disalbe Right click

Monday, July 3, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி

Image may contain: text
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ, அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். 
மனுதாரரை தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் நகலனுப்பி எண் (பேக்ஸ் எண்), மின்னஞ்சல் முகவரி) குறிப்பிடப்படவேண்டும். விவரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். 
இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
மனுவை அனுப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 6(i)-ன்கீழ் தகவல் பெறுவதற்கான் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது/ கேட்புவரைவோலை/வங்கிக் காசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.
உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். 
மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். 
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

இந்திய அரசு 2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது (http://www.persmin.nic.in/). 2005 அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல், பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும்.
வெளிப்படைத்தன்மை அதிகாரியின் பெயர் மற்றும் முகவரி

தலைமைப் பொது மேலாளர் – பொறுப்பு
மனித வள மேலாண்மைதுறை 
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம் (20வது தளம்)
சாஹித் பகத் சிங் மார்க்-போர்ட்
மும்மை – 400 001
தொலைபேசி எண் 22610301
பிரிவு 4(1)(b) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்

(i) அமைப்பு / நிறுவனத்தின் விவரங்கள், பணிகள், கடமைகள்
(ii) அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்
(iii) மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்
(iv) தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்
(v) வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்
(vi) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்
(vii) பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்
(viii) அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா அல்லது கூட்டத்தில் நடப்பவை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறதா
(ix) அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு
(x) மாதச்சம்பளம் / சலுகைகள்
(xi) திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்
(xii) பொருந்தாதது
(xiii) சலுகைகள் பெறுவோர் விவரம் அளிக்கப்பட்ட அனுமதி அல்லது அங்கீகாரம்
(xiv) மின்னணு முறையில் கொடுக்கப்பட்ட தகவல்களின் விவரங்கள்
(xv) தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்
(xvi) பொதுத் தகவல் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் முகவரி
கோரிக்கையை எங்கு அனுப்ப வேண்டும்

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். 
ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். கோரிக்கையை அனுப்பும்போது, விண்ணப்பதாரருக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அதைக் கொணடு அவர் தனது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளமுடியும்.
மத்திய பொதுத் தகவல் அதிகாரி / மாற்று மத்திய பொதுத் தகவல் அதிகாரி, மேல்முறையீட்டு அதிகாரி
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் விண்ணப்பிக்க 

துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) 
இந்திய ரிசர்வ் வங்கி
மனிதவள மேலாண்மைத் துறை
16, ராஜாஜி சாலை
சென்னை - 600 001 044-25360823
044-25399203
Fax: 044-23565220
தகவல் அளிக்க ஆகும் காலம்

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஒழுங்கு முறைக்கட்டணம் செலவு) விதிகள் 2005 இன் கீழ் பொது அதிகாரி.
ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.
பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை, மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை, ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணம் ஏதுமில்லை, அதற்கு அதிகமனால் குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க 

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை 
அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்
அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்
ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விவரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்
அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்
தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்
ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்
யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

(மேல் முறையீட்டு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாஹித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
Tel : 022 - 22611083
Fax : 022 – 22632052
அல்லது
(மாற்று மேல் முறையீடு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாகித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
தொலைபேசி : 022 - 22611097
நகலனுப்பி 022 – 22675277
மேற்கண்ட தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் https://www.rbi.org.in/ இணைய தளத்தில் இருந்து 03.07.2016 அன்று எடுக்கப்பட்டு முகநூலில் எனது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Saturday, July 1, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 8

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 8

பதிவு செய்யாத வணிகரிடம் பொருள்களை கொள்முதல் செய்யலாமா?

