disalbe Right click

Saturday, February 18, 2017

குற்றவாளிகளிடம் அபராதம் வசூலிக்கும் வழி


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன?
மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. 

 உச்சநீதிமன்றம்.அபராதத்தை செலுத்தத்தவறி னால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் நடைமுறைகள் பற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறியதாவது:

குற்றவழக்குகளில் துாக்கு, ஆயுள், கடுங் காவல், மெய்க்காவல்(சாதாரண) சிறை தண்டனை, அபராதம் தண்டனையாக விதிக் கப்படும். கடுங்காவல் தண்டனை என்பது சிறை யில் வேலை பார்க்க வேண்டும்.சாதாரண தண்டனை என்பது சிறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. இவ்வழக்கில் சாதாரண சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

குற்றவழக்கை பொறுத்த வரை, 'ஆளுடன் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது சட்டத்தின் நெறி. 

இதன்படி ஜெயலலிதா இறந்ததால், அவருக்கு எதிரான வழக்கில் அனுபவிக்க வேண்டிய சிறை தண்டனை குறித்த பகுதி,உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் இறந்தால், 30 நாட்களுக்குள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், வழக்கின் ஒரு தரப்பினராக இணைய வேண்டும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அதுபோல் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டகுற்றவாளி இறந்து போனால்,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அபராதம் தொடர்பான குறைபாடு பற்றி அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களை வழக்கின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள மனு செய்ய வழிவகை உள்ளது. 

ஆனால், இவ்வழக்கில் தீர்ப்புஒத்தி வைக்கப்பட்ட பிறகு தான், முதல் குற்றவாளியான ஜெ.,இறந்தார். சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் போது, அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் தண்டனை காலத்தின் நான்கின் ஒரு பங்கு காலத் திற்கு குறையாத ஒரு காலத்தை, தண்டனையாக அனுபவிக்க உத்தரவிடலாம். 

அதன்படி 4 ஆண்டு சிறை தண்டனையின் ஒரு பகுதியான, ஓராண்டு சிறை தண்டனை, இவ் வழக்கில் விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக் குள், அபராதத்தை வசூலிக்கும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

செலுத்த தவறும் பட்சத்தில், வருவாய் வசூல்சட்டப்படி, அபராதத்தை வசூலிக்க சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியானவர், குற்றவாளியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் கொண்டுவர வேண்டும். தொகையை வசூலித்து, அரசுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

சசிகலா உட்பட 3 பேரின் தண்டனையைப் பொறுத்தவரை, அபராதத்தை செலுத்தாமல், அதற்கு பதிலாக அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க விரும்பினால் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்களிப்படுவர். 

அப்படிகூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில், அவர்கள் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து 6 ஆண்டு களுக்கு பொதுத்தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஜெ.,விற்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க, அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்துக்களை, பறிமுதல் செய்ய, மேற்கண்ட வழிவகையை விசாரணை நீதிமன்றம் பின்பற்றும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017 

சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:


சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:

சட்ட நிபுணர்கள் கருத்து
சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. 

தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் பழனிசாமி அரசு, ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.

அவகாசம்

இதுகுறித்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கூறியதாவது:

சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என கேட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். 

அதை,எம்.எல்.ஏ.,க்கள் தான் தொடர வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சுதந்திரமாக, மனமுவந்து, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும். 

சட்டசபையை கூட்ட, இரண்டு வார அவகாசத்தை கவர்னர் வழங்கி உள்ளார். அப்படி இருக்கும் போது, இரண்டு நாட்களில் சபை கூட்டப்படுகிறது. 

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 14 நாட்களுக்கு முன், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட வேண்டும். அப்படி யாராவது தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், அதை தான் முதலில் எடுக்க வேண்டியதிருக்கும். 

அதனால் தான், இரண்டு நாட்களில் சபை கூட்டப்பட்டதாக கருதுகிறேன்.

ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை, பரிசீலிக்காமலே நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே,எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டுகளில் இருந்து அழைத்து வந்துள்ளனர். வெளிப்படையான ஓட்டெடுப்பு என்றால் தங்களுக்கு தகுதியிழப்பு ஏற்படும் என, எம்.எல். ஏ.,க்கள் சிலர் பயப்படலாம்; ரகசிய ஓட்டெடுப்பு என்றால் எந்த பயமுமின்றி ஓட்டுப்பதிவு செய்யலாம். 

பலத்தை நிரூபிக்க தான், சட்ட சபை கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளி யேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது எப்படி சரியாகும்? இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது:

கர்நாடகாவில், 2010ல், பா.ஜ., ஆட்சியின் போது, முதல்வராக இருந்த எடியூரப்பா, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்; அதில், வெற்றி பெற்றார். அப்போது, அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு பற்றி பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து, மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, கவர்னர் உத்தரவிட்டார்; அதிலும், அவர் வெற்றி பெற்றார்.

