disalbe Right click

Wednesday, October 26, 2016

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள


பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்?

நமது உரிமை

நாட்டின் பிரதமர் அலுவலகத்தையும் பிரதமரையும் தொடர்பு கொள்வது எப்படி என்ற தகவல் நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய ஒன்று .

நமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது எப்படி சட்டப்படி உரிமையோ அதை பயன்படுத்தி நாம் பிரதமரை அல்லது அவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. கடிதம், பேக்ஸ், இ.மெயில். பேஸ்புக், டுவிட்டர், வெப்சைட் மற்றும் மொபைல் மூலம் நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

அப்படி தொடர்பு கொள்வதால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. மக்களை ஆட்சி செய்பவர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வசதியை அரசயலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

கடிதம்

பிரச்னை உள்ள மக்கள் அதன் தீர்வுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுத முடியும் அந்தக் கடிதம் அலுவலகத்தைச் சென்றடைவதுடன் அதில் பணியாற்றும் ஊழியர்கள் படித்து அதிகாரிகள் மட்டத்தில் கேட்க வேண்டிய விஷயமாக இருந்தால் அவர்களே அதற்கு தீர்வு காண்பார்கள்.

தவிர்க்க முடியாமல் பிரதமர்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டால்,. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். பிரதமருக்கு கடிதம் எழுத விரும்பினால்,

Prime minister office,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.

இணையம் :
நமது பிரதமர் நரேந்திரமோடி அவருக்காக உருவாக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு பேசும் பழக்கத்தை கொண்டுள்ளார். இணைய தளத்தின் மூலம் முதல்முறை கவனத்திற்கு யார் தகவல் கொடுத்தாலும் சமயம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி பேசுவார். அதன்படி பிரதமரின் இணையதளத்தை பயன்படுத்த விரும்புவோம் https://www.pmindia.gov.in/en/interact-with-honble-pm மற்றும் www.narendramodi.in ஆகிய இணையதள முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக அரசாங்க இணையதளத்தில் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://mygov.nic.in/signup லாகின் செய்ய வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் ஒரு வேளை இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னை இருந்தால்

web Information manager,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.

இதைத்தவிர பிரதமரை பணம் செலவு செய்து தொடர்பு கொண்டு பேச முடியாதவர்கள், மிஸ்டுகால் கொடுத்து அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளும் வசதி கடந்த 2015ம் ஆண்டு மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 011-3006 3006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வலைத்தலங்கள்

நாட்டில் இதற்கு முன் இருந்த எந்த பிரதமரும் செயல்படுத்தாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தலங்கள் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வசதியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி
https://facebook.com/pmoindia மற்றும் https://www.facebook.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் டுவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://twitter.com/PMOIndia மற்றும் http://twitter.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம்.

* https:/www.youtube.com/user/narendramodi/abouut.
* http://www/weibo/com/u/5581682776,
* https://wwwin/linkedin/com/narendramodi/
* https://wwwin/instagram/com/narendramodi/
* narendramodi1234@gmail.com

இதனிடையில் சமீபத்தில் பிரதமரை பொதுமக்கள் எந்த சங்கடமும் இல்லாமல் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள புதியதாக செயலியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி * https://play.google.com/store/apps/details?=com. narendramodiapp&hl=en என்ற லிங்கில் லாகின் செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வீட்டிற்கு கடிதம் எழுத விரும்புவோர்
honourable prime minister of india.
No-7, racecource road,
teenmurti marg area,
New delhi - 110 011.

மத்திய அமைச்சர்கள்

சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத்துறை அமைச்சர்

இ.மெயில் - 2009vidisha@gmail.com

அலுவலக முகவரி

No 8,
safdarjung lane,
New delhi 110 011

சமூக வலைத்தளம்

* https://teitter.com/sushmaswaraj
* https://www.facebook.com/sushmaswarajBJP

சுரேஷ்பிரபு

அலுவலக முகவரி

No 256-A,
railbhavan,
raisnaroad,
Newdelhi-110 011

செல்போன் எண் - 91-11-2338 9155,

இணையதளமுகவரி fora@rb.railnet.gov.in

வீட்டு முகவரி

B-21,
sadhana.
16th Road. ghar-west,
Mumbai -400052
Maharashtra,
India

* https://twitter.com/sureshprabhu/
* https://www.faceboo.com/railministersureshprabhu/

நன்றி : தினகரன் நாளிதழ் – 25.10.2016





பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே


பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே - ஐகோர்ட்
என்ன செய்ய வேண்டும்?

