disalbe Right click

Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts
Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts

Sunday, May 7, 2017

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமானதாகும். எனவே உங்களிடம் கார் இருந்தால், உங்களிடம் காருக்கான இன்சூரன்ஸூம் இருக்க வேண்டும். உங்கள் கார் ஒரு துரதிர்ஷ்ட வசமான விபத்தைச் சந்திக்கும் ஒரு நிகழ்வில், உங்கள் கார் காப்பீட்டுத் திட்டமானது உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் மேலும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பழுது பார்ப்பதற்கான செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.
3 வகைப் பாலிசிகள்
கார் காப்பீட்டில் மூன்று வகையான பாலிசிகள் உள்ளன, மேலும் ஒருவர் தனது தேவைகள் மற்றும் நோக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். அவை பின்வருகின்றன...
1. விரிவான காப்பீட்டுத் திட்டம்
இது பிரபலமான காப்பீட்டுத் திட்டமாகும் இந்தத் திட்டமானது காப்பீட்டுதாரருக்கு விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் காப்பில், ஒரு விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கு ஆன செலவுகளைத் திருப்பிக் கொடுத்துவிடும் திட்டம், விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு ஆகும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் காப்பு, வாகனம் திருடப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டைச் செலுத்தும் காப்பு, மற்றும் பாலிசிதாரரால் நிகழ்ந்த விபத்தினால் எழுந்த மற்றொரு நபரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயம் ஆகியவற்றிற்கு மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி ஆகியவை அடங்கும்.
2. மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்பீட்டுத் திட்டம்:
மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பு இந்தியாவில் கட்டாயமாகும். இது மற்றொரு மூன்றாம் தரப்பு நபருக்கோ அல்லது அவரின் சொத்துக்கோ உங்கள் காரினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்களுக்குக் காப்பீடளிக்கிறது.
3. வாகன மோதலுக்கான காப்பீடு:
இந்தக் காப்பீடு பாலிசிதாரருக்கு அவரது சொந்த காருக்கு விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. இருப்பினும், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் வாகனத்தைக் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் வன்முறை சேதங்கள் அல்லது திருட்டு ஆகியவற்றிலிருந்து காப்பீடு அளிக்கப்படுவதில்லை.
உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் எனவே, ஒருவரின் எந்தத் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் பிறகு உங்களுக்கு எந்த வகைக் கார் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பொருத்தமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
Written by: Mr. Prasanna VK
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 02.05.2017