எனவே, நம்பிக்கைதீர்மானத்தின் மீதான ஓட் டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்பதில் கவர்னர் திருப்தியடைந்தால், மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கூறலாம். ஏற்கனவே, சபையில் இருந்து, தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள் ளதால் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கோர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளியேற்றம்:

 உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், சபையை நடத்த முடியவில்லை; அதனால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற நிலையை, சபாநாயகர் எடுக்க முடியும். 

எதிர்க்கட்சி தலைவர், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, விதிகளை சுட்டிக்காட்டி கேட்கிறார்.

ரகசிய ஓட்டெடுப்பை நிராகரிப்பதற்கான காரணங்களை கூறிவிட்டு, அதை சபாநாயகர் நிராகரித்திருக்கலாம்; அவ்வாறு செய்யாமல், நேரடியாக கோரிக்கையை நிராகரித்திருப்பது தெரிகிறது.

உத்தர பிரதேச வழக்கில் கூறிஉள்ளபடி, முதல்வர் பதவிக்கு உரிமை கோருபவர்கள் முன்னிலையில், சட்டசபை கூட்டத்தை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தியிருக்கலாம் அல்லது ரகசிய ஓட்டெடுப்பை பின்பற்றியிருக்கலாம். 

ஆனாலும், ரகசிய ஓட்டெடுப்பு பற்றி முடிவு செய்ய வேண்டியது சபாநாயகர் தான்.

சட்டசபையில் இருந்து, தி.மு.க.,வினர் வெளியேற்றம், அதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வழக்கு தொடரலாம். இதுவும், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே.

 இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017

கூடுதல் காலம் சிறையில் இருந்தால்


கூடுதல் காலம் சிறையில் இருந்தால் 
அபராதம் செலுத்த வேண்டியதில்லையா?

5 ஆண்டு சிறையில் இருந்தாலும் சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு
குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.

நான்கு ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விலக்கி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா, சுதாகரன், இளவரசி அடைக்கப்பட்டனர். இவர்கள் தரப்பில், அபராத தொகையை செலுத்தியதாக தெரியவில்லை; 

ஆனாலும், தண்டனை காலத்துக்குள், அபராத தொகையை செலுத்தலாம்; இல்லையென்றால், சட்டப்படி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

குற்ற வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டால், உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்தில், அதை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தி விட்டு, மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும், மேல் முறையீட்டு மனுவில் இணைக்க வேண்டும். இது ஒரு நடைமுறை.

கூடுதல் காலம் அபராத தொகையின் அளவு அதிகமாக இருந்தால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து,தண்டனையை நிறுத்தி வைக்க கோர முடியும். அதில், அபராதமும் அடங்கும். அதை, உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம்.

அபராத தொகையை, தண்டனையை அனுபவிக்கும் காலத்துக்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், நீதிமன்றம் விதித்துள்ள படி, கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை என்கிற அர்த்தம் அல்ல.

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், ஆறு ஆண்டுகள் வரை, அபராத தொகையை வசூலிக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும். 

குற்றவாளி பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதை முடக்கி வைத்து, கலெக்டர் மூலம், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

அந்த சொத்துக்களை விற்று, நீதிமன்றத்துக்கு அபராத தொகையை, செலுத்தும்படி உத்தரவிட முடியும். அதுவே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டால், அபராத தொகையை வசூலிக்க முடியாது.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017

அரசு ஊழியர் ஓய்வு பெற்று இருந்தாலும்


அரசு ஊழியர் ஓய்வு பெற்று இருந்தாலும்

சேலம் மாவட்டம் ஓலைப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாதேசு. அவர் பணிஓய்வு பெறுவதற்கு 30.6.11 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் நாவாபட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியபோது முதியோர் ஓய்வூதியம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

எனவே ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் அவருக்கு இந்த குற்றச்சாட்டுக்கான நோட்டீசு (சார்ஜ் மெமோ) வழங்கப்பட்டது.

இந்த ‘மெமோ’வையும், ஓய்வு பெற அனுமதித்து பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து ஐகோர்ட்டில் மாதேசு வழக்கு தாக்கல் செய்தார். பணியில் இருந்தபோது சஸ்பெண்டு செய்யாமல், ஓய்வு பெற அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதில் கூறியிருந்தார். 

இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மாதேசு அப்பீல் செய்தார். இதுபோன்ற பிரச்சினையில் இருவேறு கருத்துகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்ததால், இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், என்.பால்வசந்தகுமார், கே.வெங்கட்ராமன் ஆகியோரை கொண்ட முழு டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மனுதாரர் ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே ஓய்வூதிய விதி 9(2)(பி)–ன்படி மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம் என்று கூறி மாதேசுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

