disalbe Right click

Friday, November 29, 2019

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு

கணவருடைய சொத்தில் மனைவிக்கு பங்கு - வழக்கு
வழக்கின் சுருக்கம்:
வள்ளியம்மாள் என்பவரின் கணவர் தங்கவேலு. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 45 வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கென்று இருந்த ஒரு குழந்தையும் தனது 2 வயதுக்குள் இறந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவரின் மூதாதையர் சொத்தில் பங்கு கேட்டு கணவர் தங்கவேலு உயிருடன் இருக்கும்போதே மனைவி வள்ளியம்மாள் அவர் மீதும், அவரது அண்ணன் மீதும் வழக்கு தொடர்கிறார். வள்ளியம்மாள் வழக்கில் வெற்றி பெற்றாரா?  பங்கு கிடைத்ததா?  வாருங்கள் பார்க்கலாம்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி

  • வள்ளியம்மாள் என்பவர் பாகப்பிரிவினை கேட்டு தன் கணவர் மீதும், அவரது சகோதரர் மீதும் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்
  • தனக்கும், தனது கணவரான தங்கவேலுவுக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் இல்லாமலிருந்து, அதன்பிறகு சிவசுப்பிரமணியன் என்கிற மகன் பிறந்ததாகவும், அந்த குழந்தை 1 1/2 வயதான நிலையில் இறந்து போனதாகவும், அதுமுதல் தனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், பாகப்பிரிவினை கேட்டுள்ள சொத்துக்கள் மூதாதையர் வழி சொத்துக்கள் என்றும், அந்த சொத்துக்களை கணவரும், அவருடைய சகோதரரும் வாய்மொழியாக பாகப்பிரிவினை செய்து கொண்டதில் வழக்கு சொத்துகள் கணவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும், கணவருக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளதால் அந்த சொத்துக்களில் தனக்கும், காலம் சென்ற தன் மகனுக்கும் பங்குரிமை உள்ளதாக குறிப்பிட்டு பாகம் கோரினார்.
  • கணவர் மனைவியின் வழக்கை எதிர்த்து நடத்தினார். வழக்கு சொத்துகளில் சில மட்டுமே கூட்டு குடும்ப சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் சகோதரனின் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும், சில சொத்துக்கள் தனது சுய சம்பாத்திய சொத்துக்கள் என்றும் கூறி மனைவி பங்குரிமை கோர முடியாது என்றார்
  • வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வள்ளியம்மாளின் வழக்கை ஏற்றுக் கொண்டு பாகப்பிரிவினை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
  • அதனை எதிர்த்து கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கணவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இரண்டாம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. RMT. டீக்காராமன் விசாரித்தார்.
  • வள்ளியம்மாளுக்கும் அவள் கணவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளை அடிப்படையாக கொண்டு இரண்டு கீழமை நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளது
  • அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் தங்கவேல் உயிருடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உயிருடன் குழந்தைகள் ஏதும் இல்லை
  • இந்த நிலையில், இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் மட்டுமே இந்த வழக்குக்கு பொருந்தும். அந்த சட்டத்தின்படி, வாரிசுரிமை அடிப்படையில், மூதாதையர் வழி வந்த சொத்தினை கணவர் பெற்றிருந்தால், அந்த சொத்தில் மனைவி பங்குரிமை கோர முடியாது
  • இது குறித்து பம்பாய் உயர்நீதிமன்றம் " உதய் நரேந்திரஷா Vs நரேந்திர அமிர்தலால் ஷா (AIR-2014-BOM-119)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வழக்கில், இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் கூட்டு பங்குரிமையாளராக இருந்து கணவரால் பெறப்பட்டுள்ள சொத்தில் கணவர் உயிரோடிருக்கும் போது மனைவி தனக்கு பங்குரிமை உள்ளதாக கோர முடியாது என்று கூறியுள்ளது
  • வள்ளியம்மாள் வழக்கில் கண்ட சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவரான தங்கவேலுவின் தந்தைக்கு பாத்தியப்பட்டு, அவர் இறந்ததற்கு பின்னர், கணவருக்கும், அவரது சகோதரருக்கும் வந்துள்ளது
  • அதனால் தங்கவேல் உயிரோடு இருக்கும் போது வள்ளியம்மாள் அதில் பங்குரிமை கேட்க முடியாது. எனவே இரண்டு கீழமை நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகள் தவறானது என்று கூறி வள்ளியம்மாளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

