disalbe Right click

Tuesday, May 8, 2018

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பற்றி....

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பற்றி....
ஊழல் மனப்பான்மை
1,85,591 கோடி நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு, கர்னாடகம் 2,00,000 கோடி வக்பு வாரிய நிலமோசடி, 10,000 கோடி உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், 1,76,000 கோடி 2G அலைக்கற்றை முறைகேடு, உத்தரப்பிரதேசம் 35,000 கோடி உணவு தானிய ஊழல், 3,500 கோடி காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மட்டுமன்றி பட்டா சிட்டா மாறுதல்களுக்கு வாங்கும் நூறு இருநூறு ரூபாய் ஊழல்களெல்லாம் நம் அரசியல்வாதிகள், அரசு பணியாளர்களின் அடையாளமாக ஆகிவிட்டது.
அக்காலங்களில் சைக்கிளில் வரும் காவலரைக் கண்டு பெரும் செல்வந்தரும் மரியாதை கொடுப்பர். இக்காலங்களில் இந்திய காவல் பணி அதிகாரிகள் கூட குற்றவாளி அல்லது ஒருவனது செல்வம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என பார்க்காமல் பணமு நிறைந்தவனுக்கு கொடுக்கும் மரியாதையும், சலுகைகளும் மிக அதிகம் அதனால் வந்த அவலங்களும் மிக அதிகம்.
அரசு காரியங்களை நிறைவேற்றுவதற்குக் கொடுக்கப்படும் லஞ்சத்தொகையை விட, அரசு, மக்கள் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையில் முழுதாகவோ, சிறு பகுதியோ தான் மக்கள் பணிக்குச் செல்வதாக சொல்கிறார்கள்.
ஒரு டெண்டரை எடுக்கும் போதே 20% கொடுத்து டெண்டர் எடுத்து, துறை தலைவர், பொறியாளர், உதவி பொறியாளர், அலுவல உதவியாளர், லாபம் என கொடுத்தது போக மீதி அத்திட்டத்திற்கு செலவழிக்கப் படுகிறது என்றால் அத்திட்டத்தின் நிலை என்னவாகுமோ?
லஞ்ச, லாவண்ய வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அரசு பணியாளர்களை நீதிமன்றம் விடுவித்துவிடுவதும், லஞ்சம் மற்றும் ஊழல் துறை அதிகாரிகளுக்குத் துணைபோவது, தனக்கு வரும் புகார்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவிப்பது போன்ற கேடுகளும் உண்டு.
கவிஞர் கா.மு. ஷெரிஃபின்;
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
உடுமலை நாராயண கவியின்;
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனேகாசு 
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனேபாடல் வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
உளவியல் நோக்கில் லஞ்சம் பெறுவதும், அதை ஊக்குவிப்பதும், காரியம் ஆக பிறருக்கு லஞ்சம் அளிப்பதும் மக்களிடம் உள்ள குறையே என்றால் அது மிகையாகாது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து பெரும் பங்களா, ஆடம்பரக் கார், கணக்கற்ற சொத்து சேர்ப்பவர்களை நிந்தித்தால் ஒழிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் மத்தியில் ஊழல் எண்ணத்தை ஒழிக்க முடியாது. ஊழல் தடுப்புச் சட்டம்,1988 இல் உள்ள முக்கிய பிரிவுகளை மட்டும் பார்ப்போம்.
ஊழல் தடுப்புச் சட்டம்,1988 The Prevention of Corruption Act, 1988
அரசு பணியாளர் [பிரிவு.2(c)]
Public servant
அரசு பணியாளர் என்பவர்;
i. அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது பொதுக்கடமை எதனையும் புரிவதற்காக அரசாங்கத்தால் கட்டணங்களாகவோ, தரகராகவோ பணியூதியம் வழங்கப்படும் நபர் எவரும்
ii. உள்ளாட்சி அமைப்பின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் எவரும்
iii. மத்திய,மாகாண, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