விதி மீறிய பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், பட்டாசு விபத்துகளுக்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடையில் கடந்த அக். 20ல் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தனர். 

இந்த மனுவுடன், கும்பகோணம் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 2013ல் நடந்த விபத்தில் உயிரிழந்த 10 சிறுவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்த மனுக்களும் சேர்த்து நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

திருச்சி கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், விருதுநகர் எஸ்பி ராஜராஜன், தஞ்சாவூர் டிஆர்ஓ சந்திரசேகரன், மத்திய அரசின் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ், இணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். 

நீதிபதிகள்: 

திருச்சியில் பட்டாசு கடை விதிமீறல் குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். உங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை மேற் ெகாள்ளப்பட்டது. 

உதவி கமிஷனர்:

97 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. சில கடைகள் விதிமீறல் உள்ளது.

நீதிபதிகள்: 

எந்த அடிப்படையில் விதிமீறல் என்கிறீர்கள்? 

உதவி கமிஷனர்: 

கடைகளுக்கு இடையே 3 மீட்டர் தூரமும், மருத்துவமனை, கோயில் போன்ற பகுதிகளில் 50 மீ தூரமும் இருக்க வேண்டும். சில இடங்களில் அதுபோல் இல்லை.

நீதிபதிகள்

வெடிபொருள் விதியை பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? 

உதவி கமிஷனர்: 

தனிப்படைகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கான அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நீதிபதிகள்

கரூரில் ஆய்வு செய்யப்பட்டதா? 

சிறப்பு தாசில்தார்: 

41 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில கடைகளில் விதிமீறல் உள்ளது. 

நீதிபதிகள்:

 மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த போட்டோவில் மேல்பகுதியில் வங்கியும், கீழ் பகுதியில் பட்டாசு கடைகளும் உள்ளன. வங்கி பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பகுதி. அங்கு எப்படி அனுமதித்தீர்கள்? 

சிறப்பு தாசில்தார்: 

விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகள்:

 கும்பகோணம் சம்பவம் 2013ல் நடந்துள்ளது. ஏன் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. 

இன்ஸ்பெக்டர்: 

இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள்

நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த பிறகு அவசர, அவசரமாக தாக்கல் செய்து, எண் பெற்றுள்ளீர்கள். மாஜிஸ்திரேட் படித்து பார்த்தாரா என தெரியவில்லை. அதே நேரம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

சிறப்பு தாசில்தார்: 

3 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி செய்யப்பட்டது.

 நீதிபதிகள்

நீங்கள் கூறுவது நிதியுதவி, நீதிமன்றம் கேட்பது இழப்பீடு. சிவகாசியில் கடந்த 2010 முதல் தற்போது வரை இறப்பு நிகழ்ந்த விபத்துகள் எத்தனை நடந்துள்ளது. 

எஸ்பி

58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16 வழக்கின் விசாரணை

சிபிஐ விசாரணையா?

நீதிபதிகள் அளித்த உத்தரவில், சிவகாசி விபத்து வழக்கை எஸ்பி மேற்பார்வையில் சிவகாசி டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்தனர்.

நன்றி : தினகரன் – 27.10.2016

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து


தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து 
என்ன செய்ய வேண்டும்?

தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் மக்கள் தொகை 5 கோடிக்கு மேல் உள்ளது. தற்போது தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்கின்றனர். 

தற்போது தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 

கடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6 ஆயிரத்து 36 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வெளிமாநில சட்டக் கல்லூரி களில் சேர்ந்து படிக்கின்றனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. 

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2014 ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதை தடுக்கும் விதமாக ஒரு சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் கொண்டு வந்தது. இந்த தடைச் சட்டம் கடந்த 2014 செப்டம்பர் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால் போதுமான எண்ணிக்கையில் அரசு கல்லூரிகள் இல்லை. இந்தச் சட்டத்தை பொருத்தவரை எத்தனை ஆண்டுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக தெரிவிக்கவில்லை. 

அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டியதுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்த இந்தத் தடைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அதை ரத்து செய்கிறோம்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் 37 சட்டக் கல்லூரிகளும், கர்நாடகாவில் 98 சட்டக் கல்லூரிகளும் உள்ளன. 

ஆனால், 700 பொறியியல் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 3 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன.

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்று இன்னும் அமலில்தான் உள்ளது. 