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைந்திருக்கும் நிறுவனத்திற்கு தனிப்பதிவு அவசியமா? உதாரணமாக, எங்கள் நிறுவனம் பெருந்துறை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு கிளையும் சென்னையில் ஒரு கிளையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தனித்தனி பதிவு அவசியமா ?
உங்களது நிறுவனம் ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பிரிவுக்கும் தனிப்பதிவு அவசியம். இது தவிர ஒரே மாநிலத்திலுள்ள மற்ற கிளைகளுக்கு தனி பதிவு அவசியமில்லை.
வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக செலுத்தப்படும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி அவசியமாகிறதா?
வழக்கறிஞர்கள் இன்னமும்கூட ஜிஎஸ்டியி லிருந்து விலக்கு பெற்றவர்களாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வியாபார நிறுவனங்கள் கொடுக்கும் தொகைக்கு எதிர்முறை கட்டண முறையில் (Reverse Charge Mechanism) அதற்குரிய தொகையை சேவை பெறுபவர்கள் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனால் வழக்கறிஞர்கள் எவரும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.
நான் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து கொண்டும் அதற்கான வர்த்தக நிறுவனம் ஒன்றும் வைத்துள்ளேன். இரண்டிற்கும் தனித்தனி பதிவுகள் அவசியமா?
நீங்கள் இரண்டு நிறுவனத்தையும் ஒரே பான் எண்ணின் கீழ் செய்வதால் தனித்தனி பதிவுகள் அவசியமில்லை. ஒரே பதிவின் கீழ் உற்பத்தி மற்றும் விற்பனையை செயல்படுத்தலாம்.
கரூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்திற்கு மைசூரில் பதிவு செய்யாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்கிறோம். இதனால் ரிவர்ஸ் சார்ஜ் என்று சொல்லப்படுகின்ற எதிர்முறை கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் கர்நாடகாவில் பதிவு செய்வது அவசியமா ?
நீங்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளீர்கள். நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்த பதிவு செய்யாத நிறுவனத்திடம் இருந்து பெறுவதால் உங்களது நிறுவனத்தை கர்நாடகாவிலும் பதிவு செய்வது அவசியம்.
ஜிஎஸ்டி வந்தால் வியாபாரத்தில் நடைமுறை மூலதனம் பாதிக்கப்படும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள் உண்மையா ?
ஜிஎஸ்டி முறையால் வரி நிகழ்வு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு வரி கட்ட வேண்டிய சூழ்நிலையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. உதாரணமாக ஒரு பொருளுக்கான முன் பணம் (Advance) பெறும்போது வரி நிகழ்வு ஏற்படுகிறது. முன் பணம் (Advance) பெறும்போதே வரி செலுத்த கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதுபோல நீங்கள் கொடுக்கும் முன் பணத்திற்கும் (Advance) உடனடியாக உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முதலாவது நிபந்தனை நீங்கள் கொடுத்துள்ள முன் பணத்திற்கான (Advance) பொருட்கள் வந்து சேர வேண்டும். இரண்டாவது விற்பதற்கான ஒப்புகை சீட்டு தயார் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நீங்கள் முன் பணம் கொடுத்தவர் (Advance) அதற்குரிய ஜிஎஸ்டி வரியை செலுத்தி இருக்க வேண்டும். மேற் சொன்ன மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நமது முன் பணத்திற்கான (Advance) உள்ளீட்டு வரி எடுத்துக்கொள்ள முடியும். எனவே இது போன்ற நிகழ்வுகளால் நடைமுறை மூலதனத்தின் கணக்குகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் அல்லது மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். நடைமுறை மூலதனத்தில் ஜிஎஸ்டி அணுகுமுறையில் எந்த மாற்றங்கள் இருக்கிறது என்பதை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய உள்ளீட்டு வரிகளை நான் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுமதியாளருக்கு ஜிஎஸ்டி சட்டம் எந்த வகையில் உதவுகிறது?
ஏற்றுமதியாளர்கள் இரண்டு வகைகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அணுகலாம். ஒன்று வரி செலுத்திவிட்டு வாங்கிய பொருட்களுக்கும் சேவைகளுக்குமான உள்ளீட்டு வரியை நீங்கள் ஏற்றுமதி செய்த பிறகு திருப்பித்தரத் தக்க தொகையாக பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது உங்களது ஏற்றுமதிக்கான வரியை செலுத்திவிட்டு உள்ளீட்டு வரிபோக வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை கழித்து மீதியை மொத்த தொகையையும் திருப்பித்தரத்தக்க தொகையாக (Refund) பெற்றுக் கொள்ளலாம். மேற்சொன்ன வகைகளிலும் ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டியை அணுகலாம்.
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நான் ரூ.750-க்கு எழுதுபொருட்களைப் (Stationary Goods) பதிவு செய்யாத கடையிலிருந்து வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் ஜிஎஸ்டியில் வரி உண்டா ?
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.5000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு மாதத் திற்கு ஒருமுறை கூட்டுத்தொகை கணக்கீடு (Consolidate raise) செய்யப்பட வேண்டும்.
எனது தொழில் நிறுவனம் ஈரோட்டில் உள்ளது. அது சில ஜாப் ஒர்க் வேலைகளைக் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டுப் பின் அந்தப் பொருட்கள் திருச்சூரில் உள்ள எங்களுடைய வாடிக்கையாளருக்கு செல்கிறது. இதற்கு நான் எந்தவிதமான வரிகளைச் செலுத்த வேண்டும்?
உங்களுடைய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது வேறு மாநிலத்திற்கு உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். உங்களது பொருட்கள் தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டு கடைசியாக சேருமிடம் திருச்சூர் என்பதால் ஐஜிஎஸ்டி கட்ட வேண்டும்.
ஜிஎஸ்டி பற்றி பல ஊடகங்களில் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. சில்லரை வணிகத்திலுள்ள நான் என்ன செய்ய வேண்டும். ?
ஏராளமான வரிச் சட்டங்களும் வரித் திருத்தங்களும் விதிமுறைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஒன்று அதில் உங்களுக்குண்டான வரிவிகிதங்கள் என்ன? உங்களது வாடிக்கையாளர் யார்? நீங்கள் வரி செலுத்தப் போவது உங்களுடைய மாநிலத்திற்காக அல்லது வேறு மாநிலத்திற்கா? இவைகளை மட்டும் நீங்கள் தெளிவாக தெரிந்தால் போதும். நீங்கள் கடைசி ஆறு மாதம் தாக்கல் செய்திருந்தால் உங்களுக்கு உண்டான கிரெடிட்டை(Credit) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட்(Credit) எடுத்துக் கொள்வதை மிக முக்கியமாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று (01-07-2017) முதல் இன்வாய்ஸ் புதிய வரிசை எண்ணில் ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது இந்த நிதி ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய வரிசையைத் தொடரலாமா?
30-06-2017 நள்ளிரவோடு மதிப்புக்கூட்டப்பட்ட வரி, உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை மறந்துவிடலாம். இன்றுமுதல் ஜிஎஸ்டி வரிச்சட்டத்தின் கீழ் வருகிறீர்கள். உங்களது பதிவு, கிளைகள் மற்றும் அமைப்பைப் பொறுத்து புதிய இன்வாய்ஸ் தயார் செய்து விநியோக்த்தை ஆரம்பியுங்கள். புதிய வரிசையில் வரித்தொகை விவரங்கள் குறிப்பிடவேண்டும்.
இன்றிலிருந்தே (01-07-2017) மின்னணு பில் கொண்டு செல்வது அவசியமா?
இன்னும் 3 மாத காலத்திற்கு முந்தைய நடைமுறையிலேயே இருக்கும். 3 மாதத்திற்கு பிறகு மின்னணு பில் கொண்டு செல்வது கட்டாயம். வெளிமாநில கிளைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது விநியோக ரசீது (Bill of Supply) அவசியம். முறையே ஜாப் வொர்க்கிற்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது டெலிவரி சலான் அவசியமாகிறது.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.07.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 7

