disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-2


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி 2
*************************************************************************************************

(4)  இதனால் என்னென்ன கிடைக்கும்?

மேலும் தேர்வின்போது, நாம் ஒத்துக்கொண்ட மாதச் சம்பளம் மற்றும் வேறு சலுகைகளும் சரியாகக் கிடைக்கும்.



ஏனெனில், தேர்வு முடிந்தவுடன் இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு கையொப்பம் இட்டு, அதன் பிரதி ஒன்றும் நமக்கு கிடைக்கும்.



ஆனால் சில வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இங்கு ஒரு ஒப்பந்தமும், வெளிநாடு சென்றபின் ஒரு ஒப்பந்தமும் கொடுத்து கையொப்பம் இடும்படி வற்புறுத்தப்படுவார்கள்.



கடன் வாங்கியோ, காட்டை, வீட்டை விற்று வெளிநாடு செல்பவர்களுக்கு, வேறு வழியில்லாமல் வெளிநாட்டு நிறுவனம் வற்புறுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும்படி நேரிடுகிறது.



தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் மேற்கண்ட பிரச்சினை கிடையாது.



ஏதாவது பிரச்சினை என்றாலும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்து விடலாம்.



வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு மட்டும் தான் பணிவாய்ப்பு என நினைக்கக்கூடாது.



அனைத்து வகை தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு. குறிப்பாக உதவியாளர், மேசன், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன் என தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் என்ஜீனியந, டாக்டர், பேராசிரியர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  குறைந்தது இரண்டு வருட பயிற்சி அவசியம்.




(5) வெளிநாட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?



நாம் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பயிற்சி நம்மிடம் உள்ளதா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.



அடுத்து விளம்பரம் கொடுத்த வேலை வாய்ப்பு நிறுவனம் நம்பத் தகுந்ததாக மற்றும் பதிவு எண் கொடுக்கப்பட்டுள்ளதா? என பார்க்கவேண்டும்.



இவை இரண்டும் திருப்தியாக இருந்தால், எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என கவனித்து, அந்த வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி அறிய, 'www.வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்.com' - என்ற இணையதள முகவரியில் சென்றால், கம்பெனியின் அனைத்து விவரங்களும் நமக்குத் தெளிவாகிவிடும்.



மேலும், அந்நிறுவனத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், அந்த நாட்டில் உள்ள நமது வெளிநாட்டு தூதரகத்தை (INDIAN EMBASSY) தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் (E-MAIL).



மேற்கொண்ட அனைத்தும் நமக்கு திருப்தி அளித்தால் மட்டுமே நாம் அந்நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.



இல்லையெனில் அடுத்த நல்ல நிறுவனத்திற்காக காத்திருக்கவேண்டும்.




(6) நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டியவை:



1) ஆள்பாதி. ஆடை பாதி என்பது போல் முதலில் நாம் மற்றவர் கவரும் வகையில் உடை அணியவேண்டும்.



2) இரண்டாவது நாம் எந்த பணிக்குத் தேர்வுக்கு செல்கிறோமோ அதில் முழு அளவு திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.



3) மூன்றாவது, நம் கையில் இருக்கும் பணிச் சான்றிதழில் என்னவெல்லாம் நமக்குத் தெரியும் என குறிப்பிட்டு உள்ளோமோ அதில் தெளிவாக இருக்கவேண்டும்.



குறிப்பாக எனக்கு இந்த எந்திரத்தில் இயக்குதலும் பேணுதலும் (OPERATION AND MAINTENANCE) முழுமையாகத் தெரியும்! என்று  குறிப்பிட்டிருந்தால், அந்த எந்திரத்தின் முழு செயல்பாடு நமக்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும்.



இதைவிட்டு நமக்கு இது தெரியும், அது தெரியும் என குறிப்பிட்டு, மேலோட்டமாக நுனிப்புல் மேய்த்திருந்தால் தேர்வின் முதல் சுற்றிலேயே நாம் தோல்வி அடைய நேரிடும்.



4) நான்காவது, நமக்கு சிறிதளவாவது  ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்காவது பதில் அளிக்கவேண்டும்.



சரி, நாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டோம். அடுத்தது என்ன?