S. A. NO - 510/2001DT - 2.11.2017
முத்துக்குமாரசாமி மற்றும் பலர் Vs வள்ளியம்மாள்
2018-1-MLJ-476

நன்றி: வழக்கறிஞரும் எனது முகநூல் நண்பருமான Dhanesh Balamurugan

Thursday, November 14, 2019

அரசு ஊழியர் - நீதிமன்றம் அளித்த தண்டணை

அரசு ஊழியர் - தண்டணை - துறைரீதியான நடவடிக்கை - மேல்முறையீடு

வழக்கின் விபரம்:
  • சகாதேவன் என்பவர் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • அவரும் அவரது மனைவியும் சேர்ந்து சட்ட விரோதமாக சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 34 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று சகாதேவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
  • அந்த தண்டனையை எதிர்த்து சகாதேவன் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
  • கூடவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
  • அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை:
  • இந்நிலையில் காவல்துறை இணை ஆணையர் சகாதேவனை பணியிலிருந்து நீக்கி 31.10.2010 ஆம் தேதி உத்தரவிட்டார்.
துறை ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ரிட் மனு:
  • அதனை எதிர்த்து சகாதேவன் ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • அதில் தனது மனைவிதான் சீட்டு நடத்தியதாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்ட விரோதமாக தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும், மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் இணை ஆணையர் தன்னை நீக்கி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி S. N. சுப்பிரமணியன் அவர்கள் விசாரித்தார்.
  • அரசு ஊழியர் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், விதிகளின்படி அவரிடம் விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
  • ஆனால் இந்த வழக்கில் சகாதேவனுக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
  • அதனடிப்படையில் அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் முன்.........
  • ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட நபர் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள அரசு ஊழியருக்கு விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி, அந்த அரசு ஊழியரால் அளிக்கப்படும் விளக்கத்தை பெற வேண்டும்.
  • அந்த விளக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமை இல்லை!
  • சகாதேவனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
  • அதன் காரணமாக இணை ஆணையர் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
  • சகாதேவனை நீக்கும் முன் அவருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
  • இணை ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், துறை ரீதியிலான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோர சகாதேவனுக்கு எந்த உரிமையும் இல்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு சகாதேவன் கோரலாம்.
  • ஆனாலும் அதில்கூட விதிகளுக்குட்பட்டே இணை ஆணையர் செயல்பட முடியும்.
  • ஒரு குற்ற வழக்கிலிருந்து அரசு ஊழியர் விடுவிக்கப்பட்டார் என்ற காரணத்திற்காக, துறை ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளகூடாது என்று அர்த்தமில்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கைக்கும், குற்றவியல் நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
  • தண்டணை பெற்ற அரசு ஊழியரை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
  • எந்தவொரு அரசு ஊழியரும் தண்டனை பெற்றால் அவரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்ககூடாது.
  • ஒருவேளை மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு கோரலாம்.
இந்த வழக்கில் சகாதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்குட்பட்டே உள்ளது. அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 33189/2018, Date : 02.04.2019
P. சகாதேவன் Vs இணை ஆணையர், போக்குவரத்து காவல்துறை, தெற்கு, சென்னை
2019-1-TLNJ-CRL-363

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/455787

நன்றி: எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு ‎Dhanesh Balamurugan