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 7

அறிவோம் ஜிஎஸ்டி: வரி விகிதத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கு உண்டு?

சில உணவுப் பொருட்கள் பூஜ்யம் வரி விகிதத்தில் உள்ளன. ஆனால் இதுவே பிராண்ட் தயாரிப்பாக இருந்தால் 5 சதவீதம் என்பது சாமான்ய மக்களை பாதிக்காதா?
பெரிய நிறுவனங்கள் 5% ஜிஎஸ்டி வரி செலுத் தும்பொழுது அதனை பிராண்ட் செய்வதற் கான செலவுகள், உதாரணமாக விளம்பரச் செலவுகள் போன்றவற்றுக்கான உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக் கொண்டு மீதியை மட்டும் வரியாக செலுத்தினால் போதும். இதனால் 5% என்பது உள்ளீட்டு வரி மற்றும் வெளியீட்டு வரி இரண்டையும் சரி செய்து கொள்ளலாம். ஆகவே இது சாமானிய மக்களை பாதிக்காது. மேலும் பிராண்ட் அல்லாத பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு விலை வித்தியாசத்தில் ஒரு சின்ன அனுகூலம் இருப்பதாகவும் அமைந்திருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாநில அரசோ, மத்திய அரசோ நிர்ணயிக்க அதிகாரம் உள்ளதா?
மாநில அரசும் மத்திய அரசும் 101வது அரசியல் சாசன சட்டத்தின்படி வரி விதிக்கும் உரிமை பெறுகிறார்கள். ஆனால் ஜிஎஸ்டிக் கான வரிவிகிதம் மொத்தமாக மத்திய, மாநில இரண்டு அரசுகளும் சேர்ந்து 40%க்கு மேல் வரிவிதிப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை. எந்தப் பொருளுக்கு எந்த வரி என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலை சேர்ந்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மாநில நிதி அமைச்சர்களும், மூன்றில் ஒரு பங்கு மத்திய நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சரும் இடம் பெற்று இருப்பார்கள். 50 சதவீதம் உறுப்பினர்கள் பங்குபெறும் நிலையில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்ட வடிவம் பெறும். எனவே தன்னிச்சையாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வரி விகிதங்களை முடிவு செய்ய இயலாது.
வரிவிலக்கு பெற்ற மற்றும் வரிவிலக்கு பெறாத பொருட்களை விற்று வருகிறேன். இதற்கான உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) எடுக்க முடியுமா?
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கான, சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை வரவாக (Credit) எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக வரிவிலக்கு பெறாத பொருட்களான உள்ளீட்டு வரியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.
எந்த வகையான வரி செலுத்துவோர் வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான கால அவகாசம் என்ன?
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வரிதாரரும் தங்களது வருடாந்திர கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது. ஜிஎஸ்டிஆர் 9 என்கிற படிவத்தை பூர்த்தி செய்து அடுத்த வருடம் டிசம்பர் 31க்கு முன்பாக வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது.
கணக்கு மற்றும் தணிக்கை கட்டாயமா? மேலும் இதற்குரிய வரம்புகள் என்ன?
ஒவ்வொரு வணிகரும் தங்களது கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். நிதி ஆண்டிற்கான வருடாந்திர தாக்கல் செய்யும் குறிப்பிட்ட நாளிலிருந்து மேலும் 72 மாதங்கள் முடியும் வரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். தணிக்கை என்பது ஆண்டு வர்த்தகம் இரண்டு கோடிக்கு மேல் இருந்தால் தணிக்கையாளர் (Auditor) மூலமாகவும் செலவு கணக்காளர் (Cost Accountant ) மூலமாகவும் கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது.
ஜிஎஸ்டி வரியில் முன்தொகை (Advance) பெறும்போது வரி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே?
ஆம். முந்தைய முறையில் உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி, முன்தொகை பெறும் போது ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் முந்தைய சேவை வரியில் முன்தொகை (Advance) பெறும்பொழுது அது வரி நீங்கலாக கருதப்பட்டு அதற்குரிய வரித் தொகையை முன்தொகை(Advance) பெற்ற நாளிலிருந்து முன்தொகை பெற்ற நபர் கட்ட வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி முறையில் விநியோகம் செய்த நாளிலிருந்தே வரிவிதிப்பு நிகழ்வாக கருதப்பட்டு அதற்கான வரியை பிடித்து செலுத்துவது அவசியமாகிறது.
ஐஜிஎஸ்டி செலுத்தும்போது கவனிக்க வேண்டியவை என்ன?
ஐஜிஎஸ்டி செலுத்தும்போது விநியோக இடம் மற்றும் விநியோக நேரத்தை கண்டறிவது அவசியம். உதாரணமாக மும்பையை சேர்ந்த யாத்ரீகர் மதுரை கோவிலுக்கு வரும்போது அங்குள்ள நகைக் கடையில் ரூ.2 லட்சத்திற்கு தனது நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி கொடுத்து நகை வாங்குகிறார் என்றால் இது ஒரு வெளிமாநில விநியோகம். எனவே ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இவ்வாறே அவர் துணிக்கடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி ஏதுமில்லாமல் துணி வாங்கினால், இது உள்மாநில விநியோகமாகும். இதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் வியாபாரம் செய்யும் போது அதாவது திருச்சியை சேர்ந்த வணிகர் குஜராத்திற்கும் மஹாராஷ்டிராவிற்கும் விநியோகம் செய்தால் அம்மாநிலங்களிலும் பதிவு பெற வேண்டுமா?
பல்வேறு மாநிலங்களில் விநியோகம் செய்யும் போது அம்மாநிலங்களிள் பதிவு செய்ய வேண்டியதில்லை. மேலும் அங்கு அவருக்கு ஏதேனும் கிளைகள் இருந்தால், கிளைகளுக்கு விநியோகம் செய்யும்போது பதிவு செய்வது அவசியமாகிறது.
கூலி உற்பத்தியாளர்களுக்கு (Job Work) பொருட்கள் கூடுதல் வேலைப்பாடுகளுக்காக அனுப்பினால் எத்தனை நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்?
கூலி உற்பத்தியாளர்களுக்கு பொருட்களை அனுப்பும்போது 1 வருட காலத்திற்குள் (மூலதன பொருட்களாக இருந்தால் 3 வருடத்திற்குள்) திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் விநியோகமாக கருதப்பட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.06.2017