01.05.2013 - நாளிதழ் செய்தி

அரசு அலுவலர்கள் மீது வழக்கு

அரசு அலுவலர்கள் மீது வழக்கு
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இவர்களில் யார் மீதாவது விசாரணை நடத்த உயரதிகாரிகளிடத்தில் குடிமகன் அனுமதி கோரினாலோ அல்லது வழக்கு தொடர கோரினாலோ 3 மாதத்திற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி அனுமதி கோரினார்.
இதற்கு சுப்பிரமணியசாமிக்கு காலதாமதமாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரி சுப்பிரமணியசாமி கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார்.
அதற்கு கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. இதையடுத்து காலதாமதமாக பதில் அளித்த பிரதமர் அலுவலகத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள மனுவில் ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு பிரதமர் அலுவலகம் 16 மாதங்கள் கழித்துத்தான் அனுமதி அளித்தது.
இது கால விரையமாகும். அதனால் அனுமதி அளிக்க ஒரு குறிப்பிட்ட காலவரம்பை சுப்ரீம்கோர்ட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதோடு அதன் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் 16 மாதகாலமாக ஆ.ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
இரு தரப்பினர்களிடையே சூடான விவாதம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட பின்னர் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
யாராவது அரசு ஊழியர், அதிகாரி, அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை கோரியோ,வழக்கு தொடர அனுமதி கோரியோ, எந்த குடிமகனாவது அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால் அவர்கள் 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் 4-வது மாதத்தில் அனுமதி அளித்ததாக கருதி அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினபூமி நாளிதழ் - 01.02.2012

Friday, February 17, 2017

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?


பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

பேரவை கூடும்போது, முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவின்படி, பேரவைத் தலைவர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிவிப்பார். பேரவையில் பெரும்பான்மையை நிருபித்தபின்னரே புதிய அரசு முழுமையாக செயல்படத் தொடங்கும்.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 பேர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமிருக்கிற 233 உறுப்பினர்களில் சபாநாயகர் தவிர்த்து 232 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதில், சபையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம்.

இதன்படி பேரவையில் 200 உறுப்பினர்கள் இருந்தால் 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவையில்லை.

யாருக்கும் பெருலும்பான்மை கிடைக்காவிட்டால் 356 பிரிவின் கீழ் பேரவை கலைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 4 முறை ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இரு முறையும் (1976 ஜனவரி 31, 1991 ஜனவரி 30), எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1980 பிப்ரவரி 17), ஜானகி தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1988 ஜனவரி 30) கலைக்கப்பட்டது.

- நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?

ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ‌இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.

- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?

ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்னையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை உறுப்பினர்கள் தவிர்க்க முடியுமா?

சுயேச்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்களாம். அரசியல் கட்சிகள், அக்கட்சியின் கொறடா உத்த‌ரவின்படி வாக்களிப்பார்கள்.

- சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?

தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

- வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்கள்?

சபாநாயகரே அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், பேரவையின் கதவுகள் மூடப்படும். பேரவை கூடியதும் முதல்வர் தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வருவார். அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மற்றும் வெவ்வேறு பேரவை கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடுவார்.

 234 உறுப்பினர்களும் ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர்.

ஒவ்வொரு பிரிவினரையும் அரசை ஆதரிப்பவர்களை முதலில் எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

 அடுத்ததாக எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

அடுத்தபடியாக நடுநிலை வகிப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.

எழுந்து நின்று தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்பவர்களின் பெயர்களை குறித்து வைத்து, வாக்குகளாக எண்ணப்படும்.

ஆறு பிரிவினரும் முடித்த பின், அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முதல்வரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக அறிவிக்கப்படும்.

இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு வாக்கு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக வாக்களிக்க முடியும்.

நன்றி : தினமணி நாளிதழ் : 17.02.2017

பவர் பத்திரம் பவர் இழக்கும் தருணங்கள்

பவர் பத்திரம் பவர் இழக்கும் தருணங்கள்

1. பவர் எழுதிக் கொடுத்தவர் அதனை எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யும் பொழுது.

2. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது.

3. பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோ எதிர்பாராவிதமாக புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது அல்லது நொடித்து  போகும்பொழுது.

4. பவர் பத்திரத்தை பல நபர்கள் எழுதிக் கொடுத்து அப்படி எழுதிக்  கொடுத்தவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாரா விதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது 

5.  பவர் பத்திரத்தை பல நபர்கள் பெயரில் எழுதி வாங்கி,  அப்படி எழுதி வாங்கியவர்களில் யாராவது ஒருவர் எதிர்பாராவிதமாக இறந்துவிடும் பொழுது அல்லது புத்தி சுவாதீனம் இன்றி போகும்பொழுது.

6. பவர் பத்திரம் எழுதப்பட்ட நாளில் இருந்து (எழுதப்பட்ட நாளையும் கணக்கில் சேர்த்து) 120 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாத பொழுது.

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம்!


எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம்!

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்?
கோவை:கூவத்துார் விடுதியில், சொகுசு வாழ்க்கை நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சசிகலா ஆதரவுடன் இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சர் கள் உட்பட அனைவரும் கூவத்துார் விடுதிக்கு சென்றுள்ளனர். கூவத்துார் விடுதியில் அடைபட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. தங்களது எண்ணத்துக்கு ஏற்ப செயல்படாத எம்.எல்.ஏ.,க் களை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, தெரிவித்துள்ளனர்.