Saturday, April 29, 2017

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரலாறு காணாத வகையில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால், போராட்டம் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தின் முடிவில் ஏராளமான டூவீலர்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்கள் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு. அதேசமயம், போலீஸாரே பொதுச் சொத்துகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை போலீஸாரும் மறுத்துள்ளனர்.
கலவரம் வாகனம் தீ வைப்பு
இந்த நிலையில் வன்முறை மற்றும் கலவரத்தில் சேதம் ஆகும் வாகனங்களுக்கு இழப்பீடு குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலையிடம் பேசினோம். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தின் உரிமையாளர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக எடுத்துச் சொன்னார்.
ஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது!
"சென்னை கலவரத்தில் ஒரு சில வாகனங்களுக்குச் சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டு இருக்கும். பல வாகனங்களுக்குப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டு இருக்கும். வன்முறை மற்றும் கலவரத்தில் வாகனம் பாதிப்படைந்து இருந்தால் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் எப்போதும் போல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தை அதன் உரிமையாளர் ஸ்பாட் போட்டோ ஒன்று எடுத்து வைப்பது நல்லது.
இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்கும்போது, அவர்கள் கிளெய்ம் பார்ம் ஒன்றை வழங்குவார்கள். அந்த கிளெய்ம் பார்ம்-ல் வாகனம் பாதிப்படைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் குறிப்பிட வேண்டும். எங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; எதற்காக அங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; கலவரம் நடைபெற உள்ளது என்பதை முன்பே தெரிந்தும் ஏன் வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். ஏனெனில் வாகனத்தின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாலிசிதாரர் எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை பாலிசிதாரர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காகப் பல கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்கின்றன. அதேசமயத்தில் பாலிசிதாரர் அஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது.
பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும். மோட்டார் வாகன காம்ப்ரிஹென்ஸிவ் பாலிஸியில் பிரிவு ஒன்றில் Riot and Strike காரணமாக வாகனம் சேதமடைந்தால் இழப்பீடு உண்டு. பாலிசிதாரரின் வாகனம் சேதம் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாலிஸி வழங்கிய இன்ஸூரன்ஸ் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்திட வேண்டும். அருகில் உள்ள காவல்நிலையத்திலும் புகார் கொடுத்து FIR பெறுவது நன்று. வாகனம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
வாகன இழப்பீடு, தேய்மானம் மற்றும் கழிவுத்தொகையை கழித்துவிட்டு சர்வேயர் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும். டயர் மற்றும் ட்யூப் சேதமாகியிருந்தால், புதிதாக மாற்றுவதில் 50 சதவிகிதம் கழிக்கப்பட்டு இழப்பீடு மதிப்பிடப்படும். நாளிதழ்களில் பாலிஸிதாரரின் வாகனம் சேதமடைந்ததைப் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தால் அந்த நாளிதழையும் உங்களது இழப்பீட்டு மனுவோடு இணைத்திடலாம்.
FIR தேவையா?
ஜல்லிக்கட்டு கலவரத்தில் போலீஸாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இந்த நிலையில், வாகனத்தின் உரிமையாளர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து FIR பெறுவது என்பது மிக முக்கியமில்லை. ஏனெனில் FIR என்பது கூடுதல் ஆதாரத்திற்காகத்தான் கேட்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் FIR போடவில்லை என்றால் CSR வழங்கினால் அதுவே போதும். எப்படி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் ரசீது வழங்கப்படுகிறதோ, அதைப் போல காவல் நிலையத்தில் வழங்கப்படுவதுதான் CSR (Community Service Register) எனும் ரசீது. CSR வழங்கினாலே, காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக் கொண்டார்கள் என அர்த்தம். இந்த CSR-ஐ இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பார்ம்-ல் இணைத்துக் கொள்ளலாம்" என்றார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பொறுத்தவரை முன்னமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும் என்பதால் தாராளமாக இழப்பீடு கிடைக்கும்.
Image result for கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 28.01.2017

Tuesday, April 25, 2017

இருசக்கர வாகன காப்பீடு

இருசக்கர வாகன காப்பீடு
இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!
இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன,
அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.
விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது. விபத்து
3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.
4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.
மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம்.
இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
உதிரிப் பாகங்கள் மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
கணக்கீடு காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இணையச் சேவை இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
Written by: Prasanna VK
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் »24.04.2017




Saturday, April 1, 2017

மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்


மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்

மருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்!இன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட மருத்துவக் காப்பீடு எடுப்பது தொடர்பான ஆலோசனைகளை, இந்த இதழுக்கான `ஒரு டஜன் யோசனை’களாக வழங்குகிறார், சென்னையில் உள்ள நிதி ஆலோசக நிறுவனமான `ஃபண்ட் இந்தியா லிமிடெட்’டின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்.

பெண்களுக்கு: 
பொதுவாக பெண்கள் தங்களுடைய 18-ம் வயதில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த பாலிசி அவர்களின் மகப்பேறு காலத்தில் உதவும். ஆனால், மகப்பேறு காலத்துக்குக் கவரேஜ் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெண்கள் ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தாலும், 35-ம் வயதில் ‘சிறப்பு கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ்’ பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதில், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலே, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு
குழந்தையின் தாய் மகப்பேறுகால கவரேஜ் எடுத்திருந்தால், குழந்தைக்கும் கவரேஜ் கிடைக்கும். அப்படி இல்லாத சூழலில் குழந்தை பிறந்து 90-ம் நாளில் பெற்றோர், குழந்தைக்குச் சேர்த்து ஒரு ‘ஃப்ளோட்டர் பாலிசி’ எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தையின் 18 வயது வரை உதவும்.

காத்திருப்புக் காலம்:ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். ஒருசில நோய்களுக்கு (உதாரணம்: சிறுநீரகம், குடல் இறக்கம்) மட்டும் காத்திருப்புக் காலம் மாறுபடும். பொதுவாக, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை எடுப்பது சிறந்தது.

