disalbe Right click

Saturday, April 18, 2015

ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?



ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?

ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.

ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?
அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன?
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன?
இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கனரக வாகனம் (Heavy Motor Vehicle) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா?
போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.

ஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன?
ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.
நன்றி தி இந்து நாளிதழ் 17.06.2014

பி.எஃப் கணக்கு விபரங்கள்


பி.எஃப் கணக்கு விபரங்கள் 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அறிந்துகொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களைப் பெற, தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என் நம்பர்)  www.uanmembers.epfoservices.in என்ற இணையதளத்துக்கு சென்று செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்.
தகவல்களைப் பெறுவது எப்படி?: தங்கள் பொது கணக்கு எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த உறுப்பினர்கள், முந்தைய வருங்கால வைப்பு நிதி தொகையை நடப்பு கணக்குடன் இணைத்தல், வருங்கால வைப்பு நிதிக்கான மாத பங்களிப்புத் தொகை உள்ளிட்டவற்றை தாங்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசியில் இருந்து குறுந்தகவல் மூலம் அவரவர் தாய் மொழியில் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு குறுந்தகவல் மூலம் தமிழில் தகவல்களைப் பெற விரும்பும் உறுப்பினர்கள் EPFOHO UAN TAM என்றும், ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் EPFOHO UAN ENG என்றும் "டைப்' செய்து 7738299899 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என, வருங்கால வைப்புநிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்குகள் புதுப்பிப்பு: தாம்பரம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1-ஆம் தேதியே அனைத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என மண்டல வருங்கால ஆணையர் மூ.மதியழகன் தெரிவித்தார்.
வருங்கால வைப்பு நிதி கணக்குகள் இவ்வாறு ஒரே சமயத்தில் புதுப்பிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
தாம்பரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 24 லட்சத்து 52 ஆயிரம் உறுப்பினர்களின் கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டு, அதில் 11 லட்சம் உறுப்பினர்களின் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளவை என்றும், 12 லட்சத்து 52 ஆயிரம் கணக்குககள் செயல்பாட்டில் இல்லாததும் கண்டறியப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி - தினமணி நாளிதழ் 17.04.2015

ஜி மெயிலில் பாஸ்வேர்ட் மாற்ற


ஜி மெயிலில் பாஸ்வேர்ட் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

ஜிமெயில் முகவரி பயன்படுத்தும் பலரும் அவ்வப்போது எதிர்கொள்ளும் விஷயம் தான் கடவு சொல்லை மறந்து போவது, சிலர் மீண்டும் கடவு சொல்லை மீட்க முயற்சிப்பர் இன்னும் சிலர் புதிய அக்கவுன்டு ஒன்றை ஆரம்பித்து கொள்வர். இங்கு ஜிமெயிலின் பாஸ்வேர்டை எப்படி மீட்க வேண்டும் என பாருங்கள்..

சைன் இன் 
முடிந்த வரை சைன் செய்து விட்டு கடைசியாக என்ன பிரச்சனை என்பதை கூகுளிடம் தெரிவிக்கலாம்

பாஸ்வேர்டு 
அடுத்து உங்களது பிரச்சனையை தெரிவிக்க வேண்டும், இந்த பக்கத்தில் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டதாக குறிப்பிட வேண்டும்.

                     
மின்னஞ்சல்
 இங்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை என்டர் செய்யவேண்டும்.



பாஸ்வேர்டு
 அடுத்து உங்களது பிரச்சனையை தெரிவிக்க வேண்டும், இந்த பக்கத்தில் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டதாக குறிப்பிட வேண்டும்.




பாஸ்வேர்டு 
கடைசியாக பயன்படுத்திய பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். அடுத்து உங்களது மாற்று மின்னஞ்சல் முகவரி அல்லது போன் நம்பரை என்டர் செய்தால் வேலை முடிந்தது.


நன்றி - TAMIL GIZBOT (17.04.2015)





ஆதார் அட்டை எண்- வாக்காளர் அட்டையுடன் இணைக்க


ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க என்ன செய்ய வேண்டும்?
 வாக்காளருக்கான ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை இணைப்பதற்கான வாக்குச்சாவடி அளவிலான சிறப்பு முகாம்கள் கடந்த 12.04.2015 முதல் அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.18 கோடி பேர், அதாவது 82 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வாக்காளருடன் தேர்தல் கமிஷன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குவதற்கு இமெயில், தொலைபேசி எண், செல்போன் எண் போன்றவை அவசியமாக உள்ளன.

சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், பெயர் சேர்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய புகைப்படம் சேர்த்தல் ஆகியவற்றையும் செய்யலாம். ஆதார் எண், இமெயில், செல்போன் எண் போன்றவற்றை இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு வருகிறவர்கள், தங்களைப்பற்றிய பதிவுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றுக்கான அரசு தரப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக, முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் முகவரிக்கான ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போட், ஆதார் அட்டை போன்றவற்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டையின் நகலை வைத்திருப்பது நல்லது.

இதை கன்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் ஆனால், இதை இணைப்பதற்காக நாம் தகவல் மையங்களில் பலமணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது. 

அதனை இணையத்தில் 5 நிமிடங்களில் உடனடியாக  இதை நாம் செய்து விட முடியும் 

முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Feed your aadhaar number என்ற லிங்கை கிளிக் செய்யும் போது feed your aadhaar number என்ற பக்கத்தை கிளிக் செய்யும் போது national voter service portel என்ற பக்கம் தோன்றும் அதில் search by EPIC NO என்பதில் நம்முடைய voter id no மற்றும் நம்முடைய மாநிலம் கொடுத்து search கொடுத்தால் உங்களுடைய voter id யில் உள்ள அனைத்து விபரங்களும் அதில் வரும் அதில் feed aadhaar no என்ற இடத்தை கிளிக் செய்தால் பக்கம் ஒன்று திறக்கும் அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், நம்பர், உங்கள் போன் நம்பர் இமெயில் id கொடுத்து submit செய்தால் போதும் உடனடியாக உங்கள் போன் நம்பர்க்கு confirmation message வரும். அவ்வளவுதான்
.
நன்றி நண்பர் மோகன்தாஸ் சாமுவேல் அவர்களுக்கு.


Thursday, April 16, 2015

தேசிய தகுதித் தேர்வு (NET)


தேசிய தகுதித் தேர்வு (NET)
நமது நாட்டில். எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “நெட்” (National Eligibility Test) எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சிபிஎஸ்இ
தேசிய அளவிலான இந்த “நெட்” தகுதித்தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை அதாவது ஜூன் மற்றும்  டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் நெட் தேர்வினை,  University Grants Commission எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது நடத்தி வந்தது. கடந்த 2014ம் டிசம்பர் மாதத்தில் இருந்து Central Board Of Secondary Commission எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது  இத்தேர்வை நடத்தி வருகிறது.
தகுதிகள்
இத்தேர்வினை எழுத தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வானது CSIR எனப்படும் Council of Scientific & Industrial Research மூலம் தனியே நடத்தப்படுகிறது.
முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.  எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நெட் தேர்வில் உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், JRF எனப்படும் Junior Research Fellowship தகுதிக்கு வயது வரம்பு 28 ஆகும். இதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.
மூன்று தேர்வுகள்
நெட் தேர்வானது, மொத்தம் மூன்று துணைத் தேர்வுகளை உள்ளடக்கியது ஆகும். மூன்றுமே அப்ஜெக்டிவ் முறையிலானதுதான். முதல் தேர்வில் உங்களின் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைச் சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான ஏதேனும் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இரண்டாவது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகள் கேட்டிருப்பார்கள். மூன்றாவது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 75 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு தேர்வுகளுக்கும் தலா ஒன்றே கால் மணி நேரமும், தலா 100 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மூன்றாவது தேர்வுக்கு இரண்டரை மணி நேரமும் 150 மதிப்பெண்களும் வழங்கப்படும். ஒவ்வொரு தேர்விலும்  குறைந்தபட்ச மதிப்பெண்களை நீங்கள் எடுக்க வேண்டியது முக்கியமானதாகும்.
கடைசி நாள்
இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித்தேர்வு ஜூன்மாதம் 28-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை Central Board Of Secondary Commission எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது வெளியிட்டிருக்கிறது. தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் www.cbsenet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் 16-ம் தேதிம் முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 16-ம் தேதியாகும்  ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் அல்லது வங்கிச் செலான் மூலம் குறிப்பிட்ட வங்கியில் செலுத்த வேண்டும். அதன் பின்பு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தாங்கள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டணம்
இதுவரை ரூ. 500-ஆக இருந்த தேர்வுக் கட்டணத்தை  ரூ. 600-ஆக CBSE உயர்த்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தகுதித் தேர்வு-தேர்வில் தேர்ச்சி முறைகள்:

நன்றி : எழுத்து.காம்,  29.03.2014-பதிவு 
தேசிய தகுதித் தேர்வு-தேர்வில் தேர்ச்சி  முறைகள்
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் தேசிய தகுதித் தேர்வு- மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுவாமிநாதன்.

#நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை. 

#நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகையால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். 

#உங்களுடைய நெட்தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும், தேர்வுக்குப் போதுமான நல்ல புத்தகங்களை வாங்கி விடலாம். 

#தற்போது, கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் யு.ஜி.சி. இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து பயிற்சி பெறலாம். 

#தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் நன்கு ஆழமான முறையில் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யாரால் கண்டறியப்பட்டது, எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் என அனைத்தையும் ஆழமாகப் படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தயார் செய்துகொள்ள வேண்டும். 

# ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள், குழுவாகச் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் போது காலம் மிச்சமாகும். மேலும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்றுக்கொள்வது நல்லது. 

# முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா- விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதில் வெளியிட்டு உள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிப் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது பலரும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எது சரியானது என்பதைத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தேர்வின்போது தடுமாற வேண்டி இருக்கும். இதற்கு மாற்றாக ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை எது என்பதை படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுபோல் பயிற்சி செய்யும்போது தேர்வில் விடைகளின் வரிசையினை மாற்றிக்கொடுத்து இருந்தால் எளிதாக தடுமாறாமல் விடையளிக்க முடியும். 

# ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். அதன் பின்பு அதற்கான விடைகளோடு ஓப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவித வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன. இந்தப் பயிற்சி உங்களின் மதிப்பெண்ணைக் கூட்டும். அத்துடன், உங்களது நேர மேலாண்மைக்கு உதவும். அத்துடன், தொடர் பயிற்சி மேற்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். தேர்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை கூடும். 

# யூஜிசி நெட் தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது. இந்தத் தாளில் Research aptitude, Teaching aptitude போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும். அத்துடன், இந்தியாவில் உயர் கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானியக்குழு குறித்த விஷயங்களும் கேட்கப்படுகின்றன. முதல் தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகின்றன. இந்தப் பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்வது அவசியம். 

# பெரும்பாலான மாணவர்கள் முதல் தாளில் கோட்டைவிட்டு விடுவார்கள். இதனால் முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள். முதல் தாளில் கணிதத் தர்க்க அறிவு குறித்து சோதிக்கிறார்கள். இதை மிகவும் எளிதாக கேட்பார்கள். பலருக்கும் கணக்கு கடினமாக இருக்கும் என்று விட்டுவிடுவார்கள். இனி அதுபோல் கணக்குக் கேள்விகளை ஒதுக்கி தள்ளாமல் விடையளிக்க முயற்சி செய்யுங்கள். பத்து ஆண்டுகளுக்கான விளைச்சலின் விவரங்களை கொடுத்து எந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தது, எந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது என்பது போன்ற கேள்விகளை data interpretation பகுதியில் கேட்கிறார்கள். இத்தகைய கணித தர்க்கக் கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

# இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் ஐந்தில் இருந்து பத்து கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். பழைய கேள்வித்தாள்களில் தர்க்க வாதக் கேள்விகளை எப்படிக் கேட்டு இருக்கிறார்கள், அதற்கான விடைகள் எவை என்பதை பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல் வெவ்வேறு கேள்வித்தாள்களில் இருந்து தர்க்க வாத கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையினை பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையளித்து விட முடியும். 

# யூஜிசி நெட் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, முதலில் தெரிந்த கேள்விகளுக்கும், பின்னர் தெரியாத கேள்விகளுக்கும் யோசித்து தவறாமல் விடையளிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் தெரியாது என்று நினைத்த கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கி இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மதிப்பெண் கூடவே செய்யும். தகுதித் தேர்வில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. அண்மைக் காலங்களில் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களின் தரப்பட்டியலில் இருந்து தான் தேர்ச்சி விவரம் வெளியிடப்படுவதால் அதிகமாக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். 

# இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கப் பாருங்கள். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. இத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கி நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.
புனைவுப் படம்.
புனைவுப் படம்.
உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி (2015)வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதலாவது ‘நெட்’ தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி (2015) நடைபெற உள்ளது.
முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் கிடையாது. எனினும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனப்படும் ஜெஆர்எப் உதவித்தொகை தகுதிக்கு மட்டுமே வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ளவர்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cbsenet.nic.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Friday, April 10, 2015

வெளிநாடுகளில் வசிப்போர் தாயகத்தில் சொத்து வாங்க


வெளிநாடுகளில் வசிப்போர் தங்களுடைய பெயரில் தாயகத்தில்
 சொத்துகளை வாங்குவதற்கான வழிமுறை


பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.



அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி 
Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.

தேவையான ஆவணங்கள் 

பவர் எழுதி கொடுப்பவரின் (Principle)
புகைப்பட அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
ரூபாய் 20-க்கான முத்திரைத் தாள் (பத்திரம்)
பவர் ஏஜண்ட் (எழுதி வாங்குபவர்)-ன்
புகைப்பட அடையாள அட்டை ( Photo identity proof)
இருப்பிடச் சான்று (Residence Proof)
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
இரு அத்தாட்சிகளின் (Two witness)
புகைப்பட அடையாளச் சான்று (Photo ID proof)
இருப்பிடச் சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை தங்களது சொந்த ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கும் போதே SUB_REGISTRAR OFFICE (சார் பதிவாளர் அலுவலகம்) தாக்கல் செய்யலாம்.

செலவு தொகை:
ரூபாய் 1100க்கான வரவு காசோலை (DEMAND DRAFT) உள்ளுரில் மாற்றத்தக்க (LOCAL CLEARANCE) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக‌ பெயரிலே டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy
ரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.
ரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்கு பொருந்தும்.

தாக்கல் செய்யும் முறை:
மேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்காக, பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை முதலில் பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் ) அல்லது எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தெளிவாக எழுத வேண்டும்.
அல்லது சிவில் வக்கீல்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.

இந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.

சொத்துகளை தனது பெயருக்கு  வேறொருவரின் மூலமாக வாங்கலாம்.
வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது பத்திரம் பதிவு செய்யும் இடத்திற்கு வராமலேயே, இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்தும் கொள்ளலாம்.
சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்கள் காலவாதி ஆகாது.
முக்கியமான ஒன்று யாதெனில், எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை, இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது ஆகும்..

வரன்முறைகள்:

இந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்க மட்டுமே முடியுமே, தவிர சொத்துக்களை விற்க முடியாது
சொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.
ஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.
அவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்.

இதன் பயன்கள்:

வெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.
இதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறையாக செயல்படுத்தலாம்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.
வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தை ஆங்கிலத்தில் தயார் செய்து கொள்வது   நல்லது.
வெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம். 

எழுதும் முறை:

முதலில், ஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதனை சாதாரண ஏ4 ஷீட்(தாளில்)ல் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னிக்கான தொகையை (துபாய் நாட்டில் 115 திர்ஹம்கள்) செலுத்தித் தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.
தூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையொப்பம் பெற்றதும்
அதனை அப்படியே இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக. அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….
பவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.
இதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம் என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்!)
அதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.
ஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.

தகவல்: நன்றி s.முஹம்மதுரபிக், துபாய்.
மாதிரிப் படிவம்
*******************************
 DRAFT CONVENTIONAL FORMAT /GENERAL POWER OF ATTORNEY

