disalbe Right click

Thursday, January 4, 2018

ஆதார்' கைவிரல் ரேகை பாதுகாக்க......

இப்போது 'ஆதார்' பதிவேட்டில் உள்ள, நமது கைவிரல் ரேகையை பாதுகாக்க,  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.
நமது நாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி, எரிவாயு இணைப்பு, வாக்காளை அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்கள், போலிகளை ஒழிப்பதற்காக சேகரிக்கப்பட்டாலும் அவை கசிந்தால், பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் கொண்ட சில மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
500 ரூபாய் கொடுத்தால், ஒருவரது ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், அதை மத்திய அரசு மறுத்துள்ளது
பயோமெட்ரிக் டேட்டா
ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற தகவல் தொகுப்பில், ஒருவரது கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது.  அதனைப் போக்கவும், தற்போது ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
செக்யூர் பயோமெட்ரிக்ஸ்
ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நீங்கள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், நீங்கள் 'கிளிக்' செய்து,  உரிய இடத்தில், உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டால், உங்களது பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு, ஒரு (OTP) 'பாஸ்வேர்டு' வரும். அதை உரிய இடத்தில் பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை உடனே, 'லாக்' ஆகிவிடும். அதற்குப் பிறகு அதனை யாரும் பார்க்கவே முடியாது.
அதனை நீங்களே கூட, பயன்படுத்த நினைத்தாலும் பயன்படுத்த முடியாது. மீண்டும் அதனை நீங்கள் செயல்படுத்த நினைத்தால் மேற்கண்ட இணையதளம் சென்று, அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்ய வேண்டும்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 

No comments:

Post a Comment