disalbe Right click

Monday, February 26, 2018

பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத உயிலுக்கான  நடைமுறை :
உயிலை எழுதி வைத்தவர் இறந்து விட்ட பிறகு, அதை செல்லுபடியாக்க உயில் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நபர் அந்த உயிலின் நகலை எடுத்துக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். மேலும் உயில் எழுதியவரின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.
அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதி வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக அரசு ஆவணமான "ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை" போன்ற முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீங்கள் தான் இன்னார் என சார்பதிவாளர் விசாரணை நடத்தி உறுதி செய்வார். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்படாத உயிலை பதிவு செய்வார். பிறகு சார்பதிவாளர் தன்னுடைய கையெழுத்து போட்டு அந்த உயிலின் நகலை தருவார். அந்த உயிலை வாங்கி கொண்டு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும்.
உயிலை எழுதி வைத்தவர் பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்கு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு பதிவு விதி 69 மற்றும் பதிவுச் சட்டம் பிரிவு 40 கூறுகிறது.
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மனு அளிப்பவரின் வாக்குமூலத்தை சார்பதிவாளர் பெற்று தமிழ்நாடு பதிவு விதி 69-ன் படி விசாரணை நடத்துவார்.
உயிலின் படியும், மனுதாரரின் வாக்குமூலத்தின் படியும் யார் யாருக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட வேண்டுமோ அவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.
உயில் எழுதி வைத்தவர் குடியிருந்த கிராமம், சொத்து இருக்கும் கிராமம், உயில் சம்பந்தப்பட்டவர்கள் குடியிருக்கும் கிராமம் ஆகிய இடங்களில் விசாரணை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.
உயில் எழுதி வைத்தவர் இருந்த மாவட்டம், அவரது சொத்து இருக்கும் மாவட்டம் ஆகிய குறித்து அரசிதழில் விசாரணை அறிவிப்பு செய்யப்படும். நிலை ஆணை எண் 603-ல் கண்டபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு அறிவிப்பு அனுப்பப்படும்.
உண்மையாகவே இறந்தவர் தான் உயில் எழுதி வைத்துள்ளாரா? இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா? என்பதை தீர்மானிக்கவே அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
உயிலை பதிவு செய்யாமல் இறந்து விட்ட ஒருவரின் உயிலை பதிவு செய்ய அவரது ஏஜென்ட் யாரும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. பதிவுச் சட்டம் 41(2)ன்படி யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ அவர் தான் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அந்த உயிலால் பயன்பெறுவர் மைனராக இருந்தால் அவரது கார்டியன் அவருக்காக உயிலை சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம். (நிலை ஆணை எண் 598)
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயில் எழுதலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் உயில் எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டவர் மைனராக இருந்தாலும் அந்த உயிலையும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (நிலை ஆணை எண் 619).
உயில் எழுதி வைத்தவர் வசித்த இடம், உயிலில் கையொப்பம் செய்த இடம், இதற்கான அதிகார வரம்பு எல்லை ஆகியவை பரிசீலனை செய்யப்படும்.
ஒருவேளை இதெல்லாம் இல்லாத நிலையில் சார்பதிவாளர் அது குறித்து மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை அனுப்புவார். (நிலை ஆணை எண் 599)
பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்து இறந்த ஒருவருடைய உயிலை ஓராண்டுக்கு பிறகு தாக்கல் செய்தாலும் மாவட்ட பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். (நிலை ஆணை எண் 599)... 
நன்றி : Thiruvarur raja nandhini
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018

குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை :

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை
பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதார் கண்டிப்பாக வேண்டும் என்ற நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கென்று  தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பால் ஆதார் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அட்டையில் என்ன என்ன இருக்கும்?
இந்த அடையாள அட்டையில் குழந்தைகளின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்காது. குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் எண்கள் ஆகியவற்றை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் பிறந்த நாள், பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரி சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் ஆதார் அட்டை அவர்களுக்கு வழங்கப்படும்ப்ளூ வண்ணத்தில் இந்த பால் ஆதார் அட்டை இருக்கும்.
ஐந்து வயது முடிவடைந்த பிறகு....?
குழந்தைகளுக்கு 5 வயது முடிந்த பிறகு அதனுடைய பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும். பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இந்தக் குழந்தைகள் 5 வயதை நிறைவுசெய்த பின்அவர்களின் கை விரல் ரேகைகருவிழிப் படலம் பதிவு செய்து பெரியவர்களுக்கு வழங்கப்படுகின்ற அட்டையைப் போல், புதிய ஆதார் அட்டை அவர்களுக்குத் தரப்படும்  
பிறப்பு சான்றிதழ்களுடன் இணைப்பு
குழந்தைகளின் 5, 10 மற்றும் 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள அட்டையுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும். . தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு -சேவை மையங்களில் செயல்பட்டு வருகின்ற ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018 

