disalbe Right click

Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts
Showing posts with label RTI - தீர்ப்பு. Show all posts

Thursday, March 1, 2018

அதிகாரிகள் செய்த நிலமோசடி!

வழக்கின் சுருக்கம்
கோவையில் உள்ள 14 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வி.வி.ஆனந்தபாரதி என்பவரிடமிருந்து 06.11.1992 அன்று எம்.விஜயமோகன் என்பவர் கிரையம் பெறுகிறார். அந்த நிலத்தை எம்.விஜயமோகனிடமிருந்து 31.01.2005 அன்று உதயகுமார் என்பவர் கிரையம் பெறுகிறார். உதயகுமார் பெயரில் பட்டாவும் வாங்கப்படுகிறது. இந்த இடத்தின் சர்வே எண்:27/4 ஆகும். எதிர்பாராவிதமாக உதயகுமார் இறந்துவிடுகிறார். இவரது நிலமானது கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் மோசடியாக புல எண்:27/4-A, 27/4-B என்று உட்பிரிவு செய்யப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமாரின் மனைவி திருமதி கே.மலர் என்பவர் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 19.02.2014 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்கீழ் மூலம் மேற்கண்ட மோசடி குறித்து சில தகவல்கள் கேட்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(1)ன்கீழ் 30 நாட்களுக்குள் தகவல் வழங்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை 21.03.2014 அன்று (கோவை வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக) வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பிவிடுகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(3)ன்கீழ், வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அந்த முதல் மேல்முறையீட்டு மனுவை 5 நாட்களுக்குள் கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் 15 நாட்கள் கழித்து, காலதாமதமாக, அந்த மனுவை கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த மனுவை 07.04.2014 அன்று பெற்றுக் கொண்ட கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(6)ன்கீழ் மனுதாரருக்கு தகவல் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுதாரர் கே.மலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(3)ன்கீழ் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார்.
மாநில தகவல் ஆணையமானது அவரது மனுவை ஏற்றுக் கொண்டு 12.02.2015 அன்று விசாரனை செய்து சில ஆனைகளை பிறப்பிக்கிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக 23.04.2015 அன்று மாநில தகவல் ஆணையம் மீண்டும் விசாரனையை நடத்தி கீழ்க்கண்ட ஆணையை பிறப்பிக்கிறது.
குறிப்பு: கீழ்க்கண்ட ஆணையை மட்டும் பார்த்தால் எதுவும் புரியாது என்பதற்காக வழக்கைப் பற்றிய விபரம் என்னால் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 01.03.2018




நன்றி : ஆவண காப்பகர் திரு   A Govindaraj Tirupur 

Thursday, December 21, 2017

RTI- பதில் எவ்வாறு இருக்க வேண்டும்

தமிழக அரசு சுற்றறிக்கை 

சென்னை: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை இந்தச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு என்ன வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு இந்த வழிமுறைகளை வெளியிட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை இவற்றை விளக்கி அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் பதிலில், தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் தரும் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை விண்ணப்பதாரர் கோரிய தகவல்களை தெரிவிக்க இயலாது என்றால் அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
வேறொரு தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இறுதியாக தகவல் கோரி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளாரா அல்லது மேல் முறையீடா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு, தேதி, அதனை அளிக்கும் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்-22.12.2015 
Personnel and Administrative Reforms (AR.3) Department,
Secretariat,
Chennai - 600 009.
Letter No.41633/AR.3/2015-1, Dated :23.11.2015.
Ref: From the Deputy Secreatary, Govt.of India, Ministry of Personnel, Public Grievances Pensions Department of Personnel and Training, Office Memorandum No. 10/1/2013-IR, Dated : 06.10.2015.
Lr.No.41633 Dt: November 23, 2015
Right to information Act 2005 - Format for giving information to the applicants under Right to Information Act - Issue of guidelines - Communicated - Regarding
 


No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.



Thursday, October 12, 2017

RTIன் கீழ் நீதிமன்றத்தில் நகல்கள் பெற முடியாது


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,ன் கீழ் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நகல்கள் பெற முடியாது. அதற்கு வேறு வழி உள்ளது.  
ஏன் பெற முடியாது? அப்படி என்றால் நீதிமன்றங்களில் நகல்கள் பெற என்ன செய்ய வேண்டும்?  என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தந்துள்ள கீழ்க்கண்ட தீர்ப்பு பதில் அளிக்கிறது.



பதிவு எண்: 5828

இது போன்ற அரிய, பல தீர்ப்புகளின் நகல்களைப் பெற...... 
https://rtigovindaraj.blogspot.in/ க்கு வருகை தாருங்கள்.