Wednesday, June 28, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 6

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 6
அறிவோம் ஜிஎஸ்டி: மின்னணு ரசீதுக்கு கால அவகாசம் உள்ளதா?
ஜிஎஸ்டி முறையால் வரிதாரர்கள் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்?
தற்போது உற்பத்தி வரி வரம்பு ரூ.1.5 கோடி யாகவும் சேவை வரி வரம்பு ரூ.10 லட்சமாகவும், மதிப்புக்கூட்டப்பட்ட வரி வரம்பு தமிழ்நாட்டில் ரூ.10 லட்சமாகவும் உள்ளது. ஜிஎஸ்டி முறையில் இந்த வரிகள் உள்ளடக்கப்பட்டதாலும் வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளதாலும் ஏராளமானோர் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருள் மற்றும் சேவைக்கான உள்ளீட்டு வரி வசதியை பெறுவதற்கும் ஜிஎஸ்டி பதிவு அவசியம். இத்தகைய காரணங்களால் நிச்சயம் வரிதாரர் எண்ணிக்கை அதிகரித்து அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அமல் செய்வதால் பாதிப்பு எப்படி இருக்கும்?
இந்தியா போன்ற நாடுகள் ஒரு வரி விதிப்புக்குக் கீழ் வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு முன்பு மாறிய நாடுகள் கூட, துவக்கத்தில் பணவீக்கத்தை சந்தித்தன. அதாவது, வாங்கும் பொருட்களின் விலை அதிகரித்தது. ஒரு வரியின் கீழ் வருவதால், தொடர்ந்து கண்காணித்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு நிலைமை சரியாகும். ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் கொண்டு செல்வது எளிதாகும். தினப்படி விற்பனை பொருட்களின் விலை குறையும்.
ஜிஎஸ்டி-யில் ரீஃபண்டு எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
பொதுவாக ரீஃபண்டு 3 மாதத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். அவ்வாறு 3 மாதத்திற்கு மேல் ஆகும் பட்சத்தில் ரீஃபண்டு வட்டியுடன் திருப்பித் தரப்படும்.
ஜிஎஸ்டி உலக சந்தைக்கு எப்படி தயார் செய்கிறது?
சிறு குறு அளவிலான சப்ளையர்கள் ரூ. 20 லட்சம் வரையிலான வரம்பிற்குள் அதே நிலையில் தொடருவார்கள்.
இது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைக்கு இடையே உள்ள விலை இடைவெளியை குறைக்கும்.
வரி தடைகளை நீக்கி இலகுவான வரவு ஏற்படுத்துவதால் பொது சந்தையில் இந்திய பொருளாதாரத்தை உற்பத்திச் சங்கிலியின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் வழிவகுக்கும்.
வியாபாரத்தை எளிதாக்க வழிவகுப்பது - ஒற்றை ஜிஎஸ்டி-க்குள்ளே இருக்கும் பல வரிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை கணிசமாக வரி இணக்கம் மற்றும் பரிவர்த்தனை செலவின செலவுகளைக் குறைக்கும்.
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான, நிலையான, வெளிப்படையான மற்றும் முன்கூட்டிய வரி விதிப்பானது குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை எனில் என்ன செய்வது?
மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை என்றால் அதனை ரத்து செய்து அதற்கான காரணத்தை குறிப்பிடவேண்டும்.
மின்னணு ரசீதுக்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா?
சரக்குகள் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு அதற்கான கால அவகாசத்துக்கு இந்த ரசீது செல்லுபடியாகும். இது தேதி மற்றும் நேரத்தினைப் பொறுத்து கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு சரக்கு பயணிக்கும் தூரம் 100 கி.மீ எனில் அதற்கான கால அவகாசம் 1 நாளாகும். இதற்கான அட்டவணை ஜிஎஸ்டி வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அதிர்வெண் சாதனம் (RFID- Radio frequency identification) என்றால் என்ன?
