disalbe Right click

Sunday, March 5, 2017

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?
வீட்டு மனை வாங்குவதற்கு வங்கியில் கடன் வாங்க முடியுமா?
மனை வாங்குவதற்கு வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் கடன்களை வழங்கி வருகின்றன.  ஆனால், அதற்கென்று சில நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது
வீட்டுக் கடன் வழங்குவதற்கு உள்ளது போல மனை வாங்குவதற்கான கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

விண்ணப்பித்தவரது வருமானம், கடனைச் செலுத்துவதற்கான தகுதி ஆகியவை மிக முக்கியமாக ஆராயப்படுகிறது. மேற்கண்ட தகுதி இருந்தால் விண்ணப்பித்தவரின் மனு வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது மட்டும் போதுமா?
  1. நீங்கள் வாங்க நினைத்துள்ள மனையில் எந்த விதமான வில்லங்கமும் இருக்கக் கூடாது.
  2. அது குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  3. விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
  4. வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை கண்டிப்பாக இருக்க வேண்டும்
  5. மனையின் விவரங்கள் அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தீர விசாரிப்பார்கள்.

மேற்கண்ட விதிமுறைகளின்படி நீங்கள் வாங்க இருக்கின்ற மனை இருந்தால், கடன் கிடைப்பதில் சிக்கல் இல்லை.
சரி, மனைக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
வீட்டுக்கடன்களுக்கான நடைமுறைதான் மனைக் கடனுக்கும் பின்பற்றப்படுகிறது.
மனை இருக்கின்ற பகுதியைப் பொறுத்தும் மனைக் கடன் நிர்ணயிக்கப்படும்.
பொதுவாக வீட்டுக் கடன் என்றால் அதிகபட்சம் 80 % வரை வங்கியில் இருந்து பெறமுடியும். மீதம் 20 % தொகையை நம் கையில் இருந்து செலுத்த வேண்டியதிருக்கும்.
அரசு வழிகாட்டு மதிப்பினை வைத்தே மனைக் கடன் வழங்கப்படும்.
பெரிய நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்பின்படி குறைந்தது 70 % வரை மனைக் கடன் கண்டிப்பாக கிடைத்துவிடும். இடத்தை பொறுத்து சில தனியார் வங்கிகள் மட்டும் 80 முதல் 85 % வரை மனைக் கடன் வழங்குகிறது. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 % வரைதான் மனைக் கடன் வழங்கப்படுகிறது
Image result for காலி மனை
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  1. வாங்க இருக்கின்ற இடத்தின் பத்திரம் மற்றும் மூல பத்திரங்கள்
  2. வாங்க இருக்கின்ற இடத்தின் 30 வருட வில்லங்க சான்றிதழ்
  3. வாங்க இருக்கின்ற இடம் குடியிருப்புக்கானது என்ற சான்றிதழ்
  4. வாங்க இருக்கின்ற இடத்தின் மதிப்பீட்டு சான்றிதழ்
  5. வாங்க இருக்கின்ற இடத்தின் வரைபடம்
  6. உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  7. உங்களது வருமான சான்றிதழ்
  8. உங்களது இருப்பிட சான்றிதழ்
  9. உங்களது அடையாள சான்றிதழ்
  10. உங்களது கடந்த 6 மாதங்களுக்கான வரவு செலவு (வங்கி) விபரங்கள்

காலி மனை கடனுக்கு வரிச் சலுகை கிடையாது
பொதுவாக நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கான வரி விலக்கு கொஞ்சம் வழங்கப்படுகிறது. ஆனால், நீங்கள் வாங்குகின்ற மனைக் கடனை அடைக்கச் செலுத்துகின்ற தவணைத் தொகைக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது.

****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 

தனி வீடு கட்டப் போறீங்களா?

