், தேர்வு செய்யலாம். இந்த ஸ்கிரீனில் ப்ளாக் யூசர்ஸ், ப்ளாக் ஆப் இன்வைட் என உங்களுக்கு இடையூறாக இருக்கும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும்.

 

ப்ளாக் ஆப்ஸ்:
 மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ப்ளாக் ஆப்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும், இங்கு நீங்க ப்ளாக் செய்ய விரும்பும் அப்ளிகேஷனை என்டர் செய்து ப்ளாக் செய்யலாம்.


அப்ளிகேஷன்:
இப்போ நீங்க ப்ளாக் செய்த அப்ளிகேஷன் ப்ளாக் ஆப்ஸ் ஸ்கிரீனில் இருக்கும், ப்ளாக் செய்த அப்ளிகேஷனை அன்ப்ளாக் செய்யவும் முடியும்.



ப்ளாக் இன்வைட்ஸ்:
மேனேஜ் அப்ளிகேஷன்ஸில் ப்ளாக் இன்வைட்ஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு கேம் ரிக்வஸ்ட் கொடுப்பவர்களின் பெயரை டைப் செய்யதால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு எந்த ரிக்வஸ்ட்களும் வராது. 


ப்ளாக் பேஜஸ்:
கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் இல்லாமல் பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் செய்ய வேண்டும் ரிக்வஸ்ட்களும் அதிகம் வருகின்றது, இதை ப்ளாக் செய்ய மேனேஜ் அப்ளிகேஷன் ஸ்கிரீனின் கடைசி ஆப்ஷனான ப்ளாக் பேஜஸ் சென்று உங்களுக்கு தேவையான பக்கங்களின் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்ய முடியும்.


நன்றி : Mr. Meganathan & TAMIL GIZBOT




ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க


ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
***********************************************************************
அரசு சார்ந்த பல சேவைகள் ஆன்லைனில் கிடைக்க துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றது. இண்டர்நெட் மூலம் அரசு ஆவணங்களை பூர்த்தி செய்வது மிகவும் எளிமையான நடைமுறையாகிவிட்டது. அந்த வகையில் ஆன்லை் மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இணையத்தில் பாஸ்போர்ட் பெற செய்ய வேண்டியவைகளை பாருங்கள்..

இணையதளம்:
முதலில் பாஸ்போர்ட் சேவா (Passport seva) இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
ரெஜிஸ்டர்:
பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்தும் முன் அதில் உங்களை பதிவு (Register) செய்து கொள்ள  வேண்டும்.

லாக் இன்: 
ரெஜிஸ்டர் செய்த பின் மீண்டும் பாஸ்போர்ட் சேவா தளத்திற்கு சென்று (Log in) லாக் இன் செய்ய வேண்டும்.
அப்ளை:
லாக் இன் செய்ததும் "Apply for Fresh Passport / Re-issue of Passport" க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய பக்கத்தில் விண்ணப்ப படிவம் காணப்படும்.

விண்ணப்பம்:
இங்கு காணப்படும் விண்ணப்ப (Application) படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த பின் சமர்பிக்கலாம்.
பணம்:
விண்ணப்ப படிவத்தை சமர்பித்த பின் "Pay and Schedule Appointment" க்ளிக் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய பின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

ப்ரிண்ட்:
பணம் செலுத்தி முடித்த பின் "Print Application Receipt" க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட்:
விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்த பின் தேர்வு செய்த தேதியில் வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு செல்லும் போது அனைத்து படிவங்களின் ஒரிஜினல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
                                     வாழ்த்துக்கள்!      . 

நன்றி: TAMIL GIZBOT

பாஸ்போர்ட் பெறுவதில் தாமதமா?- உரிய காரணத்தை தொலைபேசியில் தெரிவிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்து வம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடு செல்கின்றர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப் பிக்கும்போது ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட் டால் அதுகுறித்த காரணத்தை சம்மந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப் பிப்பவர்களில் நாள்தோறும் 2 ஆயிரத்து 550 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தைத் தவறாக பூர்த்தி செய்கின்றனர்.
மேலும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டை உரிய நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் என்ன காரணத்துக்காக தாமதமாகிறது என்ற காரணத்தைத் தெரிவிப்பார். மேலும் எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் தயார் செய்து வழங்கப்படும் என்ற விவரத்தையும் கூறுவார்.
இதன் மூலம், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையின்றி எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.

 மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002581800, 28513640, 28518848, 28513639, 28513641, 28513575 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

நன்றி தி இந்து நாளிதழ் - 01.06.2015

Wednesday, May 20, 2015

செல்போன் தொலைந்தால்


செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
*********************************************************

செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சில செல்போன்களை நாமாகவே தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். 

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

செல்போன் பாதுகாப்பு: 
ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

மொபைல் டிராக்கிங்: 
மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்: 
பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் வெறும் நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். 

சிம்கார்டை பிளாக் செய்க: 
மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.   

காவல் நிலையத்தில் புகார்: 
சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள். 

மொபைல் பேங்கிங் வசதியை முடக்குங்கள்:
 ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.


அந்தரங்க படங்களை தவிருங்கள்: 
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். 

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்: 
நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

நன்றி : TAMIL GIZBOT

சாதாரண செல்போனாக இருந்தால்,

1. அது தொலைவதற்கு முன்பே,  அந்த போனில் இருந்து *#06# என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள்.

2. உங்கள் செல்போனில் 15 டிஜிட் நம்பர் வரும்,

3. இந்த நம்பர் தங்கள் செல்போனின் IMEI (International Mobile station Equipment Identity) number ஆகும்.

4. இதனை தாங்கள் டைரியிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.  

6. அதன்பிறகு , உடனே இந்த (IMEI) நம்பரை  cop@vsnl.net - க்கு  மெயில் அனுப்ப வேண்டும்.

7.  தங்களது செல்போன் இருக்குமிடம் 24 மணி நேரத்துக்குள்  GPRS (General Pocket Radio Service) மூலம்  கண்டறியப்படும்.