disalbe Right click

Thursday, January 4, 2018

சிம் கார்டு ஆதார் எண் இணைப்பு

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை 01.01.2018 முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை செயற்படுத்தி  உள்ளது
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு
மத்திய அரசின் அறிவித்துள்ளபடி தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில்,  பொது மக்கள் தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க தங்களுக்கு அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை பின்பற்றப் பட்டு வருகிறது.
01.01.2018  முதல், ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்தி உள்ளது.
1 . முதலாவதாக, மொபைல் எண் வாயிலாக IVRS எனப்படும் Interactive Voice Response System அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . இரண்டாவதாக OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3.  மூன்றாவதாக ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேகமான ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல் மற்றும் ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரையில் அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இனி அது தேவை இல்லை. கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் மொபைல் சிம்முடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம். 
  1.  முதலில் உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற Interactive Voice Response System  எண்ணுக்கு கால் செய்யுங்கள்.
  2.  தொடர்பு கிடைத்தவுடன் உங்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. அதன் பிறகு நீங்கள் இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்த வேண்டும்.
  4. உங்களுடைய ஆதார் எண் இணைக்க என்பதை அதில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
  5.  உங்கள் ஆதார் எண் நீங்கள் மொபைலில் டைப் செய்த பிறகு உங்கள் ஆதார் எண்னை உறுதி செய்வதற்காக உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வரும்.  
  6.  அதனை நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு உங்களது ஆதார் எண் சிம் கார்டுடன்    இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.
குறிப்பு : உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 06.02.2018 வரை கால அவகாசம் உள்ளது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.01.2018 

No comments:

Post a Comment