Image may contain: house, text and outdoor
தனி வீடு கட்டப் போறீங்களா?
என்னதான் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் அதிகரித்து வந்தாலும் தனி வீட்டுக்கான அந்தஸ்து தனிதான். அதனால் சென்னை வாசிகளில் சிலர், சிறிய இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் எனப் புறநகர்ப் பகுதிகளில் தனி மனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். இம்மாதிரித் தனி வீடு கட்டச் சில விதிமுறைகள் இருக்கின்றன.
மனை அளவு முழுமைக்கும் வீடு கட்ட முடியாது. அதற்கு விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. உதாரணமாக 1,200 சதுர அடி (அரை கிரவுண்டு) மனை வாங்கினாலும், அந்த மனை முழுவதும் கட்டிடம் எழுப்பிவிட முடியாது.
நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு விதம், நகராட்சி என்றால் ஒரு விதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. 
மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.
அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். 

மொத்தப் பரப்பில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன.
2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும். மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும்.
நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.
அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள்.
மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அனுமதி கிடைக்கக் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. 
பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். 
அப்படி இல்லையென்றால், பல காலத்துக்குப் பிறகு வீட்டை விற்கும்போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும்போதோ பிரச்சினகள் ஏற்படலாம். எனவே பிளானில் உள்ளபடி வீடு கட்டுங்கள்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 04.03.2017
ரயில்வே லைனில் இருந்து 30 மீட்டருக்கு அப்பாலும், சுடுகாட்டில் இருந்து 90 மீட்டருக்கு அப்பாலும், நீர்நிலைகள் இருந்தால், 15 மீட்டருக்கு அப்பாலும்தான் வீடு கட்டவேண்டும்.

Saturday, March 4, 2017

செட்டில்மெண்ட்-ஐ ரத்து செய்ய முடியுமா?

