disalbe Right click

Showing posts with label ஆதார் அட்டை. Show all posts
Showing posts with label ஆதார் அட்டை. Show all posts

Monday, April 17, 2017

ஆதார் அட்டைகளில் திருத்தம்

ஆதார் அட்டைகளில் திருத்தம் 

இன்று முதல் 303 நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி தொடக்கம்!

 தங்களது ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள், திங்களன்று செயல்பட உள்ள 303 நிலையான மையங்களில் தங்களுக்குத் தேவையான திருத்தங்களை செய்து கொள்ள அணுகலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

புதிதாக ஆதார் அட்டைகள் பதிவு செய்து கொள்பவர்கள் மற்றும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டை விரல் ரேகை பதிவு செய்ய எந்த விதக் கட்டணமும் இல்லை. ஆனால் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும். 

யாரெல்லாம் தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

கட்டை விரல் ரேகை, கண் விழித்திரை ரேகை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மாற்ற விரும்புபவர்கள் ரூ.15 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டைகளை பிரிண்ட் எடுக்க வேண்டுமெனில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
இது குறித்து மேலதிக விவரங்கள் பெற 1800 425 2911 எனும் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 17.04.2017 

Tuesday, April 11, 2017

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்


ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்

புதுடில்லி: ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 
இதன் 10 முக்கிய அம்சங்கள்: 
  1. நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமேநிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.
  2. ஆதார் எண் விவரங்களையும்பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர்.
  3. கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு.
  4. ஆதார் எண் அட்டையில்பலருக்கும் முழு பெயரும் இருக்காது. இனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால்பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில்ஆதார் எண்ணுக்கான இணைய தளம்பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாதுஆதாரம் தேவை எனகேட்கும்.
  5. இதுபோன்ற சூழ்நிலையில்பான் கார்டை ஸ்கேன் செய்துஆதார் இணைய தளத்தில்பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படிஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது.
  6. பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும்.
  7. .வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டுஅவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண்இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும். 
  8. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண் தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும்அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை.
  9. இதுபோன்ற சூழ்நிலையில்அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்றுபோன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால்அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால்மொபைல் எண்ணை பதிவு செய்வதுவிலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.
  10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால்ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில்வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 10.04.2017









10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.


Monday, April 10, 2017

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்க.....


ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்க.....
ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன்என மக்கள் விடும் நிம்மதிப் பெருமூச்சு புரிகிறது. ஆனால், நம் கடமையை அதோடு முடிய விட மாட்டேன் என்கிறது மத்திய அரசு. ஆதார் எல்லாம் கட்டாயம் இல்லைஎன ஒரு பக்கம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவித்தபடி இருக்கிறது மத்திய அரசு. 
காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னதை மாநில அரசே கேட்கவில்லை. மத்திய அரசு மட்டும் என்ன மாங்காய்த் தொக்கா
இதோபான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால், பான் நம்பரே செல்லாமல் போய்விடும் எனச் சொல்லிவிட்டார்கள். அரசு சொல்லும் விஷயத்தைச் செய்ய நினைத்தாலும் செய்ய விடுமா அவர்கள் சிஸ்டம்? “உங்க அப்பாரு பேரு ரெண்டு சுழியா? இதுல மூணு இருக்கே”, “உங்க கண்ணுக்கு மேல என்ன இமை இருக்குனு ஏதேதோ காரணம் சொல்லி அலைக்கழிக்கும். 
ஆதார்
அப்படியெல்லாம் ஆகக் கூடாது என முதல் வரியில் சொன்ன ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலே படியுங்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என விளக்குகிறேன்.
வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும்.
Income tax page

இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம். மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
reset password

உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
otp page

இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
profile setting

இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
aadhar

“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947) தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். அதனால், சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைகிறார்களோ இல்லையோ.. உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்.
-கார்க்கிபவா
நன்றி : விகடன் செய்திகள் - 11.04.2017

            


Monday, January 30, 2017

பிளாஸ்டிக் ஆதார் கார்டு

Image may contain: text

ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம்

புதுடில்லி:பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கு வதாக, 200 ரூபாய் வரை வசூலிப்போருக்கு எதிராக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள அட்டை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், ஆதார் அடையாள அட்டைகளை இலவசமாக வினியோகித்து வருகிறது. இந்த அட்டைகளை, பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ஸ்மார்ட் அட்டையாகவோ மாற்றித் தருவதாக, சிலர், 50 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று கூறியதாவது:

காகிதத்தில் வழங்கப்படும், ஆதார் அடையாள அட்டைகள், முற்றிலும் செல்லத்தக்கவை. அதற்கு மாற்றாக, பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு வடிவில் ஆதார் அட்டைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. அவற்றுக்காக, 50 - 200 ரூபாய் வசூல் செய்வோர் குறித்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கடிதம், ஆதார் காகித அட்டை, இணைய தளம் மூலம் காகிதத்தில், 'டவுன்லோடு' செய்யப் படும் ஆதார் பதிவு, ஆகியவற்றை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட் ஆதார் அட்டை என்ற ஒன்றுஇல்லவே இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதற்காக, யாரும் பணம் செலவு செய்ய வேண்டாம்.

ஆதார் பற்றிய விபரங்களை, வேறு நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை, மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கார்டுகளாக மாற்றித் தருவதாக கூறி, ஆதார் கார்டுகளை பெறுவது சட்டவிரோதம்.இவ்வாறு அவர் கூறினா

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.01.2017

Saturday, April 18, 2015

ஆதார் அட்டை எண்- வாக்காளர் அட்டையுடன் இணைக்க


ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க என்ன செய்ய வேண்டும்?
 வாக்காளருக்கான ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை இணைப்பதற்கான வாக்குச்சாவடி அளவிலான சிறப்பு முகாம்கள் கடந்த 12.04.2015 முதல் அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.18 கோடி பேர், அதாவது 82 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வாக்காளருடன் தேர்தல் கமிஷன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குவதற்கு இமெயில், தொலைபேசி எண், செல்போன் எண் போன்றவை அவசியமாக உள்ளன.

சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், பெயர் சேர்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய புகைப்படம் சேர்த்தல் ஆகியவற்றையும் செய்யலாம். ஆதார் எண், இமெயில், செல்போன் எண் போன்றவற்றை இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு வருகிறவர்கள், தங்களைப்பற்றிய பதிவுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றுக்கான அரசு தரப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக, முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் முகவரிக்கான ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போட், ஆதார் அட்டை போன்றவற்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டையின் நகலை வைத்திருப்பது நல்லது.

இதை கன்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் ஆனால், இதை இணைப்பதற்காக நாம் தகவல் மையங்களில் பலமணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது. 

அதனை இணையத்தில் 5 நிமிடங்களில் உடனடியாக  இதை நாம் செய்து விட முடியும் 

முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Feed your aadhaar number என்ற லிங்கை கிளிக் செய்யும் போது feed your aadhaar number என்ற பக்கத்தை கிளிக் செய்யும் போது national voter service portel என்ற பக்கம் தோன்றும் அதில் search by EPIC NO என்பதில் நம்முடைய voter id no மற்றும் நம்முடைய மாநிலம் கொடுத்து search கொடுத்தால் உங்களுடைய voter id யில் உள்ள அனைத்து விபரங்களும் அதில் வரும் அதில் feed aadhaar no என்ற இடத்தை கிளிக் செய்தால் பக்கம் ஒன்று திறக்கும் அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், நம்பர், உங்கள் போன் நம்பர் இமெயில் id கொடுத்து submit செய்தால் போதும் உடனடியாக உங்கள் போன் நம்பர்க்கு confirmation message வரும். அவ்வளவுதான்
.
நன்றி நண்பர் மோகன்தாஸ் சாமுவேல் அவர்களுக்கு.


Friday, April 10, 2015

ஆதார் அட்டை பெறுவது எப்படி?


ஆதார் அட்டை பெறுவது எப்படி?
***************************************************

ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கைகளிலும் உள்ள  விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும். 


ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: இது 2013ம் வருடம் அக்டோபர் மாதத்தில் புதியதலைமுறை வார இதழில் வெளி வந்த தகவல். 
இது குறித்து தெரியாதவர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. 
அன்புடன் செல்வம்பழனிச்சாமி

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?


ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
**********************************************
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! 

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம். 

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:


1. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
2. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
3. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
5. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
6. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.