தனிநபர் பாலிஸி: குறைவான தொகைக்கு பாலிசி எடுத்தால் இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வரும் இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்காது. எனவே, அலுவலகத்தில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை கணக்கில்கொள்ளாமல், ஒரு தனிநபர் ஹெல்த் பாலிசியை, வயதுக்குத் தகுந்த கவரேஜுடன் எடுக்கலாம். 

வயது... கவரேஜ் தொகை:30 வயதுக்குக் கீழ், திருமணம் ஆகாதவர் என்றால்... ரூபாய் 3 லட்சம் கவரேஜ் தொகை போதுமானது. 

30 ப்ளஸ் வயது, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால்... ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசியின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும். 

40 ப்ளஸ் வயதுள்ளவர்கள் எவ்வளவு தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள் என்பதைவிட, என்ன மாதிரியான பாலிசிகளை எடுக்கிறார்கள் என்பது முக்கியம். இந்த வயதில் சாதாரண ஹெல்த் பாலிசிகளை எடுப்பதைவிட, குடும்பத்தில் தாய், தந்தைக்கு என்ன மாதிரியான நோய்கள் (கேன்சர், வாதம், சர்க்கரை) வந்திருக்கிறது, மரபுரீதியாக அது தனக்கும் வர வாய்ப்புகள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதற்கான சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டும். 

வயதை மறைக்காதீர்கள்:பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பாலிசி எடுக்கும்போது, அந்நிறுவனத்தால் பாலிசிதாரருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பாலிசி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிறைய பாலிசிதாரர்கள் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்க்க வயதைக் குறைத்துக் குறிப்பிடுவார்கள். இதனால் ப்ரீமியம் கட்டும்போது பிரச்னை வராது. எனினும், க்ளெய்ம் செய்யும்போது நிச்சயமாகப் பிரச்னை வரும். மேலும், வயதை தவறாகக் குறிப்பிட்ட காரணத்துக்காகவே க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. 

மூத்த குடிமக்கள் பாலிசி: 60 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) பாலிசிகள் எடுத்துக் கொள்வது நல்லது. பாலிசி எடுப்பவர் நிச்சயமாக 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் அவரின் வாழ்நாள் வயதுவரை புதுப்பித்துக்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெய ருடன் முதியவர்களைச் சேர்த்து ‘ஃப்ளோட்டர் பாலிஸி’ எடுப்பதைத் தவிர்த்து, பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவர்களின் பெயரில் பிரத்யேகமாக இந்த சீனியர் சிட்டிசன் பாலிசி எடுப்பதே சிறந்த பயனைத் தரும். 

நோயை மறைக்காதீர்கள்: ஏற்கெனவே நோய் இருந்தால் பாலிசி எடுப்பது பயனற்றது என பலரும் நினைக்கிறார்கள். மேலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்கும்போது, அந்நோய் பற்றிய தகவல்களை மறைத்துவிடுகிறார்கள். இதனாலும் க்ளெய்மில் பிரச்னை வரலாம். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கும் தாராளமாக பாலிசி எடுக்கலாம். பெரும்பாலும் காத்திருப்புக் காலமும் பிரீமியமும்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே, நோயைக் குறிப்பிட்டே பாலிசி எடுத்துப் பயன்பெறலாம்.

சிகிச்சை பெறும் மருத்துவமனை:சிகிச்சை எடுக்க நேரிடும்போது, பாலிசி எடுத்துள்ள நிறுவனம் டை-அப் வைத்துள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரச்சூழலில் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்தத் தகவலை 24 மணி நேரத்துக்குள் அந்நிறுவனத்தின் `டிபிஏ’-வுக்கு (Third Party Administer) தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக்கொண்ட 15 நாட்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

க்ளெய்ம் முறைகள்:மருத்துவக் காப்பீட்டில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று, கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிஸி தாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக நிறுவனமே செலுத்திவிடும். இன்னொன்று, மெடிக்ளெய்ம். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த, அந்தக் கட்டண ரசீதுகளை எல்லாம் சமர்ப்பித்து பிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.

க்ளெய்முக்குத் தேவையான ஆவணங்கள்: மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையால் வழங்கப் படும் அறிக்கை, சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள், மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம். 