செட்டில்மெண்ட்-ஐ ரத்து செய்ய முடியுமா?
 ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு சொத்தினை, மற்றவருக்கு விற்கும் போது அதற்குண்டான தொகையை பெற்றுக் கொண்டு, இன்று முதல் இச்சொத்தினை நீங்கள் தானாதி விக்கிரம பாத்தியமாய் ஆண்டு அனுபவித்து கொள்ள வேண்டியது, இனி இச்சொத்தில் எனக்கோ, என் வாரிசுகளுக்கோ எவ்வித உரிமையும் இல்லை என்று எழுதி கொடுக்கிறார்.
 That means from that day the purchaser can enjoy the property absolutely. Neither the vendor nor his heirs have any rights over the property. 
செட்டில்மெண்ட்டும் கிரயம் போல் தான். ஆனால் செட்டில்மெண்ட்டில் பிரதிபலனாக பணமோ, பொருளோ எதுவும் பெறக்கூடாது. அப்படி பெற்றால் அது செட்டில்மெண்ட் ஆகாது. கிரையம் ஆகிவிடும். செட்டில்மெண்ட்டில் எழுதி கொடுப்பவர் சொத்து கொடுக்கப்படுபவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் முழு உரிமையும் கொடுத்து, ஆவணத்தை பதிவும் செய்து கொடுத்து, சொத்தின் அனுபோகத்தையும் அவரிடம் கொடுத்த பிறகு, எழுதி கொடுத்தவருக்கு அதில் என்ன உரிமை இருக்கிறது?. 
ஏற்கனவே அவருடைய சொத்தாக இருந்தபோதிலும், அவர் அதனை மற்றவருக்கு கொடுத்த பிறகு, அதன் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் அந்த செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யவும், அவருக்கு அதிகாரம் இல்லை. 
ரத்து செய்ய முடியாது!
ஒருசில சந்தர்ப்பங்களில் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட்டை அதனை எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்யலாம். செட்டில்மெண்ட் எழுதும்போதே, இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தால், எழுதி கொடுத்தவர் அதனை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சொத்தினை அவர் எழுதிக் கொடுத்தவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் உரிமையுடன் எழுதிக் கொடுத்து, அதனை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதால், அதனை பெற்றவர் அச்சொத்தினை வேறு யாருக்காவது கிரையமோ அல்லது வேறு வகையிலோ உரிமை மாற்றம் செய்திருக்கக்கூடும். 
சில நேரங்களில் ரத்து செய்ய முடியும்! 
அதற்கு மாறாக செட்டில்மெண்ட் எழுதும்போதே, அதில் ஏதேனும் நிபந்தனைகள் விதித்தோ அல்லது இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் உண்டு என்றோ எழுதியிருந்தால், எழுதப்பட்டவருக்கு Absolute Right எனப்படும் இஷ்டம் போல் அனுபவிக்கும் முழு உரிமை கொடுக்கப்படவில்லை என்று பொருள். எனவே அதனை அவர் விற்கவோ அல்லது வேறு பராதீனம் செய்யவோ முடியாது. 
அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை எழுதி வாங்கியவர் கடைபிடிக்காவிட்டாலோ அல்லது எழுதிக் கொடுத்தவர் மனம் மாறி அதனை ரத்து செய்ய நினைத்தாலோ ரத்து செய்யலாம். 
தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்ததன் மூலம் யாருக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுக்கப்பட்டதோ அவர் அச்சொத்தின் உரிமையாளர் ஆகிவிடுகிறார். எனவே அதன்பிறகு அந்த செட்டில்மெண்ட் ஆவணத்தை எழுதி கொடுத்தவருக்கு அந்த சொத்தின் மீதுள்ள உரிமை போய்விடுகிறது. எனவே அதன்பிறகு செட்டில்மெண்ட் பெற்றவர் ஒப்புக் கொள்ளாமல் எழுதிக் கொடுத்தவர் மட்டும் அதனை ரத்து செய்ய இயலாது. 
செட்டில்மெண்ட் மூலம் ஒருவர் தன்னுடைய சொத்தின் முழு உரிமையையும் வேரொருவருக்கு எழுதிக் கொடுத்த பிறகு அதனை அவர் மூன்றாம் நபருக்கு விற்றிருந்தால், அதன்பிறகு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்தால் கிரையம் பெற்றுவரும் பாதிக்கப்படுவார். 
ரத்து செய்யும் வழிகள்
செட்டில்மெண்ட் மூலம் சொத்தை பெற்றவர், அதனை வேறு யாருக்கும் கிரையம் அல்லது செட்டில்மெண்ட் மூலம் மாற்றாமல் இருந்து அவரும் அதனை ரத்து செய்ய ஒப்புக் கொண்டால், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் நினைத்தால் எளிதில் ரத்து செய்யலாம். 
எழுதி வாங்கி கொண்டவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலோ அல்லது அதனை வேறு யாருக்காவது பராதீனம் செய்திருந்தாலோ எளிதாக ரத்து செய்ய இயலாது. 
ரத்து செய்யவே முடியாது என்று சொல்ல முடியாது. செட்டில்மெண்ட் எழுதியதைப் போல் எழுதிக் கொடுத்தவர் நினைத்தவுடன் எளிதாக ரத்து செய்ய இயலாது. 
ஆனால் அதனை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமே வழி. 
அதேபோல் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று எழுதி பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் கூட, எழுதிக் கொடுத்தவரை ஏமாற்றியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ எழுதி வாங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் மூலம் அதனை ரத்து செய்யலாம்.
 நன்றி :  நண்பரும் வழக்கறிஞருமான  Dhanesh Balamurugan

வங்கிக் கணக்கில் ரூ.5000/- இருப்பு இருக்க வேண்டும்!

Image may contain: text

வங்கிக் கணக்கில் ரூ.5000/- இருப்பு இருக்க வேண்டும்!

வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ரூ.5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் அபராதம்!
புதுதில்லி: வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர்மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, ரூ. 2,000 நோட்டும், பிரத்யேக அம்சங்களைக் கொண்ட புதிய ரூ. 500 நோட்டும் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல விதமான அதிரடி அறிவிப்புகள் தினம் தினம் வெளியிடப்பட்டு வந்தது.

நாட்டில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தனியார் வங்கிகள் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு ரூ.150 கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அதிரடியாக நேற்று எஸ்ஐடி குழு அளித்த பரிந்துரைப்படி, ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தனிநபர் ஒருவர் கையில், அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கும் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படலாம் என நிதி அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கிலும் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதத்தில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெருநகரங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக 5 ஆயிரம் ரூபாய் சேமிப்புக் கணக்காக கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும் என்றும், உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம். இயந்திரளில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி வரும் நிலையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 04.03.2017

ஃபேஸ்புக்கில் 'Profile Name' மாற்றுவதற்கு முன்பு

Image may contain: text

பேஸ்புக்கில் 'Profile Name' மாற்றுவதற்கு முன்பு

ஃபேஸ்புக்கில் 'Profile Name' மாற்றுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 
நிஜ வாழ்க்கையிலும் சரி; டிஜிட்டல் வாழ்க்கையிலும் சரி; இரண்டிலுமே நமது பெயர் என்பது நம்முடைய அடையாளம். இன்னும் சொல்லப்போனால் அதுதான் இந்த உலகில் உங்களுடைய முகவரி.