ரேடியோ அதிர்வெண் அடையாளம் (RFID) என்பது ஒரு பொருளின் இயக்கத்தை கண்காணிக்கும் சாதனம். ஒவ்வொரு வகையைச் சேர்ந்த போக்குவரத்துக்கும் தனிப்பட்ட ரேடியோ அதிர்வு சாதனத்தைப் பெற வேண்டும். அத்தகைய ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பரிமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களின் இயக்கத்துக்கு முன்னர் ரேடியோ அதிர்வு சாதனமும் மின்னணு வழி ரசீதும் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் பொருட்களின் இயக்கத்தை அறிய முடியும். ஆனால் நடைமுறையில் ஒரு பெரிய அதிகாரத்தில் உள்ள ஆணையர் ஒவ்வொரு முறையும் ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பெற்று அதனை உபயோகிப்பது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விலையில்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி
விலையுள்ள பொருட்களுக்குத் தான் ஜி.எஸ்.டி என்பதில்லை, விலையில்லாப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். இது பிரிவு 1 -ல் அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நிரந்தர மாற்றம் அல்லது வியாபார சொத்துகள் எங்கு உள்ளீட்டு வரவு எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த சொத்துக்கள் (permanent transfer or disposition of business asset), சரக்கு மற்றும் சேவைகள் விநியோகம் செய்யும் போது (related party அல்லது district person), ஏஜென்ட்டுக்கு சப்ளை செய்தால் அல்லது சப்ளை ஏஜென்ட்டால் செய்யப்பட்டால், சேவைகளை இறக்குமதி செய்யும் போது என இவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் தனது தொழிலில் பயன்பாட்டுக்காக கணினியை வாங்குகிறார். கணினியின் மூலமாக வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வைக்கிறார். எனவே அது அவருடைய மூலதனச் சொத்தாகவே கருதப்படும். அதற்கான உள்ளீட்டு வரியை ஏற்கெனவே அவர் எடுத்திருப்பார். இந்த சொத்தை அவர் வெளியேற்றம் அல்லது மாற்றம் செய்யும் போது ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் தானமாகக் கொடுக்கும் நபர் அதற்கான ஜி.எஸ்.டி.யை செலுத்த வேண்டியது அவசியம்.
இறக்குமதி செய்யப்படும் போது ஜிஎஸ்டி-ன் தாக்கம் என்ன?
தற்போது இறக்குமதியின் போது சுங்க வரி, கூடுதல் மாற்றுவரி(CVD), மற்றும் சிறப்பு கூடுதல் வரி (SAD) வசூலிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் போது வசூலிக்கப்படும் கூடுதல் மாற்று வரி (Additional duty CVD) மற்றும் சிறப்பு கூடுதல் வரிக்கு (Special additional duty SAD) மாற்றாக ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உள்ளீட்டு வரி வரவு எடுத்துக் கொள்ளலாம்.
மின்னணு வர்த்தகம் செய்பவர்கள் பதிவு முறை என்ன?
ஆன்லைன் மூலமாக (இணையதளங்கள், செயலிகள்) மூலமாக நடக்கும் வர்த்தகங்களையே மின் வர்த்தகம் (இ-காமர்ஸ்) என்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மின் வர்த்தகத்துக்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று மிகப் பெரிய சந்தை வாய்ப்பினைத் தன்வசம் வைத்துள்ளது. இந்த மின் வர்த்தகத்தினை வலைதளத்தின் மூலமாக செயல்படுத்துபவர் ஆபரேட்டர். உதாரணமாக அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களைச் சொல்லலாம். இது மாதிரியான வலைதளங்கள் மாறிவரும் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப வியாபாரம் பெருக உதவியாக இருக்கிறது. மேலும் இந்த வலைதளங்களில் வியாபாரம் செய்யும் விநியோகஸ்தர்களுக்கும் கட்டாய பதிவிற்கு உட்படுவார்கள். மின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி விலக்கு கிடையாது.
இந்த வலைதளத்தினை நடத்தும் ஆபரேட்டர்கள் என்பவர் தகவல் தொடர்பு சாதனம் மூலம் ஒரு சாத்தியமிக்க வாடிக்கையாளரை ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பெயரின் மூலமாக தொடர்புகொண்டு சேவை அளிப்பார். உதாரணமாக ஒலா கேப் (OLA CABS) நடத்துபவரைச் சொல்லலாம். இவர்களுக்கு என்ன விநியோக மதிப்பு இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.06.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 5

