disalbe Right click

Wednesday, February 19, 2020

தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு-18(1)


    தகவல் அறியும் உரிமைச் சட்டம்பிரிவு-18(1) 
    ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்! பாடுறமாட்டை பாடித்தான் கறக்கணும்.
    சில பொது தகவல் அலுவலர்களின் மனநிலை என்னவென்றால்
    • ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிமனுதாரர் கோரிய தகவலானது பிரிவு 2(f)-ல் வராது, தனிப்பட்ட நபர் தகவல் அல்லது மூன்றாம் நபர் தகவல் என்று மனுவை திருப்பி அனுப்பி விடுவோம்
    • 50-60 சதவீதம் மனுதாரர்கள்தான் முதல் மேல் முறையீடு செய்வார்கள்
    • அதையும் அதே காரணத்தை சொல்லி அனுப்பிவிட்டால், பின்னர் மனுதாரர் சென்னைக்கு செல்லும் செலவினை கருத்தில் கொண்டு, 10 சதவீதம் நபர்கள்தான் ஆணையத்திற்கு செல்வார்கள்
    • அப்படியே சென்றாலும் அந்த வழக்கு விசாரணைக்கு ஒரு வருடம் கழித்து வரும்போது, நாம் இந்த பொறுப்பில் இருப்போமா என்பது தெரியாது
    • ஆகவே, ஒரு வருடம் கழித்து அந்த பத்து சதவீத கேஸ்களில் ஒன்றாக நமக்கு வந்த மனு ஆணையத்திடம் விசாரணைக்கு வந்து அப்போது நாம் இந்த பதவியில் இருந்தால் பார்த்து கொள்ளலாம் என்பதாகும்.

    அவ்வாறான சில பொது தகவல் அலுவலர்களின் மனநிலையை மாற்றத்தான் பிரிவு 18(1)-ல் கீழ் புகார் செய்ய வேண்டும்.
    • தகவல் வழங்கவில்லை என்றாலும், முதல் மேல் முறையீடு செய்யாமல் எப்படி உடனே மனுதாரர் ஆணையத்திடம் புகார் செய்கிறார்
    • இது என்ன புது முறையாக இருக்கின்றது
    என்று அவர்கள் உணரவேண்டும்.
    தகவல் ஆணையமானது புகார் மனு மீது விசாரணை செய்து, நம் மீது தண்டம் விதித்துவிடுமோ அல்லது துறை வாரியான நடவடிக்கைக்கு அரசிற்கு பரிந்துரை செய்துவிடுமோ என்ற நிலையில் அவர்களை கொண்டு செல்வதற்காகவே, மனுதாரர்கள் பிரிவு 18(1)-யை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
    தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு-18(1) என்ன சொல்கிறது?
    1. தகவல்கள் வழங்க மறுப்பது (மனுவை வாங்க மறுப்பது) தவறு 
    2. குறித்த காலத்திற்குள் தகவல் வழங்காதது தவறு 
    3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது தவறு
    4. தவறான, பொய்யான தகவல்களை வழங்குவது தவறு
    5. தகவலை கோருகின்ற மனுதாரர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் (மிரட்டல்)
    பரிகாரம் என்ன?
    துறைரீதியான நடவடிக்கை, இழப்பீடு

    நன்றி : எனது முகநூல் நன்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards. 

    ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!

    ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!
    ரேஷன் பொருட்கள் விற்பனை தொடர்பாக அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., விபரத்தை கவனிக்குமாறு, கார்டுதாரர்களுக்கு, உணவுத் துறை வேண்டுகோள் விடுத்துஉள்ளது.
    தமிழக ரேஷன் கடைகளில், 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
    இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. பல அரிசி கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை.
    இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    ரேஷன் கடைகளில், காகித ரசீது இருந்தபோது, வாங்காத பொருட்களை வாங்கியது போல், பதிவேடுகளில் எழுதி, முறைகேடு செய்தனர்.
    இதனால், முறைகேடு விபரம், கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.
    தற்போது, பொருட்கள் அனுப்புவது, விற்பனை உள்ளிட்டவை, கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
    அதனால், கடைகளில் விற்கப்படும் பொருட்கள், விற்பனை கருவியில் பதியப்படுகின்றன.
    பதியப்பட்டதும், அந்த விபரம், கார்டுதாரர்களின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.
    இதற்காக, உணவு வழங்கல் துறையிடம், 2.04 கோடி கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்கள் உள்ளன.
    எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிப்பதில்லை.
    அவ்வாறு, வாங்காத பொருட்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே, அதை, 97739 04050/ 99809 04040 என்ற மொபைல் எண்களுக்கு, 'பார்வேர்டு' செய்ய வேண்டும்.
    நடவடிக்கை
    பின், அதிகாரிகள், எஸ்.எம்.எஸ்., வந்த கார்டுதாரரை தொடர்பு கொண்டு, பொருட்கள் வாங்காததை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பர்.
    பொருட்கள் வாங்காத பலர், எஸ்.எம்.எஸ்., வந்தும் புகார் அளிப்பதில்லை.
    விரைவில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
    எனவே, ரேஷன் எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிக்க வேண்டும்.
    இவ்வாறு, அவர் கூறினார்.
    நன்றி : தினமலர் நாளிதழ் - 29.12.201

    அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால்

    அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
    அரசாணை 540 என்ன சொல்கிறது?
    முதலில் தாசில்தாருக்கு புகார்மனு
    ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் தாசிதார் அவர்களுக்கு பதிவுத் தபாலில் மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.
    உடனே, தாசில்தார் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு அதனை உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆக்கிரமிப்பாளரின் முகவரிக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட வேண்டும்.
    ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால்...
    வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
    ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் 60 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
    முதல் மேல்முறையீடு
    ஆக்கிரமிப்பை தாசில்தார் அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் புகார்தாரருக்கு திருப்தி இல்லை என்றாலோ, வருவாய் கோட்டாட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே தாசில்தாரிடம் அளித்த மனுவின் நகலையும் இணைத்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.
    முதல் மேல்முறையீடு மனுவை பெற்ற ஒரு மாதத்துக்குள் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அது சம்பந்தமான தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
    இரண்டாம் மேல்முறையீடு
    மனுதாரருக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் நடவடிக்கையும் திருப்தி இல்லையென்றால், அந்த மாவட்டத்தின் வருவாய் அலுவலருக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
    மூன்றாம் மேல்முறையீடு
    மாவட்டத்தின் வருவாய் அலுவலரது நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நில அளவைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் செயல்படும் வழிகாட்டும் நெறிப்படுத்தும் குழுவிடம் மூன்றாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
    கடைசியில் நீதிமன்றம்தான்!
    அவர்களின் நடவடிக்கையிலும் மனுதாரருக்கு திருப்தி இல்லையென்றால், அனைத்து மனுக்களின் நகல்களையும் இணைத்து உயர்நீதிமன்றத்தில் பொது நல ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
    எவ்வளவு பழமையான ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும்.
    முகநூலில் கடந்த 01.11.2019ல் நான் பதிவிட்டது.
    ********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 19.02.2020