இதற் காக அந்த அறக்கட்டளை 8 முறை வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே வன்னியர் சங்கத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். சட்டக் கல்லூரி தொடங்குவதற்காக அவர்கள் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

மேலும் வன்னியர் சங்கம் சார்பில் சட்டக் கல்லூரி தொடங்க அளிக் கப்பட்ட விண்ணப்பத்தை காலதாமத மாக நிராகரித்ததற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரூ. 20 ஆயிரத்தை வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் எத்தனை வழக்கறிஞர்கள் தேவைப்படுவர்? என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார். 

அப்போதுதான் எத்தனை சட்டக்கல்லூரிகள் தேவைப்படும்? தற்போதுள்ள கல்லூரிகள் போதுமான தாக உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும் என உத்தரவிட்டனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.10.2016

உங்களுக்கான வாய்ப்புகள்


உங்களுக்கான வாய்ப்புகள் - என்ன செய்ய வேண்டும்?

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? 

அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  

நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். 

அதற்கு நாம் சொல்லும் காரணங்கள்

"நம்ம வேலை கெட்டுடும்"

"இவங்க கொடுக்குற சம்பளத்தக்கு இத வேற செய்யணுமா?"

" நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும்.

இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும்.

 உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? 

வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம் வீட்டு கதவை தட்டிக் கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தற்போதிருக்கும் இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும்.

யாரோ ஒருவரால் உங்களுக்கான வாய்ப்புகளும் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விடவும் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்வது தான் சிறந்த பலனைத் தரும்.

ஒவ்வொரு நாளும் இன்று வேறு ஒரு உச்சத்தைத் தொட வேண்டும் என்றோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் உற்சாகமாக தொடங்குங்கள். 

மேலோட்டமாகவும், அது வரையில் அனுபவத்திடாத ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது எப்போதுமே மனதில் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். 

அந்த தயக்கத்துக்கு அடி பணிந்தால் வாய்ப்புகள் கை நழுவிப் போகத்தான் செய்யும்.  தைரியமாக கெத்தாக ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

ரகுவரன் விட்ட சவாலை ஏற்காமல் பின் வாங்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் வந்திருந்தால். முதல்வனை அவ்வளவு ரசித்திருக்க மாட்டோம் அல்லவா? 

ஆம், ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு போராடுபவனைத்தான் உலகம் விரும்பும்.

நன்றி : விகடன் செய்திகள் - 27.10.2016


மாதவிலக்கை தள்ளிப் போடலாமா


மாதவிலக்கை தள்ளிப் போடலாமா - என்ன செய்ய வேண்டும்?

பீரியட்ஸ் பில்ஸ் சரியா? தப்பா?

மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம்,  ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். 

முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே, அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

இப்போதுள்ள இளம் பெண்கள் அப்படிப் பரபரப்படைவது இல்லை. ‘நாளைக்கு ஃபங்ஷனா? நோ ப்ராப்ளம்! அதுதான் மாத்திரை இருக்கே…’ என கூலாக இருக்கிறார்கள். 

மாதவிடாய் நாட்களை எளிதாகத் தள்ளிப்போடும் மாத்திரைகள் இப்போது அனைத்து மருந்துக்கடைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பெண்களும் சர்வ சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இது சரியா? 

இப்படி இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாமா? 

இதனால் பக்கவிளைவுகள் ஏதும் உண்டா?

பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை… 

பெண்ணுக்கு 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதாவது, கருத்தரிக்க ஏதுவாக,  சினைப்பையில்  முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். கடந்த மாதம் கரு உருவாகாததால், கரு தங்கி வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் உருவாகியிருந்த எண்டோமெட்ரியம் என்ற மெத்தைபோன்ற அமைப்பு வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

 ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்போடு வேலை செய்தால்தான், இந்தச் சுழற்சி சீராக நடக்கும். மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போட நினைத்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம், இந்தச் சுழற்சியை நாம் இடையூறு செய்கிறோம். 

இதனால் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இருக்கும் சீர்மை பாதிக்கப்படுகிறது. இது, ஒரு கட்டத்தில் நம் உடலையும் பாதிக்கிறது. நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டரின்  செயல்பாட்டில் வைரஸ் ஏதாவது புகுந்து தடை செய்வது போலத்தான், இந்த மாத்திரையைச் சாப்பிட்டு மாதாந்திர சுழற்சியை பாதிப்படைய வைக்கிறோம்.

மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பாதிப்புகள்?

தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். 

இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது?

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. எனவே, பெண்களே உஷார்!

மிருதுபாஷினி,
மகளி்ர் நல மருத்துவர், கோவை.

நன்றி : டாக்டர் விகடன் - 01.11.2016

விதவை மறுமண நிதி உதவி


விதவை மறுமண நிதி உதவி - என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்காக அரசு தரப்பில் பெண்களுக்காக பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனவனை இழந்த பெண்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண   நிதி உதவியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படையான தகவல்களைத் தெரிந்து இங்கு கொள்ளலாம்.

1. விண்ணப்பம்:

 உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ கொடுக்க வேண்டும்.

2. நிதி விபரம்: 

 பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்கும் விதவைப் பெண் என்றால் ரூபாய் 30,000-க்கான காசோலையும், ரூபாய் 20,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். படிக்காத விதவைப் பெண் என்றால் ரூபாய் 15,000-க்கான காசோலையும், ரூபாய் 10,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கணவனை இழந்த விதவைப் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 20 வயதிற்கு மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணுக்கு 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

விதவை என்பதற்கான சான்று, மறுமண பத்திரிக்கை, மணமக்களின் வயதுச்சான்று, கல்விச் சான்றிதழ்.

5. தகுதி

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிந்த ஆறுமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. இணைக்க வேண்டியவை

படித்த விதவைப் பெண்ணுக்கான நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

 இது தொடர்பான மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நலத்துறையை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.

--------------------------------------------------------------------------------------------- சு.சூர்யா கோமதி

நன்றி : விகடன் செய்திகள் - 26.10.2016

Tuesday, October 25, 2016

பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்


பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால் 
என்ன செய்ய வேண்டும்?

நடுவானில் எஞ்சின்கள் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும்... எப்படி தெரியுமா?
நடுவானில் பறக்கும்போது விமானத்தின் எஞ்சின்கள் செயலிழந்து போனால், விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், எஞ்சின்கள் செயலிழந்தாலும், விமானம் பறக்கும்.

பொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அப்படியும் ஒன்றுக்கும் மேற்பட்ட எஞ்சின்களில் ஒரு எஞ்சின் பழுதானால் கூட மற்றொரு எஞ்சினை வைத்து பாதுகாப்பாக தரையிறக்கிவிடும் வாய்ப்புள்ளது. 

ஆனால், விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்லா எஞ்சின்களுமே செயலிழந்து போனால் என்ன செய்வது? விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஏனெனில், விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும்.

ஆனால், பறக்கும் திறனை இழக்காது. ஆம். அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். தினசரி விமானத்தில் பயணிப்பவர்கள் கூட இந்த செய்தி புதிதாக இருக்கலாம்.

விமானத்தில் எஞ்சின்கள் செயலிழக்கும்போது த்ரஸ்ட் விசை கிடைக்காமல், விமானம் முன்னோக்கி செல்லாது. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும். இந்த நேரத்தில்தான் அறிவியல் தொழில்நுட்பமும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.

'மே டே' அலர்ட் எனப்படும் அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பையும் விமானிகள் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு, அந்த விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் உதவி மற்றும் ஆலோசனைகளுடன் விமானிகள் செயல்படுவர்.

ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு விகிதத்தில் தரையிறங்கும். உதாரணத்திற்கு, டெல்லி - சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இடையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் உலகின் மிக நீண்ட தூர விமானமான போயிங் 777-200 விமானமானது 1:18 என்ற விகிதத்தில் தரையிறங்கும்.

அதாவது, ஒரு அடி உயரம் குறையும்போது, 18 அடி தூரம் முன்னோக்கி சென்றிருக்கும். எஞ்சின்கள் செயலிழக்கும்போது 32,000 அடியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தால், 175 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை கணக்கிட்டு, அருகிலுள்ள விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் தரையிறக்க வேண்டும்.

ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.

இப்போது மற்றொரு விஷயம். எஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.

இந்த கருவியின் மூலமாக விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும். அதேநேரத்தில், இந்த சாதனம் மூலமாக எஞ்சின்கள் போன்று த்ரஸ்ட் எனப்படும் முன்னோக்கி செலுத்தும் விசையை பெற முடியாது.

மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.