Sunday, February 25, 2018

சான்றிதழ்களில் இருக்கின்ற தவறுகளைத் திருத்த

மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களில் இருக்கின்ற பெயர், பிறந்த நாள், ஜாதி மற்றும் ஏனைய தவறுகளைத் திருத்த விண்ணப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்று  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். அது பற்றிய கடிதத்தை இணையத்திலிருந்து எடுத்து கீழே பதிவிட்டுள்ளேன். படித்து பயன் பெறுங்கள்!
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.02.2018 




நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு  Counsel Sree

அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்

அரசுக் கடிதங்களில் உள்ள எண்கள் பற்றி...
மாநில அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்: என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.      அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. 
  • . எண் என்றால், நடப்புக் கணக்கு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • .வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
  • நே.மு. எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது  நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்
மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?
மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018 

மத்திய அரசின் தொழிற் கடன் திட்டம்

பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் 
நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே தொழில் ஒன்றை செய்ய விரும்புகிறீர்களா? அல்லது முழுநேர வேலையாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறீகளா? அல்லது வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காக இந்திய அரசு ஒரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா என்ற இந்தத் திட்டம் வேலை இல்லாமல் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் இளைஞர்கள் கடன் பெற்று உற்பத்திவணிகம்சேவை   அல்லது டிரேடிங்  நிறுவனம்    போன்றவற்றைத் துவக்கலாம்
இந்த திட்டத்தில் என்ன விசேஷம்?
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் வாங்கும் போது உங்களது சம்பளம் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோர்  சரியாக இருக்க வேண்டும். தொழில் துவங்கி நடத்துவதற்கான திட்டம் (Project Report) முறையாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்ட கடன் உங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான தகுதிகள் என்ன?
  1. விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 10 வருடங்கள் விலக்கு உண்டு.  
  2. நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குறைந்தது 3 வருடங்கள் வரை தொடர்ந்து குடி இருந்து இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
  3.  குறைந்தது 8வது வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்
  4. மத்திய அரசு சார்ந்த டிரேடிங் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  5.  விண்ணப்பதாரருடைய மற்றும்  அவரைச் சார்ந்தவர்களுடைய,  பெற்றோர்களுடைய   வருட வருமானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது
யாருக்கெல்லாம் தகுதி கிடையாது?
  1. பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் பெற்று, அதனைச் செலுத்தாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதைப் போல இருக்கும் வேறு அரசு திட்டங்களின் கீழ் ஏதாவது கடன் வாங்கி இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது. 
  2.  விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது.    விவசாயப் பொருட்கள் மூலமாக நடைபெறும் வணிகத்திற்குக் கடன் வழங்கப்படும்
அளிக்கப்படும் கடன் தொகை எவ்வளவு?
வணிகத் துறை என்றால் ரூ. 2 லட்சமும், சேவை துறை என்றால் ரூ. 5 லட்சமும்,  தொழிற்துறை என்றால்  ரூ. 5 லட்சமும், கூட்டு நிறுவனங்கள் என்றாலோ அல்லது இரண்டு அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் துவங்கும் போது 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு? 
இடத்திற்குத் தகுந்தாற்போல், காலத்திற்குத் தகுந்தாற்போல், வங்கிக்கு தகுந்தாற்போல் இது மாறக்கூடியது. விண்ணப்பிக்கும் போது இதனை அங்கு விண்ணப்பதாரர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது நிர்வாகியை நீங்கள் அணுகுங்கள்.  அவர் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?  மற்றும் கடன் சம்பந்தமான விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018