Sunday, October 20, 2019

அரசு அலுவலகங்களில் ஆவண நகல்களை பெறுவது - உயர்நீதிமன்றம் - புதிய தீர்ப்பு


அரசு அலுவலகங்களில் ஆவண நகல்களை பெறுவது 
 உயர்நீதிமன்றம் - புதிய தீர்ப்பு 
அது குறித்து வழக்கறிஞரின் விளக்கம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019)
.ஏற்கனவே நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெறுவதற்கான நடைமுறையானது ஒரு அரசு அலுவலகத்தில் இருக்கும்போது, அங்கு சில ஆவணங்களை பெற அதற்கான கட்டணத்தை தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளின்படி செலுத்தி அந்த ஆவணங்களைின் நகலை கோர முடியுமா?. இந்த கேள்விக்குமுடியாதுஎன்று ராபின்சன் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் (2017) நீதிப்பேராணையில் வழங்கப்பட்ட ஆணைக்கு ஒரு மாறுதல் ஆணையாக WP 16018 of 2019-ல் வழங்கப்பட்டுள்ளது
இந்த WP No.16108 of 2019 பற்றி விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு தேர்வின் விடைத்தாள்களை வழங்க, ஏற்கனவே ஒரு நடைமுறை இருக்கின்றது. அதன்படி மாணவர்கள் ஒரு தேர்விற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விடைத்தாள்களை பெற்று கொள்ளலாம். (ரூ.400-என்று இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன). 
மேலும், மேற்கண்ட நடைமுறையில் பெயில் ஆன மாணவர்கள் மட்டுமே விடைத்தாளை கோரமுடியும். ஆனால் மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோருவதால், அதன் விதிகளானது பக்கத்திற்கு ரூ.2 செலுத்தி பெற்று கொள்ள வழி வகை செய்கின்றது. ஒரு மாணவனின் விடைத்தாள் மொத்தம் 45 பக்கம் என்றால், அவர் ரூ.90 செலுத்தினால் போதுமானது.
மேற்கண்ட வழக்கிற்கு முன்னால் என்ன நடந்தது?
சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அவர்கள் எழுதிய தேர்வின் விடைத்தாளின் நகலை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கோருகின்றார்கள். பல்கலைக்கழகம் அதை வழங்க மறுக்கின்றது. தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததில், தகவல் ஆணையம் தேர்வின் விடைத்தாளை மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழங்க ஆணையிடுகின்றது. தகவல் ஆணையத்தின் ஆணையை இரத்து செய்ய கோரி பல்கலைக்கழகம் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகமானது, மாணவர்களின் விடைத்தாளை ... சட்டத்தில் கோரியதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக விதிகளின் படி அதற்கான கட்டணத்தை செலுத்தினால், அவற்றை வழங்க தயாராக இருப்பதாக கூறுகின்றது.
.இந்த நீதிப்பேராணையில் முதலாவதாக Central Board of Secondary Education (CBSE) and another vs. Aditya Bandopadhyaya & Others (2011) 8 SCC 497 என்ற வழக்கு மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அந்த வழக்கில் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு 8(1)(e)-ன் படி விடைத்தாள் வழங்க மறுக்கப்படுகின்றது
ஆனால், திருத்தப்பட்ட விடைத்தாளானது திருத்திய ஆசிரியரின் Opinion என்பதால் அது தகவல் எனும் பதத்தில் வரும் என்று தீர்மானிக்கப்படுகின்றது.
.இந்த வழக்கில் அடுத்ததாக Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain (decided on 11.04.2019 in Civil Appeal No.5665 of 2104) என்ற மாண்புமிகு உச்சநீதிமன்ற வழக்கு மேற்கோளாக எடுத்து கொள்ளப்படுகின்றது
இந்த வழக்கில் தகவலை பெற இரண்டு வழிமுறைகள் அதாவது ... சட்டம் மற்றும் நிறுவனத்தில் நடைமுறைகள், இருக்கும்போது, மனுதாரரானவர் அவருக்கு விருப்பபட்ட வழிமுறையை தேர்ந்தெடுதது கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
.மேற்கண்ட Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் ... சட்டத்திற்கு மேலோங்கி நிற்கமுடியாது எனவும், மேலும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வர பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்ததை மற்ற நிறுவனங்களால் இயற்றப்பட்ட நெறிமுறைகள், விதிகளால் ஒதுக்கி வைக்க முடியாது எனவும், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமே மேலோங்கி இருக்கும் (”When the Parliament enacted the law in order to develope transperancy in public administration, undoubtedly, the other procedures or regulations formulated by any other institutions, cannot prevail over the Act of the Parliament and those Rules and Regulations of the such individual institutions can never override the purpose and object of RTI Act, 2005.) எனவும் தீர்மானித்து, அதன்படி மாணவர்கள் .. .சட்டத்தில். கோரிய விடைத்தாளை அவர்களுக்கு .. விதிகளின்படி கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டப் பல்கலைக்கழகம் வழங்க மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது.
இத்துடன் இந்த நீதிப்பேராணையின் சாரம்சம் முடிவுற்றது.
****************************************************************
மேற்கண்ட தீர்ப்பு குறித்து எனது கருத்து.