ஆனால், இதற்கு விமானத்தின் எடை,  சீதோஷ்ண நிலை, காற்று வீசும் திசை, விமான நிலையம் அமைந்திருக்கும் தொலைவு, விமானிகளின் சாமர்த்தியம் ஆகிய அனைத்தும் சரியாக அமைய வேண்டும். ஹெட்விண்ட்ஸ் எனப்படும் எதிர்க்காற்றைவிட, டெயில்விண்ட்ஸ் எனப்படும் தள்ளுக்காற்று இருந்தால் சற்றே கூடுதல் தொலைவு பறக்கும் வாய்ப்புள்ளது.

பொதுவாக நடுத்தர வகை மற்றும் பெரிய வகை விமானங்களில் இரண்டு அல்லது நான்கு எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன. அனைத்து எஞ்சின்களுமே ஒரேநேரத்தில் செயலிழப்பது அரிதான விஷயமே. ஆனால், அப்படியும் எஞ்சின்கள் செயலிழந்து பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவங்களும் உண்டு.

2001ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேலே பறந்துகொண்டிருந்த ஏர் டிரான்ஸ்சாட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330-243 என்ற விமானமானது எரிபொருள் இல்லாமல் ஒரு எஞ்சின் செயலிழந்தது.

அப்போது, பைலட்டுகள் உடனடியாக 300 கிமீ தூரத்தில் இருந்த விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர். அப்போது விமானமானது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்தின் எடையுடன் ஒப்பிடும்போது, அந்த ஒற்றை எஞ்சினை வைத்து எளிதாக தரையிறக்க விடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு 120 கிமீ தொலைவில் இருந்தபோது எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோய் மற்றொரு எஞ்சினும் செயலிழந்தது.

இதையடுத்து, மேற்சொன்ன முறையில் விமானத்தின் இறங்கும் விகிதத்தை வட்டமடித்தும், எஸ் டர்ன் அடித்தும் சரியாக குறைத்து பாதுகாப்பாக தரையிறக்கினர். மணிக்கு 370 கிமீ வேகத்தில் அந்த விமானமானது தரையிறங்கியது.

ஆனால், இங்கு மற்றொரு சிக்கல், அந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தை தரையிறக்குவதற்கு ஓடுபாதையின் நீளம் போதுமானதாக இல்லை. மேலும், ஓடுபாதை முடிவில் மலைக்குன்று ஒன்றும் இருந்தது. இதையடுத்து, சமார்த்தியமாக விமானத்தின் 8 டயர்களையும் வெடிக்கச் செய்து விமானத்தின் வேகத்தை அதிரடியாக குறைத்து நிறுத்தினர்.

விமானத்தை கேப்டன் ராபர்ட் பிச் மற்றும் விமானத்தின் முதன்மை அலுவலர் டர்க் டி ஜாகர் ஆகியோர் பத்திரமாகவும், சாமர்த்தியமாகவும் தரையிறக்கி சாதித்தனர். விமான போக்குவரத்து வரலாற்றில் விமான எஞ்சின்கள் செயலிழந்த பின் நீண்ட தூரம் விமானத்தை இயக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.

விமானத்தின் ஒரு எஞ்சினில் தவறான உதிரிபாகத்தை பொருத்தியதால், எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு சம்பவத்தில் விமானி எரிபொருள் நிரப்புவதற்கு கொடுத்த எடை அளவை, தவறாக புரிந்து கொண்டு கிலோவுக்கு பதில் பவுண்ட் மதிப்பில் பணியாளர் ஒருவர் எரிபொருள் நிரப்பிவிட்டார்.

இதனால், பாதியளவே எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக காட்டியதும் விமானி அதிர்ந்து, பின்னர் எஞ்சின் செயலிழந்தத நிலையில் விமானத்தை தரையிறக்கிவிட்டார். பின்னர் விசாரணையில் இந்த குழப்பம் தெரியவந்தது. இதற்கு Dead stick Landing என்று குறிப்பிடப்படுகிறது.

Written By: Saravana Rajan

நன்றி : டிரைவ் ஸ்பார்க்     ஆஃப் பீட் – 25.10.2016

Monday, October 24, 2016

முதல் பதிவுக்கு மட்டுமே தடை


முதல் பதிவுக்கு மட்டுமே தடை - என்ன செய்ய வேண்டும்?

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்; அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது' என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.

அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், '22 அ' பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதை அமல்படுத்த, எட்டு ஆண்டுகளுக்கு பின், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து, சுற்றறிக்கை வரும் என, சார் பதிவாளர்கள் காத்து இருந்தனர்.