அதேபோல ஆன்லைனில் உங்களுடைய யூசர் நேம்தான் உங்கள் அடையாளம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் என எல்லா கணக்குகளுக்கும் இது பொருந்தும்.

ஆனால் நிஜ வாழக்கையில் பெயர் மாற்றுவது போல, உங்கள் ஃபேஸ்புக்கில் பெயரை மாற்றுவது என்பது கடினமான விஷயம் கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் உங்களுக்கு சிக்கல்தான்.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த செய்தியைக் கேட்டு, உணர்ச்சிக் கொதிப்பில் தன்னுடைய ஃபேஸ்புக் புரொபைல் பெயருக்குப் பின்பு ஃபிடல் காஸ்ட்ரோ என சேர்த்து தனது பெயரை மாற்றிவிட்டார். அந்த சமயம் காஸ்ட்ரோவின் தாக்கம் முகநூலில் அதிகமாகவே இருந்தது. எனவே புரொபைல் பிக்சர் மாற்றுவது, காஸ்ட்ரோவின் பொன்மொழிகளை ஸ்டேட்டஸாக தூவுவது, அவர் தொடர்பான செய்திகளைப் பகிர்வது என மொத்த ஃபேஸ்புக்கும் பிசியாக இருந்தது. எனவே இவர் பெயர் மாற்றியது பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் நான்கு நாட்கள் பேசிவிட்டு, பீப் சாங்கிற்கு தாவுவதுதானே நம் ஃபேஸ்புக் கலாசாரம்? அதேபோல சில நாட்களில் ஃபேஸ்புக்கில் காஸ்ட்ரோ அலை செவ்வனே கரையைக் கடந்தது. அதற்கு பிறகு ஜெயலலிதா மரணம், தமிழக அரசியல் சூழல், ஜல்லிக்கட்டு பிரச்னை, பன்னீர் செல்வம் பல்ட்டி, சசிகலா சபதம், எடப்பாடி முதல்வர் ஆனது, நெடுவாசல் போராட்டம் என எக்கச்சக்க விஷயங்கள் நடந்துவிட்டன. அத்தனைக்கும் ஸ்டேட்டஸ் போடும் ஃபேஸ்புக் உலகம், இவை அனைத்தையும் கடந்துவந்து விட்டது.

இந்த ஜோதியில் ஐக்கியமாக எண்ணி, மீண்டும் புரொபைல் பெயரை மாற்றலாம் என நினைத்தால் ஃபேஸ்புக் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டது. ஆன்லைனில் அவசரப்பட்டு காஸ்ட்ரோ பெயரை இவர் மாற்றியிருந்தாலும், நிஜத்தில் போராட்டம், புரட்சி ஆகியவற்றிற்கும் இவருக்கும் ரொம்ப தூரம். எனவே காஸ்ட்ரோவின் பெயர் இவர் புரொபைல்க்கு கொஞ்சமும் செட் ஆகவில்லை. மாற்ற நினைத்தாலும் தற்போது மாற்ற முடியாது. ஃபேஸ்புக் ஐடியை யாரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை.

கடைசியில் காத்திருந்து, காத்திருந்து 60 நாட்கள் கழித்துதான் தனது ஐ.டி.யின் பெயரை மாற்றினார். மீண்டும் பழைய பெயர் வந்ததும்தான் ஃபேஸ்புக்கில் மீண்டும் ஆக்டிவ் ஆனார் அவர்.

ஃபேஸ்புக்கில் உங்கள் அக்கவுன்ட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் இதுபோன்ற சிக்கல்கள்
இருக்கின்றன.

எனவே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்.