.ராபின்சன் (2017) நீதிப்பேராணையில் அலுவலக நடைமுறைகள்தான் மேலோங்கி நிற்கும் என தீர்மானிக்கப்பட்டது அதற்கு காரணம் Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் தீர்ப்பானது 2019-ல்தான் பகரப்பட்டது.
.ஆனால் இனிவரும் காலங்களில், மாற்று தீர்ப்பு எதுவும் உச்சநீதிமன்றத்தால் பகரப்படும்வரை Institute of Companies Secretaries of India (ISCI) vs. Paras Jain வழக்கின் அடிப்படையில் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019) ஆணையானது சட்ட வலிமை உள்ள ஆணையாக திகழும்.
.தற்போது ஆவணங்களின் நகலை கோர மனுதாரருக்கு இரண்டு வழிமுறைகள் 
அலுவலகத்தில் உள்ள நடைமுறையில் உள்ள கட்டணத்தை செலுத்தி கோருவது (அல்லது) 
⧭ ... சட்ட விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி கோருவது.
.நடைமுறையின் உள்ள விதிகளின்படி கட்டணத்தை செலுத்தி ஆவணங்களின் நகலை கோரும்போது, ஆவணங்களின் நகலை விரைவாக பெறலாம். ஆனால், .உஅ. சட்டத்தில் கோரும்போது, பொது அதிகார அமைப்பு சொல்லும் தொகையை செலுத்தி ஆவணங்களை பெற வேண்டிய நிலை என்பதால், 30-40 நாட்கள் வரை ஆவணங்களின் நகல் கிடைக்க கால தாமதம் ஆகலாம். மேலும் இந்த முறையில் பொதுவாக மனுதாரர் அலுவலகத்திற்கு நேரில் சென்றுதான் விண்ணப்பம் செய்யும் நிலை இருக்கும்.
.... சட்டத்தின்படியும் ஆவணங்களின் நகலை கோரலாம் என்ற நிலையில், அந்த அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல், வெளியூரில் இருந்து மனு செய்தே அதற்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம். ஆகவே மனுதாரரின் தேவைக்கு ஏற்ப எந்த முறையில் ஆவணங்களை பெறுவது அவருக்கு வசதியாக இருக்கும் என்பதை மனுதாரர்தான் முடிவு செய்ய வேண்டும்.
.உதாரணமாக மாநகராட்சிகளில் லே அவுட் காப்பி கேட்டால் அதற்கு கட்டணமாக ரூ.1000 கோருகின்றார்கள். இனி வரும் காலங்களில் ஒருவர் அந்த லே அவுட் காப்பியை ... வாயிலாக கோரினால், அந்த லே அவுட் காப்பியின் ஒளிநகலை எடுப்பதற்கான நியாயமான செலவினங்களை மட்டுமே மனுதாரிடம் இருந்து மாநகராட்சி கோரமுடியும் ஆனால், இந்த முறையில் மனுதாரர் 30 - 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
.இதுவரை சட்டப் பல்கலைக்கழகத்தில் தோல்வி அடைந்த ஆன மாணவர்கள் மட்டுமே விடைத்தாளின் நகலை பெற முடியும். ஆனால், தற்போதை தீர்ப்பின்படியும் Central Board of Secondary Education (CBSE) and another vs. Aditya Bandopadhyaya & Others (2011) 8 SCC 497-படியும், தேர்வு எழுதி தேர்வாகி, ஆனால் பெற்ற மதிப்பெண்கள் நிறைவானதாக இல்லை என்று நினைக்கும் மாணவர்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவர்களது விடைத்தாளின் நகலை கோருவதற்கு மேற்கண்ட தீர்ப்பு மற்றும் நீதிப்பேராணையின் ஆணை வழிவகை செய்கின்றது.
.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எதிர் தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் பலர். (WP No.16108 of 2019 Order dated 14.10.2019) ஆணையானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக சில அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதில் இருந்த தடைகளை தகர்தெறிந்த ஆணையாகும். இந்த சிறப்பான ஆணையை வழங்கிய மாண்புமிகு நீதியரசருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
------------------------------------------------ Leenus Leo Edwards, Advocate 
இந்தப் பதிவு  அவர்களின்  Leenus Leo Edwards, Advocate  முகநூல் பக்கத்தில் இருந்து (19.10.2019) நன்றியுடன் எடுத்து பகிரப்பட்டது ஆகும்.