இதை வெளிப்படுத்தும் விதமாக, கூவத்துாரில் இருந்து பதவியேற்பு விழாவுக்கு கிளம்பி சென்ற, எம்.எல்.ஏ.,க்களை, பொதுமக்கள் கடுமையாக திட்டித் தீர்த்தனர். இதற்கிடையில், அரசு சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோதமாக சொகுசு விடுதியில் தங்கி, மறைமுகமாக யாரோ அளிக்கும் பணத்தில் பொழுதை கழிப்பதால், அவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

ஊழல் தடுப்பு சட்டம், -1988ன் படி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பதவி வகிப்பவர்கள், தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கேற்ப தான் வாழ வேண்டும். சட்டவிரோதமாக, யாரோ ஒருவரது பணத்தில் வாழக் கூடாது. ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், கூவத்துார் விடுதியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

அரசு பதவி வகிப்பவர்கள், எந்த ஒரு சலுகையும் பெறக் கூடாது. இதை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் யாரோ அளிக்கும் பணத்தில், சொகுசாக இருந்துள்ளனர். அவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும், பல மடங்கு சொகுசு நிறைந்த விடுதியில் தங்கி யுள்ளனர். நாள்தோறும், ஒரு எம்.எல்.ஏ., வுக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படு கிறது. இதற்கான பணம், யாரிடம் இருந்து வருகிறது என, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். 

எந்தவித சட்டவிரோத பலனையும் அனுபவிக்க மாட்டேன் என, உறுதிமொழியுடன் பதவி யேற்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், மறைமுக சலுகை பெற்றது சந்தேகங்களை எழுப்புகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு பதவியில் உள்ள நபர்கள், தங்களது சம்பளத்துக்கு மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ., பதவியை தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால், ஊழல் தடுப்பு சட்டம் தெரிந்த அதிகாரிகள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2017

Thursday, February 16, 2017

சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க


சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க
ஒரு சட்டசபையில் ஆட்சியமைக்க அழைப்பதற்கு கவர்னர் என்ன செய்ய வேண்டும்?
சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சியின் தலைவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை குறித்து சந்தேகம் வந்தால் பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி முதல்வராக பொறுப்பேற்றவர், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது இருக்கின்ற மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்" இதுதான் விதி.

அது போன்ற சூழ்நிலையில் ஆளுநர் அவர்கள் கட்சியின்
பெரும்பான்மையை நிரூபிக்க இரு வகைகளை பின்பற்றுவார். 

ஒன்று ஃப்ளோர் டெஸ்ட். (loor test)
மற்றொன்று காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட்.(composite floor test)

 ஃப்ளோர் டெஸ்ட் என்றால் என்ன?
முதலில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலம் தனக்கு உள்ளதாக சொல்லும் கட்சித்தலைமையை ஆட்சி அமைக்க அழைத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்து, அவரை பெரும்பான்மை நிரூபிக்கக் கோர வேண்டும். 

அது போன்று அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற  உறுப்பினர்களில்  சபாநாயகர் தவிர 233 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை இருவரும் சரிசமமான உறுப்பினர்களின்  ஆதரவை பெற்றால், சபாநாயகர் யாரை ஆதரிக்கிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

சில சமயங்களில் ஆளுநரால் இதில் சில சலுகையும் வழங்கப்படும். அதாவது சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதிலாக,சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம். 

இதன்படி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று மொத்தம் 220 உறுப்பினர்கள் இருந்தால், 111 பேரின் ஆதரவு இருந்தாலே போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவை என்ற அவசியமில்லை. இதற்குப் பெயர்தான்  ஃப்ளோர் டெஸ்ட் எனப்படும்.

காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் (composite floor test)
இது தவிர இன்னொரு முறையும் இருக்கிறது. அது காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் ஆகும். 

அதாவது முதல்வர் பதவிக்கான போட்டி இருவருக்கு இடையில் இருக்கும் பட்சத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட். 

இதற்காக சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டலாம். 

சட்டப்பேரவையில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவர் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். யார் பெரும்பான்மை நிரூபிக்கிறார்களோ, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் முதல்வர் பதவியேற்க அழைக்கப்படுவார். 

தற்போது தமிழ்நாட்டுக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்கள் இந்த முறையைத்தான்  பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்த முறை இதுவரை தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்பட்டதில்லை. 

உத்திரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் கல்யாண் சிங்கும், ஜெகதாம்பிகா பால் இருவரும் முதல்வராக செயல்பட... இது போன்று கூட்டாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட இந்த முறையானது இதுவரை இந்தியாவில் ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்:உச்ச நீதிமன்றம் அலசல்

Image may contain: 1 person, text

குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்:உச்ச நீதிமன்றம் அலசல்

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தர வில் இருந்த குளறுபடிகளை, உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

அதன் விபரம்:

* ஆந்திர மாநிலம், ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் இருந்து, விவசாயம் மூலம், 52.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், 5.78 லட்சம் ரூபாயாக குறிப்பிடப்பட்ட வருமானத்தை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், விவசாய வருமானத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.