1. உங்களுடைய ஃபேஸ்புக் பேஜில் தெரிவது உங்களுடைய ஃபேஸ்புக் பெயர். உங்களுடைய அட்ரஸ் பாரில் தெரிவது ஃபேஸ்புக்கின் யூசர் நேம். இரண்டிற்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.

2. உங்களுடைய ஃபேஸ்புக் பெயரை மாற்றும் போது, அதனை அடுத்த 60 நாட்களுக்கு மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ் பகுதியில் சென்று இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

3. யூசர்நேமையும் இதேபோல செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே வேறு அக்கவுன்ட்களுக்கு இருக்கும் யூசர் நேமை நீங்கள் பயன்படுத்த முடியாது. இதற்கான Availability-யை நீங்கள் யூசர் நேம் மாற்றும் போதே பார்த்துக் கொள்ளலாம்.

4. மேலே பார்த்தவை தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு மட்டுமே! உங்களுடைய தனிப்பட்ட அல்லது நிறுவனங்களின் பக்கங்களுக்கு இது பொருந்தாது. ஃபேஸ்புக் பேஜ்களின் யூசர்நேம் மற்றும் பெயர்களை மாற்ற வேண்டுமெனில், 'Edit Page Info' பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும்.

பக்கங்களின் பெயர்களை இன்று நீங்கள் மாற்றினால், உடனே இன்னொரு முறை வேறு பெயரை நீங்கள் மாற்ற முடியாது. பின்பு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். வெறும் புரொபைல் பெயர்தானே என்று அசால்ட்டாக இருக்காதீர்கள்.

உங்களுடைய முகநூல் முகவரி என்பது உங்களுடைய ரெஸ்யூம் முதல் விசிட்டிங் கார்டு வரை அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. எனவே அவற்றை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!

நன்றி : விகடன் செய்திகள் - 04.03.2017

பினாமிகள் மீது சட்டம் பாயும்!


பினாமிகள் மீது சட்டம் பாயும்!
பினாமியாக செயல்பட்டால் சட்டம் பாயும்!

புதுடில்லி:பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்தால், பினாமி தடை சட்டத்தின் கீழ் மட்டுமல் லாமல், வருமான வரி சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பினாமி சட்டம் கொண்டு வரப்பட்டு, 2016, நவம்பர் முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அபராதம்:

பினாமி பெயரில் சொத்து சேர்த்தால், இந்த சட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும், சொத்துக்களை பறிமுதல் செய்ய வும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்தைசெயல்படுத்தும் அமைப்பான வருமான வரித்துறை நேற்று வெளி யிட்டுள்ள விளம்பரத்தில், 'பினாமி சொத்து சேர்த் தால், பினாமி சட்டத்துடன், வருமான வரி சட்டத் தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப் பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பினாமி தடை சட்டத்தின் கீழ், பினாமி பெயரில் சொத்து சேர்த்தால், சொத்து யாருடைய பெயரில் உள்ளதோ அவர்மீதும், அதன் உண்மையான பயனாளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன், சொத் தின் சந்தை மதிப்பில், 25 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்
.
சில வழக்குகளில், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

எச்சரிக்கை:

இதைத் தவிர, வருமான வரித் துறை சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்காவது பினாமியாக செயல்பட்டால் கூட, இந்த இரண்டு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