iv. நீதிமுறை அலுவல் காரணமாக சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்ட நபர்
v. நீதி நிர்வாகம் தொடர்பாக கலைப்பதிகாரி, சொத்துப் பேணுநர் அல்லது ஆணையர் நபர் எவரும்
vi. நீதிமன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவு செய்வதற்காக, அறிக்கை செய்வதற்காக குறித்தனுப்பப்பட்டவர்
vii. தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
viii. பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
ix. மத்திய, மாநில, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெற்று அவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்க தலைவராக, செயலாளராக இருக்கும் நபர்
x. பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்பு தேர்வு நடத்தும் தெரிவுக்குழுவில் உறுப்பினர் எவரும்
xi. பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும்
xii. மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ, நிறுவப்பட்ட அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
ஆவார்.
அரசுப் பணியாளர் எப்பொழுது ஊழல் குற்றம் செய்ததாக கருதப்படுவார் [பிரிவு13]
Criminal misconduct by a public servant
) அரசுப் பணியாளர் ) தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ பணி சட்டப்படியான பணிஊதியம் அல்லாத கைக்கூலி எதிலாகிலும் தூண்டுகோலாகவோ வெகுமதியாகவோ எவரிடமிருந்தும் வாடிக்கையாக ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெறுவாராயின், ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டு பெறுவதற்கு முயல்வாராயின்
) தம்மால் செய்யப்பட்டிருக்கிற அல்லது செய்யப்படவிருக்கிற நடவடிக்கை அல்லது எதனோடும் தொடர்பு கொண்டிருக்கிற அல்லது தொடர்புடையவராக அநேகமாகத தொடர்பு கொண்டிருந்திருக்கக் கூடுமென்று தாம் அறிந்துள்ள அல்லது தம்முடைய அல்லது தாம் எவர் கீழ் பணிபுரிகிறாரோ அந்த அரசுப் பணியாளருடைய அலுவல்முறைப் பதவிப் பணிகளுடன் தொடர்பு எதுவுமுடைய எவரிமிருந்துதேனும் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ மறு பயனுக்காகவோ விலையுயர்ந்த பொருள் எதையேனும் வழக்கமாக தாம் ஏற்பாராயின் அல்லது கேட்டுப் பெறுவாராயின் அல்லது ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின்
) அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம் கட்டாளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து எதனையும் நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ தாம் கையாடல் செய்வாராயின் அல்லது பிறவாறு தமது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின் அல்லது பிறர் எவரையும் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின் அல்லது
I. ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின் அல்லது
II. அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின், அல்லது
III. அரசுப் பணியாளராக பதவி வகிக்கும் போது பொது நலன் ஏதுமின்றி எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுவாராயின், அல்லது
அவரோ, அவர் சார்பில் வரும் எவருமோ, அவருடைய வருமானத்தின் தெரிநிலையான வழிவகைகளுக்குப் பொருந்தாத விகிதத்தில் பணம் தொடர்பான வழிவகைகளையோ அல்லது சொத்தையோ உடைமையில் கொண்டிருந்த அல்லது பதவி காலத்தில் கொண்டிருந்து, அதற்கு தெளிவுறக் கணக்கு காட்ட முடியவில்லையாயின் குற்றச் செயலை செய்ததாக சொல்லப்படுவார்.