முகவரி மாற்றம்:இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் தவறு ஏதேனும் இருந்தால், அதை உடனடியாக பாலிசி நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

சு.சூர்யா கோமதி
அவள்விகடன் - 26.01.2016





Thursday, August 25, 2016

92 பைசாவில் பயணக் காப்பீடு


92 பைசாவில் பயணக் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

92 பைசாவில் முன்பதிவு பயணிகளுக்கு பயணக் காப்பீடு

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, விருப்பத் தேர்வாக இந்த பயணக் காப்பீடு திட்டம் இருக்கும். பயணிகள் விரும்பினால், ரயில் கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசாவை செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 

பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொருந்தாது. 

அதேபோல், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

 ரயில்கள் விபத்தை சந்தித்தாலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலின்போதோ பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தில் பயணிகள் முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ.10 லட்சமும், கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.7.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். 

இதேபோல், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 

முன்பதிவு செய்த பிறகு பயணச்சீட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமணி நாளிதழ் - 26.08.2016

Monday, August 22, 2016

டூ வீலர் இன்சூரன்ஸ்


டூ வீலர் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

இரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. 

ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). 

அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).

இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.   

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, 

இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். 

இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம். 

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 

மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும். 

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும். 

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். 

இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   

தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

ஓன் டேமேஜ் பாலிசி -  பிரீமியத்தில் எவ்வளவு லாபம்?

ஒரு வருட பாலிசி - (மூன்றாண்டுகளுக்கு சேர்த்து மொத்த பிரீமியம்) - ரூ.2,177

3 ஆண்டு பாலிசி  (நிச்சயம் 30% தள்ளுபடி, 20% சிறப்புத் தள்ளுபடி) - ரூ.1,281

லாபம் - ரூ.896(வாகனத்தின் மதிப்பு ரூ.50,000, 150 சிசி, புதிய அல்லது பழைய வாகனம்.)

சோ.கார்த்திகேயன்

நன்றி : நாணயம்விகடன் - 07.02.2016

Monday, August 15, 2016

மரங்களுக்கும் இன்சூரன்ஸ்


மரங்களுக்கும் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. மனிதர்களின் எதிர்காலத்தை காப்பீடு முடிவுசெய்வதுபோல் பயிர்களுக்கும் காப்பீடு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.அந்த வரிசையில் மரங்களுக்கான இன்சூரன்ஸ் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அடிப்படை நிபந்தனைகள்

* இன்சூரன்ஸ் என்றதும்,  'இருக்கிற செலவில் இதுவேறயா' என எரிச்சலாகாதீர்கள். உற்பத்திச் செலவில் வெறும் 1.25 சதவீத தொகையை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது.

* தமிழ்நாட்டில் ஏழு வகையான மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. தைலம், சவுக்கு, சூபாபுல், சிசு, மலைவேம்பு, தீக்குச்சி , குமிழ் போன்ற மரங்களை பயிர் செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* இயற்கையாக ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள், வன விலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், புயலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டம் பொருந்தும்.

* இவை மட்டுமல்லாது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டமானது பொருந்தும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம்.

* 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டிற்கான பிரிமியம் தொகையை நாம் இன்சூரன்ஸ்  நிறுவனத்திடம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட இடர்ப்பாடுகள் நமக்கு நேரிடும்போது நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் நமது நஸ்டத்தை சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* தமிழகத்தில் இந்தத் திட்டமானது தமிழ்நாடு காகிதக் கூழ் நிறுவனம் மூலம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறை சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி இது வரை சுமார் 5000 ஏக்கர் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் பரப்பளவும் அதிகரித்ததோடு மரங்களின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரத் தேவைகளை தாமே நிவர்த்தி செய்து கொள்கின்றன.

* இத்திட்டத்தில் பயன்பெற நாம் ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.

இதில் உறுப்பினராக சேர விரும்புவோர், 

முதல்வர், 
வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், 
மேட்டுப்பாளையம் – 641 301 

ஐ தொடர்பு கொள்ளலாம்.

- மு.முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி : விகடன் செய்திகள் - 15.08.2016

Tuesday, April 12, 2016

தொடர்ந்து இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டமுடியாத சூழ்நிலை


தொடர்ந்து இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டமுடியாத சூழ்நிலை, என்ன செய்ய வேண்டும்?