நன்றி : தினமலர் நாளிதழ்  - 03.03.2017

Friday, March 3, 2017

ஜாக்கிரதை - சைபர் கிரைம்


ஜாக்கிரதை - சைபர் கிரைம்
சமீபகாலமாக நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், கிரெடிட்கார்டு பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் பலமடங்காகியுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை பயன்படுத்தி சிலர் மோசடியிலும் ஈடுபடுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது, கிரெடிட் கார்டுகளில் உள்ள ரகசிய எண்களை திருடி மோசடி செய்வது, அந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்வது போன்ற சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரிக்கிறது.
கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பொருட்களை ஆன்லைன் முறையில் வாங்குவது, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது, பொருட்களை வாங்கும் போது கிரெடிட் கார்டை தருகின்றனர். இந்த கார்டை சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி அவர்களிடம் உள்ள கருவியை சுவிப் செய்து தருகின்றனர்.
ஆனால், சில மோசடி நபர்கள் வாடிக்கையாளர்கள் தரும் இதே கார்டை, அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் போது பயன்படுத்தி �ஸ்கிம்மர் கருவி� என்ற கருவியில் சுவிப் செய்கின்றனர்.இதனால் மோசடி நபர்களுக்கு அந்த கிரெடிட் கார்டுதாரரின் கார்டுஎண், பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தெரியவருகிறது.
ஆனால், கிரெடிட் கார்டை அளிக்கும் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அறியாமல் கார்டை வாங்கிச் சென்றுவிடுகின்றனர். சிலநாள்கள் கழித்து அந்த மோசடி நபர்கள், அந்த கிரெடிட் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து பேசுவது போல், வங்கி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்கின்றனர். பின், அவர்களின் கிரெடிட் கார்டு எண்ணை சரிபார்ப்பதற்காக கேட்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மறுமுனையில் பேசுவது போல் வங்கி ஊழியர்கள் தான் என நினைத்து தங்களது கிரெடிட் கார்டு ரகசிய எண்ணை தெரிவிக்கின்றனர்.
இதனை பயன்படுத்தி அந்த மோசடி நபர்கள், சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களின் எண், பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் பலஆயிரம் மதிப்பிற்கு பொருட்களை வாங்கிவிட்டு தப்புகின்றனர். பொருட்கள் வாங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் வரும்போதே, அவர்களுக்கு நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவருகிறது.
வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டின் பதிவு எண்ணை திருடும் மோசடி நபர்கள், போலி கார்டு தயாரித்து தவறான ரகசிய குறியீட்டு எண்ணை 3 முறை தவறாக அடிக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அந்த வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு லாக் ஆகிவிடும். அதுகுறித்த எஸ்எம்எஸ் தகவல் வாடிக்கையாளர்களுக்கு வரும்.
சிறிதுநேரத்தில் மோசடி நபர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொண்டு, �நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களது கணக்கில் பணம் இல்லாததால் கார்டு லாக் ஆகிவிட்டது. உங்கள் கார்டு ரகசிய எண்ணை கூறுங்கள்� எனக்கேட்பர்.
வாடிக்கையாளரும் வங்கியில் இருந்து கேட்கின்றனர் என நினைத்து கார்டு ரகசிய குறியீடு எண்ணை தெரிவிக்கின்றனர். அதை பெறும் மோசடி நபர்கள், வங்கி இலவசசேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வலியுறுத்துகின்றனர். வாடிக்கையாளர்களும் சேவை மையத்தைதொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கின்றனர்.
சேவை மையத்தினர் அந்த கார்டின் லாக்கை சரிசெய்கின்றனர். அதன்பின், மோசடி நபர்கள் வாடிக்கையாளர் அளித்த ரகசிய எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோல சராசரியாக மாதத்திற்கு 10 முதல் 20 புகார்கள் வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புகார்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது.
பேஸ்புக்கில் பெண்கள் தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
தங்களது படங்களை அதில் வெளியிடக்கூடாது. படத்தை வெளியிட்டால் அதை பயன்படுத்தும் மர்மநபர்கள் அந்த படத்தை டவுன்லோடு செய்து, மார்பிங் முறையில் ஆபாசமாக மாற்றி மீண்டும் சமூகவலைதளத்தில் வெளியிடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
தினகரன் நாளிதழ் செய்தி-02.02.2015

Wednesday, March 1, 2017

இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள்


இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள்

மிகச்சிறந்த இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள் எவை தெரியுமா?

உலகம் முழுவதும் இணையதளங்கள் மற்றும் இண்டர்நெட்டின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இண்டர்நெட் குறித்த புதுப்புது சட்டங்களும் உருவாகி வருகிறது.

குறிப்பாக டிஜிட்டல் காப்பிரைட் உரிமை என்பது தற்போது முக்கியமாக கவனிக்க கூடிய ஒரு அம்சமாக உள்ளது. இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதுகுறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வது உங்களை பிரச்சனையில் சிக்கவிடாமல் பாதுகாக்கும் இமேஜ்கள் என்று கூறப்படும் படங்கள் இண்டர்நெட்டில் மில்லியன் கணக்கில் கொட்டி கிடக்கினது. 