ஆனால், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை அப்படியே ஏற்று, விவசாய வருமானத்தை, 52.50 லட்சம் ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

* சாட்சியங்களை முழுமையாக புறக்கணித்த தோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு மற்றும் உத்தரவு, குற்றவியல் நீதிமன்றத்தை தானாக கட்டுப்படுத்தாது என்றாலும், அதை யும், உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது; அது சரியல்ல

* வங்கி கடன்கள் உள்ளிட்ட கடன் தொகையை, வருமானமாக உயர் நீதிமன்றம் எடுத்துள்ளது. வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்ட கடன்களை, தவறுதலாக கூட்டி, 24.17 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டியுள்ளது. ஆனால், சரியான கணக்குப்படி பார்த்தால், 10.67 கோடி ரூபாய் தான் இருக்க வேண்டும்

* அரசு தரப்பு கூறியுள்ள, 5.99 கோடி ரூபாயை கழித்த பின், 18.17 கோடி ரூபாய் வருமானமாக, உயர் நீதிமன்றம் காட்டியுள்ளது. இதன்மூலம், கடன் தொகை முழுவதையும் வருமானமாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டி தவறு செய்துள்ளது; இதை ஏற்க முடியாது

* ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், சட்டப்படியான வருமானம் இல்லை என்பதால், அதை வருவாய் ஆதாரமாக, லஞ்ச ஒழிப்புத் துறை காட்டவில்லை. நகைககள், ரொக்கம், 'டிமாண்ட் டிராப்ட்' மற்றும்வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள் என பரிசுப் பொருட் கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது

* மொத்தம், 1.26 கோடி அளவுக்கு பரிசுப் பொருட்கள் வந்ததாக, கூறப்பட்டுள்ளது. ஆனால், 1.5 கோடி ரூபாய் அளவுக்கு, பரிசுப் பொருட்கள் பெற்றதாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. இந்தப் பரிசுப் பொருட்களை, ஜெயலலிதாவின் வருமானமாக கருதி, அதற்கு வரி விதிக்கப்பட்டு, வரியும் ஜெயலலிதாவால் செலுத்தப்பட்டுள்ளது. இதை, சிறப்பு நீதிமன்றம் கவனித்துள்ளது.

கட்சி தொண்டர்கள் அளித்த சாட்சியங்களை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது; பரிசு பொருட்கள் மூலம் வருமானம் வந்ததாக, ஜெயலலிதா கூறியதையும், சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

* சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, எந்த வழியிலும் நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததையும், ஜெயலலிதா தரப்பில்முன்வைக்கப்பட்ட வாதத் தையும் ஏற்றுக் கொண்டுள்ளது

* சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை நிராகரிக்கும் வகையில், ஏற்றுக் கொள்ளும் வகையிலான காரணத்தை, உயர் நீதிமன்றம் கூறவில்லை. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்க, உயர் நீதிமன்றமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

* 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்.,' நிறுவனங்களுக்கான வருவாயாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டதற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

சந்தாதாரர்களிடம் இருந்து, டிபாசிட் திட்டமாக, 14.10 கோடி ரூபாய் சந்தா தொகையாக வந்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நம்பவில்லை. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பின் தான், இந்த டிபாசிட் திட்டம் என்கிற கதை வந்ததாக, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விஷயங்களுக்குள் எல்லாம், சிறிதளவே உயர் நீதிமன்றம் சென்றாலும், ஜெயா பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தின் வருமானமாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. 

எங்களைப் பொறுத்தவரை, போதிய ஆதாரங் களை சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்து, முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு, கூடுதலாக, நான்கு கோடி ரூபாயை வருமானமாக எடுத்து கொள்ள, உயர் நீதிமன்றம் அனுமதித்ததில் நியாயமில்லை

* சூப்பர் டூப்பர், 'டிவி' நிறுவனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது; ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. 

இதற்காக, உயர் நீதிமன்றம் பரிசீலித்த ஆதா ரத்தை, எங்களால் ஏற்க முடியவில்லை. எனவே, ஒரு கோடி ரூபாய் வருமானத்தை, ஏற்க முடியாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் – 