அரசு பணியாளர் கைகூலி பெறுதல் [பிரிவு.7]
அரசு பணியாளர் எவரிடமும் அத்தகைய அரசுப் பணியாளர் என்ற முறையில் அலுவல்முறைச் செயல் எதனையும் செய்ய அல்லது செய்யாமல் விட அல்லது எவருக்கேனும் சலுகையோ, சலுகையின்மையோ காட்ட அல்லது காட்டாமல் விட அல்லது நன்மை அல்லது தீமை செய்வதற்கு அல்லது செய்ய முயல்வதற்கு வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கெட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
விளக்கங்கள்...
)அரசு பதவியை வகிக்க போவதாக நம்பச் செய்து ஏமாற்றி கைகூலி பெற்றால் இப்பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள குற்றத்தை செய்தவராகார்.
)கைக்கூலி என்பது பணத்தால் மதிப்பிடத்தக்க கைகூலியை மட்டுமே குறிப்பதன்று.
)சட்டப்படியான பணியூதியம் என்பது அரசால் அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்படுகின்ற பணியூதியங்கள் அனைத்தும் அடங்கும்
)’செய்வதற்கு தூண்டுகோல் அல்லது வெகுமதிஎன்பது கைகூலியை பெற்றுக்கொள்கிறவரை குறிக்கும்
)அரசாங்கத்துடன் தனக்குள்ள செல்வாக்கு, அந்த நபரை நம்பி கைகூலி கொடுப்பதற்கு தூண்டுவதால் அவர் குற்றம் செய்தவராகிறார்.
அரசு பணியாளர் ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறுதல்[பிரிவு.8]
அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ ஊழல் அல்லது சட்டவிரோதமாக கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
அரசு பணியாளர் சொந்த செல்வாக்கை செலுத்த கைகூலி பெறுதல்[பிரிவு.9]
Taking gratification, for exercise of personal influence with public servant
அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
ஊழல் குற்றச் செயலுக்கு அரசு பணியாளர் உடந்தையாயிருப்பதற்கு தண்டணை [பிரிவு.10]
அரசு பணியாளராய் இருந்து ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறவும், சொந்த செல்வாகை செலுத்த கைகூலி பெறவும் உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
விலைமதிப்புள்ள பொருளை பெறுதல் [பிரிவு.11]
அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ விலை உயர்ந்த பொருள் எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருத்தல்[பிரிவு.12]
பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் கொண்டித்தல்[பிரிவு.14()
பிரிவு 8,9,12 இன் படி குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் செய்கிற எவரும் 2 ஆண்டுக்கு குறையாத 7 ஆண்டுகள் வர நீடிக்கலாகும் சிறைதண்டணையும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவார்.
அபராதம் நிர்ணயப்பதற்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை[பிரிவு.16]
அபராதம் நிர்ணயப்பதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்குற்றச் செயலை இழைத்ததன் மூலம் பெற்றிருக்கும் சொத்தின் மதிப்பினையும், கணக்கு காட்ட இயலாமலிருக்கும் சொத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்
குற்ற முயற்சிக்குத் தண்டணை[பிரிவு.15]
ஊழல் குற்றச் செயலை இழைக்க முயல்கிற எவரொவரும், மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கலாகும் சிறை தண்டணையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.
ஊழல் புகார்களை அளிக்க முன்வரும் பொதுமக்கள் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு தங்களது புகார்களை அனுப்பலாம்.
CENTRAL VIGILANCE COMMISSION
Satarkata Bhavan , A-Block
GPO Complex , INA
New Delhi - 110 023

THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),
RAJA ANNAMALAIPURAM,
CHENNAI – 600 028.
Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 / 9445048999 / 9445048990
By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
நன்றி : தினமணி (சட்டமணி) நாளிதழ் - 30.04.2018

Monday, April 30, 2018

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான கையேடு


தமிழக அரசின் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள
இரு சக்கர வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகள் கையேடு

Image may contain: text

No automatic alt text available.
No automatic alt text available.

Image may contain: text

No automatic alt text available.

No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: text

Image may contain: text

Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.

Image may contain: text

Saturday, April 28, 2018

நீதிமன்றத்தில் ஆவண நகல்களைப் பெற.....

நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்கள்
கடந்த வாரத்தில் ஒரு நாள், எனது நண்பரின் கடைக்குச் சென்றிருந்தேன். அவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் ஜெராக்ஸ் கடையையும் இணைத்து நடத்தி வருகிறார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்திருந்தார். எனது நண்பர் அவர் கொண்டு வந்த ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது அவற்றை நான் கவனித்ததில் அது ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு நகல் என்பதையும், அவரை கவனித்ததில் மிகவும் ஏழ்மையானவர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எவ்வளவு செலவு?
  • அதைப் பெறுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது.
  • ஏனென்றால், எனது வழக்கில் பார்ட்டி இன் பெர்சன் ஆக ஆஜராகி அந்த வழக்கின் உத்தரவு ஆவணங்களை அந்த சமயத்தில்தான் நான் பெற்றிருந்தேன்.
7 பக்க உத்தரவு நகலைப் பெற்றுத் தருவதற்கு வழக்கறிஞர் கட்டணம் ரூ.1300
  • இதற்குள் ஜெராக்ஸ் எடுத்து முடிக்கப்பட்டு அதற்கு கூலியாக எனது நண்பர் அவரிடமிருந்து 14 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
  • அங்கிருந்து கிளம்பிய அவரிடத்தில், யார் மூலமாக இந்த உத்தரவு நகலைப் பெற்றீர்கள்?, இதனைப் பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேட்டேன்.
  • அவர் அவரது வழக்கறிஞர் மூலமாக பெற்றதாகவும், அதற்காக அவருக்கு 1300 ரூபாய் கொடுத்ததாகவும் வருத்தத்தோடு கூறினார்.
  • அதிர்ச்சி அடைந்தேன் நான்.
  • வழக்கு சம்பந்தமான ஆவண நகல்களை நாமே மனுச் செய்து பெற முடியும் என்பதையும், அதற்கு செலவு அதிகபட்சம் 50 ரூபாய்தான் ஆகும் என்பதையும் அவரிடத்தில் எடுத்துக் கூறினேன்.
  • இது பற்றி ஒன்றுமே தனக்குத் தெரியாது என்றும், இது போன்ற ஒரு சூழ்நிலை இனி ஏற்பட்டால் என்னை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறி எனது முகவரியை பெற்றுச் சென்றார்.
  • நமது மக்கள் சட்ட அறிவு இல்லாத காரணத்தால், எவ்வளவு நஷ்டம் அடைகிறார்கள் என்ற கவலையையும், நமது மாநிலத்தில் சட்ட விழிப்புணர்வு இலவச முகாம்களை நடத்தி வருகின்ற ”லா பவுண்டேஷன், சென்னை”-யின் நிறுவனர் நண்பர் சரவண அர்விந்த் போல, எங்கள் பகுதியிலும் இலவச சட்ட விழிப்புணர்வு நடத்த வேண்டிய அவசியத்தையும் அந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்தியது.
  • மேலும், இந்த பதிவை போடத் தூண்டியது அந்த நிகழ்ச்சிதான்!
நகல்களை எந்த வழிகளில் பெறலாம்?
  • பொதுவாக, அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களின் நகலை பொதுவாக நாம் இரண்டு வழிகளில் பெறலாம்.
  • 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ், பத்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை மாவட்ட கருவூலம் மூலம் செலுத்தி தபால் மூலம் அவைகளைப் பெறலாம்.
  • 2. இந்திய சாட்சியச் சட்டம்
  • இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 76ன் கீழ் ஐந்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை செலுத்தி, நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அவைகளைப் பெறலாம்.
நீதிமன்றங்களில் உள்ள ஆவண நகல்களைப் பெற......
  • மேற்கண்ட முறைகளில் எவரும், பதிவுத்துறையில் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களைப் பெற முடியாது.
  • பதிவுத்துறைக்கென்றும், நீதிமன்றத்திற்கென்றும் சில வழிமுறைகளை நமது அரசு வகுத்து வைத்து உள்ளது.
  • அதன்படிதான் அவர்களிடமிருந்து நாம் ஆவண நகல்களைப் பெற முடியும்.
  • இதனைப் பெறுவதற்கு ஆங்கிலத்தில் C.A என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்கிறார்கள். அதன் விரிவான வார்த்தை Copy Application ஆகும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களை அந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர்கூடப் பெறலாம்.
  • ஆனால், எந்த வழக்கின் ஆவண நகல்கள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த வழக்கின் எண், அந்த வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகள் பெயர்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அவற்றை பச்சைக் கலர் பேப்பரில் (கான்கிரிட் பேப்பர்) எழுதி, அதில் 20 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்டு, நீதிமன்றம் துவங்கும் நேரத்தில், நீதிமன்ற ஊழியர் பிராது வாங்கும் சமயத்தில் அவரிடத்தில் அதனை கொடுக்க வேண்டும்.
  • ஆவண நகல்கள் அவசரமாக வேண்டும் என்றால், அதில் அவசரம் என்றோ அல்லது ஆங்கிலத்தில் EMERGENT என்றோ எழுதி மேற்கொண்டு 2 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கொடுக்க வேண்டும்.
மாதிரி மனு 