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 5
அறிவோம் ஜிஎஸ்டி: விற்பனையில்லாத காலத்திலும் வரித்தாக்கல் செய்ய வேண்டுமா?
மின்னணு வரி ரசீது உபயோகப்படுத்தப் படுவதால் சோதனைச் சாவடி (செக் போஸ்ட்) சோதனை குறையும் என்பது சாத்தியமா?
50,000 ரூபாய்க்கு மேல் சரக்கு ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் கணிணி மூலம் மின்னணு-வழி (E-way) பில் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் இப்போது உள்ள மாநில எல்லைகளில் சோதனை சாவடி (Check Post) கதவுகள் இனி இருக்காது. ஆனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பறக்கும் படை, வாகனங்களைக் கண்காணிக்க வாய்ப்புகள் உண்டு. ஜி.பி.எஸ் மூலமாக கண்காணிக்கவும் செய்வார்கள்.
தற்போது அமெரிக்காவில் சுமார் 740 கிலோமீட்டர் வரை ஒரு லாரி பயணிக்க முடிகிறது. ஆனால் இந்தியாவில் செக்போஸ்ட் காரணமாக ஒரு லாரி நாளொன்றுக்கு 230 கிலோமீட்டர் வரைதான் பயணிக்க முடியும் என்று ஒர் ஆய்வறிக்கை சொல்கின்றது. இனி சோதனைச் சாவடி முறை நீங்குவதால் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் சாலை வசதிகளும் மேம்படுத்தப்படும் போது சோதனைச் சாவடி முறை நீக்கப்படுவதும் உற்பத்தி அதிகரிக்க கைக்கொடுக்கும். மேலும் அழுகக்கூடிய பொருட்களை தேங்காமல் தடுக்கப்படுவதால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
தொகுப்பு வரித்திட்டத்தில் வணிகம் செய்யும் வர்த்தகர் உள்ளீட்டு வரி எடுக்கும் நோக்கத்திற்காக சாதாரண ஜிஎஸ்டி வரிமுறைக்கு தனது வர்த்தகத்தை மாற்ற இயலுமா? ஆம் எனில் வழிமுறைகள் என்னென்ன?
வர்த்தகர் உள்ளீட்டு வரி எடுக்கும் நோக்கத்திற்காக தொகுப்பு வரித் திட்டத்தில் இருந்து சாதாரண வரிமுறைக்கு தனது வணிகத்தை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தொகுப்பு வரித்திட்டத்தை உபயோகிக்க முடியாது.
தொகுப்பு வரித் திட்டத்திற்கு மொத்த விற்பனையை கணக்கிடும் வழிமுறை என்ன?
ஒட்டுமொத்த விற்பனை என்பது அனைத்து விநியோகங்களின் மதிப்பு (வரி விதிப்புக்குட்பட்ட மற்றும் உட்படாத விநியோகங்கள் + விலக்கு அளிக்கப்பட்ட விநியோகங்கள்+ஏற்றுமதிகள்). அதில் CGST, SGST, IGST-ன் கீழ் செலுத்தப்பட்ட வரிகள்+உள்ளே வந்த விநியோகத்தின் மதிப்பு+ அதே நிரந்தர கணக்கு எண் உள்ள நபரின் நேர்மாறான வரி விதிப்புக்குள்ளான விநியோகங்களின் மதிப்பு சேராது.
நான்கு வேறுவேறு தொழில் புரியும் வர்த்தகர் ஒரே நிரந்தர எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும் சாதாரண ஜிஎஸ்டி வரிமுறை என இரண்டையும் பயன்படுத்தலாமா?
ஒரே நிரந்தர எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும் சாதரண ஜிஎஸ்டி இரண்டையும் பயன்படுத்த முடியாது. ஒரு நிரந்தர எண் மூலம் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.
இயற்கை காரணங்களால் பொருட்கள் விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் அவருக்கு வரியிலிருந்து தள்ளுபடி அளிக்கப்படுமா?
வரி செலுத்தப்பட வேண்டியிருந்தால் மட்டுமே வரி தள்ளுபடி அளிக்கப்படும். அதாவது வரி செலுத்த வேண்டிய நிகழ்வு ஏற்பட வேண்டும். விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் வரி செலுத்த வேண்டிய நிகழ்வு ஏற்படாது. ஆகையால் தள்ளுபடி கிடையாது.
சரக்கு குறியீட்டு எண் (HSN) ஏன் அவசியமாகிறது?
எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதை எளிதில் கண்டுபிடிக்கவும், செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதனைக் கண்டறியவும் கொண்டு வந்துள்ள நடைமுறையே சரக்கு குறியீட்டு எண் (HSN). ஜிஎஸ்டிக்காக ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முதல் எட்டு இலக்கு எண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சில பொருளுக்கு இரண்டு இலக்க எண்களும், பி2பி (B2B) தொழில்களுக்கு நான்கு இலக்கு எண்கள் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் அனைத்து தகவல்களும் (data base) மிகச் சரியாக இருக்கும். HSN குறியீடு மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தனித்துவம் அடையாளம் காணப்படும்.