******************************************************************************************

THIS DEED OF GENERAL POWER OF ATTORNEY HAS BEEN EXECUTED ON THE DAY OF 21ST OF APRIL MONTH 2013, AND EXECUTED PLACE: ….…

BE IT KNOWN TO ALL MEN BY THESE PRESENTS THAT, I XXXXXXXXX (PASSPORT NO. FXCXCSXX) S/O. XXXXXXXXX, AGED XX YEARS, NON-RESIDENT INDIAN (NRI), PRESENTLY RESIDING IN XXXXXXX, XXXXXX AND PERMANENT ADDRESS OF ORIGIN AT NO. 23, XXXXXXX, TRICHY DISTRICT – 620124, TAMIL NADU, DO HEREBY NOMINATE CONSTITUTE AND APPOINT MY FATHER MR. XXXXXX (FAMILY CARD NO. 17/G/XXXXX) S/O.XXXXXXX , AGED XXYEARS, PRESENTLY RESIDING AT NO. 23, XXXXX, XXXXXXX, TRICHY DISTRICT – 6200124, TAMIL NADU, WHOSE HAND AND SIGNATURE ARE IDENTIFIED AT THE FOOT OF THESE PRESENTS, TO BE MY TRUE AND LAWFUL ATTORNEY FOR ME AND IN MY NAME AND ON MY HALF TO DO AND EXECUTE ALL AND ANY OF THE FOLLOWING ACTS, DEEDS AND THINGS AND TO EXERCISE ALL AND ANY OF THE POWERS AND AUTHORITIES HEREBY CONFERRED AND CONFIRMED, NAMELY:-

1. TO PURCHASE IMMOVABLE PROPERTIES ON MY BEHALF IN MY NAME IN INDIA OUT OF THE FUNDS SOLELY BELONGING TO ME.

2. THAT YOU HAVE TO ACT AS MY ATTORNEY, TO NEGOTIATE AND PAY THE ADVANCE AMOUNT TO THE VENDOR FROM OUT OF THE FUNDS PROVIDED FOR AND TO ENTER SALE AGREEMENT WITH THE VENDOR.

3. TO GET LEGAL OPINION REGARDING THE LEGAL ASPECTS OF THE PROPERTY CONCERNED FROM THE ADVOCATES.

4. TO APPLY ENCUMBRANCE CERTIFICATE REGARDING THE ENCUMBRANCE OF THE PROPERTY CONCERNED ON MY BEHALF IN MY NAME IN INDIA AT CONCERNED JURIDICTIONAL SUB-REGISTRAR OFFICE(S) OF THE DISTRICT(S) WHERE THE PROPERTY BELONGS TO.

5. AND TO APPLY LEGAL ESTIMATION OF THE PROPERTY WITH CONCERNED ESTIMATOR / ENGINEER TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT / FORM(S)

6. TO SIGN AS VENDOR POWER OF ATTORNEY IN THE APPROPRIATE FORMS AND ALSO SIGN IN THE SALE DEED ALONG WITH THE VENDOR IN THE PRESENCE OF THE CONCERNED SUB-REGISTRAR, WHERE THE SALE DEED HAS TO BE REGISTERED AND TO PAY THE ENTIRE BALANCE OF SALE CONSIDERATIONS TO THE VENDOR AND ALSO PAY NECESSARY REGISTRATION FEES IN THE SUB-REGISTRAR’S OFFICE.

7. AND ALSO TO DO EVERY ACT INCLUDING PREPARING THE PLAN, TO SIGN IT, TO PRESENT IT TO THE ALL AND TOGETHER CONCERNED AUTHORITIES TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT.

8. TO RECEIVE FROM THE PURCHASER(S) SALE CONSIDERATION AND TO GIVE PROPER RECEIPTS AND DISCHARGES FOR THE SAME.

9. TO APPLY TO THE COMPETENT AUTHORITIES FOR MUTATION OF MY PROPERTIES IN FAVOUR OF AND IN THE NAME OF THE PURCHASER.

10. TO FILE PETITIONS AND SUITS AND APPLICATION AND TO EXECUTE THE DEEDS BEFORE COURTS OF ALL NATURE AND BEFORE ALL CONCERNED AUTHORITIES TO DEFEND AND TO COLLECT THE INTERESTS OF ALL NATURE TO REPRESENT BEFORE ALL SUCH COURTS AND AUTHORITIES AND TO DEFEND AND TO EXPEND ANY SUCH MONEY REQUIRED THEREFORE AND TO PASS RECEIPT THEREFORE.

11. TO COMMENCE AND PERSECUTE AND DEFEND ALL LEGAL PROCEEDINGS, TO APPOINT SOLICITOR AND ADVOCATES, TO DECLARE AND SIGN ALL PLAIN, WRITTEN STATEMENTS, AFFIDAVITS ETC., TO PROTECT AND TO DEFEND OR TO OPPOSE AS MY BE NECESSARY IN RESPECT OF THE PROPERTIES AS MY ATTORNEY.

12. TO RECEIVE, ACKNOWLEDGE AND TO REPLY ALL NOTICES SUMMONS, LETTERS, ETC., IN CONNECTION WITH THE PROPERTY AND TO TAKE SUCH OTHER SUITABLE ACTION AS MAY BE FOUND EXPEDIENT AND NECESSARY BY ATTORNEY.