ராம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்குக் கை நிறைய வருமானம் வந்துகொண்டிருந்தது.   திருமணமாகி மூன்று மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் அவருக்கு இருந்தன. அவரை ஒரு இன்ஷூரன்ஸ் ஆலோசகர் அணுகி, குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்குமாறு கூறினார்.
ராமுவும் தன் தேவைக்கேற்ப பாலிசி இருப்பதாக நினைத்து இரண்டு பாலிசிகளை வாங்கினார். அவை இரண்டும் 15 வருடம் பிரீமியம் செலுத்தும் எண்டோவ்மென்ட் பாலிசி. ஒரு வருடத்துக்கு ரூ.50,000 வீதம் பிரீமியமாக இரண்டு பாலிசிகளுக்கும் ரூ.1,00,000 கட்டிக்கொண்டு வந்தார்.
ஐந்து வருடம் கழித்து அவருடைய நிறுவனம் சரியாக இயங்காத காரணத்தி னால் மூடும் நிலை ஏற்பட்டதால், அவருக்கு வேலை இல்லாமல் போனது.  இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்ட முடியாமல் போனது.

அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு நிதி ஆலோசகரை அணுகினார். அந்த நிதி ஆலோசகரோ அந்த பாலிசிகளை அலசி ஆராய்ந்து விட்டு, ‘‘நீங்கள் வைத்திருப்பது எண்டோவ்மென்ட் பாலிசி. இந்த பாலிசியை எடுக்கும்முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது  முக்கியம். ஏனெனில், இந்த பாலிசிகளை எடுத்துவிட்டால், நீண்ட கால அடிப்படையில் பிரீமியம் செலுத்தும் பொறுப்பை  நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள்.   பிரீமியத்தை முழுக்க  செலுத்தி னால் மட்டுமே இந்த பாலிசி மூலம் முழுமையான பலனை  நீங்கள் அனுபவிக்க முடியும். இடையில் பாலிசியில் பிரீமியம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியை சரண்டர் செய்யலாம். அல்லது ‘பெய்ட் அப் பாலிசி’யாகவோ மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி’’ என்றார்.
இப்போது ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருக் கிறார் ராம். இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் பலரும் ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள்.
ஒரு பாலிசியின் பிரீமியத்தை குறைந்தபட்சமாக 3 அல்லது 5 வருடத்துக்கு தொடர்ந்து செலுத்தி இருந்தால், அதை ‘பெய்ட் அப் பாலிசி’யாக மாற்ற முடியும். 

இவ்வாறு செய்வதால், பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து கட்டும் அவதியில் இருந்து தப்பிப்பதுடன், குறைந்த பட்ச பாலிசிப் பலன்களையும் அனுபவிக்க முடியும். 

உதாரணமாக, 
ரூ.50,000 வீதம் 15 வருடம் பிரிமீயம் கட்ட வேண்டிய பாலிசியின் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்று எடுத்துக் கொள்வோம்.  பாலிசிதாரர் 5 வருட பிரீமியம் தொடர்ந்து செலுத்தி இருக்கும் நிலையில், இந்த பாலிசியை தொடர முடியாமல் ‘பெய்ட் அப் பாலிசி’ யாக மாற்றினால் என்ன ஆகும் என்பதற்கான சூத்திரம் இதோ: 
பெய்ட் அப் மதிப்பு  =
 (பிரீமியம் கட்டிய வருடங்கள் X காப்பீட்டுத் தொகை) / மொத்த பிரீமியம் கட்டும் வருடம்
அதாவது, பெய்ட் அப் மதிப்பு = (5 X ரூ.10,00,000) / 15 = ரூ.3.33 லட்சம் ஆகும். இந்த பாலிசியை பெய்ட் அப்பாக மாற்றினால், ரூ.3.30 லட்சத்துக்குக் காப்பீடு கிடைப்ப துடன், பாலிசியின் போனஸ் மற்றும் இதர வருமானங்களை பாலிசி முதிர்வில் மொத்தமாக பெற முடியும். தோராயமாக, இப்போது உள்ள பெரும்பாலான பாலிசிகளில் 4% முதல் 5% வரை வருடாந்திர போனஸாக வழங்கப் படுகிறது. இந்த பாலிசியை ‘பெய்ட் அப்’பாக மாற்றினால், பாலிசியின் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.3.5 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பாலிசிதாரர் பாலிசி முதிர்வுக்குமுன் இறக்கும் தருவாயில், குறைக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையான ரூ.3.33 லட்சம் காப்பீட்டாளரின் குடும்பத்துக்குப் போய் சேரும்.
இதே பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், எவ்வளவு கிடைக்கும் என்பதற்கான சூத்திரம் இதோ:
சரண்டர் மதிப்பு = 
(30% அல்லது 40% X பிரீமியம் செலுத்தி யது) – முதல் வருட பிரீமியம்