ஆனால் இந்த இமேஜ்கள் குறித்த காப்பிரைட்ஸ்களை தெரிந்து வைத்து கொள்வது முக்கியம். கட்டிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளமோ அல்லது வேறு ஏதேனும் துறை சம்பந்தப்பட்ட இணையதளமோ உருவாக்கும்போது அதில் பயன்படுத்த இண்டர்நெட்டில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறு எடுத்து புதிய இணையதளங்களில் பயன்படுத்தும்போது, அந்த இமேஜ்கள் காப்பிரைட்ஸ் உள்ளவைகளா என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் எந்த இமேஜ்களுக்கு காப்பிரைட்ஸ் உரிமை உள்ளது 

எந்த இமேஜ்களுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால் முழுக்க முழுக்க இலவசமாக காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாம வழங்கும் இலவச புகைப்பட இணையதளங்களை நீங்கள் கவலையின்றி பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறான இலவச புகைப்பட இணையதளங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

இலவச இமேஜ்கள் / Stock.Xchng
 ஆன்லைனில் கொட்டி கிடக்கும் ஏராளமான இலவச இமேஜ்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் இதுதான். 

http://www.scx.hu/

உலகில் பெரும்பாலானோர் இந்த இணையதளத்தின் இமேஜ்களைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த இணையதளத்தில் மிகச்சிறந்த இமேஜ்கள் கோடிக்கணக்கில் உள்ளன. இந்த இணையதளத்தில் 401,700 இமேஜ்களுக்கும் அதிகமாக டேட்டாபேஸில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெக்ஸெல்ஸ் (வெப்): Pexels (Web)
மிகவும் ஆடம்பரமான மிகச்சிறந்த இமேஜ்களை தேர்வு செய்ய மிகச் சிறந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று.

 https://www.pexels.com/ 

 பல்வேறு இலவச இமேஜ்கள் உள்ள இணையதளங்களை இந்த இணையதளம் ஒருங்கே நமக்கு அளிப்பதால் நமக்கு தேவையான எந்த இமேஜாக இருந்தாலும் இதில் இருந்து எடுத்துவிடலாம். இமேஜ்களை தேடுவதும் எளிமை, அதுமட்டுமின்றி மிகச்சிறந்த புதிய புதிய இமேஜ்களை ஜஸ்ட் ஒரு ஸ்குரோலில் பார்க்கலாம் இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களை டவுன்லோடு செய்யவோ பயன்படுத்தவோ அக்கவுண்ட் ஓபன் செய்து லாகின் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒவ்வொரு புகைப்படத்தையும் எதற்காக பயன்படுத்தலாம் என்ற குறிப்பும் இதில் இருப்பதால் தேடுபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் இணையதளம் ஆகும்

ஐகான் ஃபைண்டர் (Icon Finder)
உங்களுக்கு தேவையான ஐகான்களை இணையதளத்தில் தேட வேண்டும் என்றால் நீங்கள் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை.

 https://www.iconfinder.com/

 இந்த இணையதளத்தில் உங்களுக்கு எந்தவிதமான ஐகான்களும் நிச்சயம் கிடைத்துவிடும் என்பது உறுதி. 313,000 ஐகான்கள் இந்த இணையதளத்தில் குவிந்து கிடப்பதால் நீங்கள் எந்த ஐகான்களை பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம்தான் வருமே தவிர ஐகான்கள் கிடைக்காத நிலை நிச்சயம் வராது. 1500 பிரிவுகளில் ஐகான்கள் கிடைப்பதால் உங்களுக்கு தேவையான பிரிவில் தேடிக் கொள்ளலாம்.