நன்றி : A Govindaraj Tirupur

Friday, August 18, 2017

கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பையும்

கீழ்கோர்ட் அளித்த  தீர்ப்பையும் 
உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்!
கீழ் கோர்ட் தீர்ப்பை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டுக்கு உத்தரவு
புதுடில்லி: 'கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பையும் உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதி மன்றத்துக்கு, சி.ஐ.சி., எனப்படும், தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
'சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளில், கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிட்டால்தான், அதை இரண்டு தீர்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். 
கீழ்கோர்ட் தீர்ப்புகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்' என, ஆர்.கே. ஜெயின் என்பவர், தலைமை தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 
'கடந்த, 2014 ஜூன் முதல், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன், நீதிபதிகள் உத்தரவிட்டால் மட்டுமே, அந்த தீர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'முந்தைய தீர்ப்புகள் தேவைப்பட்டால், அதற்காக விண்ணப்பித்து, நகலை பெறலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே. மாத்தூர், தன் தீர்ப்பில் கூறியதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கீழ் கோர்ட்டின் தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக வசதியாக, அந்த வழக்கில் கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 17.08.2017

Tuesday, May 2, 2017

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்: ரயில்வே நிர்வாகம் அதிரடி
புதுடெல்லி: ரயில்வே கேன்டீன்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் தந்த விவகாரத்தில் அதிகாரிகள் 3 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது தொடர்பாக அஜய் போஸ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடம் கேள்வியெழுப்பி இருந்தார். 

இதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில் 

100 கிராம் தயிர் ரூ.972, 
1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1242-க்கும்
1 கிலோ உப்பு ரூ.40-க்கும் வாங்கப்படுவதாக கூறியிருந்தது. 

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களில் தட்டச்சி பிழை இருக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. இதனிடையே ரயில்வே உதவி வணிக மேலாளரை பணியிட மாற்றம் செய்த ரயில்வே நிர்வாகம், குடோன் கணக்கு பதிவாளர், சமயல் ஆய்வாளர், தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.05.2017


Wednesday, March 15, 2017

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது

Image may contain: text

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது!



விசாரணையில் இருக்கிறது என்று தகவல் தராமல் தட்டிக் கழிக்கும் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு எதிரான மிகவும் அருமையான ஆணை !

Friday, January 27, 2017

வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?


வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?

பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்கும் தகவல்களில், தகவல் வழங்கும் அவரது பெயர் , பதவி, நாள், கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை இருக்கவேண்டும் என்பதைக் கூறும் தமிழ்நாடு தகவல் ஆணையர் அவர்களின் 25.03.2015 தீர்ப்பு நகல்.
No automatic alt text available.






தகவல் உதவி: திரு A Govindaraj Tirupurஅவர்கள்.

Wednesday, January 11, 2017

தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?


தகவல்கள் எவ்வாறு 2(f)ன் கீழ் அமையாது?

கோரிய தகவல்கள், எவ்வாறு சட்டப்பிரிவு 2(F)-ன் கீழ் அமையாது? என்பதற்கு மேல் முறையீட்டு அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 46411 / விசாரணை / டி / 2014, 27.05.2015
http://www.rtigovindaraj.com/…/4627-2f-tnsic-46411-2014-270…

No automatic alt text available.



Image may contain: text



No automatic alt text available.

Thanks to Mr A Govindaraj Tirupur

RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு


RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு

மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
1) பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு் பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை அனுப்ப வேண்டும்.
அந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மூன்றாம் நபர் பொதுத்தகவல் அலுவலரிடம், “ஏன் அந்த தகவலை வழங்கக்கூடாது?” என்பதற்கான ஆட்சேபணையை விளக்க வேண்டும்.
அந்த மூன்றாம் நபர் விளக்கியுள்ள ஆட்சேபணையைப் பொதுத்தகவல் அலுவலர் கருத்தில் கொண்டு, அந்த ஆட்சேபணைகள் ஏற்கக்கூடியவையா, இல்லையா என்று பரிசீலணை செய்து, ஏற்கக்கூடியது என்றால், அந்தத் தகவலை வழங்க மறுத்துவிடலாம். ஏற்கக்கூடியது அல்ல என்றால், அந்தத் தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கலாம்.
2) பொதுத்தகவல் அலுவலர் தான் எடுத்த முடிவினை (பிரிவு 6ன் கீழ் மனு பெறப்பட்ட 40 நாட்களுக்குள்) சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
3) பொதுத்தகவல் அலுவலர் எடுத்த முடிவினை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு.
குறிப்பு:
சட்டப்பிரிவு 11 (மூன்றாம் நபர் தகவல்) பற்றிய மேற்கண்ட விளக்கத்தை கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து ஆணையம் வழங்கிய தீர்ப்பில் காணலாம்.
http://www.tnsic.gov.in/judgements/new/pdfs/34307_2014_11062015_G%20Alex%20Benziger.pdf