அதாவது, சரண்டர் மதிப்பு = (30% X ரூ. 2,50,000) – ரூ. 50,000 = ரூ. 1,00,000 ஆகும். அதாவது, இவர் ஐந்து வருட பாலிசித் தொகையாக ரூ.2.5 லட்சம் கட்டி இருந்தாலும், பாலிசி சரண்டர் தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இரண்டில் எது பெஸ்ட்? 
சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை  மீதமுள்ள 10 வருடத்துக்கு 8% வட்டியில் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.2.15 லட்சம் கிடைக்கும். இதுவே, சிறிது ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால், 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்கும். சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை 10 வருடத்துக்கு 15% வருமானத்தில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.4 லட்சம் வரை கிடைக்கும். ஆனால், இப்படி செய்யும் போது, ‘பெய்ட் அப் பாலிசி’ மூலம் கிடைக்கும் ரூ.3.33 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்களுக்குக் கிடைக்காது.
பிரீமியம் கட்டாமல் ஏதாவது ஆயுள் காப்பீடு பாலிசி உங்களிடம் இருந்தால், ‘பெய்ட் அப்’ மதிப்பு, சரண்டர் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, எது லாபம் என கவனித்து முடிவு எடுங்கள்.
நன்றி : நாணயம் விகடன் - 10.04.2016

Monday, April 11, 2016

எளிதாக இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெற


எளிதாக இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெற என்ன செய்ய வேண்டும்?