(7) மருத்துவச் சான்றிதழ் பெறும் முறை:



தேர்வில் வெற்றி பெற்றவுடன், நமது கடவுச் சீட்டை வேலை வாய்ப்பு நிறுவனம் பெற்றுக் கொண்டு, நமக்கு மருத்துவச் சான்றிதழ் பெற அந்நிறுவனம் வழி செய்யும்.



அதாவது, நாம் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறோமோ அந்நாட்டின் அனுமதி பெற்ற மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களிடம் சென்று, வேலை வாய்ப்பு நிறுவனம் கொடுத்த கடிதத்தை காண்பித்து, மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட வேண்டும். மருத்துவ சோதனைக்கு அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்வார்கள் (சுமார் ரூ.1000).



எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை இவை அனைத்தும் முடிந்த பிறகு, கடைசியாக தலைமை மருத்துவர் நம் உடல் பகுதி முழுதும் ஏதாவது குறை உள்ளதா என பரிசோதித்து பார்ப்பார்.



பிறகு, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழில் (FIT) -தகுதி- என முத்திரை குத்தப்பட்டு, வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு மறுநாள் சென்றுவிடும்.



நிறுவனத்திலிருந்து உங்களுக்கு தபால் அல்லது தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துவிடும்.



இனி, நீங்கள் விமானத்தில் பயணம் செய்வது பற்றி கனவு காணலாம்.



அதற்கு முன் உங்கள் கடவுச் சீட்டில் 'விசா' என்ற 'பணி அனுமதி' (WORK PERMIT) எவ்வாறு பதிவாகிறது என பார்ப்போம்.


                                                                                                       -இன்னும் இருக்கிறது-
நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு


வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-1


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************
நாம் தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியை அடிக்கடி காணலாம்.

"வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி"



"மலேசியாவில் தொழிலாளர்கள் தவிப்பு"

"சவூதி அரேபியாவில் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தமிழர்கள் அவதி"

இதுபோன்ற  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏமாந்தவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஏமாறாமல் இருக்க  என்ன வழி?

இதற்கு விடை காண என்னால் முயன்றவரை, என் அனுபவத்தில் இருந்து சில வழிகளை சொல்லி உள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுப்பது முதல் நமது பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா வருவதுவரை என்ன செய்ய வேண்டும் என இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கும், ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் சில வழிமுறைகளும் கூறி உள்ளேன்.
சுமார் பன்னிரண்டு வருடங்களாக, ஐந்து முறை தேர்வில் வெற்றி பெற்று, சவூதி அரேபியாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நான், எவ்வாறு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, முறையாக மற்றவர்களிடம் ஏமாறாமல் பொருள் ஈட்டுவது பற்றி இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

(1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறும் வழி:

முன்பு எல்லாம் கடவுச்சீட்டு பெற சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம் சென்று பதிவு செய்தால், ஒன்று அல்லது இரண்டு மாதத்தில். காவல் துறை விசாரிப்புக்குப் பிறகு, கடவுச்சீட்டு நம் வீடு தேடி வந்துவிடும்.

அலுவலகம் செல்லும் போது நாம் மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டியவை;

1) ரூ.1,000-க்கான காசோலை
2) குடும்ப அடையாள அட்டை
3) பத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4) கல்விச் சான்றிதழ்

நாம் பதிவு செய்த பிறகு, நமக்கு ஒரு அடையாள எண் தருவார்கள்.
அந்த அடையாள எண் மூலம் இணையத்தின் மூலம் நம் கடவுச்சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது, மற்றும் நமக்கு கடவுச்சீட்டு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் கோவையிலும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(2) இணையதளத்தில் செல்லும் வழிமுறை:
முதலில் www.tn.nic.in என்ற இணைய தளத்தில் நுழைந்து, ரீஜினல் பாஸ்போர்ட் ஆபீஸ் என்ற வலையின் மூலம், 'know your passport status' - மூலம் நமது அடையாள எண், பதிவு செய்த மாதம் வருடத்தை பதிவு செய்தால், நம் கடவுச் சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என அறியலாம்.
கடவுச் சீட்டு நம் கைக்கு கிடைத்தவுடன் நாம் வெளிநாடு செல்ல தயாராகி விட்டோ ம்.
அடுத்த நாம் தெரிய வேண்டியது, எந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லலாம் என்பது.
தினசரிகளில் "வெளிநாடு பணிகளுக்கு ஆட்கள் தேவை" - என்ற விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்.
முக்கியமாக நாம் அந்த விளம்பரத்தில் கவனிக்க வேண்டியது, அந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா, பதிவு எண் உள்ளதா என அறிய வேண்டும்.
முறையாக பதிவு செய்யாத நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், நாம் உழைத்து சேர்த்த பணம் அவ்வளவுதான்.
இதற்கும் நமது அரசாங்கம் வழி செய்துள்ளது.
சென்னையில் 'அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நமது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது.