நடுவர் என்ன செய்வார்?
  • அதில் நடுவர் அவர்கள் தன்னுடைய சுருக்குக் கையெழுத்து இட்டு கீழே அமர்ந்துள்ள MC என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Magistrate Clerkகிடம் கொடுப்பார்.
  • அவர் டவாலியிடம் அதனை அளிப்பார்.
  • டவாலி அதனை RC எனப்படும் Record Clerkகிடம் கொடுப்பார்.
  • Record Clerk அதனை பதிவு செய்வார்.
  • இது நீதிமன்றம் துவங்கிய சிறிது நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
  • நடுவர் அனுமதி கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது அங்கு நாம் இருந்தால், உடனடியாக நமக்குத் தெரிந்துவிடும்.
  • நம்மை அழைக்க மாட்டார்கள். நாமாகத்தான் இதனை இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேறு அவசர வேலைகள் இருந்தால் அன்று அல்லது மறுநாள் மாலை நேரத்தில் நீதிமன்றம் சென்றும் அதனை அறிந்து கொள்ளலாம்.
நகல் வழங்க நடுவர் அனுமதி கொடுத்தே ஆகவேண்டுமா?
  • ஆவண நகல்கள் கேட்டு விண்ணப்பித்தவருக்கு அதைத் தருவதில் நடுவருக்கு இயலாமை இருந்தால், அதனை உங்கள் மனுவின் பின்புறத்தில் எழுதி கொடுத்துவிடுவார்.
  • அந்த மனுவை நீங்கள் Record Clerkகிடம் இருந்து முறைப்படி பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
  • உதாரணமாக குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் விசாரணை அறிக்கையின் நகலை நான் கேட்டு Copy Application செய்திருந்தேன்.
  • அந்த அறிக்கையை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள் Copy Application நான் செய்ததால் அதனை வழங்க இயலாது என குறிப்பிட்டு எனது மனுவை நடுவர் அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
  • சில மாதங்கள் கழித்து மீண்டும் விண்ணப்பித்து அவைகளைப் பெற்றேன்.
நடுவர் அனுமதி கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நடுவர் அனுமதி கொடுத்தால், கேஸ்கட்டுகளை வைத்து பராமரிக்கும் அலுவலரை நீங்கள் அணுக வேண்டும்.
  • அவர் ஒரு இரண்டு நாட்கள் கழித்து உங்களை வரச்சொல்லுவார்.
  • அந்த நேரம் சென்றால், நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணத்திற்கான (ஜெராக்ஸ்) செலவை, உங்களிடம் இருந்து மெமோவில் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டுவதன் மூலமாக, பெற்றுக் கொள்வார்.
  • அதன் பிறகு அந்த ஆவண (அனைத்து) நகல்களில் அவர் கையொப்பம் இட்டு, நடுவர் அவர்களிடமும் கையொப்பம் பெற்று அவற்றை உங்களுக்கு அளிப்பார்.
  • அவைகள் உண்மை நகலாகும்.
மாதிரி மெமோ

அமர்வு நீதிமன்றங்களில் நகல் பெற வேண்டுமென்றால், நகல் கண்காணிப்பாளர் Copy Superintendent அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.04.2018