ன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் மிகப் பெரிய சவாலாக இருப்பது க்ளெய்ம்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே, எளிதாக க்ளெய்ம் கிடைத்துவிடும் என்று நினைத்து பாலிசி எடுப்பவர்கள், பிற்பாடு இழப்பீடு கிடைக்கவில்லை என்றதும் ஏமாந்து போகிறார்கள். எதற்கு, எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும் என்பது தெரியாமல் பாலிசி எடுப்பதே இதற்கு காரணம். தவிர, க்ளெய்ம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் பலருக்கு தெரிவதில்லை. நாம் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு க்ளெய்ம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களை எப்படி தவிர்க்கலாம் என்று மெட்சேவ் ஹெல்த்கேர் டிபிஏ நிறுவனத்தின் மேலாளர் மாரியப்பனிடம் கேட்டோம்.
க்ளெய்ம் நடைமுறை!
‘‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிசிதாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. இன்னொன்று, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தபிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை 24 மணி நேரத்துக்குள் டிபிஏவுக்கு தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக் கொண்ட 15 நாட்களுக்கு க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்!
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையில் வழங்கப்படும் அறிக்கை (Discharge Summary Report of Patient), சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள் அதாவது, லேப் ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவை, மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லது டிபிஏவிடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம் ’’ என்றார்.
பல பாலிசிகள்!
ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் மற் றும் டாப்அப் பாலிசியில் எப்படி க்ளெய்ம் செய்வது என்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பாகுபலி விளக்கமாக கூறுகிறார்.
“வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசி, தனிநபர் பாலிசி, டாப் அப் பாலிசி என பல பாலிசிகள் வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் குரூப் அல்லது தனிநபர் பாலிசியில் எதில் வேண்டு மானாலும் பாலிசிதாரர் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும்.
சில நேரங்களில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் போது இரண்டு பாலிசியிலும் க்ளெய்ம் செய்ய வேண்டிவரும். அதாவது, குரூப் மற்றும் தனிநபர் பாலிசியில் தலா ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் தொகை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் க்ளெய்ம் 1.5 லட்சம் ரூபாய் வருகிறது. அப்போது இரண்டு பாலிசியிலும் நீங்கள் க்ளெய்ம் செய்யலாம். அப்படி செய்யும்போது முதலில் எடுத்த பாலிசி மூலம் அதிகபட்ச கவரேஜ் தொகை எவ்வளவோ, அது  க்ளெய்மாக கிடைத்துவிடும். மீதமுள்ள க்ளெய்ம் தொகைக்கு இரண்டாவதாக எடுத்த பாலிசியில் க்ளெய்ம் செய்யலாம்.
முதலில் க்ளெய்ம் செய்யும் பாலிசி நிறுவனத்திடம் ஒரிஜினல் பில்களை தர வேண்டும். மீதமுள்ள தொகையை மற்றொரு நிறுவனத்தில் க்ளெய்ம் செய்வதற்கு வசதியாக ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
டாப் அப் க்ளெய்ம்!
டாப் அப் பாலிசியை பொறுத்தவரை, குறிப்பிட்ட தொகைக்கு மேல்தான் க்ளெய்ம் செய்ய முடியும். அதாவது, ரூ. 2.5 லட்சத் துக்கு க்ளெய்ம் வருகிறது எனில் டாப் அப் பாலிசியில் உங்களுடைய அடிப்படை பாலிசி கவரேஜ் தாண்டி, மீதமுள்ள தொகைக்கு க்ளெய்ம் செய்யலாம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். 2.5 லட்சம் ரூபாய் க்ளெய்ம் தொகையில், அடிப்படை பாலிசி 2 லட்சம் ரூபாய் கவரேஜ் எனில் மீதமுள்ள 50 ஆயிரம்  ரூபாய்க்குதான் டாப்அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியும். க்ளெய்ம் தொகை 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும்போது டாப் அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியாது.
பாலிசி எடுத்தபிறகு!
பாலிசி பத்தி ரம் கையில் கிடைத்த வுடன் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதற்கான ஆதாரத்தை தந்து மாற்றுவது நல்லது. மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனை பட்டியல், எந்தெந்த சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும், எந்த வியாதி களுக்கு காத்திருப்புக் காலம் உண்டு என்பதை கேட்டுத் தெரிந்துக் கொள்வது முக்கியம். 
பாலிசி எடுப்பதற்கு முன்பு உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். இது பொதுவாக 48 மாதங்கள் இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்களை தெரிவிக்காமல் இருந்தால் க்ளெய்ம் நிராகரிப் பதற்கான வாய்ப்புள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது சில பொருட்களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதாவது சிரஞ்ச், கையுறை போன்றவை இருக்கும். எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  
மாற்றங்கள் அப்டேட்!
இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு பாலிசி தாரரின் முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. ஏனெனில் முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்” என்றார்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்! (ஆயுள் காப்பீடு)
ஆயுள் காப்பீடான டேர்ம் இன்ஷூரன்ஸிலும் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது. இதை சமாளித்து எளிதாக க்ளெய்ம் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பார்தி அக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் சி.எல்.பரத்வாஜிடம் கேட்டோம்.
‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை பாலிசிதாரரின் மரணத்துக்கு பிறகு நாமினிதான் க்ளெய்ம் செய்ய முடியும். எனவே, க்ளெய்ம் விஷயத்தில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
க்ளெய்ம் நடைமுறை!
பாலிசிதாரர் மரணம் அடைந்தபிறகு பாலிசியின் ஒரிஜினல் பத்திரம், நாமினியின் (நாமினி பற்றிய விரிவான கட்டுரையைப் படிக்க:http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10958 அடையாளம் மற்றும் முகவரி சான்று, பாலிசிதாரரின்  இறப்புச் சான்றிதழ், விபத்து மூலமாக மரணம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரின் அறிக்கை ஆகியவற்றுடன் நாமினி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு கடிதம் எழுத வேண்டும். க்ளெய்ம் படிவத்தை பூர்த்திசெய்து, மேற்கூறிய ஆவணங்களை இணைத்து க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசி வைத்திருப்பவர்கள் மேற்கூறிய ஆவணங்களை இணைத்து அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் க்ளெய்ம் செய்யலாம். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் போது கூடுதல் படிகள்(copy) வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இறப்புச் சான்றிதழ் ஒரிஜினல் கொடுப்பது அவசியம்.
மேலும், பாலிசிதாரர் மரணம் அடையும் சூழ்நிலையின் அடிப்படையில் உடற்கூறு ஆய்வறிக்கை கேட்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் போது மரணம் அடைந்திருந்தால் மருத்துவரின் அறிக்கை அவசியம். இதன் மூலமாக பாலிசிதாரரின் மரணத்துக்கான  காரணத்தை தெரிந்துகொள்ள இது உதவும்” என்றார்.
நிராகரிப்பை தவிர்க்க!
டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசியில் பெரும்பாலா னவர்கள் தங்களின் விவரங்களை தவறாக தந்துவிடுகிறார்கள். வயது, ஏற்கெனவே உள்ள நோய், அதற்கான சிகிச்சை குறித்த விவரத்தை குறிப்பிடுவது அவசியம். ஏஜென்ட் மூலமாக பாலிசி எடுத்தாலும், ஆன்லைனில் பாலிசி எடுத்தாலும் பாலிசிதாரர்கள் தகவல்களை தவறாக தருகிறார்கள். இது முற்றிலும் தவறு. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது எந்த தகவல் தந்தாலும் அது உண்மையான தகவலாக இருப்பது அவசியம்.
இரா.ரூபாவதி
நன்றி : நாணயம் விகடன் 18.10.2015

