disalbe Right click

Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts
Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts

Thursday, January 4, 2018

ரயில்பயணியிடம் கொள்ளை நடந்தால்

ரயில்வே துறையே பொறுப்பு'
'பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; பயணத்தின்போது ரயில் பயணியிடம் கொள்ளை  நடந்தால், அந்த இழப்பை, ரயில்வேதான் ஈடுகட்ட வேண்டும்' என, தேசிய நுகர்வோர் கமிஷன் - National Consumer Disputes Redressal Commission (NCDRC) உத்தரவிட்டு உள்ளது
முதல் வகுப்புப்பெட்டியில்....
கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 8-ம் தேதி  ஜாஸ்மின் மான் என்ற பெண்மணி, டில்லியில் இருந்து கங்காநகருக்கு, சூப்பர் பாஸ்ட் ரயிலில், 'ஏசி' வகுப்பில் சென்றார்அப்போது,  அதிகாலையில், அவர் பயணித்த பெட்டியில் கதவு திறந்திருந்ததால், உள்ளே நுழைந்த திருடன், அவரை தாக்கி, ரூ.2,30,000/- மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் பறித்துச் சென்றான்.  அந்த நேரத்தில் அந்தப் பெண்மணி அலறி, ரயில்வே ஊழியர்களை உதவிக்கு அழைத்த போதும், யாருமே வரவில்லை. இதுபற்றி அவர் அடுத்த ஸ்டேஷனில் உள்ள (RPF) ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில்  புகார் பதிவு செய்தார். 
நுகர்வோர் கமிஷனில் புகார்
இது தொடர்பாகஜாஸ்மின் மான் மாவட்ட நுகர்வோர் கமிஷனில்,  புகார் அளித்தார்புகாரை விசாரித்த நுகர்வோர் கமிஷன், 'பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், திருடு போன பொருட்களுக்கான பணமும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாயை, வட்டியுடன் தர வேண்டும்' என, ரயில்வேக்கு உத்தரவிட்டது.
மேல்முறையீடு 
இந்த உத்தரவை எதிர்த்துரயில்வே ராஜஸ்தான் நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது.  தள்ளுபடி செய்யப்பட்டதால், தேசிய நுகர்வோர் கமிஷனில், ரயில்வே சார்பில், இரண்டாம்  மேல்முறையீடு செய்யப்பட்டதுகமிஷன் முன் ஆஜரான, ரயில்வே வழக்கறிஞர், 'பயணியரின் பொருட்களுக்கு, ரயில்வே பொறுப்பாக முடியாது. ரயில்வேயின் ஏஜன்ட் அல்லது பணியாளரிடம், பதிவு செய்து ரசீது பெறப்பட்டிருந்தால் மட்டுமே, ரயில்வே பொறுப்பேற்க முடியும்' என, வாதிட்டார்
தேசிய நுகர்வோர் கமிஷன் பிறப்பித்த உத்தரவு
இதை தேசிய நுகர்வோர் கமிஷன் ஏற்க மறுத்தது, நுகர்வோர் கமிஷன் பயணியரின் பொருள் இழப்பு, ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் அல்லது ஏஜன்டுகளின் அலட்சியத்தால் ஏற்பட்டது என, பயணியால் நிரூபிக்க முடியாவிட்டால் மட்டுமே, (இழப்பிற்கு) அதற்கு, ரயில்வே பொறுப்பேற்க முடியாது
தற்போதைய வழக்கில், ரயில்வே ஊழியர், 'ஏசி' அறையின் கதவை, அலட்சியமாக திறந்து விட்டு சென்றுள்ளார். அதனால்தான், திருட்டு நடந்துள்ளதுதன் பொருட்களை பாதுகாக்க,  (பயணி) மனுதாரர் குரல் எழுப்பி உள்ளார். ஆனால், ரயில்வே ஊழியர்கள் யாருமே உதவிக்கு வரவில்லை. பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; ரயில் பயணியிடம் கொள்ளை நடந்தால், அந்த இழப்பை ரயில்வேதான், ஈடுகட்ட வேண்டும். எனவே, மாவட்ட நுகர்வோர் கமிஷன் அளித்த உத்தரவு ஏற்கப்படுகிறது
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
தீர்ப்பு நகல்கள் உதவி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj  அவர்கள்

Wednesday, November 29, 2017

கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும்

கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கும்போதே அந்த கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து     விடுகின்றனர். இந்நிலையில், மாண வர்கள் வேறு படிப்புக்கு விண்ணப் பித்து அந்த படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலில், மாணவர்கள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பல கல்லூரிகள் திருப்பி அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் பாது காப்பு கவுன்சில் மற்றும் 
காஞ்சி புரத்தை அடுத்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.என்.ராமன் ஆகியோர் செங்கல்பட்டு நுகர்வோர் குறை தீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இரண்டாவது மனுதாரரான நான், எனது மகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2011 ஜூலை 22-ம் தேதி ரூ.67,000 செலுத்தி பொறியியல் படிப்பில் சேர்த்தேன். வகுப்புகள் தொடங்கிய 6 நாட்களில், எனது மகளுக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு, எனது மகள் பொறியியல் கல்லூரிக்கு செல்லவில்லை.
எனவே, ஓராண்டு கல்வி கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி அளிக்கும்படி கல்லூரிக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தினர், எனக்கு ரூ.22,000-த்துக்கான காசோலையை மட்டும் அனுப்பி வைத்தனர்.
எனவே, மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த செங் கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் கே.சிவானந்தஜோதி, உறுப்பினர்கள் கே.பிரமீளா, டி.பாபு வரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் பயிலாத காலத்துக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட பொது அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளது.
யுஜிசி-யின் அந்த அறிவிப்பில், “மாணவர்களின் சேர்க்கையில் காத்திருப்போர் பட்டியலை கல்வி நிறு வனங்கள் வைத்திருக்க வேண்டும். வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் வெளியேறினால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவரை சேர்க்க வேண்டும். வெளியேறும் மாணவரிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தில் சேர்க்கை நடைமுறை கட்டணமாக அதிக பட்சம் ரூ.1,000 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.
வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு மாணவர் வெளியேறினால், காலியாக உள்ள அந்த இடத் துக்கு வேறொரு மாணவர் சேர்க்கப் படும்போது, கல்லூரியில் பயின்ற நாட்களுக்கான பிடித்தம் போக மீதி கல்வி கட்டண தொகையை வெளியேறும் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இரண்டாவது மனுதாரரின் மகள் 6 நாட்கள் மட்டுமே கல்லூரியில் பயின்றுள்ளார். எனவே, மனுதாரர் கோரிய மீதித் தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்கு செலவாக ரூ.5,000-த்தையும் கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி ; தி இந்து தமிழ் நாளிதழ் - 02.07.2017
வழக்கு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்