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.2017

இந்நாள் முதல்வரின் முன்னாள் வரலாறு

Image may contain: 4 people, text

இந்நாள் முதல்வரின் முன்னாள் வரலாறு

அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள்.
நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம்.
அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர்.
அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி!
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் கடைக்குட்டி பழனிசாமி. கல்லூரியில் படிக்கப் பிடிக்காமல் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர்.
காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் 'வெல்ல மூட்டை’, 'சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழிவைத்தார்கள். ஆனால், 'அதற்கு எல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகுமா?’ எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்தார்.
அந்த வட்டாரத்தில் 'பங்காளிச் சண்டை’ மிகப் பிரசித்தம். அப்படி பழனிசாமி குடும்பத்தின் பங்காளி வகையறாவுக்குள் 10 அடி நிலத்துக்காக மூண்ட மோதல், எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் கொலையாகும் வரை சென்றது. அந்த வழக்கில் சிக்கிய பழனிசாமியோடு சேர்ந்து சிலர் மீது நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அரங்கேற, வழக்கு தள்ளுபடி ஆனது. சமரச உடன்படிக்கை எல்லாம் ஏற்பட்டு ஒருவழியாக மீண்டார்கள் பழனிசாமி தரப்பினர்.
அதன் பின்னர் ஆவேசத்தை அடக்கியேவாசித்தார் பழனிசாமி.
சமூகப் பெரியவர்கள் மூலம் செங்கோட்டையனுடன் கிடைத்த அறிமுகம், பழனிசாமியின் அரசியல் தாயமாக அமைந்தது. 1991-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பழனிசாமி,
அதன் பிறகு அரசியலில் ஏற்ற இறக்கங்களுடனேயே பயணித்தார். 'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை’யாக செங்கோட்டையனைப் புறம்தள்ளி வளர்ந்தார்;
ஏக உட்கட்சி எதிரிகளைச் சம்பாதித்தார்; தேர்தல்களில் தோற்றார்; கட்சிப் பதவிகளை இழந்தார் என பல தகராறுகளுக்குப் பிறகு 'மன்னார்குடி’ ராவணன் நிழலில் பதுங்கினார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 'இந்த முறை அமைச்சராக இல்லாவிட்டால், தன்னைக் கட்சியில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்’ எனக் கணித்தார். மன்னார்குடி சேனலிடமே சரணடைந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஒருவழியாக மந்திரி பதவியைப் பிடித்தார்.
துறையில் சாதித்தது என்ன?
தமிழ்நாடு முழுக்க 62,294 கி.மீட்டருக்கு நீளும் சாலையைப் பராமரித்துவருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 11,752 கி.மீ. அந்தச் சாலைகளின் அவலங்களை வாகன ஓட்டிகளிடம் கேட்டால், கதைகதையாகச் சொல்வார்கள்.
பல்லாங்குழிகளாக அல்ல.... நவீன மழைநீர் சேகரிப்புக் குட்டைகளாக அவை பல் இளிக்கின்றன. ஓர் அமைச்சர் எதையெல்லாம் சாதித்தார் என்றுதானே ஒரு பட்டியல் இருக்க வேண்டும். ஆனால், நம் அமைச்சருக்கு எதையெல்லாம் சாதிக்கவில்லை என்ற பட்டியல்தான் நீளம்.
இதோ நீள்கிறது!
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைக்கும் திருவான்மியூரில் ஏக போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்ப்பதற்காக ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை, நீலாங்கரையில் இணைக்கும் வகையில் இரண்டு கி.மீ தூரத்துக்குப் புதிய சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க, 204.20 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்ட திட்டம் அந்தரத்தில் நிற்கிறது.
2,160 கோடி ரூபாய் செலவில், சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் முடியவில்லை.
'மதுரையில் மாட்டுத்தாவணி அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ நீள மதுரை சுற்றுச்சாலை, 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச் சாலையாக உருவாக்கப்படும்’ என்றார்கள். அது நிறைவேறவில்லை.
'அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நாமக்கல்-திருச்செங்கோடு சாலையின் 30.88 கி.மீ தூர இருவழிச் சாலை, 126 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்’ எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா. பணிகளுக்கு பிள்ளையார் சுழிகூட விழவில்லை.
ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை 57 புதிய பாலங்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவை ஆட்சி முடியும் தருணத்திலும் முழுமை பெறவில்லை.
'சென்னையில் வியாசர்பாடி மேம்பாலம் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார் பழனிசாமி. எந்த அக்டோபர் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
'எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என 110-ம் விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். அது எப்போது நிறைவேறும் எனத் தெரியாது!
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவதாகச் சொல்லி 'தொலைநோக்குத் திட்டம்-2023’ என ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில், பல வண்ண கலர் மத்தாப்புகள் கண் சிமிட்டின. அதிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றி விரிவாகவே அலசியிருந்தது விஷன்-2023. '15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 4.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 4,000 கோடி ரூபாய்கூட ஒதுக்கப்படவில்லை!
ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் டபுள் செஞ்சுரியை எட்டப்போகின்றன. அவற்றில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகள் வெளியிட்டார். இதில் ஆறு பணிகளே முடிக்கப்பட்டிருக்கின்றன. நில எடுப்பிலும் திட்ட அறிக்கை தயாரிப்பிலும் எஞ்சிய அறிவிப்புகள் கிடக்கின்றன. ஆனால், ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு, அரசாணைகள் போட்டதையே பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர். எங்கே போய் முட்டிக்கொள்ள?!
திக்கித்திணறும் சென்னை!
'புதிய எல்லைச் சாலை மூலம் மாமல்லபுரமும் எண்ணூரும் இணைக்கப்படும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி துறைமுக வடக்கு இணைப்புச் சாலை வழியாக, கிழக்குக் கடற்கரை சாலை - மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு வரையில் அமைக்கப்படும் இந்த எல்லைச் சாலையைச் சுற்றிலும் இணைப்புகளை ஏற்படுத்தி, எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன், திறமையான வணிகப் போக்குவரத்துக்கும் துறைமுக இணைப்புக்கும் உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டது.
ஆனால், திட்டம் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டு நிதி உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் காத்திருக்குமா?
சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு சட்டமன்ற விதி 110-ன் கீழ் ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் 250 கி.மீ சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன்கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்திருந்தார்கள்.
முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்தப் பணிக்கு இப்போதுதான் ஒப்புதலே கிடைத்திருக்கிறது. இனி அது எப்போது தொடங்கி எந்த நூற்றாண்டில் நிறைவேறுமோ?!
புறக்கணிக்கப்படும் திருவள்ளுவர்!
கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகள் போய் வருவதற்காக, மூன்று படகுகளை இயக்கிவருகிறது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகள் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் போய் வருகிறார்கள்.
ஆனால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதால், திருவள்ளுவர் சிலையை மாற்றாந்'தாய்’ மனப்பான்மையுடனேயே அணுகுகிறது அ.தி.மு.க அரசு. பல சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் கப்பல் போக்குவரத்து நடத்திவிட்டு, பருவநிலை, கடல் அலைச் சீற்றம் எனக் காரணம் சொல்லி, பக்கத்திலேயே இருக்கும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல மறுக்கிறார்கள்.
'வள்ளுவர் சொல்லிய உலகப் பொதுமறை கருத்துக்கள் எல்லாம், உலகத்துக்குத்தான்... நமக்கு இல்லை’ என நினைத்துவிட்டார்கள்போல!
டோல்கேட் கொள்ளை!
'சாலை அமைக்க 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு 3,500 கோடி ரூபாய் வரையில் டோல்கேட்டில் வசூல் செய்கிறார்கள். சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை; மின் விளக்குகள் இல்லை; வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லை; சர்வீஸ் சாலையும் இல்லை; சுங்கச்சாவடிகளையும் முறைப்படுத்துவதோடு தனியார் வசம் உள்ள சுங்கச்சாவடிகளை ரத்துசெய்துவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு பல கட்டமாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
ஆனால், இது எதற்கும் 'எடப்பாடியாரிடம்’ இருந்து ரியாக்‌ஷனே இல்லை. அரசியல் கட்சிகள் பலத்த போராட்டம் நடத்தியபோதும் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோதுதான் திருவாய் மலர்ந்தார்.
அப்போதும் என்ன சொன்னார் தெரியுமா? 'சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் ஒரே சீராகக் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்’
இந்தக் கோரிக்கையை வைக்க ஓர் அமைச்சர் எதற்கு...
அவருக்குக் கீழ் செயல்பட இத்தனை அதிகாரிகள் எதற்கு?!
___________________________________________________________________________
செங்கோட்டையனுக்கு செக்!
அரசியலில் செங்கோட்டையன்தான் பழனிசாமிக்கு ஏணி. ஆனால், அ.தி.மு.க அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை, அங்கு இருந்து தூக்கியடித்ததில் பழனிசாமிக்குப் பெரும் பங்கு உண்டாம்.
செங்கோட்டையன் மீண்டும் தலையெடுத்து வந்துவிட்டால் ஐவர் அணியில் இடம்பெற்று இருக்கும் தன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், செங்கோட்டையன் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருக்கிறாராம் எடப்பாடியார். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் தங்கமணி... இந்த மூவர் கூட்டணி நடத்தும் 'பவர் பாலிட்டிக்ஸில்’ பலர் சத்தம் இல்லாமல் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்களாம்!
______________________________________________________________________________
சாதிக்காரர்களுக்கே சான்ஸ்!
எதிர்க்கட்சிக்காரனாக இருந்தாலும் தன் சாதியைச் சேர்ந்தவர் என்றால், நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட்டுகள் அவருக்கே ஓ.கே செய்யப்படுமாம். சொந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் வேறு சாதியினர் என்றால்... தடாதான்! துறையில் மட்டும் அல்ல, கட்சிப் பதவிகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த கட்சித் தேர்தலில் சேலத்தின் 23 ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்துக்கு சிபாரிசு போக பெரும் வசூல் வேட்டையும் அமைச்சர் பேரைச் சொல்லி நடந்ததாம்! தலைமைக்கு இது புகாராகச் சென்றாலும், 'ஐவர் அணியில் ஒருவர்’ என்பதால் பழனிசாமி மீதான புகார்கள் 'மியூட்’ செய்யப்பட்டுவிடுகிறதாம்!
_______________________________________________________________________________
குண்டக்க மண்டக்க புகார்கள்!
வகைதொகை இல்லாமல் பழனிசாமி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதையும் எதிர்க்கட்சிகளே வாசிக்கின்றன. 'அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்தது பா.ம.க.
ராமதாஸ் அளித்த அந்தப் புகார் பட்டியலில் பழனிசாமியைப் பற்றி விரிவான அத்தியாயங்கள் இருந்தன. 'கோகோ கோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு. அதில் அமைச்சர் பழனிசாமியுடன் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார்வாசித்தது அந்த மனு.
காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், 'அமைச்சர் பழனிசாமி வீட்டில் 1,000 கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள்’ எனத் திரி கொளுத்தினார். 'தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைக்கும் தொகையை அமைச்சர் பழனிசாமி வீட்டில், சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகப் பதுக்கிவைத்திருப்பதாக, சேலம் ஏரியாவில் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.
வருமான வரித் துறையும் தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லாம் கொந்தளித்தார் இளங்கோவன். உடனே அவர் மீது வழக்கு போட்டார் பழனிசாமி. ஆனாலும் சளைக்காத ஈ.வி.கே.எஸ்., 'அமைச்சர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, குறுக்குவிசாரணை நடத்துவேன்’ என அதிரடித்தார்.
______________________________________________________________________________
அமைச்சரை இயக்கும் படை!
அமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. 'வெகுளி’ என்ற பட்டத்தோடு உலாவருகிறார். ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அமைச்சர் பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம். அமைச்சரின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குருசாமி, வாழப்பாடி குபேந்திரன், வளத்தி வெங்கடாசலம், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, அரியானூர் பழனிசாமி, சேலம் ஜங்ஷன் பாவா, கவுன்சிலர் சசிகலா, வீராணம் முத்துசாமி, சங்ககிரி நிலவள வங்கித் தலைவர் கந்தசாமி... என அமைச்சர் ஆதரவாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கட்சியினர்!
______________________________________________________________________________
பயமா... பாசமா?
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் அமைச்சர் இல்லாத நாட்களில், மாவட்டத்தின் நிழல் அமைச்சர். இவர் எங்கு போனாலும் 10 கார்கள் புடைசூழச் செல்வார். அமைச்சரின் முன்பே இவரை, 'வாங்க மாவட்டம்’ என அழைப்பார்கள் கட்சிக்காரர்கள். அமைச்சரும் அதை ரசிக்கிறார். அமைச்சருக்கு இளங்கோவன் மீது பாசமா... பயமா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, இளங்கோவன் பழனிசாமியுடன் நெருக்கமாக உலா வருகிறார். ஏனென்றால், அமைச்சரின் 'ஆல் இன் ஆல்’ தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன்தானாம்!