ஆனால், அரசாணை நகலின் கீழ் பகுதியில், 'தகவலுக்காக' என, குறிப்பிட்டு பதிவுத்துறை தலைவரின் பெயரில், சார் பதிவாளர்களுக்கு, நகல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், இதை அமல்படுத்துவதா, வேண்டாமா என, சார் பதிவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளில் உள்ளபடி, அங்கீகாரம் இன்றி வீட்டு மனையாக பதிவான பத்திரங்களை வைத்து இருப்பவர்கள், அடுத்தடுத்து விற்றால், அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படும்; அதற்கு தடை இல்லை. 

புதிதாக விவசாய நிலத்தை, வீட்டு மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.10.2016

சிபில் ஸ்டேட்மெண்ட் இனி இலவசம்


சிபில் ஸ்டேட்மெண்ட் இனி இலவசம் - என்ன செய்ய வேண்டும்?

இனி சிபில் அறிக்கை இலவசம்

செப்டம்பர் 1-ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய மான உத்தரவை தனியார் கடன் தகவல் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. 

அந்த உத்தரவில் தனிநபர்களின் கடன் தர மதிப்பு அறிக்கையை தனியார் கிரெடிட் ரேட் டிங் நிறுவனங்கள் இனி ஆண்டு தோறும் ஒருமுறை அவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி சிபில் அமைப்பின் (Credit Information Bureau (India) Ltd - CIBIL) கடன் மதிப்பை தனிநபர்கள் தெரிந்து கொள்வதுடன், கடன் விவகாரங் களில் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும் முடியும் என குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து தனிநபர் கிரெடிட் ரேட்டிங் நிறுவனங் களும் சிபில் ஸ்கோர் அறிக்கையை இலவசமாக கேட்பவர்களுக்கு அளிக்க உள்ளன.

சிபில் அறிக்கை

2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிபில் நிறுவனத்தின் முதன்மையான பணி கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதுதான். குறிப்பாக கடன் வழங்கும் நிறு வனங்கள் தங்களிடம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கின்றன. 

இப்படி திரட்டப்படும் தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட தனிநபர் களின் கடன் பெறும் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான புள்ளிகள் அளிக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றாலோ, அல்லது கடனை திருப்பி செலுத்து வதில் காலதாமதம் ஏற்பட்டாலோ வாடிக்கையாளரின் கடன் மதிப்பு குறைக்கப்படும். 

இதனால் சம்பந்தப்பட்ட தனிநபர் வேறொரு நிறு வனத்திடம் கடன் வாங்க முயற் சித்தால், சிபிலில் அவரது மதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு கடன் மறுக்கப்படும். பொதுவாக கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சிபில் மதிப்பின் அடிப்படையிலேயே கடன் கொடுக்கின்றன.

சிபில் அறிக்கைபடி 750-900 புள்ளி கள் சிறப்பான கடன் மதிப்பாகும். அதற்கு கீழே 650-750 சராசரியான புள்ளிகள். 550- 650 புள்ளிகள் மோசமானதாகவும், 350-550 புள்ளிகள் மிக மோசமானதாகவும் மதிப்பிடப்படும். கிரெடிட் கார்டில் தவணைக் காலம் தவறுவதுகூட இந்த புள்ளிகள் மதிப்பு குறைய காரணமாக அமையும். 

பான் எண் அடிப்படையில் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் ஒரு கடனை வாங்கி செலுத்தாமல், வேறொரு முகவரியிலிருந்து வேறொரு நிறுவனத்தில் கடன் வாங்குவதும் தடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கடன் மதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் பல மக்களுக்கு சென்று சேரவில்லை. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்குகூட தங்களுடைய கடன் மதிப்பு என்ன என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடையாது. அல்லது இழந்த மதிப்பை உயர்த்துவதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்கவில்லை. 

தற்போது தனிநபர்கள் இந்த அறிக்கையை ஒருமுறை வாங்குவதற்கு ரூ.550 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு என ஏதாவது ஒரு வகையில் நாம் இந்த சங்கிலியில் பிணைந்துள்ளோம். இதனால் குறைந்தபட்சம் தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்கிற விவரத்தை ஆண்டுதோறும் தெரிந்து கொள்ளவாவது இது பயன்படும். 

தவிர நமது நிதியியல் தவறுகளை திருத்திக் கொள்ளவும், எதிர்கால கடன் மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் சிபில் கடன் மதிப்பு அறிக்கையை இலவசமாகக் கேட்டுப் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 24.10.2016