13. AND TO INVEST ANY OF MY MONEYS IN SUCH MANNER, AT SUCH RATE OF INTEREST AND UPON SUCH SECURITY AS MY SAID ATTORNEY SHALL IN HIS ABSOLIUATE DISCRETION THINK FIT, AND FROM TIME TO TIME TO ALTER AND VARY THE SAID INVESTMENTS, AS AFORESAID, TO DEPOSIT THE SAID MONEYS OR ANY PART THEREOF WITH ANY POST OFFICE, BANK OR BANKS TO WHOM MY SAID ATTORNEY SHALL THINK FIT TO ENTRUST

14. TO REPRESENT ME BEFORE ALL CENTRAL AND STATE GOVERNMENT, MUNICIPAL CORPORATION AND ELECTRICITY BOARD, TELEPHONE DEPARTMENT, AND ANY OF ITS AUTHORITIES FOR ANY PURPOSE WHATS OVER IN REGARD TO MY INTEREST OF THE MY PROPERTIES.

15. AND GENERALLY CONCERNING THE MATTERS, PROPERTIES AND PURPOSE MENTIONED HEREIN AND TO EXERCISE ALL THE RIGHTS AND POWERS TO WHICH I KNOW OR SHALL HEREAFTER AT ANY TIME BE ENTILES, TO EXECUTE AND PERFORM ANY AND EVERY ACT, DEED, MATTER OR THING WHICH IN CONNECTION THEREWITH THOUGHT TO BE DONE, EXECUTED AND PERFORMED IN THE OPINION OF ANY ATTORNEY AS FULLY, AND EFFECTIVELY TO ALL INTENTS AND PURPOSES AS I MIGHT AND COULD DO, EVEN I AM PERSONALLY PRESENT.

16. I DO HEREBY AGREE TO RATIFY AND CONFIRM ALL THAT MY ATTORNEY LAWFULLY DOES BY VIRTUE OF OR AND UNDER THIS POWER. THE POWER AGENT SHALL MAINTAIN TRUE AND PROPER DOCUMENTS AND SHALL SUBMIT THE SAME AS AND WHEN CALLED UPON TO DO SO.

AND I, THE SAID XXXXXXXXXXX HEREBY AGREE TO CONFIRM AND RATIFY ALL AND WHATSOEVER MY SAID ATTORNEY OR ANY SUBSTITUTE OR AGENT, APPOINTED BY HIM, UNDER THE POWER IN THAT BEHALF HEREIN BEFORE CONTAINED SHALL LAWFULLY DO OR CAUSE TO BE DONE.
IN WITNESS WHEREOF, I THE SAID xxxxxxxxx HAVE HERE UNTO SET MY HAND AND SIGNATURE ON THIS 21ST APRIL 2013.

WITNESSESS:
1.
2.

DRAFTED BY ADVOCATE / NOTARY PUBLIC: MR. …………………… REGN NO.

…......................……….DISTRICT,


காவல்துறை - வழக்குப் பதிவு


காவல்துறை எந்த ஒரு சூழ்நிலையில் ஒரு வழக்கை 
பதிவு செய்ய வேண்டும்?

ஒரு குற்றமுறு செயல் நடந்திருக்கிறது என்று ஒருவர் புகார் செய்யும்போது, காவல்துறை, தேவைபட்டால், ஒரு அடிப்படை விசாரணை செய்து விட்டு, கீழ்கண்ட விஷயங்களில், முதல் தகவல் அறிக்கை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும், 

என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பான, Lalita Kumari v. Govt. of U.P., (2014) 2 SCC 1. Date of decision: 12/11/2013, கூறுகிறது. 

a. திருமண பிரச்சினைகள் அல்லது  குடும்ப பிரச்சினைகள் 

b. வணிகக் குற்றங்கள் 

c. மருத்துவம் செய்வதில் கவனக்குறைவான விஷயங்கள் 

d. லஞ்ச வழக்குகள் 

e. கிரிமினல் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதில், அபரிமிதமான கால தாமதம் இருந்தால், (உதாரணமாக, ஒரு சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அதை தெரிவிக்காமல் போனதற்கு), ஏற்க கூடிய விளக்கம் அளிக்காமல் போனால். 

f. மேலே சொன்னவை அனைத்தும்  ஒரு உதாரணமே, ஆனால், ஒரு முதல் கட்ட விசாரணையை ஆரம்பிக்க இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது இல்லை. 

g. புகார்தாரர் மற்றும் குற்றவாளியின் உரிமையை பாதிக்காதவாறு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், ஏழு நாட்களுக்கு மிகாமல், ஒரு முதல் கட்ட விசாரணையை உரிய காவல் அதிகாரி செய்ய வேண்டும். இதற்கான கால தாமதத்தை, பொது டைரியில், புலனாய்வு அதிகாரி எழுத வேண்டும். 