ஆனந்த விகடன் - 21 Oct, 2015 இதழில் இருந்து

Wednesday, February 15, 2017

வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?

Image may contain: 1 person, text
வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?
மாநில ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின்உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு அதிகாரி அல்லது அரசியல் ரீதியாக பதவி வகிக்கும் ஒருவரின் மாத வருமானம், 70 ஆயிரம் ரூபாய் என, வைத்துக் கொள்வோம். இதை, 12 மாதத்துக்கு கணக்கிட் டால்,
(12 x Rs.70,000 = Rs. 8,40,000/-)
8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்; இதுவே, இவரது ஆண்டு வருமானம்; அதாவது வருவாய். இவருக்கு மனைவி, கல்லுாரிகளில் படிக்கும் இரு பிள்ளைகள், வயதான தாய், தந்தை இருப்பதாக கொள்வோம்.
மாதம்தோறும் குடும்பம் நடத்துவதற்கான செலவு, பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, தாய், தந்தையருக்கான மருத்துவ செலவு, வீடு, வாகன கடன் அடைப்பு உள்ளிட்ட, அத்தியாவசிய செலவுகள், 50 ஆயிரம் ரூபாய் ஆவதாக கணக்கிட்டால், ஆண்டுக்கான மொத்தச் செலவு, ஆறு லட்சம் ரூபாய். இதை, மொத்த வருமானம், 8 லட்சத்து, 40 ஆயிரத்தில் இருந்து கழித்தால், 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கும்; இதுவே, இவரது சேமிப்புத் தொகை
Rs. 8,40,000/- 
12 x Rs.50,000 = Rs. 6,00,000/-
Balance Rs. 2,40,000/-
ஆனால், அதிகப்படியாக, அதாவது, 30 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக வைத்துக் கொண்டால், 2 லட்சத்து, 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் பணம், நகை, சொத்துக்கள், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டவை. அதாவது, அந்த நபர், தன் பதவியை பயன்படுத்தி, லஞ்சம், ஊழல் மூலமாக திரட்டப்பட்டவை. இந்த கணக்கீட்டின்படியே, சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஒருவேளை, அதிகாரியின் மனைவி, திருமண மாகாத மகன் அல்லது மகள், வேலைக்குச் செல்பவராகவோ அல்லது தொழில் செய்பவராகவோ இருப்பின், அவர்களது வருமானமும் மேற்கண்டவாறே கணக்கிடப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.201