ரூ.1.5 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை உற்பத்திக்கு மேல் இரண்டு இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்திக்கு 4 இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். இது போகப்போக எட்டு எண்களாக அதிகரிக்கப்படும். ஆரம்பத்தில் நடை முறையை எளிதாக்கவே இரண்டு இலக்க எண்களில் இருந்து துவக்கப்படுகிறது. மத்திய கலால் வரி செலுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே இந்த நடைமுறை உள்ளது. பிற வர்த்தகர்களுக்கு இது புதிதாக இருக்கும்.
பதிவு பெற்ற நபர் விற்பனையில்லா காலகட்டங்களில் வரித்தாக்கல் செய்ய வேண்டுமா? ஏன்?
விற்பனையில்லா காலத்திலும் பதிவு பெற்ற நபர் வரித்தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து 6 வரித் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி பதிவு எண் ரத்து செய்யப்படும். உதாரணமாக தொகுப்பு முறையில் வணிகம் செய்பவர் காலாண்டு வரித்தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து 6 காலாண்டுகளுக்கு செய்யாவிடில் பதிவு ரத்தாகிவிடும்.
ஒருவர் சப்ளைக்கு நேர்மாறான வரியாக (Reverse Charge Mechanism) செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ளலாமா? எப்படி?
நேர்மாறான வரியை செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ள முடியாது.
ஜிஎஸ்டி-ன் கீழ் ஏற்றுமதி எவ்வாறு கருதப்படும்?
ஏற்றுமதி செய்யப்படும் விநியோகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பூஜ்ய விகிதங்களாக கருதப்படும். சரக்குகள் அல்லது சேவைகள் ஏற்றுமதிக்கு வரி செலுத்த வேண்டும். இருந்த போதிலும் உள்ளீட்டு வரி வரவு உள்ளது. இதை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது அல்லது வெளியீட்டு வரி இருந்தால் அதில் சமன் செய்து கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த தொகுப்புமுறை திட்டம் பொருந்தாது?
உணவு விடுதி தவிர எந்த சேவைக்கும் இந்த திட்டம் கிடையாது.
இரு வேறு மாநிலங்களுக்குள்ளாக விற்பனை செய்யும் போது இந்தத் திட்டத்தினை எடுத்துக் கொள்ள முடியாது.
மின்னணு வர்த்தகம் மூலம் பொருட்களை வழங்குபவர்கள் (உதாரணம் பிளிப்கார்ட், அமேசான் போன்று மின்னணு வர்த்தகம் செய்பவர்கள்).
சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள்
சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரிக்குட்படாத பொருட்களை வழங்குபவர்கள்.
தொடரும்..
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.06.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4
அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன பயன்?
தொழில்நுட்ப வசதி இல்லாத சிறு விற்பனையாளர்கள் வரித் தாக்கல் செய்வது எப்படி?
வரித் தாக்கல் செய்வதற்கு நேரடியாக தொழில்நுட்ப வசதி இல்லையென்றாலும், அவர்களுடைய தேவைகளுக்கேற்ப பிறரது உதவுடன் வருமான வரி தாக்கல் தயாரித்தல் (TRPS) இணையதளத்தை பயன்படுத்தலாம். ஒரு வரி செலுத்தும் நபர் TRPS இணையதளத்தில் உள்ள படிவங்களில் தங்களது தகவல்களை உள்ளீடு செய்தால் வரித் தாக்கல் விவரங்களை தயார் செய்துவிடலாம். TRPS ல் தயார் செய்யப்பட்ட விவரங்களில் தவறுகள் இருந்தால், அதற்கான பொறுப்பு வரி செலுத்துபவரையே சேரும்.
இதுதவிர இதற்காக பதிவு பெற்ற உதவி மையங்களிலும் (Facilitation Centres) தாக்கல் செய்யலாம். இந்த உதவி மையங்களில் வரி செலுத்துகை படிவங்களை வரி செலுத்துபவர் களுக்கு அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்தபின் அடையாளக் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றம் செய்வார்கள். பதிவுக்கு பிறகு இவர்கள் தரும் ஆவணங்களை வாடிக்கையாளர் பத்திரப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா?
விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் சில குறிப்பிட்ட முக்கியமான தகவல்களை திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு மட்டுமே அனுமதியுண்டு. எனினும் ஜிஎஸ்டி பதிவிற்கான இணையதளம் மூலம் பதிவு சான்றிதழின் இதர தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லாதவர்களும் பதிவு செய்ய வேண்டுமா?
ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லாத நபர்கள் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும் அவசியமானது. தாமாகவே முன்வந்து பதிவு செய்வதன் மூலம் சட்ட முறைக்குள் வருபவர் ஆகிறார். வரி செலுத்தும் நபருக்குரிய சட்ட விதிமுறைகள் இவருக்கும் பொருந்தும். எதிர் காலத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