அவோபிக்ஸ் (AVOPIX) 
இமேஜ்கள் அதிகம் அடங்கியுள்ள இணையதளங்களில் ஒன்றுதான் இந்த அவோபிக்ஸ். 

https://avopix.com/ 

மேலும் இந்த இணையதளத்தில் இமேஜ்கள் மட்டுமின்றி வீடியோவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாமல் இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களையும், வீடியோக்களையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் இந்த இமேஜ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம், மாற்றி அமைத்து கொள்ளலாம், மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம் உங்களுக்கு அனைத்து உரிமைகளும் தரப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 190000க்கும் அதிகமான இமேஜ்கள் தற்போது உள்ளது. மேலும் அவ்வப்போது ரெகுலராக புதிய புதிய இமேஜ்கள் இதில் கிடைத்து கொண்டே இருக்கும்

500px: 
Flickr  இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றால் அதற்கு சரியான மாற்ற்தான் இந்த 500px  இணையதளம். 

https://500px.com/

இந்த இணையதளத்தில் பல்வேறு பிரிவுகளில் எளிதில் தேடும் வகையில் ஆயிரக்கணக்கான இமேஜ்கள் உள்ளது. உங்களுக்கு எந்த பிரிவில் இமேஜ்கள் வேண்டுமோ அந்த பிரிவை டிராப்டவுனில் செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ்களை அதில் இருந்து எடுத்து கொள்ளலாம். 

மேலும் இந்த இணையதளத்தில் உள்ள ஒவ்வொரு இமேஜின் லைசென்ஸ் குறித்த தகவல்களும் இதில் அடங்கியிருக்கும். அதை பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அந்த இமேஜ்களை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி : கிஸ்பாட் » News – 01.03.2017

Tuesday, February 28, 2017

எந்தெந்த வழிகளில் வருமான வரியை குறைக்கலாம்?


எந்தெந்த வழிகளில் வருமான வரியை குறைக்கலாம்?

வருமான வரியை பிரிவு 80சி-ன் கீழ் குறைக்க முதலீடு செய்யும் முன்பு இதை படிங்க..! 

முதலீடு மட்டும் இல்லாமல் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரியைக் குறைக்கலாம் என்று தெரியுமா உங்களுக்கு? 

வருமான வரி செலுத்தும் அனைவரும் வரியைக் குறைக்க முதலில் தேர்வு செய்வது பிரிவு 80சி-இன் கீழ் முதலீடு செய்வது ஆகும். முதலீடு மட்டும் இல்லாமல் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரியைக் குறைக்கலாம் என்று தெரியுமா உங்களுக்கு?

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி 

முதலில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகின்றது என்று சரிபார்க்க வேண்டும். மாத சம்பளம் வாங்கும் ஒருவரின் அடிப்படை ஊதியம் மாதம் 15,000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 21,600 அதாவது 12 சதவீத அடிப்படை சம்பளத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.

பிரிவு 80சி முதலீட்டிற்கு மட்டுமா..? 

இல்லை, பிரிவு 80சி முதலீட்டிற்கு மட்டும் என்று நினைப்பது தவறு.இதில் நாம் செய்யும் பல செலவுகளைக் கணக்கு காண்பிக்க இயலும். குழந்தைகளின் படிப்பு செலவையும் பிரிவு 80சி-ன் கீழ் கணக்கு காண்பித்து வரியைக் குறைக்க இயலும்.

ஹோம் லோன் 

ஒருவர் ஹோம் லோன் மூலம் வீடு கட்டியிருந்தால் அதற்கு மாதம் 20,000 ரூபாய் தவனைச் செலுத்தி வருகிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 84,000 ரூபாய் வரை வரி விலக்கு பெற இயலும்.

காப்பீடு திட்டங்கள் 

ஆயுள் காப்பீடு திட்டங்கள், மருத்துவக் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் அதற்கும் பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கு பெற இயலும்.

குறிப்பு 

எனவே வரியைக் குறைக்க முதலீடு திட்டங்களைத் தேடி ஓடும் முன்பு நாம் என்ன செலவுகள் எல்லாம் தற்போது செய்து வருகிறோம் என்று கண்டறிதல் மேலே கூரிய படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டம், குழந்தைகள் கல்வி பயிற்சிக் கட்டணம், ஹோம் லோன் தவனைப் போன்று பல வழிகளில் வரி விலக்கு பெற இயலும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ் 30.01.2017

பெரும் அளவில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர்

பெரும் அளவில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4…) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.
8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.
தினமலர் நாளிதழ் - 08.02.2016