disalbe Right click

Tuesday, December 18, 2018

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா? அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா?
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள்
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள்.
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள்.
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும்,
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 16
ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும்? 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது.
வாரிசுரிமை அடிப்படையில் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில்
இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் 
பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால், மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நன்றி..முகநூல் நண்பர் திரு எஸ்.முருகேசன் அவர்கள்

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு
'ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை, உடனடியாக பரிசீலித்து, மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும்' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
பதிவுத்துறையில், பத்திரப்பதிவுகளை தொடர்ந்து, வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும், புதிய திட்டம், டிசம்பர், 10ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதை முன்னிட்டு, சார் - பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு:  
➽ ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பதிவான நாளை தவிர்த்து, இந்த காலவரையறை பின்பற்றப்பட வேண்டும்.
➽ சான்றிட்ட பிரதி ஆவண நகல் கோரினால், மூன்று நாட்களில் வழங்க வேண்டும்.
 கணினிமயமாக்கப்பட்ட, பத்திரப்பதிவு தொடர்பான வில்லங்க விபரங்களை, மூன்று நாட்களிலும், மற்ற வில்லங்க விபரங்களை, நான்கு நாட்களிலும் வழங்க வேண்டும்.
➽ ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று கோரும் விண்ணப்பங்களுக்கு, மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
****************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 16.12.2018

Monday, December 10, 2018

ட்ரோன் விமானம் பறக்க புதிய விதிமுறைகள்

மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ள விதிமுறைகள்
சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ‘ட்ரோன்பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள்: மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டது
ட்ரோன்எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
ட்ரோன்எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உளவு பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது என பல தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன.
ஏரோ மாடலிங் என்ற வகையைச் சேர்ந்த விளையாட்டு விமானங்கள் தான் சந்தைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன. அதில் இருக் கும் வசதிகளுக்கு ஏற்ப ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை இவை சந்தைகளில் கிடைக் கின்றன.
இதைத்தான் பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தொழில்ரீதியாக வீடியோ எடுக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும்போது காவல் துறையினரிடமும், விமான போக்குவரத்துத்துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட் டுள்ளது.
5 வகை ட்ரோன்
ட்ரோன்களுக்கு தனித்துவ மான அடையாள எண் வழங்கப் படும். அது விமானத்தில் ஒட்டப் பட்டிருக்கும். விமானத்தை இயக்கு பவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களின் எடை யைக் கொண்டு நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என 5 வகைகளாகப் பிரிக்கப்படும்.
நேனோ ட்ரோன்களைத் தவிர மற்றவற்றைப் பறக்க வைக்க விமான போக்குவரத்துத் துறையின் முன்அனுமதி பெற வேண்டும். 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம். அரசுக்குச் சொந்தமான ட்ரோன்களை இயக்கு வதற்கு முன்பும் உள்ளூர் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவருக்குத் தான் ட்ரோனை இயக்க அனுமதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப் பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
காப்பீடு கட்டாயம்
5 ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லும்
⧭ பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும்
⧭ கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்
⧭  ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது
⧭ பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது.
⧭ சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது
⧭ நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது.
நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 05.12.2018