வரி செலுத்துவதற்குட்பட்ட சரக்கு, சேவைகளை விற்பவர்கள் அனை வரும் பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஜிஎஸ்டி சட்டப்படி சரக்கு வழங்குதல் / அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு மொத்த பரிவர்த்தனை ரூ. 20 லட்சத்துக்கு மேற்படும்பட்சத்தில் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 279A(4)(g)யின் படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டாலும் பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் பதிவு செய்ய தேவையில்லை?
தான் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. தவிர ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரியில்லாத பொருட்களை அல்லது மொத்தமும் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து வர்த்தகத்தையும் பதிவின்கீழ் கொண்டு வருவதை ஜிஎஸ்டி அறிவுறுத்துகிறது.
பல மாநிலங்களில் தொழில் செய்பவர் ஒரே ஒரு இடத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளலாமா?
ஜிஎஸ்டி சட்டம் இதை அனுமதிக்கவில்லை. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டப்படி ஒரு நபர் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அவர் எந்தெந்த மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறாரோ அந்தந்த இடத்தில் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத வர்த்தகர் வரியை வசூலிக்க முடியுமா? இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியுமா?
ஜிஎஸ்டி பதிவு பெறாத வர்த்தகர் அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க முடியாது. அதுபோல ஜிஎஸ்டிக்கு செலுத்திய இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை பெறவும் உரிமை இல்லை.
ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன வகையான பயன் கிடைக்கும்?
சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு முறைப்படுத்தப்படுகிறது. வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப்படுகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன.
சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறார். உள்ளீட்டு சரக்கு / சேவைகளுக்கான வரியை, சரக்கு / சேவைகள் வழங்கலுக்கான வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப்படி வரியை வாங்கலாம். ஜிஎஸ்டி சட்டப்படி அறிவிக்கப்படும் பலன்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பெறுநர் சரக்குகளை வாங்காமல் திருப்பி அனுப்பினால் என்ன செய்வது?
பெறுநர் சரக்கை திருப்பி அனுப்பும்பட்சத்தில், சரக்கை அனுப்பிய நபர் அந்த சரக்குகளின் விவரங்கள் அடங்கிய கடன் குறிப்பை (credit note) அவருக்கு அனுப்ப வேண்டும். இந்த கடன் குறிப்பை (credit note) வழங்கிய மாதத்தின் வருமான வரி தாக்கலில் இந்த விவரங்களை அனுப்புநர் சேர்க்க வேண்டும்.
பெறுநர் தன்னுடைய வரி தாக்கல் கணக்கிலோ அல்லது இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களில் இதை குறிப்பிடுவார். பெறுநருக்கும், அனுப்புநருக்கு மான இந்த கடன் குறிப்பு (credit note) விவரங்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த தகவல்கள் இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.
சரக்குகளை போக்குவரத்து மூலமாக அனுப்பும்போது, அந்த போக்குவரத்து தனி சேவையாக கணக்கிடப்பட்டால் அதற்கு யார் வரி செலுத்துவது?
ஒரே மாநிலத்துள்ளான அனுப்புகை என்றால் அந்த சரக்கை பெறுபவர் அல்லது அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப் படும். ஒருவேளை அவர் பதிவு செய்யாம லிருந்தால் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு எங்கே கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும்.
அதேபோல சர்வதேச பொருள் போக்குவரத்து சேவைகளைத் தவிர, உள்நாட்டு போக்குவரத்து சேவைகளைப் பொறுத்தவரையில் அந்த பொருள் சேரும் இடம்தான் சேவை வழங்கும் இடமாகக் கணக்கிடப்படும்.
கூரியர் மூலமான சேவை எனில் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் / சேவை வழங்கும் இடமாகக் கணக் கிடப்படும். அதேநேரத்தில் இப்படி கொடுக்கும் போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும்.
தொடரும்..
ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.06.2017