disalbe Right click

Saturday, June 2, 2018

நம்பரும் போயிடும்… பணமும் திருடப்படும்!” எச்சரிக்கை!


நம்பரும் போயிடும்பணமும் திருடப்படும்!” – டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி
தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்(SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.
ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
`சிம்-ஸ்வாப்மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, “தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.
அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.
அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.
கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். .டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன.
இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், “எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்என்றனர்.
இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.
கொஞ்சம் உஷாராகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.
 ச.அ.ராஜ்குமார்
நன்றி : விகடன் செய்திகள் - 28.05.2018 - https://www.vikatan.com 

Friday, June 1, 2018

எக்கேடும் கெட்டுப் போங்க! எங்களுக்கென்ன!

பிரச்சனைகளுக்கும், வழக்குகளுக்கும் பஞ்சமே இல்லாத நம் நாட்டில், அதற்கு பெருந்துணை புரிவதற்காக, 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும்,   திருமணம் செய்யாமல்,   சேர்ந்து  வாழலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம்  அறிவித்து இருந்தது.  
அதனடிப்படையில் கேரள மாநிலத்தில், 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும்,   திருமணம்   செய்யாமல்சேர்ந்து வாழ்வதற்குஅம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

(நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2018)
இது போன்ற வேளைகளில்  தீர்ப்பளிக்கும் போது, நீதிபதிகள் நம் நாட்டு  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மனதில் நிறுத்திவைத்து தீர்ப்பளித்திருக்க வேண்டும். 
ஆனால், அளிக்கப்பட்ட மேற்கண்ட தீர்ப்பானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  தாங்களுக்கும், தங்களது துறைக்கும் வேலை வாய்ப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக  ஏற்பாடு செய்து கொண்டது போல்   இருக்கிறது. 
மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் யாராவது ஒருவர்,  தங்களது வீட்டில் உள்ள ஆணையோ அல்லது பெண்ணையோ வேறு ஒரு பெண்ணுடணோ அல்லது வேறு ஒரு ஆணுடணோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிப்பார்களா? அல்லது அப்படி வாழ்ந்த ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ அவர்கள் வீட்டின்  மருமகனாகவோ, மருமகளாகவோ  ஏற்றுக் கொள்வார்களா?
மற்ற நாட்டு மக்களும் விரும்புகின்ற நமது கலாச்சாரத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் ஆழமான குழி தோண்டிய பெருமை நமது நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளையேச் சாரும். அந்தக் குழியில் மக்கள் விழுவதற்கு , நமது நாட்டின் மாண்பை கெடுப்பதற்கு மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தயாராகி விட்டார்கள்.
---------------------------------------------------- வருத்தத்துடன் செல்வம் பழனிச்சாமி, 02.06.2018 

Thursday, May 31, 2018

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204 
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில்(எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, குற்றவியல் நடுவர் அவர்கள் அந்த அறிக்கையை, “தவறான அறிக்கை” என்று நினைத்தால்,  காவல்துறை தாக்கல் செய்த அந்த அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, அந்த புகாரில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 -ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும்
சரியானது என்று நினைத்தால்....?
அதே நேரத்தில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை சரியானது என்று குற்றவியல் நடுவர் முடிவு செய்தால், அது குறித்து புகார்தாரருக்கு ஒரு அறிவிப்பினை அனுப்ப வேண்டும்
புகார்தாரர் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையினை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்று, அந்த அறிக்கைக்கு ஒரு பதிலுறை அல்லது ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை குற்றவியல்  நடுவர் அவர்கள் தனிநபர் புகாராக கருத வேண்டும்
இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ள புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றவியல்  நடுவர் அவர்கள் பரிசீலித்து, புகாரில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்க்கு ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 ன் கீழ் எதிரிக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்
குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றால்?
முகாந்திரம் இல்லை என்றால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 203ன் கீழ் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்த நடைமுறையை குற்றவியல் நடுவர் பின்பற்ற வேண்டும்!
இந்த நடைமுறையை பின்பற்றாமல் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர் வெறுமனே புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
Antony Manuvel Raj Vs Inspector of police, 
Theni police station 
CRL. RC. NO - 293/2016, 
DATE - 1.6.2016,
(2016-2-TLNJ-CRL-22)
நன்றி : நண்பரும் வழக்கறிஞருமான  நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 31.05.2018 