(3) அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் 
எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
வீட்டுவசதி வாரிய வளாகம் முதல்தளம்
 எல் பி ரோடு, அடையாறு, 
சென்னை - 600 020.

தொலைபேசி எண்கள்
044- 244 64268  & 044- 24464269

இணைய தள முகவரி
www.tn.gov.in     
    www.southindia.com
மேற்கண்ட இணைய தள முகவரியிலும் தற்போதைய நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து மற்றும் கல்வித் சான்றிதழ், பணிச் சான்றிதழ் வேண்டும்.

நமது தொழிற்சார்ந்த வேலைகளுக்குத் தகுந்தவாறு பதிவுக் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிறுவனம் மூலம் மூன்று முறை நமக்கு நேர்முகத் தேர்வுக்கு உதவி செய்வார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று தகுதி பெற்றுவிட்டால், மருத்துவ சோதனை முடித்து வெளிநாடு செல்ல தயாராகி விடலாம்.

இதற்கு முறையான, சரியான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கட்டணத்திற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு சமயம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் நேரிட்டாலோ அல்லது நம்மை தேர்வு செய்த வெளிநாட்டு நிறுவனம்  யாதொரு காரணத்தாலோ நம்மை அழைக்க முடியாமல் போனாலோ நாம் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

                                                                                                                                    - இன்னும் இருக்கிறது-

நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

Monday, April 27, 2015

ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்ய

சென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?

கா
கிதமில்லாமல்,மொபைல் மூலம் புறநகர் ரயில்  டிக்கெட் பெறும் அப்ளிகேஷனை ஏப்ரல் 22 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில்   அறிமுகப்படுத்தினார் -

செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் ‘GOOGLE பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

அந்த செயலியில்  மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் பகுதி தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்,

UTS WALLET க்கு பணம் மாறுதல்(money transfer) செய்து balance amount குறைந்த பட்சம் 50 அல்லது 100 ரூ வைத்து கொள்ள வேண்டும் 


ரயில் நிலையத்தில் இருக்கும்போது அந்த ரயிலுக்கு நாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும்
இந்த அப்ளிகேசனை இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். அம்பத்தூர் ,கும்மிடி பூண்டி ,வேளச்சேரி போன்ற ரயில் நிலையபகுதிகளுக்கும், பீச் முதல் தெற்கே கிண்டி உள்பட பெருங்களத்தூர் வரை இப்போது இந்த மொபைல் டிக்கெட் வசதி உள்ளது. ஊரப்பாக்கம்  முதல் செங்கல்பட்டு வரை உள்ள  பகுதிகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு  இல்லை

- ஷான்
நன்றி : விகடன் செய்திகள் 27.04.2015

Sunday, April 26, 2015

கல்விக்கடன்


கல்விக்கடன் பெறுவது எப்ப‍டி?

கிடைக்குமா என்கிற கவலை ஒரு பக்கம்… அப்படி கிடைத்து விட்டால் படிப்புச்செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என் கிற கவலை இன்னொரு பக்கம் … மகன்/மகளின் கல்லூரிப் படி ப்புக்கென கொஞ்சம் பணம் சேர் த்தவர்களை விட்டு விடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்க ளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன் தான். இந்த கல்விக்கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையி ல் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?
அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல் லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர் காலத்தில் வேலை வாய்ப்பு ள்ள கல்விப் பிரிவை தேர்வு செய் வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.
பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதிலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாள ரை அணுகி கல்விக் கடன் பெறு வதற்கான விதி முறைகள் என்னெ ன்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிருந்து போனோஃபைட் என்று சொல்லப் படுகிற சேர்க்கைக் கான ரசீதையு ம், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல் லப்படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கி யிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக் காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பி க்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பு ம் மாணவர்கள் முடிந்த மட்டும் பிளஸ்டூ படித்து விடு முறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளு க்கு பெற்றோ ருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்து விடுவது நல்லது. ”கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணு கலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்.
கல்விக்கடன்: யார் யாருக்கு கிடைக்கும்?
  
இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாண வர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பி த்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள் ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்க ளுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல் விக் கடன் கிடைக்கு ம்.எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங் கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்பு கள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற் கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாய ம், சட்டம், மேலா ண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப். டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புக ள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி. டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கு ம், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.
ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங் க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ் சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறு வனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.
கல்விக்கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* வேலை வாய்ப்பு அதி கம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்தி ருக்க வேண்டும்.
* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி களில் மாணவர்கள் சேர்ந் திருக்க வே ண்டும்.
* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சத விகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினரு க்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.
கல்விக் கடன்:
உத்தரவாதம் தேவையில்லை!
  
கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத் தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும்என்பதால் கல்விக் கடன் வாங்கு கிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டிய தில்லை.நான்கு லட்சத்திலிரு ந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவ ரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தர வேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
எந்த செலவு அடங்கும்?
வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள்முழுமையாக அடங்கும்.
* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.
* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற் றும் ஆய்வகக் கட்டணம்.
* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செல வுகள்.
* மாணவர்களின் கல்விச் சாதனங் கள் மற்றும் சீருடைகள்.
* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்க ள்.
படிப்பில் கவனம் தேவை!
கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவ னம் செலுத்துவது அவசியம். ஏனெ னில், செமஸ்டர்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத் தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தி ல் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியி டமிருந்து கல்விக் கடனை எதிர் பார்க்க முடியும்.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத் தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரியிலி ருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும் பச் செலுத்த வேண்டியிருக் கும்.
கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?
கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிறகாலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில் லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத் து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செ லுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச்செலு த்த குறைந்தது ஐந்து ஆண்டுக ள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!
கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தா ல் அவர் களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சம ர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொ ருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசிய ம் கிடையாது. இதனால் படிக்கும் காலத் தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசிய ம் கிடையாது.
அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆர ம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெ ளிநாடுகளில் படிக்கும் மாணவர்களு க்கு கிடையாது.
கடனை சீராக கட்டினால் சலுகை!
இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாண விகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலு கை தரப்படும். பொது வாகவே கல் விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிற ப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும் பாலானவர்கள் கல்விக் கட னை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகிறார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெ ல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.
வரிச் சலுகை என்ன?
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட் டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலு கை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச்சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண் டுகள் வரை கல்விக்கடனுக்கான வட்டிக்கு வரிச்சலுகை பெறலாம்.
கல்விக் கடன்:
கட்டாமல் போனால்..?!
மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர் கள் மீது என்னென்ன நட வடிக்கைகள் மேற் கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல் விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக் கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப் பவர் பணி செய்யும் நிறுவ னத்தைகூட வங்கி அணுகி, கடனை கட் டச் சொல்லலாம்.
வேலை கிடைக்காவிட்டால்..!
கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வே லை கிடைக்காவிட்டால், அது தொ டர்பான விவரத்தை சம்பந்தப் பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற் கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விட லாம் என்று நினைக்க வேண்டாம்.
முதுகலைக்கும் கடன்!
இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முது நிலைப் படி ப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சய ம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந் தும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக் கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முத லில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறு த்தும்.
ஏனெனில், மாணவருக்கு திடீரென் று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந் தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூ ரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.
கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கி யில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலு த்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப் பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற் கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலு த்தாமல் இருந்தாலோ, குறை வான மதிப்பெண் எடுத்திருந்தா லோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்க ப்படலாம்.
எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக் கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந் த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடை க்க நிறைய வாய்ப்புண்டு.
யாரிடம் புகார் செய்வது?
”அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழை யும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்” என்கிறவர்க ள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச் னையை எடுத்துச் சொல்லலாம். உங் கள் பிரச்னைக்கு உரிய பதி லை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்ன ஞ்சல், அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்த லாம். அப் போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம் .
எளிதில் கடன் கிடைக்க..!
கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிரு க்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிக ளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு – செலவு கணக்கு வைத்திருக் கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண் ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதா லேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வே ண்டாம்!
நன்றி :  நாணயம் விகடன்