குற்ற வழக்கினை பதிய தவறினால்?
******************************************************

சட்டபடியான ஒரு கடமையை செய்ய ஒரு புலனாய்வு அதிகாரி தவறும்போது, அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 154 இன் படி வழக்கு பதிவு செய்ய தவறும்போது, , இந்திய தண்டனை சட்டம் பிரி வு 217 இன் படி, அது ஒரு குற்றம் ஆகும், 

“ஒருவரை சட்டபடியான தண்டனையிலிருந்து காப்பாற்றும் உட்கருத்துடன், அல்லது அதனால் அவரை அநேகமாக காப்பாற்ற கூடும், அல்லது அவர் ஆளாக கூடிய தண்டனைக்கும் குறைந்த தண்டனையை அடைய செய்ய கூடும்! என்று அறிந்து, அல்லது சொத்தை காப்பாற்றும் உட்கருத்துடன் அல்லது அதனால் சொத்து எதையும் தண்ட இழப்பிலிருந்தும் அல்லது சட்டப்படி அது உள்ளாக்கபட்டிருக்கும் பொறுப்பு எதனிலிருந்தும் தம்மால் அநேகமாக காப்பாற்றப்பட கூடும் என்று அறிந்திரிக்கின்ற ஒரு பொது ஊழியர் என்ற முறையில் அவர் நடந்து கொள்ள வேண்டிய வகைக்கான சட்டத்தின் உத்தரவு எதனையும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்” 

SC &ST (Prevention of Atrocities) Act, படி, ஒரு புகார் மீது ஒரு காவல் அதிகாரி வழக்கு பதிய செய்ய தவறினால், இந்த சட்டப்படி, அவரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாவார்.

குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 2013 இல் ஏற்பட்ட amendment படி, புலனாய்வு அதிகாரி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166-A இன் படியும் தண்டிக்கப்பட கூடியவர் ஆகிறார். “

166A. ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு, சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாதிருக்கின்ற பொது ஊழியர்—
ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமலிருப்பதால், எவருக்கேனும் கேடு விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக கேடு விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைக்கான சட்டத்தின் ஆணை எதற்கும் அறிந்தே கீழ்படியாமலிருந்தால், 

(d) knowingly disobeys any direction of the law which prohibits him from requiring the attendance at any place of any person for the purpose of investigation into an offence or any other 
(e) knowingly disobeys, to the prejudice of any person, any other direction of the law regulating the manner in which he shall conduct such investigation, or

அல்லது 
(f) ஒரு குற்றமுறு செயல் நடந்து, அது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 326A, 326B, 354, 354B, 370, 370A, 376, 376A, 376B, 376C, 376D, 376E அல்லது 509 படி தண்டிக்ககூடிய குற்றமாக இருந்து, அதை பற்றி தகவல் கிடைத்தும், குற்றவியல் விசாரணை முறை சட்டம், 1973, பிரிவு, 154(1) இன் படி, அதை புலனாய்வு அதிகாரி பதிவு செய்ய தவறினால், எவராக இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு குறையாமல், இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையும், அதனுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படலாம்.


 மேலும் இது கைது செய்தற்குரிய (cognizable) குற்றமாகும். 

(f) fails to record any information given to him under sub-section (1) of section 154 of the Code of Criminal Procedure, 1973, in relation to cognizable offence punishable under section 326A, section 326B, section 354, section 354B, section 370, section 370A, section 376, section 376A, section 376B, section 376C, section 376D, section 376E or section 509 of Indian Penal Code,
shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years, and shall also be liable to fine and it is a cognizable offence.

இது தவிர, குற்றமுறு செய்கையை ஒரு புகாரானது  விவரித்தும், ஒரு புலானாய்வு அதிகாரி, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தவறினால், துறைரீதியான  விசாரணைக்கும் அவர் ஆட்படுத்தபடுவார்.