Tuesday, January 19, 2016

மோட்டார் இன்சூரன்ஸ் கிளெய்ம்

எதற்கெல்லாம் மோட்டார் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்ய முடியாது?
நான் நிறுத்தி நிதானமாகத்தான் வண்டி ஓட்டுறனே… என் வண்டிக்கு நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்… என மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பதையே தவிர்த்து வருகின்றனர் நம்முடைய மக்கள். சாலையில் நாம் என்னதான் நிதானமாகச் சென்றாலும், நம் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்களா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆகையால், மோட்டார் இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று.
ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே நமக்கு நிச்சயமாக இழப்பீடு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக் கூடாது. இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தபின் பெரும் பாலான சமயங்களில் க்ளெய்ம் கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்கிற உண்மையை ஒவ்வொரு பாலிசிதாரரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள் எந்தெந்த நிலைமையில் க்ளெய்ம் செய்யும்போது இழப்பீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
எதற்கெல்லாம் க்ளெய்ம் இல்லை?மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பது குறித்து இன்ஷூரன்ஸ் துறை நிபுணர் மற்றும் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம். 
அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 
“வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் இல்லை. 
வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால், க்ளெய்ம் இல்லை. பழகுநர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால், உரிமம் பெற்ற ஒருவர் அப்போது உடன் இருந்திருந்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும்.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்சியாகவோ அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகவோ பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் கோரினால் இழப்பீடு எதுவும் கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், க்ளெய்ம் கிடைக்காது. 
சாதாரண பாலிசியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், க்ளெய்ம் கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
வழக்கமாக குறிப் பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவு களுக்கு க்ளெய்ம் கிடையாது. 
நீதிமன்றம், போக்கு வரத்து அதிகாரி அல்லது போலீஸ் அதிகாரிகளால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்
பட்டவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லை எனில்..?வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு க்ளெய்ம் இல்லை. 
நம் நாட்டின் எல்லைக்கு வெளியே விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது. அடிக்கடி விபத்து ஏற்படுத்துவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது. ராங் சைட் டிரைவிங் ஓட்டினால் க்ளெய்ம் கிடையாது” என எந்தெந்த நிலையில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக விளக்கினார்.
இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தர மறுக்கும்போது, இன்ஷூரன்ஸ் குறை தீீர்ப்பாளர்களிடம் முறையிடலாம். குறை தீர்ப்பாளர்கள் க்ளெய்ம் வழங்க மறுக்கும்பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கிட்டு நீதிபதி திருப்தி அடையும் பட்சத்தில் க்ளெய்ம் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. சர்வதேச அளவில் இது 5 சதவிகிதமாக இருக்கிறது.
மோட்டார் வாகன பாலிசிகளில் இரண்டு வகை உண்டு. 
ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான பாலிசி (own damage policy). 
அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான பாலிசி (third party insurance). 
மேற்கண்ட இரண்டு வகையான பாலிசிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிசி (Comprehensive policy). விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் பாலிசி எடுக்கும்போதே மிக கவனமாக இருப்பது நல்லது!
By vayal on 16/01/2016