Friday, May 25, 2018

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்
பத்திரப்பதிவு செய்யப்படும்போது, அதன் உட்பிரிவு சொத்துகளுக்கு கட்டணம்: வருகின்ற   28.05.2018-ம் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது
பத்திரப்பதிவின்போது, உட்பிரிவு செய்யப்படும் சொத்துகளுக்கு அவை அமைந்துள்ள இடம் 
மற் றும் பரப்பளவின் அடிப்படையில் பதிவுத்துறையில் உட்பிரிவு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
புதிய மென்பொருள் ‘ஸ்டார் 2.0’
கடந்த 13.02.2018-ம் தேதி முதல் பத்திரப்பதிவுத் துறையில், இணைய வழி பத்திரப்பதிவுக்கான புதிய மென்பொருள்ஸ்டார் 2.0’ அறிமுகம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவின்போது, பரிமாற்றம் செய்யப்படும் சொத்தானது உட்பிரிவு செய்யப்பட வேண்டியிருந்தால் அதற்கான உட்பிரிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் விவரம் மென்பொருள் வழியாக வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது. இதனால், கட்டணம் வசூலிப்பதில் சில குழப்பங்கள் பதிவுத்துறைக்கு  ஏற்பட்டன.
இவற்றைத் தவிர்க்கும் வகையில், சில அறிவுறுத்தல்களை தற்போதைய பதிவுத்துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு  வழங்கியுள்ளார். இதன்படி
  1. சொத்தின் பரப்பு அமைந்துள்ள சர்வே எண், உட்பிரிவு சொத்தின் சர்வே எண்ணின் மொத்த பரப்புக்கு சமமாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை
  2. சமமாக இல்லாமல் குறைவாக இருந்தால், சொத்து அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதரப் பகுதிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில், உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்.
  3. மாநகராட்சி பகுதி என்றால் ரூ.60, நகராட்சி பகுதி என்றால்   ரூ.50, நகராட்சி அல்லாத பிற பகுதி என்றால்  ரூ.40 என வசூலிக்கப்படும்.
  4. பதிவு ஆவணத்தில் எழுதப்பட்ட ஒரே நான்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தானது, ஒரு சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் இருந்தால், ஒரு உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்
  5. ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே, உட்பிரிவு சர்வே எண்களில் இருந்து, சொத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்களின் மொத்த கூடுதல் பரப்புக்கு குறைவாக இருந்தால், எத்தனை சர்வே, உட்பிரிவு சர்வே எண்கள் உள்ளதோ அத்தனைக்கும் தனித்தனியாக  உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  6. அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரிக்கப்படாத பாகங்கள் (யுடிஎஸ்) பதிவு செய்யும்போது அதற்கு உட்பிரிவு கட்டணம் தேவையில்லை
  7. நத்தம் குடியிருப்புப் பகுதியில், தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்
  8. விவசாய நிலம் மற்றும் மனைகளில் பிரிக்கப்படாத பாகம் பரிமாற்றம் செய்யப்படும்போது, பிரிக்கப்படாத பாகம் அடங்கிய முழு பாகத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்ணின் பரப்புக்கு குறைவாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  9. ஒரே சர்வே எண் கொண்ட சொத்தில், நான்கு பிரிவுகளாக தனித் தனி எல்லைகளுக்குள் குறிப்பிடப்பட்டிருந்தால் உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும். சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண் என்பது இறுதியாக வருவாய்த்துறையால் உட்பிரிவு செய்த எண்ணை குறிக்கும்.
  10. ஒருமுறை உட்பிரிவு கட்டணம்  வசூலிக்கப்பட்ட சொத்து மீண்டும் வேறு ஒருவருக்கு விற்கப்படும்போது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த புதிய நடைமுறை வரும் மே 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.05.2018